தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?

View previous topic View next topic Go down

spm2 - இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு? Empty இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?

Post by mohaideen Tue Mar 24, 2015 6:31 pm

spm2 - இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு? Ht3382
 
 
சுவிஸ் சாக்லெட், சிங்கப்பூர் சென்ட், சீன வாஸ்து என வெளிநாட்டு மோகம் நமக்கிருப்பது போல, சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்திய பாரம்பரிய மூலிகைகளின் மவுசு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய மூலிகைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன!

அமெரிக்கா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகியவையும் பல முக்கியமான மூலிகைகளுக்கு நம் நாட்டையே சார்ந்திருக்கின்றன. நம் மக்களுக்கு அவற்றின் அருமைகள் புரியாதது பற்றியும், பாராம்பரிய மூலிகைகளின் சிறப்புகள் குறித்தும் விளக்குகிறார் சித்த மருத்துவர் எஸ்.ராமசாமி பிள்ளை.

‘‘சித்தா, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் ஆகிய நான்கும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் அடங்கும். இதனை சுருக்கமாக ‘ஆயுஷ்’ என்றழைப்பார்கள். இவற்றில் இயற்கை மூலிகைகளே மருந்துகளாக பயன்படுத்தப்படுகின்றன. இன்று பயங்கர நோய்களாக சொல்லப்படும் பலவற்றுக்கும் மருந்தாகும் மூலிகைகளை நமது முன்னோர் அன்றே ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

நோய்களை தீர்ப்பது மட்டுமல்ல... நோய் எதனால் வருகிறது என்று அதன் மூலத்தையும் கண்டறிந்து, மறுபடி அது தலை தூக்கா மல் சரிப்படுத்துவதும் நம் பாரம்பரிய மருத்துவ முறையின் சிறப்பு. சித்த மருத்துவம் என்பது நமது மண்ணின் மருத்துவம். இதை மருத்துவமுறை என்பதை விட ‘வாழ்வியல் கோட்பாடு’ என்றே சொல்லலாம்.

நவீன மருத்துவத்தில் நோய் வந்த பிறகுதான் மருந்துகள் கொடுக்க முடியும். சித்த மருத்துவ மருந்துகளை நலமோடு இருக்கும் போதே உட்கொண்டு வந்தால், எந்த நோயும் வராமல் தடுத்துவிடலாம். நாவல் கொட்டை, சிறு குறிஞ்சால், ஆவாரம்பூ ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் பொடியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம். பொன்குரண்டியும், பூலா விருட்சமும் நேரடியாக நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் வேலை செய்து நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையவை. புற்றுநோயை கட்டுப்படுத்தும் சக்தியும் இவற்றுக்கு உண்டு. காக்கட்டான், நீல அவுரி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, கரந்தை ஆகிய ஐந்து கர்ப்ப மூலிகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்களே வராது... மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும் என்கிறது சித்தர்களின் ஓலைச்சுவடி.

துளசி, திருநீற்றுப் பச்சிலை, ஆடாதொடா, தூதுவளை போன்ற மூலிகைகளை வீட்டிலேயே வளர்த்து பயன்பெறலாம். மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தூதுவளை பயனளிக்கும். நெஞ்சு சளியையும் குறைக்கும். வல்லாரை நல்ல தூக்கத்தை வரவழைக்கும். கண்டங்கத்தரியையும், முசுமுசுக்கையையும் உணவில் சேர்த்துக் கொண்டால் நாள் பட்ட சளியைக் கூட போக்கிவிடும். மணத்தக்காளி வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை குறைக்கும். இதில் உள்ள அல்கலைன் மலத்தை இளக்கிவிடும்.

உணவு செரிமானத்தையும் சரிப்படுத்தும். வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டையும் சரியாக்கும். அசோக மரத்தின் பட்டைகள் பெண்களின் பிரச்னைகள் பலவற்றுக்கு மருந்தாகும். வீட்டிலேயே இவ்வகை மூலிகைகளை எளிதில் வளர்த்து உணவில் சேர்த்து வருவதன் மூலம் பல நோய்கள் வராமல் தடுக்கலாம். இப்படிச் செய்யாமல், நோய் வந்த பிறகு ஆங்கில மருத்துவத்தை நாடுவதையே பெரும்பாலான மக்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். அதோடு, மாறிவரும் நவீனச் சூழலும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையும் நோய்களை அதிகரிக்கின்றன.

நமது மூலிகைகளின் அருமை தெரிந்த வெளிநாட்டினரோ, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கின்றனர். அந்த மருந்துகள் அனைத்தும் வெளிநாட்டில் தயாரானவை என்ற லேபிளோடு மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் நமக்கே அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்கள் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில் இருந்து உயிர்காக்கும் மருந்துகள் வரை மார்க்கெட்டிங் செய்து மக்களை வாங்க வைத்துவிடுகிறார்கள். இது நம் மக்களுக்கு தெரிவதில்லை.

சிக்குன்குனியா, டெங்கு போன்ற ஜுரங்களுக்கு தகுந்த மருந்துகள் ஆங்கில மருத்துவத்தில் கிடையாது. சித்த மருத்துவத்திலோ அப்போதே 64 வகை ஜுரங்களை வரையறுத்து, அதற்கான தீர்வையும் சொல்லியுள்ளனர். நில வேம்பு குடிநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, விஷ ஜுரத்துக்கு எதிராகவும் செயல்படக்கூடியது. நில வேம்பு குடிநீரின் மகத்துவத்தை இன்று ஆங்கில மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். சித்த மருத்துவத்தில் மொத்தம் 4,448 நோய்களை, வாதம், பித்தம், கபம் என வகைப் பிரித்து, அதற்கான மருத்துவ முறைகளையும் சொல்லிச் சென்றுள்ளார்கள்.

பெரும்பான்மையானவர்கள் எல்லா வகை ஆங்கில மருத்துவ முறைகளையும் பார்த்து. சிகிச்சை பலனளிக்காமல் போனவுடன்தான் சித்த மருத்துவத்துக்கு வருகிறார்கள்.

அப்போது நோய் மிகவும் முற்றிய நிலையில் இருக்கும். அதனால் அந்த நிலையில் நோயை சரியாக்குவது சவால் நிறைந்த விஷயமாக மாறிவிடுகிறது. நோயின் ஆரம்ப நிலையில் வந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். எளிமையாக அனைவரும் பயன்பெறக்கூடிய பக்க விளைவில்லா மருத்துவம் சித்த மருத்துவம்...’’ என்று நமது பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தை விளக்குகிறார் சித்த மருத்துவர் ராமசாமி பிள்ளை.
 
 
தினகரன்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

spm2 - இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு? Empty Re: இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?

Post by ஸ்ரீராம் Tue Mar 24, 2015 10:36 pm

சிறப்பான தகவல். மிக்க நன்றி.!!!

spm2 - இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு? GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm2
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

spm2 - இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு? Empty Re: இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?

Post by முழுமுதலோன் Sun Mar 29, 2015 11:11 am

நோயின் ஆரம்ப நிலையில் வந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். எளிமையாக அனைவரும் பயன்பெறக்கூடிய பக்க விளைவில்லா மருத்துவம் சித்த மருத்துவம்.


அருமை அருமை 
spm2" alt="" />

#spm2
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

spm2 - இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு? Empty Re: இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?

Post by ஸ்ரீராம் Sun Mar 29, 2015 11:13 am

முழுமுதலோன் wrote:நோயின் ஆரம்ப நிலையில் வந்தால் முற்றிலும் குணப்படுத்திவிடலாம். எளிமையாக அனைவரும் பயன்பெறக்கூடிய பக்க விளைவில்லா மருத்துவம் சித்த மருத்துவம்.


அருமை அருமை 
spm2" alt="" />

#spm2

@முழுமுதலோன் அண்ணா, இந்த பதிவை நான் ஏற்கனவே சிறப்பு பதிவாக அறிவித்து விட்டேன். நன்றி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

spm2 - இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு? Empty Re: இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?

Post by முரளிராஜா Mon Mar 30, 2015 3:06 pm

சிறப்பான பகிர்வுக்கு நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

spm2 - இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு? Empty Re: இந்திய மூலிகைகளுக்கு ஏன் இந்த மவுசு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum