Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நிகமானந்தா!
Page 1 of 1 • Share
நிகமானந்தா!
"மங்கையர்தம் கற்பினைப்போல் நதிகள் தாமும்
மாசுறாமல் காத்திடுதல் வேண்டு மன்றோ?
கங்கைதனில் தொழிற்சாலைக் கழிவு வந்துக்
கலப்பதனை உடனடியாய்த் தடுத்தல் வேண்டும்
இங்கிதனை மனத்திடையே அரசு கொண்டு
இதற்கொரு தீர்வுதரல் வேண்டும்" என்று
பொங்கிநின்றான்; போராட்டம் தனிலி றங்கி
புதுமைவழி காட்டியவன் நிகமா னந்தா!
காலங்கள் பலவாக நமது நாட்டில்
காவியெனில் கயமையதன் நிறமாய் மாறிக்
கோலங்கள் காட்டியது; அதனை மாற்றிக்
காவியெனில் என்றைக்கும் புரட்சி யென்றே
ஞாலத்தில் நாட்டவந்தான்; கிழக்கில் தோன்றும்
ஞாயிறுபோல் உலகுக்காய் எரிந்து நின்றான்!
பாலத்தைக் கட்டிவைத்தான் ஆன்மீ கத்தைப்
புரட்சியொடு இணைத்திட்டான் வாழ்க மாதோ!
பொன்னுக்கும் பொருளுக்கும் ஆன்மீ கத்தைப்
பயன்படுத்தும் புலையரிடை, நாட்டு மக்கள்
நன்மைக்குப் பயன்படுத்தி மாண்ட நல்லோன்!
நாட்பலவாய் உண்ணாமல் நோன்பி ருந்து
மண்ணுக்குள் புதைந்திட்டான்; மாணிக் கங்கள்
மேதினியில் பலகாலம் வாழ்வ தில்லை!
விண்ணுக்குள் அவர்மறைந்து போனா லென்ன?
வரலாறாய் நம்மிடையில் வாழ்ந்தி ருப்பார்!
கோவிலுக்குத் தீபங்கள் தேவை யில்லை!
குறைகளிங்கு அவற்றாலே தீர்வ தில்லை!
கோவிலுக்குள் தீபங்கள் எரிந்தால் ஏழைக்
குடிசைக்குள் சூழ்ந்தவிருள் மறைந்து போமோ?
கோவிலுக்குள் எரிகின்ற தீபம் போன்றோர்
காவிக்குள் வாழ்கின்ற துறவோர் தாமும்!
கோவிலுக்குள் தீபமென இருத்தல் வாழ்வோ?
குடிசைக்குள் தீபமெனக் கருகல் வாழ்வு!
இத்தகைய சிந்தனைகள் வளர்ந்து விட்டால்
இம்மியும் துயரங்கள் சூழ்வ துண்டோ?
சத்திரங்கள் தாமுமிங்கு முயன்று நின்றால்
சரித்திரங்கள் படைத்திடலாம் உண்மை யன்றோ?
சித்துகளைப் புரிந்திங்கு மக்கள் வாழ்வைச்
சீர்குலையச் செய்பவர்கள் தலைது ணித்தே
நித்தமிங்கு புரட்சிபல நடத்தி வைப்போம்
நானிலத்தில் நன்மையினை நாட்டி வைப்போம்!
பத்திதனைக் கடைச்சரக்காய் மாற்றி மிக்கப்
பொருள்சேர்த்து வாழுகின்ற சாமி யார்க்கும்
வித்தைகள் பலபுரிந்து தமது மேனி
மினுமினுப்புக் காட்டிவாழும் வேசி யர்க்கும்
இத்தரணி மீதினிலே வேற்று மைகள்
இம்மியள வேனுந்தான் உண்டோ கூறீர்!
சத்தியமும் கடைச்சரக்காய் போகக் கண்டும்
சகித்துக்கொண் டிருப்பமெனில் ஆண்மை உண்டோ?
பொங்கட்டும் நாளுமொரு புரட்சி இங்கு!
பொடிப்பொடியா கட்டும்போ லித்த னங்கள்!
மங்கட்டும் பொன்னெனவே போக்குக் காட்டும்
மதியிழந்த மத்தர்தம் அரிதா ரங்கள்!
தொங்கட்டும் தம்வேஷம் கலைந்த தென்றே
தருக்கர்தம் தலைகளெல்லாம் அவமா னத்தால்!
தங்கட்டும் பூமியிலே மனித நேயம்
தழைக்கட்டும் நிகமானந் தாவின் நாமம்!
-------------ரௌத்திரன்
மாசுறாமல் காத்திடுதல் வேண்டு மன்றோ?
கங்கைதனில் தொழிற்சாலைக் கழிவு வந்துக்
கலப்பதனை உடனடியாய்த் தடுத்தல் வேண்டும்
இங்கிதனை மனத்திடையே அரசு கொண்டு
இதற்கொரு தீர்வுதரல் வேண்டும்" என்று
பொங்கிநின்றான்; போராட்டம் தனிலி றங்கி
புதுமைவழி காட்டியவன் நிகமா னந்தா!
காலங்கள் பலவாக நமது நாட்டில்
காவியெனில் கயமையதன் நிறமாய் மாறிக்
கோலங்கள் காட்டியது; அதனை மாற்றிக்
காவியெனில் என்றைக்கும் புரட்சி யென்றே
ஞாலத்தில் நாட்டவந்தான்; கிழக்கில் தோன்றும்
ஞாயிறுபோல் உலகுக்காய் எரிந்து நின்றான்!
பாலத்தைக் கட்டிவைத்தான் ஆன்மீ கத்தைப்
புரட்சியொடு இணைத்திட்டான் வாழ்க மாதோ!
பொன்னுக்கும் பொருளுக்கும் ஆன்மீ கத்தைப்
பயன்படுத்தும் புலையரிடை, நாட்டு மக்கள்
நன்மைக்குப் பயன்படுத்தி மாண்ட நல்லோன்!
நாட்பலவாய் உண்ணாமல் நோன்பி ருந்து
மண்ணுக்குள் புதைந்திட்டான்; மாணிக் கங்கள்
மேதினியில் பலகாலம் வாழ்வ தில்லை!
விண்ணுக்குள் அவர்மறைந்து போனா லென்ன?
வரலாறாய் நம்மிடையில் வாழ்ந்தி ருப்பார்!
கோவிலுக்குத் தீபங்கள் தேவை யில்லை!
குறைகளிங்கு அவற்றாலே தீர்வ தில்லை!
கோவிலுக்குள் தீபங்கள் எரிந்தால் ஏழைக்
குடிசைக்குள் சூழ்ந்தவிருள் மறைந்து போமோ?
கோவிலுக்குள் எரிகின்ற தீபம் போன்றோர்
காவிக்குள் வாழ்கின்ற துறவோர் தாமும்!
கோவிலுக்குள் தீபமென இருத்தல் வாழ்வோ?
குடிசைக்குள் தீபமெனக் கருகல் வாழ்வு!
இத்தகைய சிந்தனைகள் வளர்ந்து விட்டால்
இம்மியும் துயரங்கள் சூழ்வ துண்டோ?
சத்திரங்கள் தாமுமிங்கு முயன்று நின்றால்
சரித்திரங்கள் படைத்திடலாம் உண்மை யன்றோ?
சித்துகளைப் புரிந்திங்கு மக்கள் வாழ்வைச்
சீர்குலையச் செய்பவர்கள் தலைது ணித்தே
நித்தமிங்கு புரட்சிபல நடத்தி வைப்போம்
நானிலத்தில் நன்மையினை நாட்டி வைப்போம்!
பத்திதனைக் கடைச்சரக்காய் மாற்றி மிக்கப்
பொருள்சேர்த்து வாழுகின்ற சாமி யார்க்கும்
வித்தைகள் பலபுரிந்து தமது மேனி
மினுமினுப்புக் காட்டிவாழும் வேசி யர்க்கும்
இத்தரணி மீதினிலே வேற்று மைகள்
இம்மியள வேனுந்தான் உண்டோ கூறீர்!
சத்தியமும் கடைச்சரக்காய் போகக் கண்டும்
சகித்துக்கொண் டிருப்பமெனில் ஆண்மை உண்டோ?
பொங்கட்டும் நாளுமொரு புரட்சி இங்கு!
பொடிப்பொடியா கட்டும்போ லித்த னங்கள்!
மங்கட்டும் பொன்னெனவே போக்குக் காட்டும்
மதியிழந்த மத்தர்தம் அரிதா ரங்கள்!
தொங்கட்டும் தம்வேஷம் கலைந்த தென்றே
தருக்கர்தம் தலைகளெல்லாம் அவமா னத்தால்!
தங்கட்டும் பூமியிலே மனித நேயம்
தழைக்கட்டும் நிகமானந் தாவின் நாமம்!
-------------ரௌத்திரன்
Re: நிகமானந்தா!
மண் பொன் பெண் மூன்றையும் முழுமையாக அனுபவிப்பதுதான் இன்றைய துறவரம்...
அரசியலும் ஆன்மிகமும் ஒன்றுதான்
தவறுசெய்தாலும் ஓட்டு போடுகிறோம்
தவறு செய்தாலும் வணங்குகிறோம்
இதை சரி செய்ய முடியாது.
அரசியலும் ஆன்மிகமும் ஒன்றுதான்
தவறுசெய்தாலும் ஓட்டு போடுகிறோம்
தவறு செய்தாலும் வணங்குகிறோம்
இதை சரி செய்ய முடியாது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|