தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவு-தக்காளி

View previous topic View next topic Go down

ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவு-தக்காளி Empty ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவு-தக்காளி

Post by முழுமுதலோன் Wed Jan 28, 2015 10:59 am

தக்காளியில் மத்திய நரம்பு மண்டலத்தை நன்னிலையில் வைக்க உதவுவதோடு வலியை குறைக்க கூடியதாகவும் பயன் தருகிறது. தக்காளியில் அபரிமிதமான ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

* தக்காளியில் நல்ல ஊட்ட சத்துக்களும் உற்சாகம் தரும் வேதிப் பொருட்களும் அதிக அளவில் விட்டமின் ‘ஏ’‘சி’ மற்றும் “போலிக் அமிலங்களையும்” பெற்றுள்ளன.

* தக்காளியில் உள்ள ஆல்பாலிப்போயகிக் அமிலம் சர்க்கரையை சத்துப் பொருளாக மாற்ற உடலுக்கு உதவி செய்கிறது. மேலும் ரத்த நாளங்களை சுத்திகரித்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கண் விழிக்கோளாறு வராது காக்கிறது. மூளை மற்றும் நரம்புத் திசுக்களை பாதுகாக்க உதவுகிறது.

* தக்காளியில் உள்ள “லைக்கோபீன்” சத்து தக்காளிக்கு சிகப்பு வண்ணத்தை தருவதாக அமைகிறது. அதுமட்டுமின்றி புத்துணர்வு தரும் வேலையையும் செய்கிறது.

* தக்காளியில் உள்ள “காலின்” என்னும் சத்து தூக்கத்தைத் தூண்டுவதற்கும், தசைகளின் அசைவிற்கும், படிப்பதற்கும் படித்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. இந்த “கோலின்” சத்து செல்களின் கட்டமைப்புக்கு உதவுவதோடு நரம்பு வழி மின் கடத்தலுக்கும் உணவிலிருந்து கொழுப்புச் சத்தை உறிஞ்சுவதற்கும், நீண்டகால வீக்கத்தைக் கரைப்பதற்கும் உதவுகிறது.

* தக்காளியை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான தலை முடியும், தோலும் அமைவதோடு சக்தியை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

* தக்காளியில் அடங்கி இருக்கும் அபரிமிதமான விட்டமின் ‘சி’ சத்துக்களும் “ஆன்டி ஆக்ஸிடென்ட்” களும் உடலில் தன்னிச்சையாக செயல்பட்டு புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளை எதிர்த்து போராட உதவுகின்றன.

* தக்காளியில் உள்ள “லைக்கோபீன்” என்னும் சத்து “புரோஸ்டேட்” புற்றுநோயை வரவிடாது தடுக்கிறது. இளைஞர்கள் தக்காளியை தாராளமாகச் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள “பீட்டர் கேரோட்டின்” என்னும் சத்து ஆரம்ப நிலையிலேயே புரோஸ்டேட் புற்று நோயை தடுத்து நிறுத்துகிறது.

* தக்காளியிலுள்ள “பீட்டாகேரோட்டின்” மற்றும் உயர்ரக நார்ச்சத்து ஆகியவை மலக்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுக்க வல்லவை ஆகும். மலச்சிக்கலையும் போக்க உதவுகின்றன.

* ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கக் குறைவான உப்புச்சத்து உள்ள உணவு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பொட்டாசியம்” சத்து அதிகமாக எடுத்துக் கொள்வது இதய நாளங்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது.

தக்காளியில் உள்ள பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, விட்டமின் ‘சி’ மற்றும் “கோலின்” சத்துக்கள் இதயத்துக்கு பலம் தருவதாகவும் இதய ஓட்டம் சீர்பெற நடப்பதற்கும் உதவுகின்றன.

இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு இதில் அடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் வராத வண்ணம் பாதுகாக்கப்படுகின்றது.

* தக்காளியில் அடங்கியிருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சத்து மாரடைப்பை தடுப்பதோடு, தசை அழிவை தடுப்பதோடு எலும்புகளின் பலத்தை அதிகப்படுத்துகிறது. சிறுநீரகக் கற்கள் ஏற்படாவண்ணம் காக்கிறது.

* முதல் நிலை சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு அதிக நார்ச்த்துள்ள தக்காளியை பயன்படுத்துவதால் சர்க்கரை நோய் தணிகிறது. 2ம் நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உயர்த்தவும், கொழுப்புசத்து மற்றும் இன்சுலின் சத்து மிகுதிப்படவும் உதவுகிறது. ஒரு கப் தக்காளியில் 2 கிராம் அளவுக்கு நார்ச்த்து இருப்பதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

* தக்காளியில் உள்ள போலிக் அமில சத்து கருவுற்ற மாதர்களுக்கு நல்ல சத்தூட்டமாகவும் குழந்தையின் நரம்பு மண்டலத்துக்கு மிக்க பலம் தருவவதாகவும் அமைகிறது. போலிக் அமிலம் மன உளைச்சலையும் போக்க உதவுகிறது. நல்ல மனோ நிலை, தூக்கம், பசி ஆகியவையும் உண்டாகின்றன.

* நவீன ஆய்வுகள் தக்காளியை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் மாதர் தம் மார்பகப் புற்று நோய் வராமல் பாதுகாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கிறது.

* இரண்டொரு தக்காளியை மிக்ஸியில் இட்டு நன்றாக அரைத்து சாறாக்கி வடிகட்டி சர்க்கரை சிறிது சேர்த்துக் குடிப்பதால் மேக நோய்கள், சிறுநீர் எரிச்சலோடு வெளியேறுதல், வீக்கம் முதலிய துன்பங்கள் தொலைந்து போகும். நாவறட்சியும் தணியும். உடன் மென்மையும் வனப்பும் அடையும்.

* தொடர்ந்து ஓரிரு மாதங்களுக்கு 2 தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் கொழுத்துப் பருத்த உடல் எடை குறையும்.

* தக்காளிப் பழத்தின் பசை ஓர் சிறந்த முகப் பூச்சுக்கான அழகு சாதனப் பொருட்களாகவும் பயன்தருகிறது.

* அன்றாடம் ஒரு டம்ளர் தக்காளி சாறு சாப்பிடுவதால் ஆரோக்கிய வாழ்வுக்கு அதிலுள்ள லைக்கோபின் சத்து அடிகோலுகிறது.

* தக்காளிச்சாறு சிறிது எடுத்து முகத்தில் பரவலாகப் பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விட முகத்தின் சருமம் பொலிவு அடையும். மென்மையும் நல்ல வண்ணமும் பெறுவதோடு முகச்சுருக்கங்கள் பறந்து போகும்.

* தக்காளிச்சாறு அன்றாடம் பருகுவதால் கணையப் புற்று ஏற்படும் அபாயத்திலிருந்து நம்மைக் காக்கிறது என்று மான்ட்ரியால் பல்கலைக் கழக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.

* பாலர்கட்குப் பாலூட்டும் தாய்மார்கள் தக்காளியை எவ்வகையிலேனும் உணவுடன் சேர்த்துக் கொள்ள தாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் தாய்ப்பாலில் லைக்கோபின் என்னும் சத்து அதிக அளவில் குழந்தைகளுக்குக் கிடைக்க செய்கின்றனர்.

இதனால் தாய்ப்பால் குடிக்கும். பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் புற்று நோய் வருவதற்கான ஆபத்துக்கள் குறைகின்றன.

* தக்காளி தாராளமாகப் பயன்படுத்தும் போது எலும்புகளுக்கு பலமும் கிடைக்கிறது. ஏனெனில் தக்காளியில் விட்டமின் கே மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

* தக்காளி ஓர் சாதாரணமான ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவுக்கான பொருளாகிறது. ஒப்பற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கியது என்றாலும் சிறுநீரகம் பழுதுபட்டவர்கள் மட்டும் அதிலுள்ள அதிகப்படியான பொட்டாசியம் சத்தை மனதில் கொண்டு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

இயற்கை உணவு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவு-தக்காளி Empty Re: ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவு-தக்காளி

Post by mohaideen Wed Jan 28, 2015 11:43 am

தக்காளியின் பலன்களை அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவு-தக்காளி Empty Re: ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவு-தக்காளி

Post by ஜேக் Wed Jan 28, 2015 11:32 pm

தக்காளியில் இவ்வளவு விஷயமா?!
நல்ல பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவு-தக்காளி Empty Re: ஏழைக்கும் எட்டக் கூடிய ஓர் உணவு-தக்காளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum