தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலையில் இருக்கு நலம்!

View previous topic View next topic Go down

spm4 - இலையில் இருக்கு நலம்! Empty இலையில் இருக்கு நலம்!

Post by mohaideen Sun Apr 12, 2015 10:29 am

spm4 - இலையில் இருக்கு நலம்! Ht3431

கருவேப்பிலையை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை என்கிறது நம்மூர் நாட்டுப்பாடல். கருவேம்பு, கருவேப்பிலை என்கிறது தமிழ் பேரகராதி. உலுவாவிகச் செடி என்று சித்த வைத்திய அகராதியும், கரிய நிம்பம் என்று தைல வருக்கச் சருக்கமும் கருவேப்பிலையை குறிப்பிடுகின்றன. மலையாளத்தில் கறிவேப்பு, கன்னடத்தில் கறிபீவு, தெலுங்கில் கறிபாகு, வடமொழியில் காலசாகம் என ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் உணவாக இந்த மருந்திலை அறிமுகப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் கருவேப்பிலை இல்லாத காய்கறிக்கடை இருப்பதில்லை. பெட்டிக்கடைகளின் சில்லறை காய்கறி  விற்பனைகளிலும் கருவேப்பிலை அவசியம் இடம்பிடிக்கிறது. தமிழகத்து அத்தனை மார்க்கெட்டுகளுக்கும் லாரிகளில் கருவேப்பிலைகள் வந்திறங்குகிறது. அசைவம், சைவம் என அத்தனை சமையலிலும்  கருவேப்பிலை இருப்பதால், மொத்த மக்களும் இந்த இலையை வாங்கிப்போக மறப்பதில்லை. சிறு அளவுகளில் இனிப்பு, துவர்ப்புச் சுவையில் வாசமிகு நாட்டுக்குலையும், விரிந்த இலைகளாக குறைந்த  வாசனையில் கூடுதல் கசப்புடன் காட்டுக்குலை எனும் மலைக்குலையும் என இருவேறு நிலைகளில் இந்த  கருவேப்பிலை மொத்த வியாபாரிகளுக்கு வந்து, சில்லறை வியாபாரிகளைச் சேர்கிறது.

இதில்  நாட்டுக்குலை வீட்டுச் சமையலுக்கும், காட்டுக்குலை மருந்திற்கும் போகிறது. கருவேப்பிலையில் இலை, ஈர்க்கு,  பட்டை, வேர் என அத்தனையும் பயனாகிறது. உணவை மணக்க வைக்கிற மகத்தான கருவேப்பிலை, உடல் நலத்தை நிலைக்கச் செய்கிறது. தாளிப்பில்  குழம்பைச் சேர்கிற கருவேப்பிலையை உண்ணும் தட்டிலிருந்து எடுத்து ஒதுக்கிப்போடுகிறோம். மோரைப் பருகிவிட்டு  முதலில் வெளியில் துப்புவது கருவேப்பிலையைத்தான். ஒவ்வொரு உணவோடும் இந்த உயிர்ச்சத்து மிக்க  கறிவேப்பிலையை கலந்துண்பது ஆரோக்கியம்.

கருவேப்பிலை நமக்குள் நல்ல ருசியுணர்வுடன் பசி, செரிமானம் நிறைக்கிறது. கறிவேப்பிலையை ஜீரண உறுப்பின் நண்பன் என்கிறார்கள். தலைமுடி வளர்ச்சி உள்ளிட்ட அநேக மருத்துவ மேன்மைகள் இந்த இலைக்குள் மறைந்து கிடக்கிறது.  இது வயிற்று வாயுவை பிரித்து மலவாயுக் கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும்.  கருவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, மிளகாய் சேர்த்தரைத்த துவையல் சாப்பிட குடல் பலம் பெறும்.

பித்தத்தை தணித்து உடல் சூட்டை அகற்றும், குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட  காய்ச்சல் நீக்கும், பித்த மிகுதியால் வந்த பைத்தியத்தையே இந்த கருவேப்பிலை போக்கும் வலிமை கொண்டிருக்கிறது என சித்தா வாசுட  நூல் தெரிவிக்கிறது. இலை, பட்டை, வேரில் செய்த கசாயத்தை குடித்தால் பித்தமும், வாந்தியும் போகுமாம்.  நிழலில் உலர்த்திய, கருவேப்பிலையுடன், மிளகு, உப்பு, சீரகம், சுக்கு சேர்த்து பொடியாக்கி, சோற்றுடன் நெய்  கலந்து சாப்பிட மலக்கட்டு முதல் பேதி, கழிச்சல் வரை அத்தனை வயிற்று உபாதைகளும் சரியாகும் என்கிறது நாட்டு வைத்தியம்.

இன்னும், குடல் கிருமிகள் அழிக்கும் திறன் பெற்றுள்ள இந்த இலைக்கு, கண்பார்வையை தெளிவடையச் செய்யும் வல்லமையும் இருக்கிறது. தலைமுடி நரைக்காது காத்து, நரைத்த முடிகளையும் கருமையாக்கி மயிர்க்கால்களை வலுவூட்டும் அதிசயச் சக்தி கருவேப்பிலைக்குள் இருக்கிறது. கை,கால் நடுக்கங்கள் நீக்கி, இளமையை உடலுக்குள் நிரப்பும் ரகசியத்தையும் இது தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் சுகம் தரும் என்கின்றனர். இன்னும் கூடுதலாக, இதயநோயைத் தடுப்பதுடன், புற்று  நோய் செல்களைக் கட்டுப்படுத்தும் திறனும் இந்த இலைக்கு இருக்கிறது.

கருவேப்பிலையில் 63சதவீத நீர், 6 சதவீத புரதம், ஒரு சதவீத கொழுப்பு, 4 சதவீத தாது உப்பு, 6.4 சதவீத நார்ச்சத்து, 18.7ச தவீத  மாவுச்சத்து என அநேக திறன்கள் உள்ளன. நூறுகிராம் கருவேப்பிலையில் 830 மி கிராம் சுண்ணாம்புச்சத்தும்,  221 மிகி, மக்னீசியம், 132 மிகி, இரும்பு, 0.21 மிகி, தாமிரம், 81 மிகி, கந்தகம், 198 மிகி, குளோரின் சத்துகளும் உள்ளன. இதுதவிர இந்த இலைகளில் வைட்டமின்ஏ அதிகளவில் இருக்கிறது. மருந்துப் பொடியாக, உணவு எண்ணெய்யாக இன்னும் பல அவதாரங்களில் முகம் காட்டும் இந்த  கருவேப்பிலை இயற்கை நமக்களித்த அற்புதப் பரிசு.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3441
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

spm4 - இலையில் இருக்கு நலம்! Empty Re: இலையில் இருக்கு நலம்!

Post by செந்தில் Sun Apr 12, 2015 10:33 am

கறிவேப்பிலை பயன்களை அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

spm4 - இலையில் இருக்கு நலம்! Empty Re: இலையில் இருக்கு நலம்!

Post by ஸ்ரீராம் Sun Apr 12, 2015 6:40 pm

கருவேப்பிலையில் 63சதவீத நீர், 6 சதவீத புரதம், ஒரு சதவீத கொழுப்பு, 4 சதவீத தாது உப்பு, 6.4 சதவீத நார்ச்சத்து, 18.7ச தவீத  மாவுச்சத்து என அநேக திறன்கள் உள்ளன. நூறுகிராம் கருவேப்பிலையில் 830 மி கிராம் சுண்ணாம்புச்சத்தும்,  221 மிகி, மக்னீசியம், 132 மிகி, இரும்பு, 0.21 மிகி, தாமிரம், 81 மிகி, கந்தகம், 198 மிகி, குளோரின் சத்துகளும் உள்ளன.

அட அப்படியா? இனி தூக்கி எரியாமல் சாப்பிடுகிறேன்.

சிறப்பான மருத்துவ பகிர்வுக்கு நன்றி மொஹைதீன்.

spm4 - இலையில் இருக்கு நலம்! 5v3z2b

spm4 - இலையில் இருக்கு நலம்! GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm4
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

spm4 - இலையில் இருக்கு நலம்! Empty Re: இலையில் இருக்கு நலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum