Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சீட்டஞ்சேரி அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
சீட்டஞ்சேரி அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
மூலவர் : காலீசுவரர்
உற்சவர் :
அம்மன்/தாயார் : சிவகாமசுந்தரி
தல விருட்சம் : முக்களாமரம்
தீர்த்தம் : திருக்குளம்
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சீட்டஞ்சேரி
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
பவுர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம்
தல சிறப்பு:
இங்கு காலீசுவரர் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்:
காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில் சீட்டஞ்சேரி, காஞ்சிபுரம்.
பொது தகவல்:
கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை அலங்கரிக்க, கோமுகம் அருகில் சண்டிகேசுவரர் உள்ளார். கணபதி, வள்ளி-தேவயானையுடன் கூடிய முருகன் சன்னிதிகளோடு அதிகார நந்தி, அறுபத்துமூவர், நவகிரகங்கள், பைரவர், சூரிய சந்திரர் திருமேனிகள் மற்றும் கண்ணாடிப் பள்ளியறை அமைந்திருக்கிறது.
பிரார்த்தனை
குடும்பம் செழிக்கவும், மன அமைதி பெறவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
கண்ணபிரான் வழிபட்ட காலீசுவரர்: கண்ணபிரானுக்கு ஆவினங்கள் மீது அலாதி அன்பு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! சீட்டணஞ்சேரியில் எழுந்தருளியுள்ள திருக்காலீசுவரரை கண்ணபிரானும் தரிசித்து வழிபட்டுள்ளார் என்கிறது தலவரலாறு. காளை ஈசுவரர் என்பதே பிற்காலத்தில் காலீசுவரர் என்றும் மருவியிருக்கலாம். கண்ணன் மட்டுமல்ல, பரத்வாஜ முனிவரோடு, பாண்டவர் ஐவரும் காலீசுவரை வணங்கி வழிபட்டுள்ளனர். கிருஷ்ணபுரம் என்றும் இத்தலத்திற்குப் பெயர் உண்டு.
மணிபுங்கமரத்தின் அடியில்: மிகவும் அரிதான மணிபுங்க மரத்தடியில் சுயம்புலிங்கமாய் எழுந்தவரே இந்த காலீசுவரர். முக்காளமரம் மூன்று இலைகளோடு செழிப்பாக கம்பீரமாக நிற்கிறது. மிகப்பெரிய பிராகாரம், ஐந்துநிலை ராஜகோபுரம் ஏழு கலசங்களுடன் விண்ணைத் தொட்டிட, ஒரே நேர்கோட்டில் அமைந்த இரண்டு கொடி மரங்கள் உள்ளன. சுவாமி, அம்மன் சன்னதிகளுக்கு எதிரே தனித்தனியே கொடி மரங்கள் அமைந்திருப்பது, ஒரு சில திருக்கோயில்களில் மட்டுமே! கொடிமரத்தின் அருகில் பச்சைக்கல் நந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார். எட்டடி உயரம் கொண்ட துவாரபாலகர் இருபுறமும் கம்பீரமாக நிற்க, சன்னதியை நோக்கி உள் சுற்றில் விரைகிறோம். காசிவிசுவநாதரைப் போன்ற சிறிய சிவலிங்கத் திருமேனியராய் திருக்காலீசுவரர் கருவறையில் எழுந்தருளியுள்ளார். அன்னையின் திருநாமம் சிவகாமசுந்தரி
மண்டபங்கள்: மகாமண்டபம், உற்சவமண்டபம், ஊஞ்சல் மண்டபம், வாகன மண்டபம், யாகசாலை மண்டபம், அர்த்தமண்டபம், சிறிய தான மண்டபம் என்று திருக்கோயில் அமைப்பின் அத்தனை அம்சங்களும் கொண்டதாய் திருக்கோயில் அமைந்துள்ளது. வெளிச்சுற்றில் திருக்குளம் நிறையப் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது.
தல வரலாறு:
யாதவ குலத்தைச் சேர்ந்த மூவர், சீட்டண்ணன், குரும்பண்ணன், சாத்தண்ணன் ஆகியோர், தங்கள் பசுக்கூட்டங்களோடு இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். அந்த இடங்களே சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, சாத்தண்ணஞ்சேரி என்று வழங்கலாயின. மணிபுங்க மரத்தினடியில் பசுக்கூட்டம் ஒன்று, சிவலிங்கத் திருமேனிமீது பாலைப் பொழிந்து வருவதை மிளகு, கிராம்பு சுமையுடன் இவ்வழியே வந்த வியாபாரி ஒருவர் கண்டு அதிசயித்தாராம். அவர் கனவிலும் ஈசன் தோன்றி ஆலயம் அமைக்கப் பணித்தாராம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு காலீசுவரர் சுயம்புவாக அருள்பாலிக்கிறார்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சீட்டஞ்சேரி அருள்மிகு காலீசுவரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|