தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும்

View previous topic View next topic Go down

spm4 - மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும் Empty மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும்

Post by mohaideen Sun Apr 12, 2015 10:40 am

spm4 - மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும் Ht3437


‘‘எல்லா வேலைகளும் முடிந்த பிறகு, இரவு 11 மணி அளவில் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். தற்செயலாக கணவரின் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை கவனித்தேன். ‘தெரியலயே... எங்கயாவது இடிச்சுக்கிட்டேனோ என்னவோ...’ என்று கைக்குட்டையால் துடைத்துக் கொண்டார். சில நிமிடங்களில் ரத்தம் இன்னும் அதிகமாக வர ஆரம்பித்தது. ஏற்கெனவே, உயர் ரத்த அழுத்தத்துக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் என்பதால் எனக்கு பயமாகிவிட்டது. ‘அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. சில்லு மூக்கு உடைஞ்சிருக்கும்’ என்று துண்டில் துடைத்துக்கொண்டு என்னை சமாதானப்படுத்தினார். ஆனால், துண்டு முழுக்க ரத்தமயமாக இருப்பதைப் பார்த்ததும் பயமும் பதற்றமும் அதிகமாகிவிட்டது. பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்குப் பிடிவாதமாக அழைத்துச் சென்றேன்.

‘ரத்த அழுத்தம் தாங்காமல் தலைக்குள் நரம்பு ஒன்று வெடித்துவிட்டது... கொஞ்சம் தாமதமாகியிருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகியிருக்கும்’ என்று உடனடியாக ஐ.சி.யு.வில் சேர்த்தார்கள். அடுத்த நாள் பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, இப்போது குணமடைந்துவிட்டார் என்றாலும் ஐ.சி.யு. வாசலில் அன்று இரவு முழுவதும் திகிலோடு விழித்திருந்ததை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது...’- மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் தீபா நாகராணி பகிர்ந்துகொண்ட உண்மைச் சம்பவம் இது.

நரம்பியல் மருத்துவரான லட்சுமி நரசிம்மனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘இந்தியாவில் ஒருபக்கம் நோய்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம் அலட்சியத்தாலோ, அறியாமையாலோ இதுபோன்ற விபரீதங்களும் அதிகமாகி வருகின்றன. இது கவலைக்குரிய விஷயம். உயர் ரத்த அழுத்தத்துக்கான சிகிச்சையை பாதியில் நிறுத்தியதால்தான் இத்தனை பெரிய ஆபத்தைச் சந்தித்திருக்கிறார்கள். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் சரி... மாரடைப்பாக இருந்தாலும் சரி... நாமே எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்பதுதான் முக்கியமான விஷயம். மருத்துவரின் ஆலோசனை அவசி யம், மருத்துவர் கொடுக்கிற சிகிச்சைகளைப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயம் மற்றும் மூளை தொடர்பான நோய்கள், பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இடையில் சரியாகிவிட்டது என்று நிறுத்தவே கூடாது. இந்த நோய்கள், வாழ்க்கை முழுவதும் நம்முட னேதான் இருக்கும். அந்த நோயை தினமும் நாம் கவனித்துத்தான் ஆக வேண்டும். ‘தினமும் மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கிறதே... ஊசி போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறதே... அடிக்கடி பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கிறதே... மருத்துவமனைக்கு அலைய வேண்டியிருக்கிறதே’ என்றெல்லாம் எரிச்சலாகத்தான் இருக்கும். ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ வேண்டு மானால், அந்த சிகிச்சைகளைப் பின்பற்றித்தான் ஆக வேண்டும்’’ என்கிறார்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

spm4 - மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும் Empty Re: மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும்

Post by mohaideen Sun Apr 12, 2015 10:40 am

தலைக்குள் நரம்பு வெடித்தால் மூக்கில் இதுபோல ரத்தம் வருமா?

‘‘ரத்த அழுத்தம் தாங்காமல் நரம்பு வெடித்தால் வலிப்பு, பார்வை மங்குவது, கை, கால்கள் செயல் இழப்பது, கடுமையான தலைவலி, கோமா நிலைக்குச் செல்வது போன்ற அறிகுறிகள்தான் வழக்கமாகத் தோன்றும். இது மிகவும் அபூர்வமான அறிகுறி. 10 ஆயிரம் பேரில் ஒருவருக்குத்தான் இதுபோல மூக்கில் ரத்தம் வரும்’’ என விளக்குகிற டாக்டர், நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய விதிகளை வலியுறுத்திச் சொல்கிறார்.

1 சிகிச்சையைக் கைவிடாதீர்கள்!


தொடர் சிகிச்சைகளின் காரணமாக நோய் குணமாகிவிட்டது போல சில நேரங்களில் தோன்றும். அது நீங்கள் ஒழுங்காக சிகிச்சையைப் பின்பற்றி வருகிறீர்கள் என்பதன் அடையாளம்தானே தவிர, நோய் குணமாகிவிட்டது என்று அர்த்தம் இல்லை. அதனால் இனி நம்மை ஒன்றும் செய்யாது என்று அசட்டு நம்பிக்கை கொள்வது ஆபத்தானது. 

2 தொடர்பு எல்லைக்கு வெளியே போகாதீர்கள்!

சமீபத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். அவர், ‘டாக்டர் நீங்க எழுதிக் கொடுத்த மாத்திரையைத்தான் இத்தனை நாளா சாப்பிட்டுட்டு இருந்தேன். நல்லாத்தான் இருந்தது. இப்போ ஒரு மாசமா வலி அதிகமாகிருச்சு’ என்றார். அவரது ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்கிப் பார்த்த எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. 2004ம் ஆண்டு அவருக்கு அந்த மருந்தை எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதைத்தான் அவர் 10 வருடங்களுக்கு மேலாக என்னிடம் மீண்டும் ஆலோசனைக்குக் கூட வராமலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். டாக்டர் மாத்திரை எழுதிக் கொடுத்திருந்தால் குறிப்பிட்ட நாளுக்குத்தான் அந்த மாத்திரைகளை சாப்பிட வேண்டும். அதற்கு முன்பாக சாப்பிடுவதை நிறுத்தக் கூடாது, அதற்குப் பிறகு மாத்திரை சாப்பிடுவதாக இருந்தாலும் டாக்டரின் அறிவுரை இல்லாமல் சாப்பிடக் கூடாது. 

3 அளவு தாண்டாதீர்கள்!

ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி. ஒரு மாத்திரை சாப்பிட்டு தலைவலி குறையாததால் மீண்டும் ஒரு தலைவலி மாத்திரை சாப்பிட்டிருக்கிறார். சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கும்போது அவரது இரண்டு கைகளும் கருப்பாகி, அழுகிப் போன நிலைக்கு வந்துவிட்டது. மருத்துவரின் ஆலோசனையை மீறி நாம் சாப்பிடுகிற ஒரு சின்ன மாத்திரை எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். 

4 ஆலோசனை கேட்காதீர்கள்!

கால் வலி இருப்பதாக நண்பரிடம் சொல்லியிருக்கிறார் ஒருவர். உடனே அவர், ‘நானும் கால் வலிக்குத்தான் மாத்திரை சாப்பிடுகிறேன்’ என்று அதே மாத்திரைகளை மருந்துக்கடையில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மாத்திரை அலர்ஜியாகி, அவர் கோமாவுக்குப் போய்விட்டார். விசாரித்த பிறகுதான் தெரிந்தது... ஆலோசனை கேட்டவருக்கு சாதாரண கால்வலிதான். மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தவருக்கு சர்க்கரை நோயோடு கால் வலி இருந்திருக்கிறது. ஒரு தவறான ஆலோசனையால் ஒன்றரை லட்ச ரூபாய் பணம் விரயமாகி, தேவையில்லாத சிரமமும்தான் கடைசியில் மிச்சமானது. கண்ட நபர்களிடமும் மருத்துவ ஆலோசனை கேட்கக் கூடாது... தவறான ஆலோசனை கொடுக்கவும் கூடாது.

5 விதிகளை மீறாதீர்கள்!

வலிப்பு நோயாளி ஒருவரிடம் ‘வாகனம் ஓட்ட வேண்டாம்’ என்று சொல்லியிருந்தேன். ஆனால், பள்ளியிலிருந்து மகனை அழைத்து வருவதற்காக காரில் சென்றவருக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுவிட்டது. கார் தறிகெட்டு ஓடி மூன்று மாணவர்களுக்குப் படுகாயம். நல்லவேளையாக ஒரு மரத்தில் மோதி கார் நின்றிருக்கிறது. மக்கள் ஓடி வந்து பார்த்தால் அவர் வலிப்பு வந்து சுயநினைவு இல்லா மல் கை, கால் இழுத்துக் கொண்டு இருந்திருக்கிறார்.இது டாக்டரின் அட்வைஸை மீறி நடப்பதால் வந்த விளைவு. அலட்சியம், அதிமேதாவித்தனம் போன்ற காரணங்களால் நோயாளி தன்னைத்தானே டாக்டராக நினைத்துக் கொள்ளக் கூடாது. அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்லதல்ல!

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3447
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

spm4 - மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும் Empty Re: மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும்

Post by ஸ்ரீராம் Sun Apr 12, 2015 6:35 pm

மிக மிக சிறப்பான பகிர்வு.

சிறப்பான மருத்துவ பகிர்வுக்கு நன்றி மொஹைதீன்.

spm4 - மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும் 5v3z2b

spm4 - மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும் GLgOZfBxRo2deJBU29Bo+seeal

#spm4
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

spm4 - மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும் Empty Re: மருந்தை நிறுத்தினால் என்ன ஆகும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum