Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்!
Page 1 of 1 • Share
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்!
ஆசை உன்மீது
அணுவளவு குறைந்தாலும்
ஓசை இல்லாமல்-என்
உயிர்பிரிய வேண்டுமடி!
ஒருசொட்டுக் கண்ணீர்
உன்கண்ணில் வழிந்தாலும்
மறுசொட்டுக் கண்ணீர்-என்
பிணத்தில்விழ வேண்டுமடி!
என்மார்பில் நீசாய
உன்மார்பில் நான்சாய
இருநெஞ்சின் துயரங்கள்
இடம்மாற வேண்டுமடி!
நாதமணிக் கொலுசோடு
நடமாடும் நடமாடும்-உன்
பாதமலர் நானெடுத்து
முத்தமிட வேண்டுமடி!
இலைக்குக் காம்பெனவே
இளைத்திருக்கும் மெல்லிடையை
வளைத்து முப்போதும்-நான்
விளையாட வேண்டுமடி!
மொட்டு இதழ்குடித்து
முரலும் வண்டினைப்போல்-உன்
பட்டு இதழ்குடித்து-நான்
பசியாற வேண்டுமடி!
என்கையில் உன்ரேகை
உன்கையில் என்ரேகை
இடம்மாற மஞ்சத்தில்-நாம்
இளைப்பாற வேண்டுமடி!
என்னிதயம் மோகத்தில்
எரிகின்ற நேரத்தில்-உன்
இதழெச்சில் தனையூற்றி
நீயணைக்க வேண்டுமடி!
கட்டி அணைத்தெடுத்துக்
கலவி முடிக்கையில்-நாம்
தொட்டுக்கொண்ட இடமெல்லாம்
தேனூற வேண்டுமடி!
முப்போதும் உன்மார்பில்
முத்தமிடும் பொன்தாலி
சிலபோது சிலபோது
நானாக வேண்டுமடி!
தாயூட்டும் ஒர்சுகம்
தாயோடு முடியாமல்
நீயூட்டும் வேளையிலும்
நீண்டுவர வேண்டுமடி!
கண்ணீர் வந்தாலும்
காமம் வந்தாலும்
பெண்ணிற் பேரழகே-உன்
முந்தானை வேண்டுமடி!
வயதாகிப் போனாலும்
வண்ணத் திருமயிலே!-உன்
வாயூறும் எச்சிலுக்கு
நான்வழிய வேண்டுமடி!
யார்செத்து யார்அழுக?-என்ற
கேள்விக்கு இடம்வேண்டாம்
ஊர்அழுக ஒன்றாக-அடி
நாம்போக வேண்டுமடி!
----------ரௌத்திரன்
அணுவளவு குறைந்தாலும்
ஓசை இல்லாமல்-என்
உயிர்பிரிய வேண்டுமடி!
ஒருசொட்டுக் கண்ணீர்
உன்கண்ணில் வழிந்தாலும்
மறுசொட்டுக் கண்ணீர்-என்
பிணத்தில்விழ வேண்டுமடி!
என்மார்பில் நீசாய
உன்மார்பில் நான்சாய
இருநெஞ்சின் துயரங்கள்
இடம்மாற வேண்டுமடி!
நாதமணிக் கொலுசோடு
நடமாடும் நடமாடும்-உன்
பாதமலர் நானெடுத்து
முத்தமிட வேண்டுமடி!
இலைக்குக் காம்பெனவே
இளைத்திருக்கும் மெல்லிடையை
வளைத்து முப்போதும்-நான்
விளையாட வேண்டுமடி!
மொட்டு இதழ்குடித்து
முரலும் வண்டினைப்போல்-உன்
பட்டு இதழ்குடித்து-நான்
பசியாற வேண்டுமடி!
என்கையில் உன்ரேகை
உன்கையில் என்ரேகை
இடம்மாற மஞ்சத்தில்-நாம்
இளைப்பாற வேண்டுமடி!
என்னிதயம் மோகத்தில்
எரிகின்ற நேரத்தில்-உன்
இதழெச்சில் தனையூற்றி
நீயணைக்க வேண்டுமடி!
கட்டி அணைத்தெடுத்துக்
கலவி முடிக்கையில்-நாம்
தொட்டுக்கொண்ட இடமெல்லாம்
தேனூற வேண்டுமடி!
முப்போதும் உன்மார்பில்
முத்தமிடும் பொன்தாலி
சிலபோது சிலபோது
நானாக வேண்டுமடி!
தாயூட்டும் ஒர்சுகம்
தாயோடு முடியாமல்
நீயூட்டும் வேளையிலும்
நீண்டுவர வேண்டுமடி!
கண்ணீர் வந்தாலும்
காமம் வந்தாலும்
பெண்ணிற் பேரழகே-உன்
முந்தானை வேண்டுமடி!
வயதாகிப் போனாலும்
வண்ணத் திருமயிலே!-உன்
வாயூறும் எச்சிலுக்கு
நான்வழிய வேண்டுமடி!
யார்செத்து யார்அழுக?-என்ற
கேள்விக்கு இடம்வேண்டாம்
ஊர்அழுக ஒன்றாக-அடி
நாம்போக வேண்டுமடி!
----------ரௌத்திரன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|