தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

View previous topic View next topic Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:39 pm

உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

காய்கறிகளின் ராஜாவாக காரட்டைக் குறிப்பிடுகிறார்கள. காய்கறிகளின் இராணியாக காளானைக் குறிப்பிடுகிறார்கள்.


காரணம் என்ன?
100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் இருக்கிறது. கொழுப்பும் இருக்கிறது. ஆனால் அவை கொலாஸ்டிரலை இரத்தக் குழாயில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். காளானில் கொழுப்புச்சத்து இல்லை.

எனவே, பயமின்றிக் காளானை நன்கு சாப்பிடலாம். புரதச்சத்தும் உடலுக்குச் தேவையான சக்தியைத் தந்துவிடும். கொலாஸ்டிரல் சேரும் அபாயமும் இல்லை.

இதனால்தான் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதயவியாதி, மலச்சிக்கல், வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி முதலியனவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணமாக வேண்டும். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியைத் தந்துவிடுகின்றன.

புரதச்சத்து அதிகமாய் இருப்பதால் இராணி என்று வழங்கப்படும் காளானின் இரும்புச்சத்தும், பலவிதமான வைட்டமின்களும் உள்ளன. அதனால் மருத்துவக் குணங்களும் மிக அதிகம். ஏ வைட்டமின் அதிகமாய் இருக்கிறது.

காளானின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளன.

காலரா, அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாகக் காளான் சூப் நல்ல பலன் தரும்.

காளானில் உள்ள ஒரு விதமான பொருள் புற்றுநோய் வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையைப் பெற்றுள்ளதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.

வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியன குணமாகக் காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகச் சமைத்துச் சாப்பிடலாம். பிரியாணி செய்தால் காளான், முட்டைகோஸ் பச்சை பட்டாணி ஆகிய மூன்றையும் தவறாமல், சேர்க்க வேண்டும். இது சத்துணவு, உடல் ஆரோக்கியத்துக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

உடல் நலனில் அக்கறை உள்ள அனைத்து வயதுக்காரர்களும் வாரத்திற்கு இரு நாள்களாவது தக்காளி சூப் போல் காளான் சூப் தயாரித்து அருந்துதல் நலம்.

மட்டன் பிரியர்கள் காளான் சாப்பிட்டால் உடலுக்குச் சக்தி கிடைக்கும். உடலில் கொலாஸ்டிரல் சேராது. இந்தக் காரணத்தால்தான் உலகம் முழுவதும் காளான் உணவு மிகவும் விரும்பிச் சாப்பிடப்படுகிறது.

ஆரஞ்சுப்பழத்தைவிட, 4 மடங்கும், ஆப்பிள் பழத்தைவிட 12 மடங்கும், முட்டைக் கோஸைவிட இரு மடங்கும், புரதச்சத்தும், மருத்துவக் குணங்களும் நிரம்பியது, காளான்.

தாய்ப்பால் வற்ற….
தாய்பாலை வற்றச் செய்ய விரும்பினால் காளான் சூப் சாப்பிட ஆரம்பிக்கலாம். தொடர்ந்து சாப்பிட்டால் ஏழு, எட்டு நாள்களில் தாய்ப்பால் வற்றிவிடும்.

புண்களைக் குணப்படுத்தி டானிக் போல உடலுக்குச் சக்தி தரும் காளானில் வைட்டமின் - ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் ‘பி’, ‘டி’, ‘இ’ ஆகியன ஓரளவு உள்ளன.

காளானை முதன் முதலாக உணவாகச் சாப்பிட்டவர்கள் கிரேக்கர்களும், ரோமானியர்களும்தான்.

இன்று தென்னமெரிக்காவின் முனையில் உள்ள டைரா லெஃபியுகோ என்னும் பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் முக்கிய உணவாகக் காளான் இருக்கிறது. அவர்களைப் போல் வேறு எந்த ஒரு நாட்டிலும் காளானை அரிசி, கோதுமை போல் முக்கிய உணவாகப் பயன்படுத்துவதில்லை.

அமெரிக்கர்களைவிட ஐரோப்பியர்கள் காளானை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்தியாவில் எட்டு வகைக் காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான, வைக்கோல் காளான் என மூன்று வகைக் காளான்களை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.

இதய நோயாளிகள் வலிகுறைந்து உற்சாகமாய் இருக்க காளான் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் ஆண்டு தோறும் ‘காளான் வளர்த்துப் பணம் குவிப்பது எப்படி?’ என்னும் தலைப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன. காளான் வளர்ப்பதைச் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி நிலையங்களும் அதிகம் உள்ளன.

அமெரிக்க அரசு காளான் பற்றிய செய்திச் சுருள்களை அடிக்கடி வெளியிட்டு வருவது ஆச்சரியமான செய்தியாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:40 pm

இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும்.

இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.
மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.
இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும். எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.

கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

குத்தலா? எரிச்சலா?
மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும. எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும்.

இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!
இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும்.

சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

மலச்சிக்கலா?
மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது.

வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும்.

இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.
நீர்க்கோவை குணமாகும்!

நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம்.

கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

வயிற்று வலி குணமாகும்!
செரிமானக் கோளாறுகள் அனைத்தையும் மணத்தக்காளிக் கீரையின் இரசம் குணப்படுத்துகிறது. ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை மிக்ஸி மூலம் சாறாக மாற்றுங்கள்.

உங்களுக்குப் பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருந்துங்கள். இந்தச் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.

இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.

நல்ல தூக்கம் இல்லையா?
இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது.

இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. மிக்ஸி மூலம் எடுத்த சாற்றை இவர்கள் அருந்த வேண்டும். இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.

காய்ச்சலா? கவலை வேண்டா!
எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை (அல்லது கீரைப் பொடி என்றால் ஒரு தேக்கரண்டி) தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும்.

இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வயிர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும்.

மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கீரையைப் போலவே பழமும் சக்தவாய்ந்த மருந்தாகும். ஆஸ்துமா நோயாளிகள் சளியுடன் ‘கர்புர்’ என்று சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.
புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கரு தரிக்கச் செய்யும்.

உருவான கருவலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.

தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.

நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.

தினமும் சாப்பிடலாமா?
மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து உடலில் உள்ள நோய்களையும் குணப்படுத்தும் இக்கீரையைத் தினமும் உணவில் உண்ணலாம்.

100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் பாஸ்பரஸும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன.

மகிழ்ச்சி வேண்டுமா?
மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன.

பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.

நெஞ்சவலி இனி இல்லை!
இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அதைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன் விஞ்ஞானப் பெயர், ஸோலனம் நைக்ரம் என்பதாகும். இப்போது உலகம் முழுவதும் இது பயிர் செய்யப்படுகிறது.
காரணம், குறைந்த செலவில் சிறந்த உணவாகவும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துணவாகவும் இருப்பதால்தான்.

இன்றே, உங்கள் வீட்டில் மணத்தக்காளி விதையைத் தூவி இக்கீரையை வளர்க்க ஆரம்பியுங்கள், உடல் நலன் பெறுங்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:41 pm

உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு.

தக்காளி இரசம்
நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.
பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.
சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேற் குறித்த நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும்; நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.
உடல் பருமன் குறையும்!

100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20தான். எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும்.

தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.

இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமைனக் குறைக்கலாம்.
தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.
தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

பார்வை நன்கு தெரிய
இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.

செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

காய்ச்சலா? பித்த வாந்தியா?
காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.

ஆஸ்துமாவா?
காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன. இரவில் படுக்கப்போகும் போது ஒரு டம்ளர் தக்காளிச்சாறு மிக்ஸி மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதில தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும்.

முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை (மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும். பிறகு டம்ளரில் உள்ள தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும். மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த நன்மையளிக்கும் சிகிச்சை முறை இது.

சளி முற்றிலும் அகன்றுவிடும். அதனால் இவர்கள் குணமாகிவருவதும் கண்கூடாய்த் தெரியும். தக்காளியைப் பழமாகச் சாப்பிட்டாலும் இரசமாகச் சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும். உண்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும்.

இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள். பலமான விருந்தை ருசித்துச் சாப்பிட, ஏற்கனவே வயிற்றில் உள்ளதை இது ஜீரணிக்கச் செய்துவிடும்.

அத்துடன் இது உடனே உடலால் கிரகித்துக் கொள்ளப்படுவதால் வயிறு நிரம்பிவிடும். எனவே உணவைக் குறைவாகவே உண்ணுவார்கள். அதாவது வயிற்றில் பாதியைத் தக்காளி இரசம் அடைத்துக் கொள்வதால் மிகுதியாகச் சாப்பிட முடியாது. ஓட்டலுக்கு இந்த முறையால் லாபமும் கிடைக்கும்.

பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது.

தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம். ஒரு வேளைக்கு ஒரு டம்ளர் சாறே போதும்.

பார்வை நரம்புகள் பலம் பெற
வெண்ணெயில் உள்ளதைவிட அதிக அளவு வைட்டமின் ‘ஏ’ தக்காளிப் பழங்களில் இருக்கிறது. அதனால் கண் பார்வைக் கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளிப் பழத்தையும், தக்காளிச் சாற்றையும் லண்டனின் உள்ள கைஸ் மருத்துவமனை (Guy’s Hospital) நோயாளிகளுக்குத் தொடர்ந்து கொடுத்துக் குணப்படுத்தி வருகிறது. இதற்குத் ‘தக்காளி வைத்தியம்’ என்று பெயர்.

தக்காளி தென்னமெரிக்காவில் தோன்றியது. ஐரோப்பியர்களால் ‘காதல் பழம்’ என்று வழங்கப்படுகிறது. உலகில் அதிகம் விளையும் முதல் காய்கறி உருளைக்கிழங்கு, இரண்டாவதாக அதிகம் விளையும் காய்கறி தக்காளி.

பதப்படுத்தப்பட்ட தக்காளி சூஸ் உலகிலுள்ள அனைவராலும் விரும்பப்படுகிறது.
தக்காளியுடன் துவரம் பருப்பு சேர்த்து பச்சடி செய்து எல்லா வயதினரும் நன்கு சாப்பிட்டு ஆரோக்கியமாய் திகழலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:42 pm

ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை - வல்லாரை
ஞாபக சக்தியை வளர்க்கப் பயன்படும் காய்கறிகளுள் இலைக்காய்கறிகளுள் முதலிடத்தில் இருப்பது, வல்லாரைக் கீரை.

தங்களின் சிந்தனை சக்தியை வளர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் வாரம் ஒரு முறை சாப்பிட வேண்டிய கீரை இது.

இந்திய மருத்துவத்தில் ஞாபகசக்தியை வளர்க்க வல்லாரையைவிடச் சிறந்த மருந்து எதுவும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்பவர்களுக்கு வல்லாரை மாத்திரைகள் ஆங்கில மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது.

அளவோடு சாப்பிட்டு நலமுடன் வாழ வேண்டும்.
மூளைக்கு நல்ல பலத்தையும், திறமையையும், சுறுசுறுப்பையும் தரும் இந்தக் கீரையை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது. அப்படி உபயோகித்தால் மூளை பாதிக்கப்படும். உடலில் வலி அதிகமாகும். கோமா நிலைக்குக் கொண்டு போய்விடும். எனவே வல்லாரைக் கீரையை அளவோடு பயன்படுத்த, பலவிதமான நோய்களையும் குணப்படுத்தி, நலமோடு வாழ வேண்டும்.

இது நம் நாட்டு இலைக் காய்கறி
ஆறு, வாய்க்கால், குளம், ஏரி முதலியவற்றின் ஓரங்களில் தானாகவே வளர்கிறது. வல்லாரைக் கீரை படர்கொடி, போல் வளரும். வல்லாரையின் தாயகம், இந்தியாதான். இது செடிதான்.
அதனால்தான் ஆங்கிலத்தில் இந்தக் கீரைக்கு இந்தியன் பென்னிவொர்ட் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பண்டைய இந்தியர்களின் சமஸ்கிருத நூல்களில் இந்தக் கீரையின் மருத்துவக் குணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் பயிராகும் இக்கீரை இரண்டாயிரம் மீட்டர் உயரமான மலைப்பகுதிகளிலும் கூடத் தானாகவே வளர்கிறது.

பறித்த புதிய வல்லாரைக் கீரையில் வெல்லாரைன் (Vellarine) என்னும் எண்ணெய்ப் பொருள் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கீரை மிகுந்த நறுமணத்தை உணவுக்கு ஊட்டுகிறது.

உலர்ந்த கீரையில் இந்த நறுமணம் மறைந்துவிடுகிறது. ஆனாலும் கீரையின் மருத்துவக் குணங்கள் அழியாமல் உலர்ந்த கீரையிலும், கீரைப் பொடியிலும் அப்படியே கிடைக்கிறது.

வல்லாரையில் கொழுப்பு எண்ணெய் சிட்டோஸ்டிரோல், டானின், ஒரு வகை மரப்பசை போன்ற பொருள்கள் உள்ளன. உலர்ந்த செடியில் காடிப்பொருளும், ஹைடிரோ கோட்டிலைன் என்னும் பொருளும் உள்ளன.

கீரையிலும் வேரிலும் வெல்லாரைன், பெக்டிக் அமிலம், நீரில் கரையாத மரப்பிசின் போன்றவை இருப்பதால் கசப்புச் சுவை அதிகம் இருப்பது போல் உணருகிறோம்.

கீரை மட்டும் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு ஆகிய சுவைகள் கொண்டுள்ளது.

ஊட்டம் தரும் இலைக்காய்கறி
வல்லாரைக்கீரை மிகுந்த சத்துணவு நிரம்பியது. அத்துடன் அது எளிதில் உணவை வயிற்றுக்குள் கொண்டு சென்று செரிக்கச் செய்துவிடுகிறது. உணவுப் பொருள்களையும் நன்கு உறிஞ்சிக்கொண்டு கழிவுப்பொருள்களையும் உடனே வெளியேற்றி உடலை பழையபடி ஆரோக்கியமான நிலைக்கே கொண்டுவந்துவிடுகிறது.

காய்ச்சல் உடனே தணிய….
அதனால்தான் எல்லாவகையான காய்ச்சல்களுக்கும் இதன் இலை, துளசியிலை, மிளகு போன்றவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கொடுக்கிறார்கள். காலை, மாலை என இருவேளை கொடுத்தால் காய்ச்சல் தணியும், இலையாகக் கிடைக்காதவர்கள் தலா அரை தேக்கரண்டி வீதம் வல்லாரைக் கீரைப்பொடி, துளசி இலைப் பொடி, கால் தேக்கரண்டி மிளகுப்பொடி சேர்த்துச் சாப்பிடலாம். இதை ஒரு வேளை சாப்பிட வேண்டும்.

சிறு நீர் நன்கு பிரிய
இக்கீரையைச் சாதாரணமாய்ப் பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், இது உடலில் உள்ள வீக்கங்களுடன் போரிட்டுச் சமாதானப்படுத்திவிடும். உள் உறுப்புகளில் உள்ள வீக்கங்களும் குணமாகிவிடும். ஓரளவு பேதி மருந்து போலவும் இது செயல்படுகிறது. சிறு நீர் நன்கு சுரந்து உடனே வெளியேறவும் இக்கீரை பயன்படுகிறது. வாரம் ஒரு முறை உடல் உறுப்புகளைப் புதுப்பித்துக்கொள்ளவும். பல்வேறு விதமான நோய்க் கிருமிகள் அகலவும் இக்கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.

ஆரோக்கியத்தைப் புதுப்பிக்க ஒரு டீஸ்பூன்!
இல்லையெனில் உலர்ந்த வல்லாரைக் கீரைப்பொடியில் ஒரு தேக்கரண்டியும் அதே அளவு நல்லெண்ணெயும் சேர்த்துச் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இந்த முறையில் தினசரி பயன்படுத்தினாலும் ஞாபக சக்தியும் உடல் நலனும் பாதுகாக்கப்படும்.

இக்கீரையின் தண்டு, வேர், பூ என அனைத்தும் சிறந்த உணவாகவும், நன்கு குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றன. மேலை நாடுகளில் இந்தக் கீரையைச் சூப்பாக தயார் செய்து அருந்துகிறார்கள்.

100 கிராம் கீரையில் கிடைக்கும் கலோரி 37 ஆகும. இதில் ஈரப்பதம் 84.5%, புரதம் 2.1%, கொழுப்பு 0.5%, தாதுஉப்புகள் 2.7%, நார்சத்து 4.2%, மாவுச்சத்து 6.0% என்று உள்ளன. இத்துடன் 224 மில்லி கிராம் கால்சியமும், பாஸ்பரஸ் 32 மில்லி கிராமும், இரும்புச்சத்து 68.8 மில்லி கிராமும் உள்ளன. எனவே, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் இரத்த சோகை குணமாக, இக்கீரையைத் தவறாது வாரம் ஒரு முறை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வல்லாரையில் நார்ச்சத்து அதிகமாய் இருப்பதால் கொலாஸ்டிரல் குறைக்கப்படும். மலச்சிக்கலும் உடனுக்குடன் குணப்படுத்தப்படும்.

இருமலா?
வாய்ப்புண், வயிற்றுவலி, எக்ஸிமா என்னும் சொறி சிரங்கு, வயிற்றுப்புண் முதலியவற்றையும் இக்கீரை குணப்படுத்துகிறது. டி.பி. நோயால் ஏற்படும் இருமலையும் குணப்படுத்துகிறது.
சொறிசிரங்கு, வி.டி. நோய், கெட்டுப்போன இரத்தம், வயிறு தொடர்பான நோய்கள் முதலியவை குணமாக ஒரு டம்ளர் பசும் பாலில் ஒரு தேக்கரண்டி வல்லாரைக் கீரைப் பொடியும், ஒரு தேக்கரண்டி அதிமதுரமும் சேர்த்துக் கலந்து கொடுக்க வேண்டும். மிகச்சக்தி வாய்ந்த மருந்து இது. குணம் தெரிய ஆரம்பிக்கும் போது கீரைப்பொடி, அதிமதுரம் முதலியவற்றின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துப் பாலை அருந்த வேண்டும்.

வெட்டைச்சூடு குணமாகக் காலையில் வெறும் வயிற்றில் மிளகுப்பொடி சேர்த்து ஒரு தேக்கரண்டி வல்லாரைக் கீரைச் சாறு அருந்த வேண்டும்.

தலை முடி நன்கு வளரும்
ஞாபக சக்தி அதிகரிக்கவும், மன நோய் குணமாகவும், மூளை நல்ல பலத்தைப் பெறவும், தலை முடி நன்கு வளரவும் ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி அளவு இக்கீரைக் பொடியைக் கலந்து அருந்த வேண்டும். தினமும் ஒரு வேளை மட்டும் இந்த முறையில் அருந்தினால் போதும்.
மனநோயாளிகள் விரைந்து குணமாக வாரம் இருமுறை மட்டும் இக்கீரையைச் சமைத்துப் பரிமாறலாம்.

காசநோய்க்காரர்களுக்கு ஏற்படும் தொண்டைக்கட்டு, தொண்டைக்கம்மல் முதலியவை இக்கீரையை உண்டால் குணமாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி உடனே குணமாக நான்கு இலைகள், சீரகம், சர்க்கரை சேர்த்து துவையலாக அரைத்துப் பயன்படுத்த வேண்டும். இது மிகச்சக்தி வாய்ந்த உணவு மருந்தாகும். இந்தத்துவையலை கொப்பூழ் பகுதியைச் சுற்றித்தடவ வேண்டும், உணவாகவும் கொடுக்க வேண்டும்.

நரம்புத் தளர்ச்சியா?
தோல், நரம்பு, இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக இக்கீரையைப் பொடியாகத் தினமும் பாலுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். பலவீனம் அடைந்த நரம்புகளைப் புதுப்பிக்க அரை தேக்கரண்டி வீதம் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும. முதல் நாள் மட்டுந்தான் அரை டீஸ்பூன். மறுநாளிலிருந்து அளவைக் குறைத்துக்கொண்டே வந்து ஒரு சிட்டிகை வரை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு என்றால் ஒரு சிட்டிகையே போதும்.

யானைக்கால் வியாதி குணமாகும்!
இக்கீரையின் செடி, தண்டு, கீரை முதலியவற்றலிருந்து சாறு எடுத்து, யானைக்கால் வியாதியுள்ள பகுதிகளில் தடவினால் நாளடைவில் குணமாகும். அல்லது பறித்த கீரைகளை வேகவைத்துத் துணியில் கட்டிச் சூட்டுடன் குறிப்பிட்ட இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம்.

இக்கீரைப் பொடித் தூளை நாட்பட்ட புண்கள் மீது தூவினால் குணமாகும். மேகப்புண் மற்றும் சொறி சிரங்குகளின் மீது இது போலவே தூவ வேண்டும்.

பல்லில் படிந்துள்ள மஞ்சள் நிறம் அகல இந்தக் கீரையால் பல் துலக்கலாம். நிறம் மாறி பற்களும் வெண்மையாகிவிடும்.

கொப்புளங்கள் குணமாக இலைச் சாறுடன் கருஞ்சீரகம் நெய் ஆகியன சேர்த்துப் பூச வேண்டும்.
ஆரோக்கியத்துடன் உடல் உறுதி பெற வல்லாரைக் கீரையையும், கீரைப்பொடியையும் அளவுடன் பயன்படுத்தி, அளவற்ற நன்மை பெற வேண்டும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:43 pm

வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு
காய்கறிகளுள் மிகவும் உறைப்பானது இஞ்சி. இஞ்சியைத் தொட்டு நாக்கில் வைத்தால் மிகவும் காரமாய் இருக்கும். இரண்டாவது காரமான காய்கறி வெங்காயம்.

ஆனால், வெங்காயத்தை ரசித்துச் சாப்பிடலாம். அவ்வளவாக காரம் இதில் இல்லை. நோய்களைக் குணப்படுத்தும் விதத்தில் அணுகுண்டைப் போல் பேராற்றல் வாய்ந்த காய்கறியாக வெங்காயம் சிறந்து விளங்குகிறது.

ஆண்டு முழுவதும் கிடைக்கும் வெங்காயம் இயற்கை கொடுத்துள்ள உணவு வகைகளுள் முதலிடத்தில் இருக்கிறது. உயர்தரமான புரதம், அதிக அளவில் கால்சியம், ரிபோபிளவின் போன்றவை இதில் அடங்கியுள்ளன. சிறு வெங்காயம், பெரிய வெங்காயம் என்று பல்வேறு இனங்கள் உள்ளன. அனைத்தையும் நீண்ட நாள்கள் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் வைததிருந்தும் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தைக் கடியுங்கள்
வெங்காயத்தில் உள்ள வாசனை கந்தகப் பொருள்களின் கூட்டுப் பொருளால் உண்டாகிறது. ஒரு வெங்காயத்தைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டால் அந்த வாசனை மறைய நீண்ட நேரம் ஆவதற்கு இதுதான் காரணம் இப்படிக் கடித்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள புண், கண்வலி, முதலியன குணமாகும். காரணம், வெங்காயத்தில் அதிக அளவு உள்ள ரிபோபிளவின் என்னும் ‘பி’ குரூப் வைட்டமினே இவற்றை எல்லாம் குணப்படுத்துகிறது.

சிறிய வெங்காயம் என்றாலும் சரி, பெரிய வெங்காயம் என்றாலும் சரி இரண்டிலும் ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள்தான் உள்ளன.

தரம் மாறலாமா?
வெங்காயத்தை வதக்கியோ வேகவைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் உள்ள நறுமணச் சுவையோ, குணப்படுத்தும் மருத்துவக் குணங்களோ குறைந்துவிடாமல் அப்படியே கிடைக்கும். உறைப்பு அதிகமுள்ள வெங்காயத்தின் சுவையும் நறுமணமுங்கூட அழிந்துவிடாமல் அப்படியே கிடைக்கும்.
உடலுக்குக் கிளர்ச்சியூட்டும், சிறுநீர்க் கழிவினைத் தூண்டும், தோலைச் சிவக்கவைக்கிற மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும். கபத்தை வெளிக் கொண்டுவரப் பயன்படும். இவ்வாறு பல்வேறு வகைகளில் வெங்காயம் சிறந்த உணவு மருந்தாகத் திகழ்கிறது.

இரத்தம் விருத்தியாகத் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும்.
நன்கு செரிமானம் ஆக பச்சையாகவோ, சமைத்தோ மற்ற உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிட வேண்டும்.

காய்ச்சல், சிறு நீர்க் கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸி மூலம் இரசமாக மாற்றி அருந்த வேண்டும். வெங்காயம் உடலுக்குக் கிளர்ச்சியூட்டும் மருந்து. எனவே, அதைச் சாறாகச் சாப்பிடுகிறவர்கள் அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.

உடல் நலத்தோடிருப்பவர்கள் 100 கிராம் பச்சை வெங்காயத்தை மட்டும் இரண்டு வேளை அல்லது மூன்று வேளைக்கு எனப் பிரித்து வைத்துக்கொண்டு, தங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குளிர்காய்ச்சல் குணமாக வெங்காயத்துடன் மிளகையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

நெஞ்சு வலியா? வெங்காயம் போதும்!
இதயப் பையின் சுவர்தசைக்குக் குருதி வழங்கும் நாடி நாளங்களில் இரத்த உறைவு ஏற்பட்டிருந்தால் நெஞ்சு வலிக்கும். அப்போது வெங்காயத்தை சாப்பிட்டால் உடனே இரத்தம் உறைவது அகற்றப்பட்டு இதயத்துக்குத் தடையின்றி நாளங்கள் வழியாக இரத்தம் செல்லும்,

நெஞ்சு வலியும் குணமாகும். இதனால்தான் இயற்கை மருத்துவர்கள் நெஞ்சுவலித்தால் உடனே வெங்காயம் சாப்பிடச் சொல்கிறார்கள்.

இதய நோயாளிகளும், இரத்த அழுத்த நோயாளிகளும் கொலாஸ்டிரல் குறையவும் இதயம் சீராகத் துடிக்கவும் தினமும் 100 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடவும்.

புகை பிடிப்பவர்கள் குணம் பெற…
சிகரெட் பிடிப்பவர்கள் நுரையீரல், புகையினால் பாதிக்கப்படுகிறது. இவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்ஸ் வெங்காயச் சாறு வீதம் தினமும் நான்கு வேளை அருந்த வேண்டும். இதனால் நுரையீரல் பலம் பெறும். இதே முறையில் வெங்காயச் சாற்றை அருந்தினால் இருமல், கபம், இரத்த வாந்தி, நீண்ட நாள்களாக இருந்து வரும் ஜலதோஷம், சளி முதலியவையும் பூரணமாய் குணமாகும்.

குளிர்கால ஜலதோஷமா?
ஜலதோஷம், குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், மார்புச்சளி, சளிக்காய்ச்சல் முதலியவை உடனே குணமாகச் சம அளவு வெங்காயச்சாறு, தேன் முதலியவை கலந்த மிக்ஸரை தயாரிக்கவும். இந்த மிக்ஸியில் தினமும் நான்கு தேக்கரண்டி வீதம் சாப்பிடவேண்டும்.

இந்த மிக்ஸரால் மூச்சுச் குழல் தொடர்பான அனைத்து நோய்களும் எந்த விதமான கெடுதலும் இன்றி உடனே குணமாகும்.

100 கிராம் வெங்காயத்தில் ஈரப்பதம் 82%ம், புரதம் 1.2%ம், கார்போஹைடிரேட் 11.1%ம், மீதியில் கொழுப்பு தாது உப்புகள் நார்ச்சத்து முதலியவையும் உள்ளன. 47 மில்லி கிராம் கால்சியமும், 50 மில்லி கிராம் பாஸ்பரஸும், 0.7 மில்லி கிராம் இரும்புச் சத்தும், வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’ முதலியன சிறிதளவும் உண்டு. கிடைக்கும் கலோரி 51.
வெங்காயத்தில் உள்ள இரும்புச்சத்து மிக எளிதாய் உடலில் கலந்துவிடும். இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைவில் தேறிவிடுவார்கள்.

தாது பலம் பெறுங்கள்
சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டக்கூடிய முதல் பொருளாய் வெள்ளைப்பூண்டு இருக்கிறது. இரண்டாவதாய் இருப்பது வெங்காயம், தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமில்லாதவர்கள் உரிக்கப்பட்ட வெள்ளை நிற வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, வெண்ணெயில் வதக்கி எடுக்க வேண்டும். இந்தக் கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடவேண்டும். வெங்காயம், வெண்ணெய், தேன் ஆகியன சேர்ந்த இந்தக் கலவை சிறந்த டானிக்காகும். வெண்ணெயில் வதக்கிய வெங்காயத்துண்டுகளை ஒரு பாட்டிலில் நன்கு இறுக்கி மூடி வைத்துக்கெண்டு பயன்படுத்தவும்.

தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்தால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் முதலியவை குணமாகும்.

சளி உள்ளவர்கள் வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சளி வெளியேறி இரத்தமும் சுத்தமாகிவிடும்.

வெங்காயத்தை வதக்கிச் சூட்டுடன் ஒருதுணியில் வைத்து பருக்கள், புண்கள், வெட்டுக் காயங்கள் முதலிய இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் விரைவில் குணம் பெறுவார்கள்.

காலரா உடனே குணமாக ….
காலரா நோய்க்கு மிகச்சிறந்த உணவு மருந்து வெங்காயம். காரம் அதிகம் இல்லாத வெள்ளை நிற வெங்காயத்தில் ஐம்பது கிராமும், பத்து மிளகும் இதற்குப் போதும். உரித்த வெங்காயத்தையும் மிளகையும் ஒன்றாக வைத்து இடிக்க வேண்டும். அதனோடு ஜீனி சேர்த்து காலரா நோயாளிக்குக் கொடுக்க வேண்டும். வெங்காயம், மிளகு, ஜீனி சேர்த்த இந்தத் துவையல் காலரா நோயாளியின் தாகத்தைத் தணித்து மனத்திற்கு அமைதியைத்தரும். மேலும் வாந்தி, சீத பேதி முதலியவற்றையும் உடனடியாக இந்தத் துவையல் கட்டுப்படுத்திவிடும்!

இரத்த மூலம் குணமாகும்
இரத்தமூலம் குணமாக முப்பது கிராம் வெங்காயத் துண்டுகளைத் தண்ணீரில் போடவும். அதில் ஐம்பது கிராம் ஜீனியையும் சேர்த்து அருந்த வேண்டும். தினமும் இரு வேளை அருந்தினால் பத்து அல்லது பதினைந்து நாள்களில் இரத்தமூலமும், மூல நோயும் குணமாகும். வெங்காயத் துண்டுகளை டம்ளரில் நன்கு இடித்துப் போட வேண்டும்.

காதுவலியும் வெங்காயமும்!
காதில் சத்தம் வந்துகொண்டே இருந்தால் (மணி ஒலிப்பது போது போல்) வெங்காயச் சாற்றில் ஒரு துணியை நனைத்து அத்துணியை பிழிந்து சில துளிகளைக் காதில் விட வேண்டும். இது ரஷ்யாவில் பிரபலமான மருத்துவமுறை, மயங்கி விழுந்துவிட்டவர்களின் மூக்கில் இரு துளி வெங்காயச்சாற்றை விட்டால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார்கள்.

காதில் வலி இருந்தால் சுட வைக்கப்பட்ட வெங்காயச் சாற்றில் ஒரு துணியை நனைத்து அத்துணியைப் பிழிந்து இரண்டு மூன்று துளிகளைக் காதில் விடவேண்டும்.

பற்களில் பாக்டீரியாக்கள் தங்க விடாமல் இருக்கத் தினமும் ஒரு வெங்காயத்தை பச்சயைாகக் கடித்துச் சாப்பிட வேண்டும். இப்படிமென்று தின்றால் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் பற்களும், ஈறுகளும் பாதிக்கப்படுவதும் முன் கூட்டியே தடுக்கப்படும்.

பல் வலி உள்ள இடத்தில் ஒரு துண்டு வெங்காயத்தை வைத்துக்கொண்டால் பல்வலி குறையும். பல் ஈறுகளிலும் குறையும். பல் சம்பந்தமான அனைத்து வெங்காய வைத்தியமும் ரஷ்யாவில் பிரபலமான வைத்திய முறைகளாகும்.

வெங்காயத்தின் தாயகம்!
வெங்காயத்தின் தாவர விஞ்ஞானப் பெயர், அலியம் சிபா (Allium cepa) என்பதாகும்.
ஈரான் - பாகிஸ்தான் பகுதியில் தோன்றிய காய்கறி இது. மத்திய ஆசியாவில் தோன்றிய வெங்காயம் பண்டைய காலத்திலேயே மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும் பயிர் செய்யப்பட்டுள்ளது.

பண்டைய எகிப்து நாட்டில் மிகவும் பிரபலமான உணவு, வெங்காயம். ஒரு வகை வெங்காயத்தைக் கடவுளாகவே இவர்கள் வணங்கி வந்தார்கள். உறவினர்களைப் பார்க்கப் போகும் போதும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் வெங்காயத்தைப் பரிசுப் பொருளாகக் கொடுத்து மகிழந்தனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிகளிலும் வெங்காயம் வைத்தே புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

யூதர்களுக்கு மிகவும் பிடித்தமானது வெங்காயம். அதனால் சூயஸ் வளைகுடாவில் ஆனியன் என்று பெயரிலே ஒரு நகரை கி.மு.430இல் யூதர்கள் நிறுவினார்கள். இந்த நகரம் 340 ஆண்டுகள் வரை இருந்தது.

இன்று உலகம் முழுவதும் வெங்காயம் பயிர் செய்யப்படுகிறது.
தாராளமாகவும் கிடைக்கும் வெங்காயம் மிகச்சக்தி வாய்ந்த உணவு மருந்தாகவும் இருப்பது மனிதனுக்கு இயற்கை அளித்துள்ள பெரிய பரிசாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:44 pm

உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு
கிழங்கு வகைகளுள் மிக முக்கியமானது, கருணைக் கிழங்கு.
உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன போல் உடலுக்கு நன்மை செய்யும் கிழங்கு இது. எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.

100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இக்கிழங்கு இன்றியமையாத ஒன்றாய்த் திகழ்கிறது.
கால்சியத்தால் குழந்தைகள் நன்கு வளர்கிறார்கள். இதே கால்சியம் வயதானவர்களின் எலும்புகள் பலவீனமடைந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. 100 கிராம் கிழங்கில் கார்போஹைடிரேட் 26%ம் ஈரப்பதம் 69.9%ம் இருப்பதால் உடலுக்கு நன்மையும் சக்தியும் அதிகம் கிட்டுகின்றன.

உடலில் எரிச்சலா?
இக்கிழங்கு வாதநோய், மூல நோய், உடல் எரிச்சல், பெளத்ரம், உடல் சூடு, மாதவிடாய்க் கோளாறு, வயிற்றுஉப்புசம், வயிற்றுவலி, பிற வயிற்றுக் கோளாறு போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

அதனால் ஜப்பானில் நோய்தீர்க்கும் கேப்ஸுல்களாக கருணைக் கிழங்கு கேப்ஸுல்கள் தயாரித்து விற்கின்றனர்.

கருணைக் கிழங்கு ஒல்லியானவர்களைக் குண்டாக மாற்றுகிறது. உடலுக்கு நல்ல வலுவையும் கருணைக் கிழங்கு வழங்குகிறது.

நன்கு பசிக்க …
கருணைக் கிழங்கு மலச்சிக்கலை நீக்கும். நன்கு பசிக்கச் செய்யும். இந்தக் கிழங்கைச் சாப்பிட்டால் உடனே மலச்சிக்கல் குணமாகி அடுத்த வேளை நன்கு ருசித்து ஆவலுடன் சாப்பிட நம்மைத் தயார்படுத்திவிடும்.

‘பசியில்லை, ருசியில்லை’ என்பவர்கள் அவ்வப்போது கருணைக்கிழங்குகளைச் சேர்த்து வருதல் நன்று. அடிக்கடி காபி சாப்பிடுகிறவர்களுக்கு ஏற்படும் பித்தக் கோளாறுகள் இக்கிழங்கால் குணமாகிறது. பசியைத் தூண்டுகிறது.

மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகத் தினமும் இக்கிழங்கை உணவில் சேர்த்து வருதல் வேண்டும்.

சாதாரணமாகக் கருணைக் கிழங்கைத் தோல் நீக்கிச் சிறுதுண்டுகளாய் நறுக்கி குழம்பு வைத்துச் சாப்பிட்டாலே மேற்கண்ட நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும்.

மூலநோய் குணமாக மேற்படி முறையில் சிறுதுண்டுகளாக்கி பசும்பாலில் அவித்து உப்பு சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகச் சாப்பிட வேண்டும். தினமும் அதிகபட்சம் இரு வேளை இது போல் சாப்பிட வேண்டும்.

பெளத்திரம் என்னும் இரத்த மூலம் குணமாகப் பசும் பாலில் அவித்த கருணைக் கிழங்குடன் உப்பு, ஒரு டீஸ்பூன் சாப்பாட்டு நெய் முதலியவற்றையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகச் சாப்பிடவேண்டும். மூலநோய்க்கான இந்த உணவு மருந்தை தயாரிக்க மண்சட்டியிலேயே கருணைக்கிழங்கை பயன்படுத்தவேண்டும்.

செரிமானத்துக்கு ….
அடிக்கடி வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி ஏற்படும் வளரும் குழந்தைகளுக்கு கருணைக் கிழங்கைச் சமைத்துக் கொடுத்து வந்தால் போதும். இக்கிழங்கில் உள்ள செரிமானப் பொருள்களும், கால்சியச் சத்தும் குழந்தைகளுக்கு அதிகம் நன்மை செய்கின்றன.

மூலம், பசியின்மை, தாது பலவீனம் போன்றவை குணமாகக் கருணைக் கிழங்கின் தண்டை கீரை போன்று சமைத்து உண்ண வேண்டும். இதனால் உடலுக்குப் பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றன.

கருணைக் கிழங்கைப் பிரிட்டனில் என்ன செய்கிறார்கள்.
கருணைக் கிழங்கின் தாயகம் இந்தியாதான். இரு கோளார்த்தங்களிலும் இக்கிழங்கு பயிராகிறது.
இந்தியாவைப் போலவே தெற்கு வியட்நாம், தெற்குக் கடல் தீவுகள் ஆகிய பகுதிகளிலும் கருணைக் கிழங்கு முக்கியமான சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. ஒரு விதமான நறுமணத்துடன் சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும் இக்கிழங்கை மேற்கண்ட மூன்று நாடுகளின் மக்கள்தாம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

கருணைக் கிழங்கு வகையை சேர்ந்த காட்டுக் கருணை, காடுகருணை ஆகியவை மிகவும் காரமாய் இருக்கும். இவற்றை அளவுடன்தான் சாப்பிடவேண்டும்.

டி.பாட்டாட்டஸ் என்பது சீன வகை கருணை கிழங்கு ஆகும். இந்தக் கிழங்கை வீட்டை அழகுப்படுத்துவதற்காக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிர் செய்கின்றனர். வீடுகளில் இக்கிழங்கு அழகிற்காகத் தொங்கும். இதில் வேலைப்பாடுகள் செய்தும் தொங்க விட்டிருக்கிறார்கள்.

கருணைக்கிழங்கின் மருத்துவக் குணங்களை நன்கு அறிந்திருந்த இந்தியர்கள் பாராட்டுக்குரியவர்களே!.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:44 pm

வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்
அடிக்கடி காய்ச்சல், எப்போதும் சளித் தொந்தரவு, எந்த உணவையும் ருசித்துச் சாப்பிட்ட முடியாமை, நீரிழிவு, எப்போதும் உடலில் சூடு, ஜலதோஷம், சொறிசிரங்கு, பித்தக் கோளாறுகள் போன்ற குறைபாடுகளைக் களைவதில் முதலிடத்தில் இருக்கும் காய்கறிகளின் கோவைக்காயும் ஒன்றாகும்.

காரணம்?
இது கத்தரிக்காயை விடக் கசப்புச் சுவையுடையது. இந்தக் குணத்தால் மேற்கண்ட வியாதிகளைக் குணப்படுத்திவிடுகிறது.
கோவைக் காயைச் சமைத்தே சாப்பிடலாம். இல்லையெனில் நறுக்கப்பட்ட இக்காய்த் துண்டுகளை வெயிலில் காயப்போட்டு, அவற்றின் மீது உப்பு இட்டு மோரைத் தெளித்து மீண்டும் காயப்போட்டு வற்றல்களாக எடுத்துவைத்துக் கொண்டு பொரித்துச் சாப்பிடலாம்.

இந்தியாதான் இதன் தாயகம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வீடுகளில பயிர் செய்யப்படுகிறது.

கோவைக்காயின் வேர்கள், தண்டுகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றைத் தோல் வியாதிகள், நீரிழிவு, வாய்ப்புண், வயிற்றுப்புண், ‘பிரான்கைட்டிஸ்’ போன்ற நோய்களைக் குணப்படுத்த மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

கோவைக் கீரையும் கசக்கும். ஆனால், அது மருத்துவக் குணம் நிரம்பியது. மற்ற கீரைகளுடன் இதைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உணவுகள் விரைந்து ஜீரணமாகும்.

அடுத்த வேளை உணவு மிகவும் ருசியாய் இருக்கும். நாக்கு செத்துப்போனவர்கள் சர்க்கரையையும், உப்பையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வார்கள். கோவைக்காயையும், கோவைக் கீரையையும் இவர்கள் சாப்பிட்டால் இவர்கள் நாக்கு மீண்டும் சக்தியுடன் உயிர் பெற்றுவிடும்.

இக்கீரை கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். இக்கீரையின் கஷாயம் இருமல், நீரடைப்பு முதலியவற்றை உடனே குணமாக்கும். சீதபேதியைக் குணப்படுத்த இதன் இலைச்சாற்றை மிகவும் விருப்பத்துடன் அருந்த வேண்டும்.

வெட்டை நோயைக் குணப்படுத்த இக்காயின் இலைச் சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய், முதல் நாள் நீராகாரம் முதலியவற்றைச் சேர்த்து அருந்த வேண்டும். பத்து நாட்கள் இதுபோல் ஒரு வேளை அதிகாலையில் அருந்தி வந்தால் வெட்டை நோய் முற்றிலும் குணமாகும்.

இலைச் சாறுடன் நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சிய தைலத்தைப் படர்தாமரை மீது பூசி வந்தால் படர்தாமரை விரைவில் குணமாகும்.

கோவைக்கொடியின் வேரில் நீரில் கரையாத ஒரு வகை மரப்பிசின் இருக்கிறது. அதனால் இந்த வேரிலிருந்து எடுக்கப்படும் சாற்றை நீரிழிவு நோயாளிகளுக்குச் சித்த மருத்துவர்கள் கொடுக்கிறார்கள்.

கோவைப்பழம் மிகவும் ருசியானது. அதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து முதலியவை உள்ளன. சிந்தனையாளர்களும், ஊர் விட்டு ஊர் சென்று பணிபுரிபவர்களும் இதைப் பயன்படுத்தினால் மலச்சிக்கல் ஏற்படாது. மூளையும் உடலும் சுறுசுறுப்புடன் திகழும், நன்கு பசியெடுக்கும்.

நோஞ்சான் குழந்தைகள் நன்கு வளர இதில் உள்ள இரும்புச் சத்து பயன்படுகிறது.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நோய்க்கிருமிகளை அண்டவிடாதபடி செய்துவிடுவதால்தான் சித்த மருத்துவர்கள் கோவக்காய், கோவக்காய் இலை முதலியவற்றையும் பயன்படுத்திப் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தி, கைராசியான மருத்துவர் என்னும் பட்டத்தையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

கோவக்காய், கீரை, பழம் முதலியவற்றை எல்லா வயதினரும் நன்கு உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழலாம்.
எந்த நோய்க்காரரும் விலக்கக்கூடாத காய் இது!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:45 pm

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும் காய் சுரைக்காய்.

சுரைக்காய் எவரும் பச்சையாக சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் வயிறும், குடற் பகுதியும் பாதிக்கப்படும்.

சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். பித்தத்தை வெளியேற்றும். புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது.

சுரைக்காயை விடச் சுரைப்பிஞ்சும், சுரைக்காய்ப் பழமும் உடலுக்கு நல்லவை. இவை இரண்டையும் நன்கு பயன்படுத்தலாம்.

100 கிராம் சுரைக்காயில் கிடைக்கும் கலோரி அளவு 12 தான். அதில் சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 10 மில்லி கிராமும், இரும்புச் சத்து 0.7 மில்லி கிராமும், வைட்டமின் பி போன்றவை சிறிதளவும் உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் உள்ளன.

எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

அதிக தாகத்தைக் கட்டுப்படுத்த வழி!
கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.

கோடைக் காலத்தில் சுரைக்காய்ச் சாம்பார், பச்சடி தயாரித்துச் சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.

தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் (இரவில்) நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்க்க வேண்டும். இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு மசாஜ் செய்வது போல் தலையைப் பிடித்துவிட வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேரும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும்.

சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்.
கோடை காலத்திலும், நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

வாத நோயாளிகள், காய்ச்சலில் உள்ளவர்கள், தொந்தி வயிறு உள்ளவர்கள் (தொந்தியை அதிகப்படுத்தும் காய் இது) பாடகர்கள் முதலானோர் சுரைக்காயைப் பயன்படுத்தக் கூடாது. ஆசையெனில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம்.

பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பாக சுரைக்காயைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
இந்தியச் சமையலில் பொதுவாக இடம் பெறும் சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று நம்பப்படுகிறது. ஆதிமனிதன் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இது இப்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் Bottle Gourd என்று வழங்குகின்றனர். (சுரைக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், லாஜனேரியா வல்காரிஸ் என்பதாகும்). முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய்ச் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:46 pm

வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை
வயிற்றுவலி, வயிற்றுக்கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள்காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை, புதினாக்கீரையாகும்.

மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் இக்கீரை பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றன. இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர்.

100கிராம் புதினாக்கீரையில் ஈரப்பதம் 85%ம், புரதம் 5%ம், கார்போஹைடிரேட் 6%ம், நார்ச்சத்து 2%ம் உள்ளன; இரண்டு சதவிகிதத்தில் தாது உப்புகளும், கொழுப்பும் அடங்கியுள்ளன. கால்சியம் 200 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 62 மில்லிகிராமும், இரும்புச்சத்து 15.6மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’ 2,700 சர்வதேச அலகும் உள்ளன. வைட்டமின் ‘சி’ 2,700 சர்வதேச அலகும் உள்ளன. வைட்டமின் ‘சி; 27 மில்லிகிராமும், வைட்டமின் ‘பி’, ‘டி’, ‘ஈ’ முதலியன தக்க அளவிலும் அமைந்துள்ளன.

இதில் கிடைக்கும் கலோரி 48 ஆகும்.
புதினா உணவிற்கு நறுமணமூட்டும் உயர்ந்த வகை மூலிகையும் ஆகும். நறுமணமுள்ள சாஸ்வகைகள், பழச்சாறுவகைகள் தயாரிக்கும் போது புதிய புதினாக்கீரைகளையோ உலர்ந்த புதினா இலைத் தூளையோ உபயோகிக்கின்றனர்.

அனைத்துத் தனிபண்டப் பொருள்களைத் தயாரிக்க இக்கீரையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். இதே புதினா எண்ணெய் பற்பசைகள், மருத்துவப்பொருள்கள், மிட்டாய், சூயிங்கம் முதலிய தயாரிப்புகளிலும் முக்கிய மூலப் பொருளாய் இடம் பெறுகிறது.

உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிட….
வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போதுதான் பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும்.

(புதினாச்சாறு தயாரிக்க 50கிராம் கீரையே போதும்) இப்படி அருந்தினால் காலை நேர வயிற்றுப்போக்கு, பித்தமயக்கம், காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்புகள், வயிற்றுப்பொருமல், குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரைப் பூச்சிகள் முதலியன உடனே குணமாகும்; உணவு உடனே செரிமானம் ஆகும். ஒரு கப் புதினாச் சாறு அருந்த விருப்பம் இல்லை என்றால், மூன்று வேளையும் தலா ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றில் தேனையும் எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அருந்தினால் போதும், மேற்கண்ட அனைத்து நன்மைகளும் கிட்டும்.

புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும்.

வாந்தி குணமாக….
வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும்.

அடிக்கடி வயிற்றவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாய்க் குணமாகும்.

இக்கீரையைப் பச்சடியாகக் சமைத்துச் சாப்பிட்டாலும் வாந்தி, பசியின்மை அகலும். புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி தயாரிக்க வேண்டும்.

ஆஸ்துமா குணமாகப் புதினாக் கீரை போதும்!
மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும்.

இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமாகாரர்கள் ‘கர்புர்’ ரென்று மூச்சுவிடச் சிரமப்படாமல் நிம்மதியாய் இரவில் தூங்கலாம்.

சுவை நரம்புகள் சக்தி பெற…
பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால் இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும்.

மஞ்சள் காமாலை குணமாக…..
உலர்த்தப்பட்ட புதினாக் கீரையைப் பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் தேயிலைத் தூளிற்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் புத்தம் புது துடிப்புடன் கழியும், சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். புதினாத்தேநீர் தயாரிக்கும் போது பாலும் சேர்த்துத்தான் தயாரிக்க வேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நலம் பயக்கும்.

பாடகர்கள், பேச்சாளர்கள் ஆகியோர் இனிய குரல் வளம் பெற….
புதினாக்கீரையைக் கஷாயமாய்த் தயாரித்து, அதைக் கொண்டு வாயை நன்கு கொப்புளித்தால் பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்; பேச்சாளர்கள்

தொண்டைக்கட்டு இல்லாமல் உரத்த குரலில் நன்றாகப் பேசமுடியும். பாட்டுக் கச்சேரி செய்யுமுன்பு இந்தக் கஷாய நீர் கொண்டு வாய் கொப்பளித்து விட்டுப் பாட ஆரம்பித்தால் குரல் பிசிறின்றி ஒலிக்கும். மேற்படி புதினாக் கஷாயத்தில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்த பிறகே வாயைக் கொப்புளிக்க வேண்டும்.

கர்ப்பம் தரிக்காமல் இருக்க….
ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டிப் பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும்.

மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

மருந்துகளும், வறண்ட தோலும் குணமாக….
முகத்தில் பருக்கள் உள்ளவர்களும், வறண்ட தோல் உள்ளவர்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, புதினாக் கீரையைச் சாறாக்கி அதை உடலிலும், முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு தேக்கரண்டி புதினாக்கீரைப் பொடியைத் தேன்கலந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

இத்தனை சிறப்புக்கள் கொண்ட புதினாக் கீரையின் தாயகம், ஐரோப்பா, பண்டைய ரோமானியர்களும் கிரேக்கர்களும் புதினாவை அறிந்திருந்தார்கள். கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும் இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

இந்தோனிஷியா, மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இக்கீரை, அதிகம் பயிராகிறது. மற்ற நாடுகளில் இது ஓரளவு பயிராகிறது.

இந்தியாவில், இயற்கை மருத்துவர்கள் இக்கீரையைப் பொடியாகத் தயாரித்துப் பெரும்பாலான மக்களுக்குத் தினமும் ஆரோக்கிய மருந்து போல் கொடுப்பது கவனத்துக்குரிய ஒன்றாகும்.
புதினாக்கீரை மூலம் (இதன் விஞ்ஞானப் பெயர் : மின்த்தி ஸ்பைகாட்டா) தினமும் புத்துணர்ச்சி பெறலாம் என்பது உறுதி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முழுமுதலோன் Wed Feb 18, 2015 12:47 pm

மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!
சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.

மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும்.

100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும், கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன.

ஒரு மனிதன் தினமும் பாலும், உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட்டுகள் (மாவுப்பொருளும் சர்க்கரையும்) உருளைக்கிழங்கில் அபரிதமாய் உள்ளன. வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ, நீண்ட நாள்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப்பயன்படும் காய்கறி இதுதான்.

மத்திய அமெரிக்கப் பழங்குடிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நூறுவகையான உருளைக் கிழங்கு வகைகளைப் பயிர்செய்து தினமும் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். சிலி நாட்டிலிருந்து ஈக்வடார் நாடு வரை ஆய்வுப்பயணம் செய்த ஸ்பானியர்களின் மூலமே உருளைக்கிழங்கு எல்லாக் கண்டங்களுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டில் பரவியது

அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது, உருளைக்கிழங்கு. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் இது இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் இதைப்பார்க்கலாம்.

‘சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான்.

உருளைக் கிழங்கைச் சாப்பிட்டதும் அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தரவரிசைப்படி ஒழுங்குப்படுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான்.

சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது. பாலைவிடப் புரதச்சத்து இதில் அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது இரவில் ‘திடீர் திடீர்’ என்று பசியினால் அலறாது. நிம்மதியாகத் தூங்கும்.

அரிசி, கோதுமை, ஜவ்வரிசி முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் அழிந்தநிலையில் தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப் பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது.

உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில் தான் அதிக அளவு ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.

உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும். உலகில் பல்வேறு காலகட்டங்களில் பஞ்ச காலத்தில் பட்டினியைத் தவிர்த்துக் கோதுமைக்குப் பதிலாக உருளைக்கிழங்கைச் சாப்பிட்ட வரலாறும் உண்டு. புரதம், மாவுப்பொருள், சர்க்கரை என அனைத்து சத்துணவும் இதிலேயே கிடைத்துவிடுவதால்தான் பசியைப் பொறுத்துக்கொள்ளமுடிகிறது.

வாயுப்பொருள் என்று ஒதுக்காமல் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடாமல் மற்றவகைகளில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து பெறுங்கள்.
ஆரோக்கியத்தைப் புதுப்பிக்கும் உருளைக்கிழங்கு!

எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

ஊட்டச்த்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சயைாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும். இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும்.

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும்; வலியும் நீங்கும்.

வாத நோய் குணமாகும்!
இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

நீண்ட நாள் மலச்சிக்கல் தீர….
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.

முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கைத் தவறவீடாதீர்கள்.
ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக் கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது.

உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது?
வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம். சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு! எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். குண்டானவர்களை மேலும் குண்டாகிவிடும்! எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். (ஆசைக்காக)
வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

http://panippulam.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by mohaideen Wed Feb 18, 2015 6:36 pm

பயனுள்ள விரிவான தகவல்கள்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by முரளிராஜா Thu Feb 19, 2015 9:56 am

பயனுள்ள மருத்துவ தகவல்களை கொண்ட பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காய் கறிகளும் மருத்துவக் குணங்களும் Empty Re: காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum