Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!
Page 1 of 1 • Share
கண்ணபிரான் குபேரன் குமாரர்களுக்கு அருளிய வரலாறு!
-
துவாபரயுக முடிவில் திருமால் தேவகி வயிற்றில் திருஅவதாரம் புரிந்து ஆயர்பாடியில் யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார்.
கண்ணனுக்கு வெண்ணெய் என்றால் கொள்ளை இஷ்டம். தினமும் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றைத் திருடி உண்பதில் கண்ணனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த யசோதை கண்ணபிரானை ஒரு உரலில் கட்டிப்போட்டு விடவேண்டும் என்று ஒரு தாம்புக் கயிற்றை எடுத்துக் கண்ணபிரான் வயிற்றைச் சுற்றினாள். கயிற்றின் பற்றாக்குறை! அதனால் வேறு ஒரு கயிற்றை எடுத்து அதனுடன் முடிந்தாள். அப்படியும் பற்றவில்லை. இப்படி எத்தனையோ கயிறுகளை எடுத்து முடிந்தும்கூட கண்ணபிரான் வயிற்றை அந்தக் கயிற்றால் கட்ட முடியவில்லை. யசோதை என்ன செய்வது என்று புரியாமல் திகைத்தாள்.
“கேவலம் ஒரு கயிற்றால் கூடக் கண்ணனைக் கட்ட நம்மால் முடியவில்லையே’ என்று அழுகையே வந்துவிட்டது. பார்த்தார் கண்ணபிரான்! சற்றுவிட்டால் தாயார் அழுது விடுவாள் என்ற நிலையில் அவளின் அன்பை நினைத்து மாய விளையாட்டு போதும் என்று தன் வயிற்றைச் சுருக்கிக் கொண்டார். சடக்கென்று கயிற்றால் கண்ணனைக் கட்டி விட்டாள் யசோதை! உரலில் கயிற்றினால் கட்டுப்பட்ட வயிற்றை உடையவர் என்று பொருள் கண்ணபிரானின் ஒரு பெயரான தாமோதரன் என்ற பெயருக்கு!
கண்ணனை உரலோடு சேர்த்துக் கட்டிவிட்டுத் தன் இதர வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டாள் யசோதை. உரலில் கண்ணனின் வயிற்றைக் கட்டினாளே தவிர கண்ணனின் கால்களைக் கட்டவில்லை அவள்! அதனால் சற்று அப்படி இப்படி அசைத்து நடந்தால் இறுக்கிய கயிறு தளர்ந்துவிடும். உடனே கயிற்றை அவிழ்த்துவிட்டு வெண்ணேய் வைத்துத் தொங்க விடப்பட்டிருக்கும் உறியை லாவிப் பற்றி விடலாம் என்று கண்ணன் கட்டிய உரலோடு இழுத்து இழுத்து நடந்தான்.
நந்தகோபன் வீட்டு வாசலில் இரண்டு மருத மரங்கள் அருகருகே உயர்ந்து நின்றன. அவற்றின் நடுவே புகுந்து செல்ல முயன்றார் கண்ணபிரான். அவர் போய்விட்டார். ஆனால் உரல் போகமுடியவில்லை, அந்த மருத மரங்கள் தடுத்தன. உடனே வலது காலால் ஒரு உதை, இடது காலால் ஒரு உதை விட்டார். அந்த மருத மரங்கள் இரண்டும் வேருடன் சாய்ந்து விழுந்தன. விழுந்த மரங்களில் இருந்து இரண்டு மிகப் பிரகாசம் பொருந்திய உருவங்கள் தோன்றி கண்ணபிரானை வணங்கின! யார் இவர்கள்?! எதனால் இப்படி மரமாக நின்றிந்தார்கள்? அதற்கு ஒரு சிறிய முன் கதை உண்டு.
இந்த இரண்டு பேரும் குபேரனுடைய புத்திரர்கள். ஒருவன் பெயர் நளகூபரன். இன்னொருவன் மணிக்ரீவன். மகா ஆற்றல் படைத்தவர்கள். மன்மதனை பழிக்கும் பேரழகு உடையவர்கள். இவர்கள் இருவரும் ஒருநாள் கயிலைமலையில் ஒரு தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள். கூடவே அவர்களது மனைவிமார்கள்! இந்த சமயம் பார்த்து நாரதர் அந்த பக்கம் வந்துகொண்டிருந்தார். தூரத்தில் அவர் வருவதைப் பார்த்துவிட்ட பெண்கள் ஆடைகளை உடுத்திக்கொண்டு நாரதரை வணங்கினார்கள். ஆனால் நீரைவிட்டு வெளியே வராத ஆடவர்களுக்கு நாரதரைக் கண்டு எரிச்சல்…!
இருவரில் நளகூபரன் சற்றுத் தமாஷ் பேர்வழி. அவன் நாரதரைப் பார்த்து, அவர் கையில் வைத்திருக்கும் தம்புராவை இசைத்து பாடும்படியாக கேலி பேசினான்.
நாரதருக்கு மகா கோபம், “”ஏய் மூடர்களே! நீங்கள் இருவரும் முப்பதாயிரம் வருஷம் மருத மரங்களாய் இருந்து கண்ணபிரான் கால்பட்டு சாபம் நீங்கப் பெறுவீர்கள்!” என்று சபித்துவிட்டுப் போய் விட்டார்!
அந்த இருவரும்தான் நந்தகோபனின் வாசலில் நின்றிருந்த மருத மரங்கள். 30,000 ஆண்டுகளாய் அங்கே நின்று கொண்டே இருந்திருக்கிறார்கள் கண்ணபிரானின் வரவை எதிர்பார்த்து!
சாபம் நீங்கப் பெற்ற அந்த இருவரும் கண்ணபிரானை வணங்கித் தொழுது துதி பாடினர். பின்பு விண்ணுலகம் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியைதான் தணிகை மலைத் திருப்புகழ் பாடலில் “”கச்சணி யினமுலை முத்தணி பலவகை” என்று துவங்கும் பாடலில் வரும் “”திருடிய குறையால் வீழ் குற்கிரவினியொடு நற்றிற வகையறி” என்ற அடிகளில் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.
- மயிலை சிவா.
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» குபேரன் 108 போற்றி
» உலகநாதர் அருளிய உலகநீதி
» ஒளவையார் அருளிய .... நல்வழி
» 64 திருவிளையாடல்-உலவாக்கிழி அருளிய படலம்!
» 64 திருவிளையாடல்-உலவாக்கோட்டை அருளிய படலம்!
» உலகநாதர் அருளிய உலகநீதி
» ஒளவையார் அருளிய .... நல்வழி
» 64 திருவிளையாடல்-உலவாக்கிழி அருளிய படலம்!
» 64 திருவிளையாடல்-உலவாக்கோட்டை அருளிய படலம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|