Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
Page 1 of 1 • Share
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
ம் பதிவு
12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர் படித்துப் பயன்பெற சில ஆலோசனைகள்…
நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்த கல்விமுறை, தேர்வு முறை, பெற்றோரின் நிலை இன்று இல்லை. இன்று மதிப்பெண்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் அன்று இல்லை. பொதுத் தேர்வில் வெற்றி பெற்றாலே போதும் என்ற நிலை தான் அன்று இருந்தது. முதல் வகுப்பில் தேர்ச்சி என்றால் அந்த ஊரே கொண்டாடும். ஆனால் இன்று நிலைமையோ வேறு.
முதல் வகுப்பு மதிப்பெண் என்பது மதிப்பெண்ணாகவே கருதப்படுவதில்லை. ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளைகள் மாநிலத்தில் அல்லது மாவட்டத்தில் அதுவும் இல்லாவிட்டால் பள்ளியிலாவது முதலிடம் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதற்கான முயற்சியாக காலையில் டியூசன், மாலையில் டியூசன் என்று பணத்தைச் செலவிடுகின்றனர். மொத்தத்தில் இன்று பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரமாகவே பார்க்கப்படுகின்றனர்.
இப்படி மதிப்பெண்களே ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணியாக ஆகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் பெற்றோருக்கு இருக்கும் இந்த ஆர்வத்தையும், அக்கரையையும் நாம் குறைசொல்ல முடியாது தான். நல்ல கல்லூரியில் சேர்வதற்காக மதிப்பெண்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
இக்காலத்தில் மதிப்பெண் பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் மாணவர்களும், மதிப்பெண் வாங்க வைக்க வேண்டும் என்ற கடமையில் பெற்றோர்களும் உள்ளனர்.
நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கும் அனைவரும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். மாணவன்,
ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆகிய மூவரும் சேர்ந்து அமைக்கும் முக்கோணம் தான் மாணவனின் மதிப்பெண். ஆசிரியர்கள் வழிநடத்த, பெற்றோரின் துணையுடன் மாணவர்களின் முயற்சியும் இருந்தால் அதிக மதிப்பெண் பெற முடியும். எனவே இங்கு நாம் கல்வித் துறையில் முன்னேறத் தேவையான அதிக மதிப்பெண்ணைப் பெறுவது எப்படி என்று பார்ப்போம்…
மாணவர்களின் முயற்சி:
ஒரு செயல் எவ்வாறு அமைகிறதோ அதை வைத்தே இறுதி வெற்றி தீர்மானிக்கப் படுகிறது. படிப்பதைப் பற்றி யோசிக்கும் முன்பாக அதற்கான திட்டமிடலை மேற்கொள்வது முக்கியம். உங்களின் நேரம், சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டமிட வேண்டும். தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை முன்பே திட்டமிட வேண்டும்.
திட்டமிட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் படித்து முடிக்க வேண்டும். அதற்கு நாள் வாரியாக, பாட வாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். அப்போது எளிதான பாடத்திற்கு குறைந்த நேரமும், கடினமான பாடத்திற்கு அதிக நேரமும் ஒதுக்கித் திட்டமிட்டுக் கொள்ளவும்.
எந்த பாடத்திற்கு எத்தனை மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப படிக்க வேண்டும். தினமும் படித்தவற்றை எழுதிப் பார்க்க வேண்டும். ஏனென்றால் ஒருமுறை எழுதுவது ஏழுமுறை படிப்பதற்குச் சமம்.
எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படிப் படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தைப் படிக்கும்போது அந்தப் பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படிக் கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை வந்த பிறகே அடுத்த பாடத்திற்குச் செல்ல வேண்டும்.
படிப்பதைத் தள்ளிப் போடாதீர்கள். படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்து விடுங்கள். பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதைத் தள்ளிப் போடாதீர்கள். இப்படித் தள்ளிப்போட்டுக் கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும். எனவே எப்போதும் சுறுசுறுப்பாகப் படியுங்கள்.
பெற்றோரின் ஊக்கம்:
குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களை அவர்களின் நண்பர்களின் மதிப்பெண்களோடு ஒப்பிட்டுப் பேசாதீர்கள். உங்கள் பிள்ளையும் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள். உன் நண்பனைவிட அதிக மதிப்பெண் உன்னால் எடுக்க முடியும். அந்தத் திறமை உன்னிடம் உள்ளது என்று நேர்மறையாகப் பேசி ஊக்கப்படுத்த வேண்டும்.
படி படி என நாள் முழுவதும் விரட்டாதீர்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடம் ஓய்வு கொடுங்கள். முடிந்த வரை அவர்களை உங்கள் கண்பார்வையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுடன் அமர்ந்து புத்தகம் படிக்கலாம். அல்லது அவர்கள் விடைகளை எழுதிப் பார்ப்பதற்கு வசதியாக வினாக்களை எழுதித் தரலாம். விடைகளைத் திருத்தியும் தரலாம்.
ஆசிரியரின் தூண்டுதல்:
எதில் வெற்றி பெறுவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்க வேண்டும். படிக்கும்போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். படிக்கும்போது ‘இந்தப்பாடம் கடினமானது’ என்று மாணவர்கள் நினைப்பது தான் அவர்களுடைய ஆர்வத்தைக் குறைக்கின்றது என்பதை எடுத்துக் கூறி ‘கடினமான பாடம்’ என்று எதுவும் இல்லை.
சில பாடங்கள் ஒருமுறை படித்தால் புரியும், சில பாடங்கள் பலமுறை படித்தால் தான் புரியும் என்பதையும், அவர்கள் கடினமான பாடங்கள் என நினைக்கும் பாடத்தில் தான் ஆயிரக்கணக்கானோர் சென்டம் (100%) எடுக்கின்றனர். எனவே முயற்சி எடுத்து மீண்டும் மீண்டும் படித்தால் கடினமான பாடங்களும் எளிதாகிவிடும் என்பதை எடுத்துக் கூற வேண்டும்
http://thannambikkai.org/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» 10ம் வகுப்பு தேர்வில் 85 சதவீத மதிப்பெண் பெற்ற லட்சுமி மேனன்
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» தன்னம்பிக்கை பெறுவது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?
» தன்னம்பிக்கை பெறுவது எப்படி?
» மன நிம்மதி பெறுவது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|