தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்களை உயர்த்தும் உணர்வுகள்….

View previous topic View next topic Go down

உங்களை உயர்த்தும் உணர்வுகள்…. Empty உங்களை உயர்த்தும் உணர்வுகள்….

Post by முழுமுதலோன் Thu Apr 02, 2015 10:57 am



மனதில் எழுகிற உணர்வுகள் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவை. நமக்கு நன்கு தெரிந்த சராசரி உணர்வுகள்தான். கோபம், அச்சம், சந்தோஷம், பதட்டம், பிரியம் போன்றவற்றையே அதிகம் அனுபவித்திருக்கிறோம்.

இவை மட்டுமில்லாமல், நம்மை உயர்த்தக் கூடிய உன்னதமான உணர்வுகள் நம்மில் அவ்வப்போது எழுகின்றன. அவற்றின் அருமை புரியாமல் கோட்டை விட்டு விடுவதால் அந்த நுட்பமான உணர்வுகளை நாம் வளர்த்தெடுப்ப தில்லை. அவை நாம் வளர்க்க வேண்டிய உணர்வுகள் மட்டுமல்ல. நம்மை வளர்க்கக்கூடிய உணர்வுகளும் கூட…

பரவசம்

இந்த நிலைக்கு நம்மில் பலரும் அடிக்கடி ஆட்படுகிறோம். மனதுக்குள் ஆயிரம் மலர்கள் மலர்ந்து, மேனிசிலிர்க்க கண்கள் நிறைந்து பொங்கும் ஆனந்தத்தில் புதிய உணர்வைப் பெறுவது நமக்கு அடிக்கடி நிகழ்வதுதான்.

தொலைக்காட்சி பார்க்கிறீர்கள். ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் யாரோ ஒரு குழந்தை பாடிப் பாராட்டைப் பெறுகிறது. பார்த்துக் கொண்டிருக்கிற உங்களுக்குக் கண்கள் நிறைகின்றன. சிலிர்ப்பு எழுகிறது என்றால் இது மிக நல்ல விஷயம். நல்ல அதிர்வுகள் எங்கே இருந்தாலும் அவற்றைப் பெறுகிற விதமாய் உங்கள் உள்ளம் பக்குவப்பட்டிருக்கிறது. இந்த குணம் வளர்ந்தால் நல்ல விஷயங்கள் உங்களை ஈர்க்கத் தொடங்கும்.

ஆனால், நம்மில் பலர், பிறர்முன் ஆனந்தத்தில் கண்ணீர் சிந்துவதையே கூச்சத்துக் குரிய விஷயமாய் நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்தத் தயங்குகிறோம். இது பூமியைக் கீறி வெளிவரும் முளையை பலவந்தமாக உள்ளே அழுத்துவது போலத்தான்.

பரவசத்தை உணருங்கள். உணர்த்துங்கள். பரவசமான அனுபவங்களைத் தொடர்ந்து பெறுவீர்கள்.

ஈடுபாடு

உங்களுக்கு ஈடுபாடு இருக்கிற விஷயங்களுக் காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள் என்று உங்களை நீங்களே கேளுங்கள். இசை உங்களுக்குப் பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள். “முன்னே எல்லாம் நல்ல மியூசிக் புரோக்ராம்னா ஓடிப்போய் கேட்பேன் சார்! இப்போ எல்லாம் நேரமே இருக்கறதில்லை” என்று ஆதங்கத்தோடு செல்பவரா நீங்கள்? உடனே உங்கள் இசைத் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

எதில் உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறதோ அதுதான் உங்கள் எல்லைகள் தாண்டி உங்களை வளர்க்கப் போகிறது. இவ்வளவுதான் நீங்கள் என்று நீங்கள் பொதுவாகவே ஓர் எல்லை வைத்திருப்பீர்கள். ஆனால் அந்த எல்லையையும் தாண்டி உங்கள் திறமை, ரசிப்புத்தன்மை, கற்பனை ஆகியவை வளர்வது எப்போது தெரியுமா? உங்களுக்கு ஈடுபாடுள்ள துறையில் நீங்கள் ஆர்வமுடன் பங்கேற்கிற போதுதான்!! உங்கள் ஆர்வம் உரிய முறையில் வெளிப்படும் போதெல்லாம் நீங்கள் உயர்கிறீர்கள்.

நன்றியுணர்வு

ஒரு மனிதனுக்குள் இருக்கும் தெய்வீக குணத்தை வெளிப்படுத்தவல்லது நன்றியுணர்வு தான். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் நன்றி சொல்வது நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அல்ல. நம் நலனுக்கு தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவு பேர் துணை செய்கிறார்கள் என்பதை உணர்கிறபோதெல்லாம் நாம் மேலும் பலம் பொருந்தியவர்கள் ஆகிறோம்.

எத்தனையோ சம்பவங்களின் கண்ணிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது நம்முடைய வாழ்வு. ஒரு கண்ணி அறுந்தாலும் உயர்வுகள் சாத்தியமில்லை. இந்த நன்றியுணர்வு யாருக்குப் பெருகுகிறதோ, அவர்கள் எடுக்கிற காரியங்கள் எளிதில் நடந்தேறி விடுகின்றன.


Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

உங்களை உயர்த்தும் உணர்வுகள்…. Empty Re: உங்களை உயர்த்தும் உணர்வுகள்….

Post by ஸ்ரீராம் Thu Apr 02, 2015 12:25 pm

சிறப்பான கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா.

உங்களை உயர்த்தும் உணர்வுகள்…. GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm3
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum