Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூலிகை: கரந்தை
Page 1 of 1 • Share
மூலிகை: கரந்தை
தமிழகத்தின் வளமான நிலங்களின் வரப்புகளிலும், நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம். செடியின் உச்சியில் பந்து போன்ற இதன் பூக்கள் மொட்டை தலைபோன்று காட்சியளிக்கும். இதனால் மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. பச்சை நிறத்தில் தோன்றும் இந்த பூக்கள் நாளடைவில் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும்.
இதில் கரந்தையும், சிவகரந்தையும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. கொட்டை கரந்தை சற்றேறக்குறைய சிவகரந்தைக்கு ஒப்பாக இருந்தாலும். மணத்தில் சிவகரந்தை சிறப்புடையது. கரந்தையில் வெண்மை, செம்மை என இரண்டு வகையுண்டு, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூலம் மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள் ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.
கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.
கொட்டை கரந்தையின் பட்டையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். இதன் முழுச்செடியை கசாயம் வைத்து சாப்பிட தொடக்க நிலையில் உள்ள பைத்தியம் குணமாகும். சூரணம் செய்து உண்பதால் தலை, மூளை, இதயம் வலிமை அடையும்.இதன் கசாயத்துடன் சீரகத்தை பொடித்து போட்டு காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும்.கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும்.
இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள் அனைத்தும் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும்.
இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும். கொட்டை கரந்தையின் பூக்களை பொடிசெய்து சாப்பிட உடல் சூடு குறைந்து குளிர்ச்சிபெறும்.கொட்டை கரந்தையின் விதைகளை சேகரித்து பொடி செய்து ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட செரியாமை, இருமல் நீங்கும். இலைப்பொடியை 2 கிராம் அளவில் சாப்பிட வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.
சிவகரந்தை:
இதே போல் சிவகரந்தையும் பல்வேறு நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாந்தி, சுவையின்மை, ஆண்மைக்குறைவு கரப்பான், காசம், அக்கினிமாந்தம் நீங்கும். துவர்ப்பும் சிறுஅளவில் கார்ப்பு சுவையும் கொண்ட இதன் இலையை பொடித்து 4 கிராம் முதல் 8 கிராம் வரையில் வெண்ணெய் சேர்த்து சாப்பிட மூல நோய் நீங்கும்.
சிவகரந்தையின் இலைச்சாறு பாதரசத்தை சுத்தி செய்து அதை நீராய் மாற்றவும் செய்யும் தன்மை கொண்டதால் ரசமணி செய்பவர்களுக்கும், ரசவாத வித்தை புரிபவர்களும் இதை அதிகம் நாடுவார்கள். கிராமங்களில் கைகளில் சிறு குச்சியை வைத்த கொண்டு சிறுவர்கள் விளையாடும் போது இந்த செடியை தட்டுவார்கள் அப்பொழுது இதிலிருந்து வரும் மணத்தை விரும்பி மீண்டும் மீண்டும் தட்டிச்செல்வார்கள். இந்த மணமிக்க செடிதான் கொடிய மூலத்தையும் காசத்தையும் நீக்கி மனித குலத்தை வாழ்விக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதை தேவையறிந்து முன்னோர் சொல்லிய வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3435
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மூலிகை: கரந்தை
இதுவரை அறியாத தகவல்கள்.. பதிவுக்கு மிக்க நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: மூலிகை: கரந்தை
கரந்தை தெரியும்.எங்கள் ஊரில் வயல்களில் இருக்கும். அதன் பலன்களை அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை..
» தெய்வீக மூலிகை-தொட்டாற்சுருங்கி..!
» மூலிகை மருத்துவம்
» மூலிகை மருத்துவம்
» மூலிகை சட்னி
» தெய்வீக மூலிகை-தொட்டாற்சுருங்கி..!
» மூலிகை மருத்துவம்
» மூலிகை மருத்துவம்
» மூலிகை சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|