Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வில்லியம் சேக்சுபியர் (William Shakespeare)
Page 1 of 1 • Share
வில்லியம் சேக்சுபியர் (William Shakespeare)
[You must be registered and logged in to see this image.]
வில்லியம் சேக்சுபியர் (26 ஏப்ரல் 1564 - 23 ஏப்ரல் 1616)[a] ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.[1] அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.[2]
ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் என்கிற இடத்தில் தான் சேக்சுபியர் பிறந்தார், வளர்ந்தார். 18 வயதில், அவர் ஆனி ஹதாவேயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்: சுசானா, மற்றும் இரட்டையர்களான ஹேம்னட் மற்றும் ஜூடித்.1585 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, லண்டனில் ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் லார்டு சாம்பர்ளின்'ஸ் மென் என்ற நாடக நிறுவனத்தின் பங்குதார் என வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். இந்த நாடக நிறுவனம் பின்னாளில் கிங்'ஸ் மென் நாடக நிறுவனம் என்று ஆனது. 1613 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றதாக கருதப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பின் அங்கு அவர் மரணமெய்தினார். சேக்சுபியரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சில பதிவுகளே பிழைத்திருக்கின்றன. எனவே அவரது உடல் தோற்றம், பாலின விருப்பம், மத நம்பிக்கைகள், மற்றும் அவரது படைப்புகளாகக் கூறப்படுவன மற்றவர்களால் எழுதப்பட்டதா போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊகங்கள் நிலவுகின்றன.[3]
சேக்சுபியர் தனது அறியப்பட்ட படைப்புகளில் அநேகமானவற்றை 1589 மற்றும் 1613 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தான் உருவாக்கினார்.[4][c] அவரது ஆரம்ப நாடகங்கள் முக்கியமாக நகைச்சுவை மற்றும் வரலாறுகள் என பல பிரிவுகளைத் தொட்டது. பின் சுமார் 1608 வரை அவர் துன்பியல் நாடகங்களை பிரதானமாக எழுதினார். ஹேம்லட் , கிங் லியர் , மற்றும் மெகாபெத் ஆகிய ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படும் சிலவும் இதில் அடங்கும். தனது இறுதிக் காலகட்ட சமயத்தில், அவர் துன்பியல்நகைச்சுவைகளை எழுதினார். இவை அரிய நிகழ்வுகளுடனான வீரக் காதல் காவியங்கள் என்றும் கூறலாம். மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து பணியாற்றினார். அவரது நாடகங்களில் பலவும் அவரது ஆயுள்காலத்தில் பல்வேறு தரம் மற்றும் துல்லியங்களுடனான பதிப்புகளில் வெளியானது. 1623 ஆம் ஆண்டில், அவரது முன்னாள் நாடக அரங்க சகாக்களில் இருவர் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் அவரது நாடகப் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டனர். இதில் இப்போது சேக்சுபியரது படைப்புகள் என்று அறியப்படும் நாடகப் படைப்புகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் அடங்கியிருந்தது.
சேக்சுபியர் தனது காலத்திலேயே மதிப்புமிகுந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். எனினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி வரை அவரது மதிப்பு இன்றைய உயரத்தில் இருக்கவில்லை. குறிப்பாக காதல்வீரக் காவியங்கள் சேக்சுபியரின் திறமையைப் போற்றின. விக்டோரியா காலத்தவர்கள் சேக்சுபியரை மரியாதையுடன் புகழ்ந்து போற்றினர்.[5] இருபதாம் நூற்றாண்டில் அவரது படைப்புகள் பல்வேறு இயக்கங்கள் மூலமும் எடுத்தாளப் பெற்றன. அவரது நாடகங்கள் இன்று மிகவும் புகழ்மிக்கவையாக திகழ்வதோடு, உலகெங்கிலும் பன்முக கலாச்சார மற்றும் அரசியல் பொருளில் தொடர்ந்து படிக்கப்பட்டும், மறுபுரிதல் கொள்ளப்பட்டும் வருகின்றன.
வில்லியம் சேக்சுபியர் (26 ஏப்ரல் 1564 - 23 ஏப்ரல் 1616)[a] ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார். ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.[1] அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும். அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.[2]
ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் என்கிற இடத்தில் தான் சேக்சுபியர் பிறந்தார், வளர்ந்தார். 18 வயதில், அவர் ஆனி ஹதாவேயை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்: சுசானா, மற்றும் இரட்டையர்களான ஹேம்னட் மற்றும் ஜூடித்.1585 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, லண்டனில் ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் லார்டு சாம்பர்ளின்'ஸ் மென் என்ற நாடக நிறுவனத்தின் பங்குதார் என வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார். இந்த நாடக நிறுவனம் பின்னாளில் கிங்'ஸ் மென் நாடக நிறுவனம் என்று ஆனது. 1613 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றதாக கருதப்படுகிறது. மூன்று வருடங்களுக்குப் பின் அங்கு அவர் மரணமெய்தினார். சேக்சுபியரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சில பதிவுகளே பிழைத்திருக்கின்றன. எனவே அவரது உடல் தோற்றம், பாலின விருப்பம், மத நம்பிக்கைகள், மற்றும் அவரது படைப்புகளாகக் கூறப்படுவன மற்றவர்களால் எழுதப்பட்டதா போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊகங்கள் நிலவுகின்றன.[3]
சேக்சுபியர் தனது அறியப்பட்ட படைப்புகளில் அநேகமானவற்றை 1589 மற்றும் 1613 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தான் உருவாக்கினார்.[4][c] அவரது ஆரம்ப நாடகங்கள் முக்கியமாக நகைச்சுவை மற்றும் வரலாறுகள் என பல பிரிவுகளைத் தொட்டது. பின் சுமார் 1608 வரை அவர் துன்பியல் நாடகங்களை பிரதானமாக எழுதினார். ஹேம்லட் , கிங் லியர் , மற்றும் மெகாபெத் ஆகிய ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படும் சிலவும் இதில் அடங்கும். தனது இறுதிக் காலகட்ட சமயத்தில், அவர் துன்பியல்நகைச்சுவைகளை எழுதினார். இவை அரிய நிகழ்வுகளுடனான வீரக் காதல் காவியங்கள் என்றும் கூறலாம். மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து பணியாற்றினார். அவரது நாடகங்களில் பலவும் அவரது ஆயுள்காலத்தில் பல்வேறு தரம் மற்றும் துல்லியங்களுடனான பதிப்புகளில் வெளியானது. 1623 ஆம் ஆண்டில், அவரது முன்னாள் நாடக அரங்க சகாக்களில் இருவர் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் அவரது நாடகப் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டனர். இதில் இப்போது சேக்சுபியரது படைப்புகள் என்று அறியப்படும் நாடகப் படைப்புகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் அடங்கியிருந்தது.
சேக்சுபியர் தனது காலத்திலேயே மதிப்புமிகுந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார். எனினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி வரை அவரது மதிப்பு இன்றைய உயரத்தில் இருக்கவில்லை. குறிப்பாக காதல்வீரக் காவியங்கள் சேக்சுபியரின் திறமையைப் போற்றின. விக்டோரியா காலத்தவர்கள் சேக்சுபியரை மரியாதையுடன் புகழ்ந்து போற்றினர்.[5] இருபதாம் நூற்றாண்டில் அவரது படைப்புகள் பல்வேறு இயக்கங்கள் மூலமும் எடுத்தாளப் பெற்றன. அவரது நாடகங்கள் இன்று மிகவும் புகழ்மிக்கவையாக திகழ்வதோடு, உலகெங்கிலும் பன்முக கலாச்சார மற்றும் அரசியல் பொருளில் தொடர்ந்து படிக்கப்பட்டும், மறுபுரிதல் கொள்ளப்பட்டும் வருகின்றன.
Re: வில்லியம் சேக்சுபியர் (William Shakespeare)
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் இந்தியரின் மரபணு
» பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர்
» பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் மும்பை வந்தனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|