Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெருந்துறை வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில், ஈரோடு
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
பெருந்துறை வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில், ஈரோடு
மூலவர் : வனவேங்கடப் பெருமாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : வேப்ப மரம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : பெருந்துறை
மாவட்டம் : ஈரோடு
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நான்காவது சனிக்கிழமையன்று நடக்கும் திருவிழாவே இங்கு விசேஷம்.
தல சிறப்பு:
இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு அருகிலேயே சிறு குட்டை உள்ளது. இதில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் பக்கத்தில் உள்ள சிறு பள்ளத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் நாமக்கட்டி உருவாகிறது. வேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், இங்கு வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில் பெருந்துறை, துடுப்பதி- 638 053 ஈராடு மாவட்டம்.
போன்:
+91-4294 - 245 617
பொது தகவல்:
அருகில் உள்ள துடுப்பதியில் கரிவரதராஜ பெருமாள் கோயில் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில் ஒரே வளாகத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளன. கோயிலுக்கு மத்தியில் இருக்கும் வேப்ப மரத்தைச் சுற்றிலும் மிகப்பெரிய மதில் சுவர்கள் அமைந்துள்ளன. இதுதவிர வேறு மேற்கூரை ஏதுமில்லை. கோயில் வளாகத்துக்கு உள்ளேயே நாவல் பழ மரங்கள் உள்ளன. சர்ப்பங்கள் ஏராளமாக நடமாடுகின்றன.
இங்கு புரட்டாசி நான்காவது சனிக்கிழமையன்று இரவில் பெருமாளும், ஈஸ்வரரும் திருவீதி உலா வருவார்.வீதியுலா நிறைவுறும் சமயத்தில் துடுப்பதியில் இருந்து ஆஞ்சநேயர் தனி சப்பரத்தில் ஸ்ரீரங்ககவுண்டன் பாளையத்துக்கு எடுத்து வரப்படுவார். இரவில் வன வேங்கடப்பெருமாள் கோயிலில் வைத்து அவருக்கு அபிஷேகங்கள், தீபாராதனைகள் மற்றும் தளிகை நடக்கும். அதுவரை ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் மக்கள் காலையில் இருந்தே சாப்பிடாமல் விரதமாக இருப்பர். இரவில் ஆஞ்சநேயருக்கு தளிகை நடந்த பின்னரே அனைவரும் உண்பர். மீண்டும் ஸ்ரீரங்க கவுண்டன் பாளையத்தில் இருந்து ஆஞ்சநேயர் அதிகாலையில் துடுப்பதிக்கு எழுந்தருள்வார். அதுவரையிலும், துடுப்பதியில் வீதியுலா வந்த பெருமாளும், ஈஸ்வரரும் கோயில் வாசலிலேயே காத்திருப்பர். ஆஞ்சநேயர் வந்ததுமே மூவரும் கோயிலுக்குள் செல்வர். 400 ஆண்டுகளாக இவ்வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. நவராத்திரி விழாவைப் பொறுத்து சில ஆண்டுகளில் இவ்விழா புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையன்று நடப்பதும் உண்டு. விழாவின் போது துடுப்பதியில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள ஸ்ரீரங்க கவுண்டன் பாளையத்துக்கு பல்லக்கை எடுத்து வரும் போது, அதன் எடையே தெரியாதாம். சுவாமி பறந்து வருவதுபோல் உணர்வு இருக்கும் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
வேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா துடுப்பதி அருகேயுள்ள ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள்.ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே பசுமை போர்த்திய பின்னணியில் அமைந்திருக்கிறதுஇக்கோயில்.மிகப் பிரம்மாண்டமான வேப்பமரம் கோயிலின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது.மரத்தடியில் எவ்வித சிலைகளும் இல்லை.ஐந்து கற்கள் மட்டுமே அமைந்துள்ளன. இவற்றையே வன வேங்கடப் பெருமாளாகவும், தாயாராகவும் உருவகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். ஸ்ரீரங்ககவுண்டன்பாளையத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் வனவேங்கடப் பெருமாளை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இக்கோயிலுக்கு அருகிலேயே சிறு குட்டை உள்ளது. இதில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் பக்கத்தில் உள்ள சிறு பள்ளத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் நாமக்கட்டி உருவாகிறது.அதை சுயம்புவாக தோன்றியுள்ள துடுப்பதி பெருமாளுக்கு மேனியில் சாற்றுவதும் நடைமுறையில் உள்ளது.அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. ஸ்ரீரங்க கவுண் டன்பாளையம் கிராமம் மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராம மக்கள் பல் வேறு வழிபாடுகள் நடத்தி, நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
தல வரலாறு:
400 ஆண்டுகளுக்கு முன்பே இக்கோயில் இங்கு அமைந்திருக்கிறது. இக்கோயில் குறித்த தெளிவான வரலாறு ஏதுமில்லாவிடினும், செவி வழிச் செய்திகள் இக்கோயிலின் சிறப்பைவெளிப்படுத்துகின்றன. கோயிலின் பழமையை பறைசாற்றும் வகையில் சில கல்வெட்டுக்கள் தென்படுகின்றன.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு அருகிலேயே சிறு குட்டை உள்ளது. இதில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் பக்கத்தில் உள்ள சிறு பள்ளத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் நாமக்கட்டி உருவாகிறது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பெருந்துறை வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில், ஈரோடு
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பெருந்துறை அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
» அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு
» திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
» பாரியூர் அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், ஈரோடு
» திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
» அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில், ஈரோடு
» திருவரங்கம் அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
» பாரியூர் அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில், ஈரோடு
» திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஈரோடு
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|