Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் சாவிலும் எரியும் தமிழ்ச் சோதீ!
Page 1 of 1 • Share
என் சாவிலும் எரியும் தமிழ்ச் சோதீ!
வயிறொடு சேர்ந்து
உயிரது தேயுமோர்
துயரெனைத் தொடர்கின்ற பொழுதும்-நெஞ்சம்
நயமொடு கவிதைகள் எழுதும்!
பந்தங்களால்; சூழும்
சொந்தங்களால்; நாளும்
வெந்துநான் சாகவும் நேரும் - அப்போதும்
செந்தமிழ் உயிருக்குள் ஊறும்!
சுற்றிநான்கு சுவர்களன்றி
சுற்றமில்லை என்றபோதும்
கற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே
முற்றுமொரு இணையில்லா சொர்க்கம்!
திசைகளொரு எட்டும்
வசைகளையே கொட்டும்
பசையற்ற வாழ்க்கைகொண்ட போதும் - நெஞ்சில்
இசைத்தமிழ் இடைவிடாமல் மோதும்!
மெய்யிருக்கும் பலமும்
கையிருக்கும் பணமும்
மெய்யல்ல ஒருநாள் பிரியும் - ஆனால்
மலைபோலத் தமிழ்மட்டும் விரியும்!
ஓடியுழைக்கச் சக்தியின்றி
கூடுகாக்கக் கையிரண்டில்
ஓடெடுக்கும் நிலைபெற்ற பின்னும் - கவி
பாடிடுவேன் இதுமட்டும் திண்ணம்!
சூரிய வெப்பத்தின்
வீரியம் கூடஇங்கு
வருஷமொன்று சொல்லக் குன்றும் - அதுவும்
வாராதென் கற்பனைக்கு என்றும்!
அணைக்கவொரு ஆளுமின்றி
துணைக்குவரக் கோலுமின்றி
தனிமைக்குள் என்னுடலின் தகனம் - நடந்தாலும்
தமிழ்க்கவிதை நெஞ்சோடு ஜனனம்!
கட்டையிது தூக்கவொரு
எட்டுக்கால் களில்லாமல்
வெட்டவெளிப் பிணமென்றும் வீழட்டும் - நான்
கொட்டுகின்ற தமிழ்மட்டும் வாழட்டும்!
பத்துமாதச் சிறைகடந்து
பலவருஷச் சிறைநடந்து
சத்தமின்றி சாகின்ற வரைக்கும் - அடி
முத்தமிழ் மூச்சோடு நுரைக்கும்!
நோவென்ற ஒன்றும்
சாவென்ற ஒன்றும்
கேவலம் உடம்புக்குத் தானடா - அதையெலாம்
கடந்தது கவியென்பது மானிடா!
காற்றை ஒத்தது
கூற்றைக் குடிப்பது
ஊற்றெடுக்கும் உள்ளத்துக் கவியே - அதற்கொரு
மாற்றில்லை மயங்குமிந்தப் புவியே!
திரையிட்டால் மறையாது
சிறையிட்டால் மரிக்காது
தரைமுட்டும் விதையின் தன்மை - என்னுள்
தகிக்கின்ற தமிழுணர்வு உண்மை!
உதிரத்தின் அணுவெங்கும்
சதிராடும் கவியுணர்வை
எதுவந்து மாய்த்திடக் கூடும்? - தமிழ்
நதியெந்த நாளுமெனில் ஓடும்!
காலத்தின் கோடோ
ஞாலத்தின் கேடோயென்
நாளத்தின் கவிதைத் துடிப்பு - அடக்க
நினைக்குமெனில் முறியுமதன் இடுப்பு!
--------ரௌத்திரன்
உயிரது தேயுமோர்
துயரெனைத் தொடர்கின்ற பொழுதும்-நெஞ்சம்
நயமொடு கவிதைகள் எழுதும்!
பந்தங்களால்; சூழும்
சொந்தங்களால்; நாளும்
வெந்துநான் சாகவும் நேரும் - அப்போதும்
செந்தமிழ் உயிருக்குள் ஊறும்!
சுற்றிநான்கு சுவர்களன்றி
சுற்றமில்லை என்றபோதும்
கற்றுவந்த தமிழிருந்தால் பக்கம் - அதுவே
முற்றுமொரு இணையில்லா சொர்க்கம்!
திசைகளொரு எட்டும்
வசைகளையே கொட்டும்
பசையற்ற வாழ்க்கைகொண்ட போதும் - நெஞ்சில்
இசைத்தமிழ் இடைவிடாமல் மோதும்!
மெய்யிருக்கும் பலமும்
கையிருக்கும் பணமும்
மெய்யல்ல ஒருநாள் பிரியும் - ஆனால்
மலைபோலத் தமிழ்மட்டும் விரியும்!
ஓடியுழைக்கச் சக்தியின்றி
கூடுகாக்கக் கையிரண்டில்
ஓடெடுக்கும் நிலைபெற்ற பின்னும் - கவி
பாடிடுவேன் இதுமட்டும் திண்ணம்!
சூரிய வெப்பத்தின்
வீரியம் கூடஇங்கு
வருஷமொன்று சொல்லக் குன்றும் - அதுவும்
வாராதென் கற்பனைக்கு என்றும்!
அணைக்கவொரு ஆளுமின்றி
துணைக்குவரக் கோலுமின்றி
தனிமைக்குள் என்னுடலின் தகனம் - நடந்தாலும்
தமிழ்க்கவிதை நெஞ்சோடு ஜனனம்!
கட்டையிது தூக்கவொரு
எட்டுக்கால் களில்லாமல்
வெட்டவெளிப் பிணமென்றும் வீழட்டும் - நான்
கொட்டுகின்ற தமிழ்மட்டும் வாழட்டும்!
பத்துமாதச் சிறைகடந்து
பலவருஷச் சிறைநடந்து
சத்தமின்றி சாகின்ற வரைக்கும் - அடி
முத்தமிழ் மூச்சோடு நுரைக்கும்!
நோவென்ற ஒன்றும்
சாவென்ற ஒன்றும்
கேவலம் உடம்புக்குத் தானடா - அதையெலாம்
கடந்தது கவியென்பது மானிடா!
காற்றை ஒத்தது
கூற்றைக் குடிப்பது
ஊற்றெடுக்கும் உள்ளத்துக் கவியே - அதற்கொரு
மாற்றில்லை மயங்குமிந்தப் புவியே!
திரையிட்டால் மறையாது
சிறையிட்டால் மரிக்காது
தரைமுட்டும் விதையின் தன்மை - என்னுள்
தகிக்கின்ற தமிழுணர்வு உண்மை!
உதிரத்தின் அணுவெங்கும்
சதிராடும் கவியுணர்வை
எதுவந்து மாய்த்திடக் கூடும்? - தமிழ்
நதியெந்த நாளுமெனில் ஓடும்!
காலத்தின் கோடோ
ஞாலத்தின் கேடோயென்
நாளத்தின் கவிதைத் துடிப்பு - அடக்க
நினைக்குமெனில் முறியுமதன் இடுப்பு!
--------ரௌத்திரன்
Re: என் சாவிலும் எரியும் தமிழ்ச் சோதீ!
தமிழ் வெறி தழைத்தோங்கட்டும்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: என் சாவிலும் எரியும் தமிழ்ச் சோதீ!
எனக்குத் தமிழ்வெறி எப்போதும் கிடையாது. தமிழ்ப்பற்று மட்டுமே உண்டு.நன்றி தோழர்!----------ரௌத்திரன்
Re: என் சாவிலும் எரியும் தமிழ்ச் சோதீ!
நான் தமிழ் வெறி என்றுரைத்தது உங்கள் தமிழ் பற்றினைத் தான் தோழரே! கொஞ்சம் அதீதமாக உரைத்து விட்டேன் போலும்! மன்னியுங்கள்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: என் சாவிலும் எரியும் தமிழ்ச் சோதீ!
தமிழ் தமிழ் என்று பேசி இனி எதையும் சாதித்துவிட முடியாது என்பதையே ஈழப் பிரச்சினை காட்டுகிறது...
Similar topics
» தமிழ்ச் சான்றோர்
» தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்
» கண்ணீரில் விளக்கு எரியும்
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
» 111 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு
» தமிழ்ச் செம்மல் கா.நமச்சிவாய முதலியார்
» கண்ணீரில் விளக்கு எரியும்
» 110 ஆண்டுகளாக எரியும் மின்விளக்கு
» 111 ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் மின்விளக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|