Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிறரை வசப்படுத்துவது எப்படி?
Page 1 of 1 • Share
பிறரை வசப்படுத்துவது எப்படி?
பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்
பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு
விடை கண்டு விடலாம்.
–
‘பிறரை வசப்படுத்தி என்ன ஆகப் போகிறது…
இதெல்லாம் அனாவசியம்; தேவையில்லாத
வேலை. எவன் தயவும் எனக்கு தேவையில்ல…’
என்று வாதிடும் வறட்டுவாதிகளையும் கூட,
இக்கட்டுரை சிறு மன மாற்றத்திற்கு வித்திடும்
என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.
–
மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு
ஏங்குவது! இப்படி ஏங்குவதை கூட ஏனோ சிலர்
வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு பாலைவன
பயணிக்கு நீர் கொடுப்பதை விடவும் தேவையான
விஷயம் இது.
–
அன்பின் முதல் அடையாளம், புன்னகை; பின்,
கனிவான சொற்கள், மரியாதை மிகுந்த உடல்
மொழிகள். நிறைவாக, மனிதநேயத்தை வெளிப்
படுத்தும் அணுகுமுறைகள்.
–
‘என்னை எவனும் மதிப்பதில்லை; யாரும் பொருட்
படுத்துவதில்லை; ஒரு உதவி கூட ஒருத்தனும்
செய்றதில்லை. மோசமான உலகமிது…’ என்று
ஒருவர் புலம்பினால், கோளாறு இவரிடம் தான்
உள்ளது என்பது மிகத் தெளிவு.
–
‘பணமிருந்தா தான் மதிக்கிறாங்க; இல்லைன்னா
எவன் மதிக்கிறான்…’ என்று வாதிடுவோரும்
இருக்கின்றனர்.
–
பொதுவாழ்வில் அதிகம் நேசிக்கப்படுபவர்களின்
பட்டியலை எடுங்கள். இவர்களுள் பணத்திற்காக
மட்டும் மதிக்கப்படுபவர்களை ஓரங்கட்டுங்கள்.
மீதமிருப்பவர்களுக்கு இவர்கள் என்ன பதில்
சொல்லப் போகின்றனர்? அன்னை தெரசா
பணத்திற்காகவா மதிக்கப்பட்டார்?
–
சமூகத்தை ஒட்டு மொத்தமாக குற்றவாளிக்
கூண்டிலேற்றி குற்றம் சாட்டும் இவர்களிடம் ஒரு
பதில் வாதம் வைக்கட்டுமா… மற்றவர்களை
வசப்படுத்த தெரியாமல் போன குறை உங்களிடம்
இருப்பதால் தான், இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள்
என்கிறேன் நான். வாருங்கள் பதிலோடு வாதிடுவோம்!
–
ஒரு கூட்டத்தில், தனக்கு முன் பேசியவரை,
அடுத்து பேசியவர் கடுமையாக குறை கூறினார்.
(இத்தனைக்கும் அது பட்டிமன்றம் அல்ல!) பலருக்கும்,
‘என்ன அருமையான கோணம்; பிரமாதமான வாதம்…’
என்று தோன்றியது.
சுட்டிக்காட்டப்பட்டவர், ‘ஸ்கேன் எந்திரம் கூட
இப்படிக் கண்டுபிடிக்காது; இதை நான் வரவேற்கிறேன்.
என்னை நான் திருத்திக் கொள்கிறேன்…’ என்று
கூறினார். அன்றைய கூட்டத்தின் நாயகராக ஆனவர்
இவர் தான்.
தோற்றத்தால் வசப்படுத்த முடியாதவர்கள், உடையால்
வசப்படுத்தலாம்; (பிரமாதமான டிரஸ் சென்ஸ்
இவருக்கு) இரண்டும் இல்லாதவர்கள், பணிவால்
வசப்படுத்தலாம்.
போலித்தனம் இல்லாத வார்த்தைகளால் வசப்ப
டுத்தலாம்; கருணையால், பரிவால் வசப்படுத்த
முடியாதவர்கள், இவ்வுலகில் மிகக்குறைவு.
வீட்டில் ஒரு பழுது; அதைச் சரிசெய்ய வரும்
ஊழியரை, ‘எப்ப சொன்னேன்; இப்பத்தான் வர்றே…’
என்று வரவேற்பதைக் காட்டிலும், அதையே சிறிது
மாற்றி, ‘வாங்க வாங்க… உங்களை தான் ஆர்வமா
எதிர்பார்த்துட்டிருக்கோம். முதல்ல டீ, காபி;
அப்புறம் தான் வேலை…’ என்று கிண்டலடிக்காத
தொனியில் சொல்லுங்கள்.
வேலையின் தரம் உயர்ந்து, கூலி குறையா
விட்டால் என்னைக் கேளுங்கள். ஏனோ ஊழியர்களை
மிக மோசமாகவே நடத்துகிறோம். அவர் மனதிற்குள்
ஓடும், ‘நெகட்டிவ்’ ஒயரை தொடாதீர்கள்; ‘ஷாக்’
தருவார். ‘பாசிட்டிவ்’ ஒயரை தொடுங்கள்; அவர்
நம் வசமாவார்.
சிறு சிறு உதவிகளால் பிறரை வசப்படுத்தலாம்;
விமானம், ரயில் மற்றும் பேருந்தில், உங்களது
சக பயணிகளை சிறு செயல்களால் வசப்படுத்துங்கள்.
பயணமே இனிமையாகி விடும்.
வசப்படுத்துறதாவது வெங்காயமாவது என்று
நடந்து பாருங்கள்… பயணத்தின் இனிமையை சக
பயணிகள் எப்படிப் பறித்து விடுகின்றனர் என்பதை
உணர்வீர்கள்.
திறமைகளை காட்டி வசப்படுத்துங்கள்;
பணமும், புகழும் கை கட்டி, உங்களுக்கு சேவகம்
புரியும்.
நோட்டால் (பணத்தால்) வசப்படுத்துங்கள்;
நீங்களும் இந்திரன், சந்திரன் தான்.
பலத்தால் வசப்படுத்துங்கள்; உலகமே உங்களை
அண்ணாந்து பார்க்கும்.
பிறரை வசப்படுத்தி வாழும் வாழ்க்கை இனியது
மட்டுமல்ல, சுவை மிகுந்ததும் கூட!
–
————————————-
லேனா தமிழ்வாணன்
பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு
விடை கண்டு விடலாம்.
–
‘பிறரை வசப்படுத்தி என்ன ஆகப் போகிறது…
இதெல்லாம் அனாவசியம்; தேவையில்லாத
வேலை. எவன் தயவும் எனக்கு தேவையில்ல…’
என்று வாதிடும் வறட்டுவாதிகளையும் கூட,
இக்கட்டுரை சிறு மன மாற்றத்திற்கு வித்திடும்
என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.
–
மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு
ஏங்குவது! இப்படி ஏங்குவதை கூட ஏனோ சிலர்
வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு பாலைவன
பயணிக்கு நீர் கொடுப்பதை விடவும் தேவையான
விஷயம் இது.
–
அன்பின் முதல் அடையாளம், புன்னகை; பின்,
கனிவான சொற்கள், மரியாதை மிகுந்த உடல்
மொழிகள். நிறைவாக, மனிதநேயத்தை வெளிப்
படுத்தும் அணுகுமுறைகள்.
–
‘என்னை எவனும் மதிப்பதில்லை; யாரும் பொருட்
படுத்துவதில்லை; ஒரு உதவி கூட ஒருத்தனும்
செய்றதில்லை. மோசமான உலகமிது…’ என்று
ஒருவர் புலம்பினால், கோளாறு இவரிடம் தான்
உள்ளது என்பது மிகத் தெளிவு.
–
‘பணமிருந்தா தான் மதிக்கிறாங்க; இல்லைன்னா
எவன் மதிக்கிறான்…’ என்று வாதிடுவோரும்
இருக்கின்றனர்.
–
பொதுவாழ்வில் அதிகம் நேசிக்கப்படுபவர்களின்
பட்டியலை எடுங்கள். இவர்களுள் பணத்திற்காக
மட்டும் மதிக்கப்படுபவர்களை ஓரங்கட்டுங்கள்.
மீதமிருப்பவர்களுக்கு இவர்கள் என்ன பதில்
சொல்லப் போகின்றனர்? அன்னை தெரசா
பணத்திற்காகவா மதிக்கப்பட்டார்?
–
சமூகத்தை ஒட்டு மொத்தமாக குற்றவாளிக்
கூண்டிலேற்றி குற்றம் சாட்டும் இவர்களிடம் ஒரு
பதில் வாதம் வைக்கட்டுமா… மற்றவர்களை
வசப்படுத்த தெரியாமல் போன குறை உங்களிடம்
இருப்பதால் தான், இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள்
என்கிறேன் நான். வாருங்கள் பதிலோடு வாதிடுவோம்!
–
ஒரு கூட்டத்தில், தனக்கு முன் பேசியவரை,
அடுத்து பேசியவர் கடுமையாக குறை கூறினார்.
(இத்தனைக்கும் அது பட்டிமன்றம் அல்ல!) பலருக்கும்,
‘என்ன அருமையான கோணம்; பிரமாதமான வாதம்…’
என்று தோன்றியது.
சுட்டிக்காட்டப்பட்டவர், ‘ஸ்கேன் எந்திரம் கூட
இப்படிக் கண்டுபிடிக்காது; இதை நான் வரவேற்கிறேன்.
என்னை நான் திருத்திக் கொள்கிறேன்…’ என்று
கூறினார். அன்றைய கூட்டத்தின் நாயகராக ஆனவர்
இவர் தான்.
தோற்றத்தால் வசப்படுத்த முடியாதவர்கள், உடையால்
வசப்படுத்தலாம்; (பிரமாதமான டிரஸ் சென்ஸ்
இவருக்கு) இரண்டும் இல்லாதவர்கள், பணிவால்
வசப்படுத்தலாம்.
போலித்தனம் இல்லாத வார்த்தைகளால் வசப்ப
டுத்தலாம்; கருணையால், பரிவால் வசப்படுத்த
முடியாதவர்கள், இவ்வுலகில் மிகக்குறைவு.
வீட்டில் ஒரு பழுது; அதைச் சரிசெய்ய வரும்
ஊழியரை, ‘எப்ப சொன்னேன்; இப்பத்தான் வர்றே…’
என்று வரவேற்பதைக் காட்டிலும், அதையே சிறிது
மாற்றி, ‘வாங்க வாங்க… உங்களை தான் ஆர்வமா
எதிர்பார்த்துட்டிருக்கோம். முதல்ல டீ, காபி;
அப்புறம் தான் வேலை…’ என்று கிண்டலடிக்காத
தொனியில் சொல்லுங்கள்.
வேலையின் தரம் உயர்ந்து, கூலி குறையா
விட்டால் என்னைக் கேளுங்கள். ஏனோ ஊழியர்களை
மிக மோசமாகவே நடத்துகிறோம். அவர் மனதிற்குள்
ஓடும், ‘நெகட்டிவ்’ ஒயரை தொடாதீர்கள்; ‘ஷாக்’
தருவார். ‘பாசிட்டிவ்’ ஒயரை தொடுங்கள்; அவர்
நம் வசமாவார்.
சிறு சிறு உதவிகளால் பிறரை வசப்படுத்தலாம்;
விமானம், ரயில் மற்றும் பேருந்தில், உங்களது
சக பயணிகளை சிறு செயல்களால் வசப்படுத்துங்கள்.
பயணமே இனிமையாகி விடும்.
வசப்படுத்துறதாவது வெங்காயமாவது என்று
நடந்து பாருங்கள்… பயணத்தின் இனிமையை சக
பயணிகள் எப்படிப் பறித்து விடுகின்றனர் என்பதை
உணர்வீர்கள்.
திறமைகளை காட்டி வசப்படுத்துங்கள்;
பணமும், புகழும் கை கட்டி, உங்களுக்கு சேவகம்
புரியும்.
நோட்டால் (பணத்தால்) வசப்படுத்துங்கள்;
நீங்களும் இந்திரன், சந்திரன் தான்.
பலத்தால் வசப்படுத்துங்கள்; உலகமே உங்களை
அண்ணாந்து பார்க்கும்.
பிறரை வசப்படுத்தி வாழும் வாழ்க்கை இனியது
மட்டுமல்ல, சுவை மிகுந்ததும் கூட!
–
————————————-
லேனா தமிழ்வாணன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பிறரை பழித்துப் பேசாதீர்!
» எப்படி? எப்படி? எப்படி?
» இதயத்தின் இனிமையான கதிர் வீச்சு என்பது பிறரை பாராட்டும்
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
» எப்படி? எப்படி? எப்படி?
» இதயத்தின் இனிமையான கதிர் வீச்சு என்பது பிறரை பாராட்டும்
» படிப்பது எப்படி? படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி?
» தொடங்குவது எப்படி தொடர்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|