தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

View previous topic View next topic Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by mohaideen Thu Mar 19, 2015 4:13 pm

[You must be registered and logged in to see this image.]
‘‘ரத்த சர்க்கரை எகிறியதன் விளைவாக நானும் நீரிழிவுக்குள் வந்து விட்டேன். இது என்னை கொல்லப் போவதில்லை. என்றாலும், நான் சரியாகச் சாப்பிட வேண்டும்... உடற்பயிற்சி செய்ய வேண்டும்... எடையைக் குறைக்க வேண்டும்... மீதி வாழ்க்கை முழுக்க நான் நலமாக இருக்க எனக்கு இது உதவி செய்யப்போகிறது!’’ என்கிறார் டாம் ஹேங்ஸ்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பது உண்மைதான். ஆனால், அந்தத் தெய்வம் பக்த னையே சோதிப்பது போல, தொழிலும் தன் வேடிக்கை விளையாட்டுகளை உழைப்பாளி யின் மீது நிகழ்த்துவதுண்டு. அப்படியொரு சுழலில் சிக்கியவர்தான் ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ். Big (1988), Philadelphia (1993), Forrest Gump (1994), Apollo 13 (1995), Saving Private Ryan, You‘ve Got Mail (1998), Cast Away (2000), The Da Vinci Code (2006), Captain Phillips, Saving Mr. Banks (2013) உள்பட 70க்கும் அதிகப் படங்களில் நடித்தவர். போலார் எக்ஸ்பிரஸ், டாய் ஸ்டோரி ஆகிய அனிமேஷன் படங்களிலும் இவரது குரல் பலருக்குப் பரிச்சயமே.

இந்தக் கடின உழைப்பாளியையும் டயாபடீஸ் விட்டுவிடவில்லை. காரணம் என்னவென அவரே சொல்கிறார்...‘‘36 வயதிலிருந்தே எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. 1992ல், முதன்முதலாக நீரிழிவுக்கான அறிகுறிகள் ஆரம்பமாகின. ‘League of  Their Own’ படத்தில் பேஸ்பால் கோச் ஆக நடித்த போது, பதிமூன்றரை கிலோ எடை அதிகரித்திருந்த நேரம் அது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘Cast away’ படத்தில் எங்கோ ஒற்றை மனிதனாகத் திரிந்த போது, 25 கிலோ இளைத்து, 77 கிலோ ஆகிவிட்டேன். 

அப்போது டாக்டர் சிரித்துக்கொண்டே கூறினார்... ‘இப்போது நீங்கள் ஹைஸ்கூல் பையன் எடைக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டீர்கள். அதனால் உங்களுக்கு டைப் 2 டயாபடீஸ் வராது! ’ஹைஸ்கூலில் என் எடை 44 கிலோதான் இருந்தது. அந்த எடையை வைத்துக்கொண்டு நான் எப்படி நடிப்பதாம்! அதனால் டாக்டரிடம் கூறினேன்... ‘டயாபடீஸ் வந்தாலும் பரவாயில்லை டாக்டர்... என்னால் சமாளிக்க முடியும். எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் என் தொழிலின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது!’ என்று...’’  டாம் விளையாட்டாகக் கூறியது, 

2013ல், அவரது 57 வயதில் நிஜமாகிவிட்டது. டைப் 2 பட்டியலில் அவரும் இணைந்துவிட்டார். 20 ஆண்டுகளையும் தாண்டி, ‘ப்ரீ டயாபடீஸ்’ எனும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருந்தார் அவர். இவ்வளவு காலம் நீரிழிவுக்குள் அவர் மூழ்காமல் தப்பியதற்குக் காரணம் அவரது முறையான வாழ்க்கை முறை. டயட், உடற்பயிற்சியில் அவர் எப்போதும் எந்தக் குறையும் வைப்பதில்லை.‘‘திடீரென எடையை அதிகரிக்கச் செய்வதும் எடையைக் குறைப்பதும் உடலின் சமநிலையை பாதிக்கும். இது டைப் 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை விரைவுபடுத்துகிறது. டாம் ஹேங்ஸ் போன்ற நடிகர்கள் இந்த விஷயத்தில் மிக அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்...’’ என்கிறார் டாக்டர் ஹாலி பிலிப்ஸ்.

எடையைக் குறைப்பதற்காக டாம் ஹேங்ஸ் பின்பற்றிய YoYo டயட் கூட, அவருக்கு நீரிழிவை அளித்திருக்கலாம் என்கிறார்கள் சில மருத்துவர்கள். எனினும் தன் தொழிலுக்காக எல்லா அசௌகரியங்களையும் டாம் சகித்துக்கொள்ள நேர்ந்தது. தொழில்முறைச் சிக்கல்களால் நீரிழிவை நோக்கி காந்தம் போல இழுக்கப்படும் சூழல் உருவானாலும், திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம், நீரிழிவைத் தள்ளிப் போட முடியும். இதற்கு டாம் ஹேங்ஸின் வாழ்க்கை பின்பற்ற வேண்டிய உதாரணம்!

‘‘என் வாழ்க்கை இப்போது ஒரு சாக்லெட் பாக்ஸ் போல மாறிவிட்டது. இனிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால், அளவும் மிக முக்கியம்’’ என்று ஒரு கவிதை போல டயாபடீஸ் தத்துவம் சொல்கிறார் டாம்! 
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty Re: சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by mohaideen Thu Mar 19, 2015 4:14 pm

பொதுவான சந்தேகங்கள் 

‘‘என் முப்பதாண்டு அனுபவத்தில் சர்க்கரை நோயாளிகளில் பலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகள் சிலவற்றுக்கு இங்கே பதில் சொல்லியிருக்கிறேன். இந்த சந்தேகங்கள் உங்களுக்கும் வந்திருக்கலாம். படித்து, புரிந்து, பலன் பெறுங்கள்...’’ என்கிறார் டாக்டர் கு.கணேசன்.

? ஓட்ஸில் அதிக நார்ச்சத்து உள்ளதாமே! நான் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடலாமா?

! சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. ஓட்ஸ் என்பதும் ஒரு தானியம்தான். 100 கிராம் ஓட்ஸ் 340 கலோரி தருகிறது. அரிசியும் கோதுமையும் இதே அளவு கலோரிகள்தான் தருகின்றன. ஆக, அரிசி சாதம் சாப்பிடுவதும் ஓட்ஸ் சாப்பிடுவதும் ஒன்றுதான். என்றாலும், ஓட்ஸை நீங்கள் சாப்பிட விரும்பினால், அதன் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். 30-40 கிராம் ஓட்ஸ் எடுத்து, பாலில் நனைத்து சாப்பிட்டால் சரி. அதையே கூழ் அல்லது கஞ்சிபோல சாப்பிட்டால், ரத்த சர்க்கரை உடனே எகிறிவிடும்!

? சிறு வயதிலிருந்தே அதிக இனிப்பு சாப்பிட்டுப் பழகிவிட்டேன். இப்போது திடீரென இனிப்பை நிறுத்த முடியவில்லை. இனிப்பையும் சாப்பிட்டுக்கொண்டு, கூடுதலாக மாத்திரை யையும் போட்டுக் கொள்ளலாமா?

! உங்களுக்கு மட்டுமல்ல... பலருக்கும் இந்த சந்தேகம் வருவதுண்டு. அதனால், சிறிது விளக்கமாகவே பதில் சொல்கிறேன். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகப்படியாக இருக்கிற ரத்த சர்க்கரையைக் குறைக்க இன்சுலின் மருந்தைச் செலுத்துகிறோம் அல்லது மாத்திரையைக் கொடுத்து இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறோம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்கெனவே கணையம் சோர்வடைந்த நிலையில் இருக்கும் என்பதால், சர்க்கரை நோய் மாத்திரைகளால் ஓரளவுக்குத்தான் கணையத்தைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்யமுடியும். 

கூடுதலாக இனிப்புப் பொருட்களை சாப்பிட்டுக்கொண்டு, கூடுதலாக சர்க்கரை நோய் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டாலும், கணையத்தில் இன்சுலின் சுரப்பது அதிகரிக்காது. வண்டியின் பாரம் தாங்காமல் படுத்துவிட்ட மாட்டை அடித்துத் துன்புறுத்தினால் அது எழுந்து நடக்க சண்டித்தனம் செய்யும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோலத்தான் இதுவும். ரொம்பவும் களைத்துப்போன கணையத்தை அதிக மாத்திரைகளால் தூண்டினாலும் இன்சுலின் சுரக்காது. ஆகவே, நீங்கள் இனிப்பை அதிகமாக சாப்பிட்டால், அதில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் தங்கி நோயை அதிகப்படுத்தவே செய்யும். குறையாது. வேண்டாம், வீண்வம்பு!

? சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையும் உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள். நான் கேரட் சாப்பிடலாமா?

! பூமிக்கு அடியில் விளைபவை எல்லாமே கிழங்குகள் இல்லை. உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவை மாவுச்சத்து அதிகமுள்ள கிழங்குகள். கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவை வேர்கள். இவற்றில் நார்ச்சத்து அதிகம். பூண்டு, வெங்காயம் போன்றவை தண்டுகள். இவற்றில் கிழங்குகளைத்தான் சர்க்கரை நோயாளிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள கேரட், வெங்காயம், பூண்டு போன்றவற்றை வேண்டிய அளவுக்கு சாப்பிடலாம். கிழங்குகளைவிட கேரட் குறைந்த கலோரிகளைத்தான் தருகிறது.

? சர்க்கரை நோயாளிகள் பரோட்டா சாப்பிடலாமா?


! பரோட்டா மைதாவில் செய்யப்படுகிறது. மைதாவில் மாவுச்சத்து அதிகம். இதில் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. ஒரு நடுத்தரமான பரோட்டா 400 கலோரி தருகிறது. இது உடனே ரத்த சர்க்கரையை அதிகரித்துவிடும். 

? சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வேறு ஏதேனும் நோய் வரும்போது சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாமா?

! கூடாது. சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை அவசியம் சாப்பிட வேண்டும். வேறு நோயின் காரணமாக நோயாளியின் உணவுமுறை மாறினால், அதற்கேற்ப டாக்டரிடம் ஆலோசித்து மாத்திரையை அல்லது இன்சுலின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். நோயாளிக்கு ரத்த சர்க்கரை மிகவும் குறைந்தாலொழிய அதாவது, சர்க்கரைத் தாழ்நிலை வந்தால் ஒழிய  சர்க்கரை நோய் மாத்திரைகளை நிறுத்தக்கூடாது. ரத்தத்தில் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அந்த நோயாளிக்கு ஏற்படுகின்ற எந்த நோயும் குணமாகும்.

? டாக்டர் கொடுத்த மாத்திரையை சரியாகச் சாப்பிடுகிறேன். தினமும் வாக்கிங் போகிறேன். என்றாலும் என் ரத்தத்தில் சர்க்கரை உணவுக்குப்பின் 220 மி.கி. உள்ளது. இது ஏன்? 

! பின்வரும் காரணங்கள் இருக்கலாம். உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து சிகிச்சையில் சில மாற்றங்களை செய்துகொள்ளுங்கள்... 
உணவுமுறை சரியில்லை.

உணவு சாப்பிடும் நேரம் சரியில்லை.
உடற்பயிற்சி போதுமானதாக இல்லை.
பொருத்தமில்லாத மாத்திரை.
மாத்திரையின் அளவு போதுமானதாக இல்லை.
இன்சுலின் தேவைப்படலாம்.
மன அழுத்தம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty Re: சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by mohaideen Thu Mar 19, 2015 4:14 pm

? எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கமும் உள்ளது. இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?

! சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் பல ஆபத்துகள் அணிவகுக்கும். முதலில் தொண்டையிலும் நுரையீரலிலும் அடிக்கடி அழற்சி ஏற்படும். புண் உண்டாகும். சளி பிடிக்கும். புகையிலையில் உள்ள ‘நிகோட்டின்’ நச்சு ரத்தக்குழாய்களை சுருக்கி உயர் ரத்த அழுத்தம் சின்ன வயதிலேயே வருவதற்கு ஏற்பாடு செய்யும். மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை இவர்களுக்கு சீக்கிரத்தில் வரக் காத்திருக்கும். கால்களுக்கு செல்லும் ரத்தக் குழாய்களை பாதிக்கும். இதனால் கால்களுக்கு ரத்தம் குறைந்து கால்விரல் அழுகிவிட வாய்ப்புண்டு. வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவையும் வரலாம்.

? சர்க்கரை நோய் உள்ளவர்கள் வைட்டமின் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியது அவசியமா?

! சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிப்புகளுக்குத் துணைபோவது வைட்டமின் குறைபாடும் ‘ஃப்ரீ ரேடிகல்ஸ்’  (Free Radicles) எனப்படும் வேதிப்பொருட்களும்தான். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.      

? எனக்கு 20 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. எனக்கு அடிக்கடி உடல் குளிர்கிறது. இது ஏன்?

! ‘தைராய்டு சுரப்பு’ குறைவாக இருக்க (Hypothyroidism) வாய்ப்புள்ளது. தைராய்டு ரத்தப் பரிசோதனை (T3, T4, TSH) செய்து பார்த்துக்கொண்டால் அது தெரிந்துவிடும். 

? 3 ஆண்டுகளாக என் கணவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவருக்கு அடிக்கடி உடல்வலி வருகிறது. இது ஏன்? 

! உங்கள் கணவருக்கு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், உடல்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தும் உடல்வலி இருந்தால் மூட்டு நோய்கள், தசை நோய்கள், வைட்டமின் குறைபாடு, வைரஸ் தொற்று, ரத்தசோகை என்று பல காரணங்கள் இதற்கு உள்ளன. 

? சர்க்கரை நோயாளிகள் ‘நட்ஸ்’ என்கிற கொட்டை வகைகளை சாப்பிடலாமா?

! பொதுவாக முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டை வகைகளில் கலோரி அதிகம் என்பதால் இவற்றை சாப்பிட யோசிப்பார்கள். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள், தாதுச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடண்ட் சத்துகள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இவற்றை சாப்பிட வேண்டியதும் அவசியம். அதாவது, கொழுப்பு உணவுகளைத் தவிர்த்துவிட்டு, தினமும் 15-20 கிராம் அளவுக்கு ஏதாவது ஒரு கொட்டை வகையை சாப்பிடலாம்.

? 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். என்றாலும் உடல் அசதியாகவும் சோர்வாகவும் உள்ளது. என்ன காரணம்?

! உங்கள் உடலின் முறையான செயல்பாட்டுக்குத் தேவையான எரிபொருள், குளுக்கோஸ். சர்க்கரை நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருந்தால், அந்த  குளுக்கோஸ் சரியான அளவில் செல்களுக்குள் நுழைந்து, சக்தியைத் தரும். உடலில் சோர்வு இருக்காது. உங்களைப் பொறுத்த அளவில் சர்க்கரை நோய் சரியான கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிகிறது. அதனால்தான் உங்கள் உடல் செல்களுக்குத் தேவையான சத்து கிடைக்காமல், சோர்வைத் தருகிறது. சத்து இல்லாவிட்டால் சக்தியில்லை. அப்போது உடலில் களைப்பும், சோர்வும், பலவீனமும் ஏற்படுவது நியாயம்தானே! முதலில் நீங்கள் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த சரியான அளவில் மாத்திரை அல்லது இன்சுலின் பயன்படுத்துங்கள். வைட்டமின் மற்றும் தாதுக்கள் அடங்கிய சத்து மாத்திரையையும் சாப்பிடுங்கள். இவற்றோடு உடற்பயிற்சியும் செய்யுங்கள். புத்துணர்வு பெறுவீர்கள்.

? எனக்கு சர்க்கரை நோயும் ரத்தசோகையும் உள்ளது. இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம் பழத்தை சாப்பிடலாமா?

! பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது. பதிலாக, முருங்கைக்கீரை சாப்பிடலாம்.

? நீரிழிவு நோய் நுரையீரல்களை பாதிக்குமா?

! கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோய் நுரையீரல்களை நிச்சயம் பாதிக்கும். காச நோய், நிமோனியா போன்ற நோய்கள் தாக்கும்.

? நான் ஒரு சுகர் பேஷன்ட். நன்றாகத்தான் இருக்கிறேன். நான் எதற்கு வருடா வருடம் ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்துகொள்ள வேண்டும்? என்ன அவசியம்?

! ‘வருமுன் காப்பது நல்லது’ என்பதை சர்க்கரை நோயாளி ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு பல சிக்கல்கள் உடலில் இருந்தாலும் வெளியில் தெரிவதற்கு நாளாகும். உதாரணத்துக்கு, இதயத்தமனி ரத்தக் குழாய்களில் 90 சதவிகிதம் அடைத்த பிறகுதான் நெஞ்சுவலியே வரும். இந்த நெஞ்சுவலிகூட சிலருக்கு வெளிக்காட்டாது. திடீரென்று மயக்கம் வந்து உயிருக்கு ஆபத்து வந்துசேரும். அப்போது டாக்டர்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாது. இந்த மாதிரி நிலைமைகளைத் தவிர்க்கத்தான் வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். இப்படிப் பரிசோதனை செய்யும்போது 100 பேரில் 10 பேருக்கு வெளியில் தெரியாமல் இருந்த பல நோய்கள் உடலுக்குள் உள்ளதைக் கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்திருக்கிறோம். உயிருக்கு வரக் காத்திருந்த ஆபத்துகளைத் தடுத்திருக்கிறோம்.

[You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty Re: சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by முரளிராஜா Fri Mar 20, 2015 10:17 pm

சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள குறிப்புகள் 
நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty Re: சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by mohaideen Mon Mar 30, 2015 3:31 pm

[You must be registered and logged in to see this image.]


“எனக்கு மிகுந்த வலிமையையும் எதையும் தாங்கும் திறனையும் டயாபடீஸ்தான் அளித்திருக்கிறது. இது வலி மிகுந்ததாக இருந்தாலும், உண்மையை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?’’ - ஹாலி பெர்ரி

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் ஹாலி பெர்ரி. ‘மான்ஸ்டர்ஸ் பால்’ படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றவர். ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட (டை அனதர் டே) நாயகி.  உலகின் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் அடிக்கடி இடம் பெறுபவர். அது மட்டுமல்ல... 46 வயதிலும் குழந்தை பெற்று சாதனை படைத்தவர்! 

‘‘நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நீரிழிவே காரணம்’’ என்று தயங்காமல் கூறுகிற ஹாலியை, 22 வயதில் டைப் 1 டயாபடீஸ் தாக்கியது.

‘‘அழகு என்பது காலப்போக்கில் குறைந்து மறைந்துவிடும். ஆரோக்கியம் அப்படி அல்ல. அதை நாம் வாழ்நாள் முழுவதும் பேணிக்காக்க முடியும். அதற்கான அற்புத வாய்ப்பை டயாபடீஸ்தான் எனக்கு வழங்கியது’’ என்று எந்த வருத்தமும் இல்லாமல் பேசுகிற ஹாலி, ‘40 வயது என நம்ப முடியாத பிரபலங்கள்’ பட்டியலிலும் இடம் பெற்றவர்!

1989 முதல் இடைவிடாது நடித்துக்கொண்டே இருக்கிறார் ஹாலி. ‘‘நான் சிறுமி யாக இருந்த போது, ‘நீ ஒரு நல்ல தோல்வியாளராக இல்லையென்றால், ஒரு நல்ல வெற்றியாளராவதற்கு வழியே இல்லை’ என என்னுடைய அம்மா கூறினார்’’ என்கிற இந்த அழகுப்பெண், வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகப் பாவிக்கிறார். ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்பட பல முக்கியமான விருதுகளை நடிப்புக்காக பெற்றிருக்கும் ஹாலிக்கு, ஒருகட்டத்தில் ரஸ்ஸி விருது வழங்கப்பட்டது. மிக மோசமான நடிப்புக்கு வழங்கப்படும் விருது இது என்பதுதான் விஷயமே... அந்த விருதை யும் ஹாலி நேரிலேயே சென்று பெற்றுக்கொண்டார். இதுவே அவரது சிறப்பான மனநிலைக்கான அறிகுறி. இப்படி எல்லா விஷயங்களையும் நதியின் போக்கிலேயே செல்வது போல இயல்பாக எடுத்துக் கொள்ளும் தன்மை படைத்தவர் ஹாலி. இதுவே, அவரது மன அழுத்தத்தையும் நீரிழிவையும் சிறப்பாகக் கையாளத் தூண்டுகோலாக அமைகிறது. 

ஹெல்த் மட்டுமல்ல... சுற்றுச்சூழல் விஷயங்களில் ஹாலிக்கு மிகுந்த அக்கறை உண்டு. 2006ல், அமெரிக்காவிலுள்ள மாலிபூ கடற்கரைப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த கேப்ரில்லோ போர்ட் திரவ இயற்கை வாயு வசதியை எதிர்த்துப் போராடினார் ஹாலி. ‘‘நாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றி நான் அக்கறை கொண்டுள்ளேன். கடல் சார்ந்த வாழ்க்கை மற்றும் கடலின் சூழலியல் பற்றியும் நான் அக்கறை கொண்டுள்ளேன்’’ என்றார். ஹாலி உள்பட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் போராளிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, இத்திட்டத்துக்கு அம்மாகாண ஆளுனர் அர்னால்ட் ஸுவாஸ்நேகர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

‘‘நீரிழிவு இருப்பதாலேயே நான் சத்தான உணவு சாப்பிடுகிறேன். தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நான் ஆரோக்கியமாக இருப்பதால்தான் 46 வயதிலும் கர்ப்பம் அடைந்து, சிரமம் இல்லாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிந்தது’’ என்கிற ஹாலிக்கு, டயாபடீஸ் அறியப்பட்டதே ஓர் அதிர்ச்சிக் கதைதான்...ஹாலியின் 22 வயதில், அவரது உடல்நலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஒரு வார காலம் கோமாவிலேயே கிடந்தார். அப்போது செய்யப்பட்ட சோதனைகளில்தான் அவருக்கு டைப் 1 டயாபடீஸ் இருப்பதே தெரிய வந்தது. அதன் பிறகு 26 ஆண்டுகளாக அவர் நீரிழிவையும் ஒரு தோழன் போல பாவித்து வருகிறார்!

குறிப்பிட்ட நேரத்தில் இன்சுலின் போட்டுக்கொள்வது ஹாலிக்கும் கஷ்டமான காரியமாகவே இருந்தது. ஆனாலும், ‘வேறு வழி இல்லை’ என அறிந்த பிறகு, இன்சுலினை அவர் விட்டுவிடவே இல்லை. ‘‘தாய்ப்பாலை மறப்பது போல இன்சுலினையும் எப்படியாவது மறந்துவிடத்தான் நினைத்தேன். ஆனால், அதுதானே நான் நானாக இருக்க உதவி செய்கிறது. அது இப்போது என் குழந்தை போல!’’ என்று சிரிக்கிற ஹாலிக்கு இப்போது 2 குழந்தைகள்.‘‘எங்கள் குடும்பத்தில் யாருக்குமே நீரிழிவு கிடையாது. பள்ளியில் படிக்கும்போது நான் கொஞ்சம் குண்டாகவே இருந்தேன். அப்போது அதுதான் ஆரோக்கியம் என்று நம்பினேன். 22 வயதில் ரொம்பவும் சோர்வாக உணர்ந்து, ஒரு கட்டத்தில் டயாபடீக் கோமாவில் விழுந்த போதுதான் என் வாழ்க்கை வேறு மாதிரி என்கிற விஷயமே எனக்குப் புரிந்தது. 

‘நீ உன் பார்வையை இழக்கக்கூடும்... உன் காலைக்கூட வெட்டி விடுவார்கள்... சிறுநீரகம் பழுதாகும்... இதயம் சிக்கலாகும்’ என பலரும் பலவிதமாக மிரட்டிய போது, உலகமே தலைகீழானது போல உணர்ந்தேன். ‘இனி நீ சாக வேண்டியதுதான்’ என்று மட்டும்தான் அவர்கள் கூறவில்லை. அப்போது என் கண்களில் மரண பயம் இருந்தது. என்னுடைய டாக்டர் நல்லபடியாக விளக்கிய பிறகுதான் எல்லாமே தெளிவானது. என்னையும் என் உடலையும் நன்றாகக் கவனிக்க வேண்டிய தருணம் இது என முடிவெடுத்தேன். உண்மையைச் சொல்வதானால், டயாபடீஸ் என்னைப் பிடிப்பதற்கு முன் இருந்ததை விடவும்,. இப்போது மிகவும் ஹெல்த்தியாக இருக்கிறேன்!’’ என்கிற ஹாலி, இப்போது முறையான உணவு மற்றும் உடற்பயிற்சித் திட்டத்தில் இருக்கிறார்.

ஹாலியின் டயட் ‘லோ ஃபேட் அண்ட் சுகர்’ முறையில் அமைந்திருக்கிறது. இனிப்பு வகைகள், ஜங் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு விடை கொடுத்தாயிற்று. ஏராளமாக பச்சைக் காய்கறிகள் சாப்பிடுகிறார். கொஞ்சம் சிக்கன், மீன், பாஸ்தா உண்டு. சிவப்பு மாமிசம் வேண்டவே வேண்டாம் என்கிறார். இனிப்பு அதிகமுள்ள பழங்களும் கிடையாது. வழக்கமான உடற்பயிற்சிகளோடு யோகாவும் செய்கிறார் ஹாலி. அடிக்கடி ரத்த சர்க்கரையை சோதித்து, அதற்கேற்பவே இன்சுலின் எடுத்துக் கொள்கிறார். இதற்கான கிட் பேக் எந்த நேரமும் ஹாலியுடனேயே பயணிக்கிறது. 

டயாபடீஸ் போலவே வாழ்வின் சகல பிரச்னைகளையும் ரிலாக்ஸாக சமாளிக்கிறார் ஹாலி. முன்னாள் பாய்ஃப்ரெண்ட் ஹாலியை அடித்த போது காதில் பலத்த காயம் ஏற்பட்டு விட்டது. அன்று முதல் அவரது ஒரு காதில் 80 சதவிகிதம் மட்டுமே கேட்கும் சக்தி உண்டு. ஆனால், அந்தக் குறையே தெரியாமல் செயல்படவும் அவர் வாழ்க்கைப் பயணத்தில் கற்றுக் கொண்டிருக்கிறார்.நீரிழிவு என்பது ஒரு நோய் அல்ல... அதனால் எந்தக் குறையும் இல்லை... மொத்தத்தில் அது ஒரு வாழ்க்கைமுறை. இதற்கு ஏற்பவே இம்மண்ணில் வாழ்ந்து காட்டும் நட்சத்திரம்தான் ஹாலி!
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty Re: சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by mohaideen Mon Mar 30, 2015 3:31 pm

பாதமும் தல போல முக்கியம் தான் :ஸ்வீட் ரிசர்ச்

நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள், கால்சியமும் வைட்டமின் டியும் எடுத்துக்கொள்வதன் மூலம், டைப் 2 டயாபடீஸ் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும். 

நீரிழிவாளர்கள் மற்ற உறுப்புகளுக்கு அளிக்கக்கூடிய அதே அளவு முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். பாதங்களில் புண், வலி போன்றவை ஏற்பட்டால், ‘கால்தானே’ என அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி கண்டுகொள்ளாமல் விடுவதுதான் அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்று விடுகிறது. நீண்ட காலம் படுக்கையில் கிடப்பதற்கும், ஊனம் ஏற்படக்கூடிய அபாயத்தையும் கூட ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. அதனால் ஏற்படும் உணர்ச்சிபூர்வமான பாதிப்புகள் மற்றும் உடல்ரீதியான சிகிச்சைக்கான செலவுகள் சிரமம் தரக் கூடியவை.

பாதங்களில் சீழ்ப்புண் இருந்தால் உரிய நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசித்து, அந்நோய் ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை சரிவர உணர்ந்து, தகுந்த சிகிச்சை பெற வேண்டும். பாதங்களை தினம் தினம் பராமரித்துக் கண்காணித்தாலே இச்சிக்கல்களை தவிர்க்க முடியும். அல்லது கடுமையான விளைவுகள் ஏற்படுவதை தாமதப்படுத்தவாவது முடியும்.

அபாயத்தை கண்டறியுங்கள் 

நீண்ட காலமாக சர்க்கரைநோய் உள்ளவர்கள், குளுக்கோஸ் கட்டுப்பாடு மிக மோசமான நிலையில் உள்ளவர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வைக் கோளாறு உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதங்களில் சீழ்ப்புண் ஏற்படவும், அது அறுவை சிகிச்சை வரை செல்லும் அபாயமும் அதிக அளவில் உள்ளது. பின்னர் ஏற்படக்கூடிய அபாயங்களை முன்னரே அறிவதன் மூலமே, பாதங்களை பயனுள்ள விதத்தில் பராமரித்து, பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்.

பாதங்களை பரிசோதியுங்கள்

நீரிழிவு உள்ள அனைவருமே அபாய அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள, ஆண்டுக்கு ஒரு முறையாவது மருத்துவமனையில் தங்கள் பாதங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.  ஒன்று அல்லது அதற்கும் கூடுதலான அளவில் பாதங்களில் அதிக அபாய நிலவரங்கள் உள்ளவர்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  நரம்புக் கோளாறு உள்ள நோயாளிகள், தங்கள் பாதங்களை அடிக்கடி மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

அதிக அபாய நிலவரங்களை சமாளிப்பது எப்படி?


நரம்புக் கோளாறு இருக்கும் நோயாளிகள் சரியாக பொருந்தும் ஷூ அல்லது அத்லெடிக் ஷூ அணிய வேண்டும். உணர்ச்சியின்மையுடன் சேர்ந்து வரக் கூடிய தொல்லைகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உணர்வற்று மரத்துப்போன நிலைமை இருப்பதை உணர்ந்தால் மருத்துவரை உடனே தொடர்புகொள்ள வேண்டும். இப்பிரச்னை குறித்து மிகவும் உன்னிப்பாக இருப்பது மிக முக்கியமாகும். இதை ஒருபோதும் உதாசீனம் செய்யக் கூடாது.

வீட்டில் இருக்கும்போது கூட, அப்படியே வெறும் காலோடு நடக்கக் கூடாது. பாதங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, அவற்றை அடிக்கடி கவனமாக பரிசோதிக்க வேண்டும்.க்ளடிகேஷன் (நடக்கும்போது கால்களில் வலி மற்றும் பலவீனம் மற்றும் ஓய்வாக உட்கார்ந்துவிட்டால் நிவாரணம் ஏற்படும் நிலை) அறிகுறிகளை உணர்ந்தால், மருத்துவர் ஆலோசனையுடன் ‘செல் நாளக்குழாய் பரிசோதனை’ மேற்கொள்ள வேண்டும். க்ளடிகேஷனுக்கு உடற்பயிற்சி மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வது உகந்தது.பல காலமாக அல்ஸர் (சீழ்ப்புண்) உள்ள நோயாளிகளும் அல்ஸர் ஏற்படுவதற்கான காரணங்களை அறிந்து, அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

[You must be registered and logged in to see this link.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty Re: சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by ஸ்ரீராம் Tue Mar 31, 2015 5:07 pm

அனைத்தும் மிகவும் பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி மொஹைதீன்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty Re: சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by mohaideen Sun Apr 19, 2015 1:32 pm

[size=30]விழியே...விடைபெற்று விடாதே![/size]
[size=30][You must be registered and logged in to see this image.][/size]
நீ என் இன்சுலினை போலவேதான்...
நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது! 
- டயாபடீஸ் காதல் வரிகளிலிருந்து...


சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு உச்சி (முடி உதிர்வது) முதல், பாதம் (புண் ஏற்படுவது) வரை பாதிப்புகள் ஏற்படும் என்றாலும்,  கண்களில் ஏற்படும் பாதிப்புகள் முக்கியமானவை. கட்டுப்படுத்தப்படாத நீரிழிவினால் எந்த அளவுக்கு கண்கள் பாதிக்கப்படும்? இதனால் ஏற்படும்  பார்வைக் குறைபாட்டை குணமாக்குவது எப்படி? இப்படி நமக்கு எழும் பல கேள்விகளுக்குப் பதில்களை பகிர்ந்து கொள்கிறார் கண் மருத்துவர் மற்றும்  விழித்திரை நிபுணர் டாக்டர் வசுமதி வேதாந்தம்.

‘‘முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுப்படி உலக மக்கள் தொகையில் 4  சதவிகிதம் பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான். இதனால்தான்  இந்தியாவை ‘நீரிழிவு நோயாளி களின் தலைநகரம்’ என்கிறார்கள். இந்தியாவில், நகர்ப்புற நீரிழிவு நோயாளிகளில் 2 சதவிகிதத்தினருக்கு விழித்திரைப்  பாதிப்பு உள்ளது. சென்னையில் மட்டுமே 100 நீரிழிவு நோயாளிகளில் 5 பேருக்கு பார்வை குறைபாடு இருக்கிறது.

கண்களில் ஏற்படும் முக்கியமான பாதிப்புகள்...


  • கண்ணீர் ஓட்டம் குறைந்து கண்கள் உலர்தல்.



  •  கண்புரை (கேட்ராக்ட்) உருவாகுதல்.



  •  க்ளாக்கோமா என்ற கண் நரம்பு அழுத்த பாதிப்பு தோன்றுதல்.



  •  விழித்திரை பாதிப்பு.



  •  விழித்திரையில் இருக்கும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுதல்.


[size=30]சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 18 பேருக்கு ‘டயாபட்டிக் ரெட்டினோபதி’ எனப்படும் விழித்திரை கோளாறு தோன்றுகிறது. அதில்  பெரும்பாலானவர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம். 

விழித்திரை பாதிப்பு எப்படி ஏற்படுகிறது? 

சர்க்கரை நோய் ஏற்படும்போது இயல்பாகவே உடலில் ரத்த ஓட்டம் குறையும். அப்போது விழித்திரைக்கு செல்லும் ரத்தக்குழாய்களும் பலவீனமாகி,  ரத்தத்தில் இருக்கும் நீர் கசிந்து வெளியேறி, திசுக்களில் கலந்து சொதசொதப்பாக ஆகிவிடும். சிலருக்கு ரத்த மும் கசிந்து வெளியேறும். ஆரம்ப  நிலையில் நோயாளிகளுக்கு அறிகுறி எதுவும் தெரியாது. பார்வையும் மங்காது. வழக்கமான கண் பரிசோதனைக்கு சர்க்கரை நோயாளிகள்  செல்லும்போது, அவர்களுக்கு ‘இன்டைரக்ட் ஆப்தமோல்ஸ்கோபி’ பரிசோதனை செய்தால், தொடக்கத்திலே பாதிப்பை கண்டறிந்துவிடலாம். முதலிலேயே கண்டறிந்தால் சிகிச்சை எளிது.

விழித்திரை நரம்புகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, ரத்தக் குழாய்கள் உடைந்து கண்களுக்குள்ளே ரத்தம் சிதறி, பார்வை மங்கிய பின் வந்தால், அது  நோயாளிகளுக்கு சிரமமான சிகிச்சையாகிவிடும். 

டைப் 1 நோயாளிகள் சர்க்கரை நோய் கண்டறியப்பட்டு சில வருடங்கள் கழித்து கண்களையும் பரிசோதிப்பது அவசியம். டைப் 2 நோயாளிகள்  எப்போது சர்க்கரை நோய் கண்ட றியப் படுகிறதோ, அப்போதிருந்து கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். விழித்திரை பாதிப்புகளை நவீன  முறையில் கண்டறிய ‘பண்டஸ் ஃப்ளோரெசின் ஆஞ்சியோகிராபி’ என்ற பரிசோதனை உள்ளது. ஃப்ளோரெசின் என்ற ‘டை’யை கை நரம்பில் செலுத்த  வேண்டும். அது விழித்திரை நரம்பு களை சென்றடையும். அதன் மூலம் விழித்திரை நரம்புகள் எப்படி இயங்குகின்றன? அவற்றில் ரத்த ஓட்டம் எப்படி  இருக்கிறது? எங்கெங்கு அடைப்பு, கசிவு இருக்கிறது என்பதை அறியலாம். 

‘ஓ.சி.டி.’ என்ற ‘ஆப்டிகல் கோகரன்ஸ் டோமோகிராபி’ பரிசோதனையைப் பயன்படுத்தி கண்களைத் தொடாமலே திசுக்களின் மாதிரியை  சேகரித்துவிடலாம். லேசர் கதிர்களை அடிப்படையாகக் கொண்டே இந்த சோதனை நடக்கும். இது விழித்திரை நரம்புகளின் அடர்த்தியை  பலவிதங்களில் ஆய்வு செய்து, பாதிப்பை படங்களாக்கித் தரும். அடுத்து ‘பி ஸ்கேன்’ (B Scan)... அல்ட்ரா சவுண்ட் அலைகளை செலுத்தி  விழித்திரை ஒட்டியிருக்கிறதா அல்லது பிரிந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்கும் சோதனை இது.

இப்பரிசோதனைகளை செய்து, பாதிப்பின் தன்மையை துல்லியமாக கண்டறிந்த பின், அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். விழித்திரையில்  ஏற்படும் பாதிப்புகளுக்கு உலர வைத்தல், உறிஞ்சி எடுத்தல், ஆபரேஷன் செய்தல் ஆகிய மூன்று வகை சிகிச்சைகள் உள்ளன.விழித்திரை  ரத்தக்குழாய்களில் இருந்து நீரோ, ரத்தமோ கசிந்திருந்தால் லேசர் சிகிச்சை மூலம் அதை உலர வைத்துவிடலாம். சில நிமிடங்களிலேயே இந்த  சிகிச்சை முடிந்துவிடும். பச்சை நிற கதிர்கள் லேசர் மூலம் பாயும். பாதிக்கப்பட்ட பகுதிகளை சரியாக கணித்து, அதில் சரியான முறையில்,  தேவைப்படும் இடைவெளியில் லேசர் கதிர்களை பாய்ச்சுவதே இச்சிகிச்சை முறை.

உலர வைப்பதற்கு பதில் உறிஞ்சி எடுக்கும் சிகிச்சையையும் டைப் 1 நோயாளிகளுக்கு வழங்கப்படும். விழித்திரை பாதிப்புகளை நவீன முறையில்  கண்டறிய கண்களுக்கு எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன் போன்ற இச்சிகிச்சையை விழித்திரையில் மேற்கொள்ளலாம். நீரோ, ரத்தமோ கசிந்திருக்கும்  பகுதியை கண்டறிந்து, அதற்குரிய மருந்தை செலுத்தி, நவீன ஊசியை பயன்படுத்தி உறிஞ்சி எடுக்க வேண்டும்.கசிந்த ரத்தம் விழித்திரையில் உறைந்து  கட்டிபோல ஆகியிருந்தால், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். இந்த அறுவை சிகிச்சைக்கு ‘விட்ரெக்டமி’ என்று பெயர். 

விழித்திரை என்பது வளரும் தன்மை கொண்டது அல்ல என்பதையும் சர்க்கரை நோயாளிகள் கவனிக்க வேண்டும். விழித்திரை யில் இருக்கும் ஒரு  திசு இறந்து போனால் கூட, அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. அதனால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு நோயாளி வந்தால், விழித்திரையில்  மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கத்தான் முடியுமே தவிர, இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது. அதனால் சர்க்கரை நோயாளிகள் விழித்திரை  தொடர்புடைய பரிசோதனைகளை தவறாமல் செய்து, பாதிப்பு இருப்பின், உடனே சிகிச்சை எடுக்கவேண்டும். குறிப்பாக விழித்திரை நிபுணரிடம்  (ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று பரிசோதிப்பது மிகவும் நல்லது. 

சிலருக்கு விழித்திரையில் வலி அதிகமாக இருக்கும். அப்போதே அவர்கள் விழித்திரை நிபுணரிடம் பரிசோதனை செய்து கொண்டால் பார்வை இழப்பில்  இருந்து தப்பி விடலாம்.நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல... 40 வயது கடந்த அனைவரும் கண் மருத்துவரிடம் சென்று கண் அழுத்தத்தைப்  பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கண் பிரஷர் அதிகமானால் பார்வைக் குறைபாடு ஏற்படும். எஃப்.எஃப்.ஏ. என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால்  ஏற்படும் ரத்த நாளக் கோளாறுகளை அறிய முடியும். இப்பரிசோதனைக்குப் பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம்  செலுத்துவோம். கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். என்ற ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால்  ரத்தநாளக் கோளாறு குணமாகும்.

விழித்திரையில் ஏற்படும் கோளாறை தடுக்க ஊசி மூலம் சிலிகான் ஆயில் செலுத்தப்படும். இது விழித்திரையை பலப்படுத்தும்’’ என்று லேட்டஸ்ட்  சிகிச்சை முறைகளையும் விளக்கிய டாக்டர் வசுமதி வேதாந்தம், இறுதியாகச் சொல்கிற விஷயம் எல்லோருக்குமானதே!‘‘சர்க்கரை நோயாளிகள்  கண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முக்கியமாக என்ன செய்ய வேண்டும்? வாரத்தில் 5 நாட்களாவது உறுதியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்!’’

ஸ்வீட் டேட்டா

டைப் 1 வகை நோயாளிகளுக்கு 15 ஆண்டுகளாக நீரிழிவு இருந்தால், அவர்களது பார்வை 100 சதவிகிதம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. 

டைப் 2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால், 30 சதவிகிதத்தினரின் பார்வை கடுமையாகப் பாதிக்கப் படக்கூடும்.[/size]


[size=30][You must be registered and logged in to see this link.][/size]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty Re: சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by முரளிராஜா Mon Apr 20, 2015 5:21 pm

நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை! Empty Re: சுகர் ஸ்மார்ட்: சாக்லெட் வாழ்க்கை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum