Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
Page 1 of 1 • Share
மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காது. உயிர் போகுமளவிற்கு வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவைச் சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம் மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.
மூல நோய் எவ்வாறு ஏற்படுகின்றது?
மூல நோயானது சிக்கல் காரணமாக ஏற்படுகின்றது. அதாவது நாம் உண்ணும் உணவு சரியான முறையில் ஜீரணமாகாமையால் மலச் சிக்கல் ஏற்படுவதால் மூல நோய் ஏற்படுகின்றது.
இதற்கு மூலகாரணம் உரிய நேரத்தில் உணவு உண்ணாமை. அதிக மாப்பொருள் அடங்கிய உணவுகளை உண்ணுதல், காபோவைதரேட் அடங்கிய உணவுகளை உண்ணுதல், தொடர்ந்து ஒரே வகையான உணவுகளை உண்ணுதல். நாம் உண்ணும் உணவில் பழங்கள், காபோவைதரேட்டு உணவுகள், கலோரின், புரோட்டின் அடங்கிய உணவுகளை உண்ணவேண்டும். ஒரு சிலர் தொடர்ந்து ஒரே வகையான உணவை உட்கொள்வதால் உதாரணமாக மா உணவை அதிகம் உட்கொள்வதால் மூல நோய் ஏற்படுகின்றது.
மூல நோய் எத்தனை வகையானது ? இந்நோயை இரண்டு மூன்று வகையாக பிரிக்கலாம்?
உதாரணமாக சொல்வதானால் பரம்பரை நோயாக இருக்கலாம். கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தையை பிரசவித்த பின் தாய்க்கு கர்ப்பை பை கீழே இறங்குவதால் சிலருக்கு குதம் வெளியே தள்ளப்பட்டு ஏற்படும் நோய் ஒன்றாக காணலாம். பாஸ்பூட் அதாவது இலகு உணவுகளை உட்கொள்வதால் இந்த உணவுகள் சமிபாடடையாமல் மலச்சிக்கலினால் மூல நோய் ஏற்படலாம். சிலருக்கு குருதி வெளியேறுவதால் ஏற்பட வாய்ப்புள்ளது. குதம் வெளியேறி பாரதூரமான ஆபத்தை ஏற்படுத்துகின்ற நோயாக சிலருக்கு ஏற்படும். ஒரு சிலருக்கு மலம் கழிக்கும் போது வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நோய்க்கான அறிகுறிகள் என்ன?
ஆசனவாய் பகுதியில் இரத்தக்குழாய் தடிமன் ஆவதன் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் இரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.
இந்நோயை வருமுன் காக்கலாம். உதாரணமாக மூச்சு எடுப்பதற்கு கடினமாக இருக்கும். வயிறு நிறைந்தது போல் காணப்படும். வாயுத் தன்மை நிறைந்தது போல் காணப்படும். பசித்தன்மை அதிகமாக இருக்காது.
மலம் கழிக்கும் போது இலகுவாக இருக்காது. மிகவும் கடினமாக இருக்கும். குடல் காயும் தன்மை அதாவது குடல் காய்வுத்தன்மை காணப்படுவதால் மலம் கழிக்கும்போது கடினமாக காணப்படும்போது எதிர்காலத்தில் மூல நோய் வர வாய்ப்புள்ளது. இதனால் முறைப்படி உணவுகளை எடுத்து மூல நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
உணவு முறையை கடைபிடிப்பது அவசியமா? இது பற்றி விளக்கம் தாருங்கள்?
ஒருவர் உணவில் கல்சியம், புரதம், காபோவைதரேட், கொழுப்பு ஆகிய உணவுகள் கட்டாயம் உண்ண வேண்டும். உணவை உரிய நேரத்தில் எடுக்கவேண்டும். அதாவது ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு முறை உணவு உண்ண வேண்டும். ஒரு சிலர் எட்டு, பத்து மணித்தியாலத்திற்கு பின் உணவு உண்ணுதல், இன்னும் ஒரு சிலர் விரதம் இருப்பதால் இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. காலை முதல் மாலைவரை உணவு உண்ணாமல் இரவில் உணவு உண்பதால் உணவு சமிபபாடடையாமல் இந்நோய் வர வாய்ப்புள்ளது. உதாரணமாக மூச்சு எடுப்பதற்கு கடினமாக இருக்கும். வயிறு நிறைந்தது போல் காணப்படும்.
வாயுத் தன்மை நிறைந்தது போல் காணப்படும். பசித்தன்மை அதிகமாக இருக்காது. இந்த குணாதிசயங்கள் காணப்பட்டால் கட்டாயமாக விரதம் இருப்பதை தவிர்க்கவேண்டும். உதாரணமாக அதிக மிளகாய் தூள் கலந்த உணவுகள் உண்பதை தவிர்த்துகொள்ளவேண்டும். மேலும் காயத்தன்மை உள்ள உணவுகள் உட்கொள்வதை தவிர்த்து கொள்ளவேண்டும்.
உடனடியாக சமிபாடடையக் கூடிய திரவமான உணவுகளை உட்கொள்வதால் யாரையும் மூல நோய் பாதிக்காது. நாம் அருந்தும் நீரின் அளவு குறைந்தால் இது வர வாய்ப்புள்ளது. நீரை அதிகமாக அருந்துபவர்களுக்கு இந்த நோய் பாதிக்காது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
வயது அடிப்படையில் ஏற்படுமா?
பொதுவாக எல்லா வயதினருக்கும் இந்த நோய் வர வாய்ப்புள்ளது. உணவு பழக்கவழக்கங்கள், இலகு உணவுகள் (பாஸ் பூட்) உதாரணமாக சீஸ், கொத்து ரொட்டி போன்றவற்றை உண்பதால் வர அதிக வாய்ப்புள்ளது. பட்டர், மாப் பொருட்கள் போன்ற மேலைத் தேய பொருட்களை உண்பதால் இந்நோய் வர வாய்ப்புள்ளது. உடனடியாக சமிபாடு அடையக் கூடிய பொருட்களை உண்ண வேண்டும். உதாரணமாக சோறு உண்ணும் ஒருவர் மூன்று நேரமும் சோறு உண்டால் அது சமிபாடு அடையக் கூடியதாக இருக்கும்.
உதாரணமாக இரவு நேரத்தில் கோதுமை மாவால் தயாரிக்கப்பட்ட கொத்து ரொட்டி, ரொட்டி போன்றவற்றை உண்பதால் இவர்களுக்கு மறு நாள் காலையில் காலைக்கடனை செய்வதற்கு அசௌகரியமாக இருக்கும். அதாவது பொதுவாக இலகுவாக மலம் கழிப்பதற்கு பதிலாக மிக கஷ்டப்படுவார்கள்.
இதற்காக பழங்களை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். சைவ உணவை எடுத்துக் கொண்டால், உணவின் பின் ரசம், பாயாசம் போன்றவை கடைகளில் வழங்கப்படுகின்றன. இவற்றை உண்பதால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். மேலும் உணவுக்கு பின் டெசட் சாப்பிடுகின்றோம். உணவு இலகுவில் சமிபாடடைய சாப்பிடுகின்றோம். பப்பாளி, வாழைப்பழம், யோகட் போன்றவற்றை உட்கொள்வதால் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
ஆதிகாலத்தை எடுத்து கொண்டால் அக்கால மக்களிடையே இந்த பிரச்சினை காணப்படவில்லை. காரணம், இந்த காலத்தில் இலகு உணவுகள், பிஸ்கட் போன்றவற்றை உண்பதால் சமிபாடு அடைவதில் பிரச்சினை ஏற்படும்.
உதாரணமாக இடியப்ப உரலில் இட்ட மாவு சரியான முறையில் பிணைந்திருந்தால் இலகுவாக இடியப்பம் வெளியில் வரும். எதிர்பாராத விதமாக அந்த மாக் கலவையில் ஏதாவது சிக்கல் இருந்தால் மா வெளியில் வருவது கடினமாக இருக்கும். அந்த இடியப்ப உரலின் அடி தட்டோடு கழன்று வரும். அதே போல் தான். மலம் சரியான முறையில் வெளிவருவதில் பிரச்சினை இருந்தால் ஆசனப்பகுதி வெளியே வரவாய்ப்புள்ளது.
இந்த நோயை முற்றாக கட்டுப்படுத்தலாமா?
ஒருசிலர் அறுவைச்சிகிச்சை செய்த பின்னர் உணவில் கட்டுப்பாடு இன்மையால் மீண்டும் அவர்களுக்கு வர வாய்ப்புள்ளது.
இந்த நோய்க்காக சிகிச்சை பெறுவதற்கு சில வகையான ஒயின்மன்ட், கிரீம் வகைகளை நேரடியாக பாவித்தல், மருந்துகளை உட்கொண்டு சமிபாட்டுத் தொகுதியை நல்ல முறையில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்நோய் உள்ளவர்கள் உணவு பழக்கவழக்கங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பழங்களை அதிகமாக உண்ணவேண்டும், உடனடியாக சமிபாடு அடையக் கூடிய உணவுகளான பொங்கல், பாற்சோறு போன்றவற்றை அதிக உண்ணவேண்டும்.
அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு போத்தல் தண்ணீர் அருந்த வேண்டும். குளிரான தண்ணீரை குடித்தால் சமிபாட்டு தொகுதியிலிருந்து வெளியேறுவது கடினமாக இருக்கும். கொதித்து ஆறிய தண்ணீரை குடித்தால் சமிபாட்டு தொகுதியில் சரியாக செயற்பட்டு மலம் வெளியேறுவது மிக இலகுவாக இருக்கும். இவர்களுக்கு தொடர்ந்து உளுந்தங் கஞ்சி, தோசை போன்றவற்றை இரவில் உண்பதால் மலம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படாது.
மூல நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலநோய் உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது ஏற்படலாம் என்கிறார் தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.
உடற் பயிற்சி அவசியமா?
காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது நன்று.
நோய் உள்ளவர்கள் உணவு உண்டபின் 15-–20 நிமிடம் நடப்பது சிறந்தது. உடற்பயிற்சி செய்வது நன்று. அப்போது தான் உணவு சமிபாடடையும் இந்த நோயை பொறுத்தவரையில் இவர்கள் கேட்டுதான் வாங்குகிறார்கள் என்று சொல்லலாம். சரியான முறையில் உணவை எடுக்காமல் கழிவறைக்கு சென்று சிரமப்பட்டு மலத்தை கழிக்க முயற்சிப்பதாலும் இந்நோய் வர வாய்ப்புள்ளது. நாம் உண்ணும் உணவு சமிபாட்டு தொகுதியில் சமிபாடடைந்து சிறுகுடலிலிருந்து பெருங்குடலுக்கு தள்ளப்படும் போது நாம் கழிவறைக்கு சென்று இலகுவாக மலம் கழிப்பதால் இந்த நோய் வர வாய்ப்பில்லை ஆனால், உணவை தவிர்த்தல், சிலர் அவசர பிரயாணத்தை மேற்கொள்வதன் நிமித்தம் வாகனங்களில் செல்ல வேண்டியிருப்பதால் கழிவறைக்கு சென்று வற்புறுத்தியிருப்பது போன்றவற்றால் மூல நோய் வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்புள்ளது. சாரதிக்கு இந்நோய் வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து எட்டு பத்து மணித்தியாலங்கள் அமர்ந்து வேலைசெய்வதால் இந்நோய் வர வாய்ப்புள்ளது.பெருங்குடல், சிறுகுடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா?
ஆம், பெருங்குடல் சிறுகுடலில் பாதிப்பு ஏற்படும். கோலிக், எப்பன்டையிஸ் போன்றன வரவாய்ப்புள்ளது. சரியாக சமிபாடடைந்து இந்த நோய் உள்ளவர்களுக்கு குருதி அதிகம் செல்வதால் இவர்களுக்கு லோ பிரசர் வரவாய்ப்புள்ளது. இவர்கள் அன்றாட வேலைகளை தாங்களாக செய்து கொள்வதில் அசௌகரியமாக இருக்கும். நாற்காலிகளில் அமர்வது கடினமாக இருக்கும். கடினமான வேலை செய்வதில், பாரங்களை தூக்குதல் போன்ற வேலைகளை செய்ய முடியாது. அதே நேரத்தில் செய்யக்கூடாது. குனிந்து வேலை செய்யக் கூடாது, ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. சரியான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ளாமைசரியான முறையில் தண்ணீர் உறிஞ்சப்படாததாலும் சமிபாட்டில் பாதிப்பு ஏற்பட்டு பெருங்குடல், சிறுகுடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
உடலில் மாற்றம் ஏற்படுமா?
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு உட்கொண்டவுடன் உடனடியாக மலம் கழிக்க நேரிடுவதால் உடலின் நிறை குறைய வாய்ப்புள்ளது. குருதி அதிகம் வெளியேறுவதால் லோ பிரசர் ஏற்படலாம். பார்வை குறைய வாய்ப்புள்ளது. இதனால் இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கழிவறையைப் பொறுத்த மட்டில் மூல நோயாளர்களுக்கு கொமட்டை பாவிப்பதால் இலகுவாக இருக்கும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மூல நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி?
மூலநோயை தவிர்ப்பது குறித்து வைத்தியர் என்ற வகையில் உங்களின் கருத்தை தாருங்கள்?
நோயை வரும் முன் காப்போம் என்றால், உதாரணமாக அதிகமாக விரதம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும். உண்மையாக விரதம் இருப்பது நல்ல விடயம். ஆனால், எங்களின் ஆராய்ச்சியின் படி அதிக இளம் பெண்களுக்கு இந்த நோய்வருவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனால் உடலின் நிலைமையை அறிந்து அதற்கேற்ப செயற்பட வேண்டும்.
கோழி இறைச்சி, முட்டை, பன்றி இறைச்சி போன்றவற்றை அதிகமாக உண்பதால் இலகுவில் சமிபாடடையாததால் இவற்றை குறைத்து கொள்வது நல்லது. தேவையற்ற நேரத்தில் அவசரத்திற்காக கழிப்பறையில் சென்று மலத்தை உந்தித் தள்ளுதல் கூடாது உதாரணமாக பழுக்காத வாழைப்பழத்தை அடிக்க வைத்து பழுக்க வைக்க கூடாது. சூடு போட்டு பழுக்கவைத்தல், யூரியா போட்டு பழுக்கவைத்தல், நசுக்கி வைத்து உண்பது கடினம்.
அதே போல் தான் எமக்கு மலம் கழிக்க வராத நேரத்தில் வற்புறுத்தி மலம் கழிக்க முற்படக் கூடாது. எம்மில் சிலர் மலம் கழிக்க பயந்து காலை உணவை உண்ணாமல் தவிர்ப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. (பாஸ்பூட்) இலகு உணவுகளை தவிர்த்து கொள்ளுங்கள். காலையில் குளிர் பானங்களை அருந்துவதால் சிறுகுடல், பெருங்குடலை பாதிக்க வாய்ப்புள்ளது. மூன்று நேர உணவுகளை சரியான நேரத்தில் உண்ணவேண்டும்.
ஒவ்வொரு உணவுகளை உண்ட பின்பும் ஏதாவது பழங்கள், இரசம், பாயாசம், பானவகைளை உட்கொள்வது நல்லது. இது 30 – 40 வயது என்றில்லாமல் இளம் வயதினரும் இதனை கடைபிடிக்கவேண்டும். தொடர்ந்து ஒரே உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
சிலர் மா என்றால் உட்கொள்வார்கள், சிலர் சோற்றை தொடர்ந்து மூன்று நேரம் உட்கொள்வார்கள். இதனால் பெரும் பாதிப்பு வராது. இருப்பினும், புரதம், கல்சியம் போன்றவை குறைவாக இருப்பதால் 35 வயதுக்கு மேல் நீரிழிவு போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. கடினமாக வேலை செய்பவர்கள் மூன்று நேரம் சோறு உண்ணலாம். ஆனால், வயது செல்ல செல்ல சோறு உண்ணும் அளவை குறைத்துகொள்வது நல்லது. இரண்டு நேரம் அல்லது ஒரு நேரம் என குறைப்பது நல்லது. உரிய நேரத்தில் உணவை உண்ணுதல் வேண்டும்.
இந்த நோய் வந்து விட்டால் எண்ணெய், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். கோழி இறைச்சி, ஏனைய இறைச்சி வகைகளை குறைத்து கொள்வது அவசியம். பாயாசம், கஞ்சி போன்றவற்றை உண்பது சிறந்தது. மேலும் நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்தவர்கள் கடின வேலைகளை செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால் குருதி வெளியேறி உயிராபத்து எற்பட வாய்ப்புள்ளது. இதனால் மூல நோயாளர்கள் உடனடியாக வைத்தியரை நாடி வைத்திய ஆலோசனை படி செயற்படுவது நல்லது.
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காது. உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம். மூல நோயை கண்டுகொள்ளாமல் விடுவதால் புற்றுநோயாக மாறலாம் எச்சரிக்கிறார்.
மூல நோய் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலநோய் உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது ஏற்படலாம். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்சினை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை பெரிதாகி விடும். முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்றவேண்டும்.
போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்தியேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர வாய்ப்புள்ளது.
முறையான சிகிச்சை எடுக்காத பட்சத்தில் ஆசன வாய்ப்பகுதியில் வெடிப்பு போன்று புண் ஏற்பட்டு ஆறாது. இதிலிருந்து இரத்தம் வெளியேறும். இது ஆறாமல் தொடரும் போது புற்று நோயாக மாற வாய்ப்புள்ளது.
இதில் ஏற்படும் கொப்புளங்கள் புரையோடி குடல் பகுதியில் துளையை உருவாக்கும். எனவே மூலப் பிரச்சினை உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி ஆரம்பத்திலேயே சரி செய்து கொள்வது அவசியம்.
நார்ச்சத்துள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்சினை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மிளகாய் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், பருமனானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும், இந்த பிரச்சினை ஏற்படுகிறது. எனவே போதியளவு நீர் அருந்தவேண்டும்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நிர்வாணம் கொள்!
» சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க....
» சூறாவளி எப்படி உருவாகிறது?
» பெர்சனாலிட்டினா என்ன? அதை எப்படி வளர்த்துக்கொள்வது?
» நில நடுக்கம் எப்படி ஏற்படுகிறது?
» சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க....
» சூறாவளி எப்படி உருவாகிறது?
» பெர்சனாலிட்டினா என்ன? அதை எப்படி வளர்த்துக்கொள்வது?
» நில நடுக்கம் எப்படி ஏற்படுகிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|