Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு சிலந்தி மனிதனுக்கு கற்றுத் தந்த பாடம்!
Page 1 of 1 • Share
ஒரு சிலந்தி மனிதனுக்கு கற்றுத் தந்த பாடம்!
ஒரு தொழிலோ அல்லது வேறு என்ன காரியமாக இருந்தாலும் அதை செய்கின்ற காலத்தில் எதிர்பாரா இடையூறுகள் எது வந்தாலும் சோர்ந்து போகாமல், தவறுகளை திருத்தி, நன்கு ஆராய்ந்து அதில் முழுக்கவனம் செலுத்தி எடுத்த காரியத்தை முடித்து விட வேண்டும்.
கீழ்கண்ட இந்த கதை பலருக்கு தெரிந்திருக்கும். சிலருக்கு தெரிந்திருக்காது. இருப்பினும் அனைவரும் ஒரு முறை படிக்கவேண்டும்.
ஸ்காட்லாண்டில் நாட்டில் ராபர்ட் புரூஸ் (1274 AD – 1329 AD) என்ற அரசன் தன்னுடைய எதிரிகளோடு பல தடவை போர் புரிந்து தோல்வியடைந்து கடைசியில் உற்சாகம் குறைந்து இனி தன் முயற்சியால் ஒன்றும் பயனில்லை என்று கருதி அங்கிருந்து ஓடி ஒளிந்து கொள்ளும்படியான நிலையில் அவன் மட்டும் தனியாக ஒரு குகையில் வாழ நேரிட்டது. தான் அடைந்த இந்த இழிந்த நிலையைக் குறித்து தினமும் வருந்திக் கொண்டிருந்தான்.
Robert Bruce
ஒருநாள் புரூஸ் தனது குகையில் மல்லாந்து படுத்தபடி இனி என்ன செய்வது என்று கவலையோடு யோசித்துக் கொண்டிருக்கையில்,மேலே உத்தரத்தில் சிலந்தி ஒன்று ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு தன் வலையை கட்ட எண்ணி அது இருந்த உத்தரத்தில் தன்மெல்லிய நூலை கட்டி விட்டு மற்றொரு உத்தரத்திற்கு பாய்ந்து கொண்டு இருந்தது,இரண்டு உத்தரத்திற்கும் இடைவெளி அதிகம் இருந்ததால் அதை எட்ட முடியாமல் சிலந்தி கீழே விழுந்து விட்டது.ஆனாலும் அதற்காக பின்வாங்காத சிலந்தி மீண்டும் மேலே ஏறி முன் போலவே அடுத்த உத்தரத்திற்கு பாய்ந்தது!இந்த முறையும் கீழே விழுந்து விட்டது, இப்படியே திரும்ப திரும்ப ஆறு தடவை முயன்றும் சிலந்தி தன் முயற்சி பலன் அளிக்காமல் கீழே விழுந்து விட்டது. கீழே விழுந்ததில் மிகவும் களைப்படைந்து போன சிலந்தி அப்படியே அசையாமல் கீழே கிடந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த புரூஸ் இந்த சிலந்தியும் நாமும் ஒரே நிலையில் இருக்கிறோம், நாம் பல தடவை போர் புரிந்து தோற்று களைத்தோம், இந்த சிலந்தியும் தனது முயற்சியில் பல தடவை தோற்று களைப்படைந்து விட்டது, இனி இதற்கும் வழியில்லை,அதே போல் நமக்கும் வேறு வழி காணோம் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு சிலந்தியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் அசையாமல் கிடந்த சிலந்தி மெதுவாக அசைந்தது, பிறகு மெதுவாக அங்கிருந்து நகன்று முன்போல மேலே ஏறத்தொடங்கியது! புரூஸ் கண்கொட்டாமல் அதையே அதிசயத்தோடு பார்த்து கொண்டிருக்கும்போது, மேலே வந்த சிலந்தி தன் முழு பலத்தோடு ஒரு உத்தரத்தில் இருந்து இன்னொரு உத்தரத்திற்கு பாய்ந்தது, இந்த முறை தன் விடாமுயற்சியால் அது நினைத்தபடி மறு உத்தரத்தை அடைந்தது.
இவையெல்லாவற்றையும் பார்த்த புரூஸ் இது நமக்கு கடவுள் காட்டிய நல்வழியாக நினைத்து நாமும் முயல்வோம் என்று இதுவரை தான் பட்ட கவலையை விட்டு பல சிரமங்களுக்கு இடையில் சிதறுண்டு போன தன் படையைத் திரட்டி மிகவும் ஊக்கமுடன் மீண்டும் தன் எதிரியுடன் போர் செய்தான்.
இந்த முறை தன் விடா முயற்சியால் எதிரியை முறியடித்து அதில் வெற்றியும் அடைந்தான்.
உத்வேகம் உள்ளவர்கள் சிறு சிறு விஷயங்களில் இருந்து கூட பாடம் கற்றுக் கொள்ள முடியும்.
‘ஊக்கமது கை விடேல்’ என்னும் நீதியை அந்த சின்னஞ்சிறு சிலந்தியின் செய்கையை அறிந்த ராபர்ட் புரூஸ் தானும் அதே போன்று நடந்ததால் மீண்டும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தான்.
இறைவன் இந்த உலகில் ஏன் விலங்குகளை படைத்தான் தெரியுமா? உயிரின சுழற்சிக்கு மட்டும் அல்ல… ஒவ்வொரு விலங்கிடமும் இருக்கும் அதன் தனித்தன்மையை பார்த்து மனிதன் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று தான்.
இயற்கையை நாம் நேசித்தால், சற்று உற்றுநோக்கினால், நம்மை சுற்றியுள்ள ஒவ்வொரு விலங்கிடமும், ஒவ்வொரு உயிரினத்திடம் இருந்தும் நாம் எண்ணற்ற பாடத்தை கற்றுக்கொள்ளமுடியும்.
எறும்பின் சுறுசுறுப்பும் எருதின் உழைப்பும் காகத்தின் கூட்டுறவும் கழுதையின் பொறுமையும் நாயின் விசுவாசமும் நரியின் தந்திரமும் புறாவின் ஒழுக்கமும் புலியின் வீரமும் யானையின் அறிவும் சிங்கத்தின் நடையும் மானின் மானமும் மனிதனுக்குத் தேவை எனச் சான்றோர்கள் சொல்வதுண்டு.
நன்றி -http://rightmantra.com
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஒரு சிலந்தி மனிதனுக்கு கற்றுத் தந்த பாடம்!
எறும்பின் சுறுசுறுப்பும் எருதின் உழைப்பும் காகத்தின் கூட்டுறவும் கழுதையின் பொறுமையும் நாயின் விசுவாசமும் நரியின் தந்திரமும் புறாவின் ஒழுக்கமும் புலியின் வீரமும் யானையின் அறிவும் சிங்கத்தின் நடையும் மானின் மானமும் மனிதனுக்குத் தேவை எனச் சான்றோர்கள் சொல்வதுண்டு.
Re: ஒரு சிலந்தி மனிதனுக்கு கற்றுத் தந்த பாடம்!
அருமையான தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஒரு சிலந்தி மனிதனுக்கு கற்றுத் தந்த பாடம்!
எறும்பின் சுறுசுறுப்பும் எருதின் உழைப்பும் காகத்தின் கூட்டுறவும் கழுதையின் பொறுமையும் நாயின் விசுவாசமும் நரியின் தந்திரமும் புறாவின் ஒழுக்கமும் புலியின் வீரமும் யானையின் அறிவும் சிங்கத்தின் நடையும் மானின் மானமும் மனிதனுக்குத் தேவை எனச் சான்றோர்கள் சொல்வதுண்டு.
சிறந்த பகிர்வுதான்.
மிக்க நன்றி செய்தில்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஒரு சிலந்தி மனிதனுக்கு கற்றுத் தந்த பாடம்!
அருமை! ஊக்கமது கைவிடேல்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
» மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்....
» ))).....வாழ்க்கை தந்த பாடம்.....(((
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -12. குழந்தை கற்று தந்த பாடம்.
» தோல்வி நிறைய கற்றுத் தரும்
» மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்....
» ))).....வாழ்க்கை தந்த பாடம்.....(((
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -12. குழந்தை கற்று தந்த பாடம்.
» தோல்வி நிறைய கற்றுத் தரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|