தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

View previous topic View next topic Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by ஸ்ரீராம் Mon May 11, 2015 11:21 am

கவிஞர்களுக்கு வணக்கம்,

நேற்று அன்னையர் தினம். இந்த தினம் வருடம் ஒரு முறை கொண்டாடும் தினம் அல்ல தினம் தினம் கொண்டாடபடவேண்டிய தினம்.

எனவே இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா.

[You must be registered and logged in to see this image.]

அம்மா என்றால் அன்பு, தெய்வம், பாசம், தியாகம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். எனவே அம்மாவின் புகழை சொல்ல தமிழில் வார்த்தைகளே இல்லை. அம்மாவை பற்றி எழுதாத கவிஞர்களும் இல்லை. சங்ககாலம் முதல் இன்றைய காலம் வரை அனைவருமே அம்மாவை புகழ்ந்து பாடி இருக்கிறார்கள்.

தகவல் தளத்தில் கவிஞர்களுக்கும் பஞ்சமில்லை, எடுங்கள் பேனாவை அம்மாவை பற்றி 10 வரிகள் குறையாமல் கவிதை மழையை பொழியுங்கள்.

ஒருவர் அதிகபட்சம் இரண்டு கவிதைகள் வரை எழுதலாம்.

இந்த கவிதைகள் வேறு எங்கும் இதற்கு முன்பு பிரசுரித்து இருக்க கூடாது. இங்கே எழுதிய பின்னர் நீங்கள் வேறு தளங்களில் பதிவிட தடையில்லை.

இந்த பதிவின் கீழேயே ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதனால் நடுவர் குழுவினர் கவிதைகளை பரிசீலனை செய்ய வசதியாக/எளிதாக இருக்கும். வேறு எங்கும் சிறப்பு கவிஞர் விருதுக்கான கவிதைகளை பதிவிட கூடாது.

இதற்கான விதிமுறைகளை இங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம்:
[You must be registered and logged in to see this link.]

இந்த பதிவு இன்று காலை 11:20am முதல் ஞாயிற்று கிழமை மதியம் 01.30pm வரை திறந்து இருக்கும். அதன் பிறகு நடுவர் குழுவினர் பரிசீலனைக்கு சென்று விடும். எனவே அதற்கு முன்பே உங்கள் கவிதைகளை பதிவிட்டு விடுங்கள்.

நட்புடன்
நடுவர் குழுவினர்.
தகவல் தளம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by thamiliniyan Mon May 11, 2015 3:12 pm

எதிர்பார்த்த தலைப்பு
சலிக்காத தலைப்பு
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by முரளிராஜா Mon May 11, 2015 3:54 pm

அம்மா என்றாலே கவிதை 
அந்த கவிதைக்கே கவிதையா?
நம் தகவல் தளத்தில் அம்மா கவிதை மழை பொழியட்டும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by skumar Tue May 12, 2015 3:31 am

அம்மா.


அம்மா !
நீரில்லாமல் நிலமா?
அம்மா !
நீயில்லாமல் நானா?

அம்மா!
எனை கருக்கொண்டாய்.
அம்மா !
எனையுன் குருதியினால்
உயிர் கவிதை செய்தாய்.
அம்மா!
எனையுன் பன்னீர்குடத்தினில்
நோவாமல் மிதக்கவைத்து
நேயமாய் வலிப்பொறுத்தாய்.

அம்மா !
இதுவரையிலும்
உன்னிடம் கேளாத
சில கேள்விகள்
கேட்கட்டுமா அம்மா ?

என் பிஞ்சு விரல்கள்
உன் கருவறைச் சுவற்றினில்
என்ன ஓவியம் அம்மா
வரைந்தது ?

என் பட்டுப்பாதங்கள்
எட்டியுதைத்திடும் போது
என்னச்சொல்லியம்மா
நீ செல்லக்கோபமிட்டாய் ?

மூன்றாம் மாதத்தில்
என்னிருதயம் துடித்தப்போது
என்ன என்னம்மா
நீ நினைத்தாய் ?

ஐந்தாம் மாதத்தில்
என் இதழ்கள் அசைந்தப்போது
எந்த மொழியம்மா
நீ கேட்டாய் ?

பக்குவமாய்
தொப்புள்கொடி பந்தமாய்
உன்னோடே
உன் கருவறையில்
வைத்திருந்தாயே அம்மா?
ஏனம்மா
நான் என்னம்மா
பிழைச்செய்தேன்?
கருவறை வாசத்தில்
கவலையின்றி நானிருந்தேனே
ஏனம்மா
நான் என்னம்மா
பிழைச்செய்தேன்?
ஏனம்மா
உன்னிலிருந்து
என்னை பிரித்தாள்
அந்த செவிலித்தாய் ?

கதறித்துடித்து
யுத்தமொன்று நடத்தி
குருதி சிதறித்தெளித்து.
உன்னையே உன்னை
மரணிக்கவைத்து
என்னோடு நீயும்
பிரசவமான அந்த நொடியில்
நான் அழுதேன் என்பதாலா
நீயும் அழுதாய் அம்மா ?

உன் இரத்தத்தையே
தாய்ப்பாலென்று சமைத்து
உந்தன் மார்பினில்
நீ தந்தாயே அம்மா!

எனக்கும்
அந்த வெண்ணிலாவுக்கும்
நெய்யூற்றிய சோற்று
உருண்டைக்காட்டி
அன்பூட்டி
அன்னம் தந்தாயே அம்மா !

அம்மா !
இந்த ஊணும் உயிரும்
நீ தந்ததே அம்மா.

என்ன தந்து அம்மா
நீயெனை பெற்றக்கடனை
நான் தீர்க்கமுடியும் ?


-இரா.சந்தோஷ் குமார்
avatar
skumar
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 8

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by thamiliniyan Tue May 12, 2015 4:38 am

arumai கைதட்டல் கைதட்டல்
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by thamiliniyan Tue May 12, 2015 4:45 am

என் பசி
உன் வயிற்றில்!
என் ருசி
உன் நாவில்!
என் வலி
உன்னுடலில்!
என் சோகம்
உன் கண்ணில்!
என் எண்ணம்
உன் மனதில்!
என் மறதி
உன் நினைவில்!
என என்தேவை
நீயுணர்ந்து !
எனக்கு முன்
உனக்குத் தெரிவதால்
தான்
எனக்கு எல்லாமே
அம்மாவாய்
எந்நாளும்
நீயுள்ளாய்!

-தமிழினியன்-
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by ஸ்ரீராம் Tue May 12, 2015 9:28 am

கதறித்துடித்து
யுத்தமொன்று நடத்தி
குருதி சிதறித்தெளித்து.
உன்னையே உன்னை
மரணிக்கவைத்து
என்னோடு நீயும்
பிரசவமான அந்த நொடியில்
நான் அழுதேன் என்பதாலா
நீயும் அழுதாய் அம்மா ?

வாவ் சூப்பர். சிறப்பான கவிதை சந்தோஷ் குமார் [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by ஸ்ரீராம் Tue May 12, 2015 9:34 am

thamiliniyan wrote:என் பசி
உன் வயிற்றில்!
என் ருசி
உன் நாவில்!
என் வலி
உன்னுடலில்!
என் சோகம்
உன் கண்ணில்!
என் எண்ணம்
உன் மனதில்!
என் மறதி
உன் நினைவில்!
என என்தேவை
நீயுணர்ந்து !
எனக்கு முன்
உனக்குத் தெரிவதால்
தான்
எனக்கு எல்லாமே
அம்மாவாய்
எந்நாளும்
நீயுள்ளாய்!

-தமிழினியன்-

சூப்பர்!! சூப்பர்!!! நல்லதொரு கவிதை. அண்ணா [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]

உறவுகள் அனைவரும் உங்களுக்கு பிடித்த கவிதைகளின் கீழே உள்ள விருப்பம் பொத்தானை அழுத்தி கவிஞர்களை உற்சாகப்படுத்துங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by முரளிராஜா Tue May 12, 2015 9:58 am

அருமையான கவிதை சந்தோஷ்குமார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by thamiliniyan Wed May 13, 2015 4:32 am

பனிக்குடமுடைத்துன்
உடல் கிழித்து
என்னுலகப்
பிரவேசத்துக்கு
உன்னை மறு
பிரசவமாக்கி

நீர்க்குடமுடைத்து
நான்
தனிவழி
போகும் வரை
கடந்து வந்த
உறவுகளில்
என்
கடன் தீரா
உறவம்மா நீ!!

வெயிலாடி
ஓய்ந்தொதுங்கும்
மரநிழலில்
உன் முந்தானை
நிழல் தந்த
சுகமில்லை!

அம்மா!!

அயர்ந்தசந்து
தலை சாய்க்கும்
தலையணையில்
நீ தலைதடவி
தந்த மடி
சுகமில்லை!

பசியாற
என்னவளிடும்
அன்னத்தில்
நீ பிசைந்தூடிய
சாதத்தின்
சுவையில்லை!

அம்மா!

என்பிள்ளை
பெற்றெடுக்க
என்னவள்
பட்ட பாட்டை
அருகிருந்து
பார்த்த பின் தான்
நீ என்னைப்
பெற்றெடுக்க
பெற்ற துன்பம்
கற்றறிந்தேன்!

பொறுத்தருள்
தாயே!
என்னைப்
பொறுத்தருள்!

பொறுக்கா
வலி கொடுத்து
பூமிக்கு
நான் வரவுன்
பூவுடல்
கிழித்து விட்டேன்!

பொறுத்தருள்
தாயே !
என்னைப்
பொறுத்தருள்

ஒருமுறை
ஒரேயொருமுறை
மறுபடி நீ
வரமாட்டாயா!?

உன் பூமுகம்
சாய்த்தென் மடியில்
தலை தடவி
நீ தந்த சுகம்
தந்துன்னை
தூங்க வைத்து
என்
கடன் கொஞ்சம்
கழிப்பதற்கு

ஒருமுறை
ஒரேயொருமுறை
மறுபடி நீ
வரமாட்டாயா!?

அம்மா!

-தமிழினியன்-
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by முரளிராஜா Wed May 13, 2015 10:31 am

என் பசி
உன் வயிற்றில்!
என் ருசி
உன் நாவில்!
என் வலி
உன்னுடலில்!

அருமை தமிழினியன் அவர்களே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by mohammed sarfan Wed May 13, 2015 12:58 pm

அன்பை செதுக்கிய சிற்பி அம்மா!-கவிஞர்  முஹம்மத் ஸர்பான் 

உன் வயிற்றில் எட்டி உதைத்த
உதைகள் அதிகம்-அந்த வலியும்
சுகமென்று என்னை தாங்கினாய்யமா.

பத்து திங்களிலே அல்லும் பகலும் 
உடல் வருத்தி என் குழந்தையே!
என்று பாசத்தோடு என்னை காத்தாய்யம்மா.

பிரசவ வலியில் துடிதுடித்து சுவனச்சோலை
வாசலடிக்குச் சென்று மறுஜென்மம் 
பிறப்பெடுத்து என்னை ஈன்றவளே.....!!!!!!!!!!

உன் உடலும் உள்ளமும் என்னால் 
பட்ட வேதனை மறந்து ஈன்றெடுத்த 
மறுநொடியில் உன் மார்பிலணைத்து 
நோவினை மறந்து பாசத்தோடு முத்தமிட்டாய்.

உனக்கு செய்த கொடுமைகள் 
போதாது என்று உன் 
உடலில் இருதியாயிருந்த 
அந்த ஒரு துளி உதிரத்தை 
பாலாக குடித்தனம்மா.

ஓடம்,சோலை,வானமென கற்பனையால் 
கதைகூறி மடியில் துயிலவைத்து சிரிக்கச் 
செய்தாய்யம்மா.-நன்றி மறந்து உனக்கு 
வார்த்தையாலும்,உள்ளத்திலும் நோவினை 
செய்தனம்மா.

நீ அணியும் செருப்பும் உனக்கு 
நன்றிக்குரியது உன் எடையோடு சுமந்த 
நான்தான் நன்றி மறந்தவனம்மா!
நீ பட்ட வேதனையறிய மறுஜென்மத்தில் 
நான் உன் தாயாக 
உனைச் சுமக்கனுமம்மா.
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by கவிப்புயல் இனியவன் Thu May 14, 2015 8:29 am

கருவறையில் சுமையும் தந்தேன் ...
போதாததற்கு காலால்உதைத்தும் ....
வலிதந்தேன் அத்தனையையும் .....
தாங்கும் உடல் உளவலிமையும் ....
அம்மையே நீர் பெற்றிருந்தாலும் ......
இத்தனை வலிதந்த என்னை ...
மன்னித்துவிடுங்கள்
அம்மா ..........!!!

உங்களுக்கு தெரியாமல்
நண்பருடன் உண்டிருக்கிறேன்
நாவுக்கு சுவையென்றால் உமக்கு ...
தராமலும் உண்டிருப்பேன் ....
எனக்கு தராமல் நீவீர் எதையும் ...
உண்டதை நான் பார்த்ததில்லை ....
இந்த சுயநலவாதியான இவனை ....
மன்னித்துவிடுங்கள் ...
அம்மா ....!!!

வீட்டில் படைத்தல் காத்தல் அருளல் ...
உறவுவில் அன்பு கருணை இரக்கம்.....
அத்தனை இறைபணியையும் நீவீர் ....
பெற்றிருந்த போதும் தெய்வத்தைதேடி ....
ஊர் தாண்டி தேசம் தாண்டி கோயில் .....
சென்ற என்னை மன்னித்துவிடுங்கள் ...
அம்மா ....!!!

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by thamiliniyan Thu May 14, 2015 6:29 pm

என் பசி
உன் வயிற்றில்!
என் ருசி
உன் நாவில்!
என் வலி
உன்னுடலில்!


அருமை தமிழினியன் அவர்களே
நன்றி நண்பரே
_________________________________________________
thamiliniyan
thamiliniyan
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 504

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by கவிப்புயல் இனியவன் Thu May 14, 2015 10:05 pm

உயிர் எனக்கு தந்தாய் ...
உயிர் எழுத்தில் " அ " பெற்றாயோ  ....
என்னை பெற்றவளே .....!!!

மெய் (உடல் ) எனக்கு தந்தாய் ....
மெய் எழுத்தில் " ம் " பெற்றாயோ .....
என்னை பெற்றவளே .....!!!

உயிரும் மெய்யும் இயங்கும் ...
ஆற்றலைஅன்பால்  தந்ததால் ....
உயிர் மெய் எழுத்து " மா " பெற்றாயோ ...?
என்னை பெற்றவளே .....!!!

என்ன அற்புதம் ....?
ஆறறிவு மனிதனும் ....
ஐந்தறிவு  பசுவும் அழைக்கும் ...
ஒரே ஒரு சொல்  " அம்மா" .....!!!

தமிழ்
எழுத்தின் தலைவாசல் ....
அகரம் ....
பிரபஞ்சத்தின் ஒரே ஓசை....
"அம்மா" .....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by முரளிராஜா Fri May 15, 2015 1:46 pm

நீ அணியும் செருப்பும் உனக்கு 
நன்றிக்குரியது உன் எடையோடு சுமந்த 
நான்தான் நன்றி மறந்தவனம்மா!
நீ பட்ட வேதனையறிய மறுஜென்மத்தில் 
நான் உன் தாயாக 
உனைச் சுமக்கனுமம்மா.

உண்மையான வரிகள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by mohammed sarfan Sat May 16, 2015 1:02 pm

அம்மா-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

பிறப்புறுப்பை கிழித்து உதிரமுலாம் பூசி 
பத்து திங்களிலே ஜீவன் வெளிவர 
'அய்யோ அம்மா'என்று வேதனையால் துடித்து 
கடவுளிடம் சேயையும் எமனிடம் தன்னையும் 
அடகு வைத்த கண்கண்ட தெய்வம் ஆத்தா. 

சேய்யில் மார்பை பற்றி பிடித்தேன். 
குழந்தையில் மடியை நாடி நின்றேன். 
வளர்ந்ததும் பாதத்தில் கிடந்து 
உனக்கு பணிவிடை செய்தாலும் 
உன் பாசத்திற்கு ஈடாகுமா? 

நீ எனக்கு அன்னமூட்டுவதனால் தான் அம்மா 
அதற்கு நிலாச்சோறு என்று பெயரா? 
நான் அழுதாலும் நீ அழுவாய் 
சிரித்தாலும் உன் கண்கள் ஆனந்த நீரை ஊற்றெடுக்கும். 

உன் தூக்கத்தை தியாகம் செய்து 
என் விழிகளினுள் புகுத்தினாய். 
'ஆராரோ ஆரிராரோ ஆரிரரோ ஆருயிரே' 
தாலாட்டுப்பாட்டு செவிகளினுள் மறவாத இசை ஊற்று 

உலகில் பிறந்த மாந்தனெல்லம் 
பொன்னும் பொருளும் தேடுகிறான் 
கற்பகத்தருவை மூலையில் வைத்துக்கொண்டு...., 

ஒருநாள் வாழும் மின்மினி பூச்சிகளும் 
தாயோடு இறப்பதைப்போல நானும் 
என் தாய் இறக்கையில் உயிர்நீர்த்து 
மண்ணறையில் தாய் மடியில் தூங்க வேண்டும்
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா Empty Re: இந்த வார சிறப்பு கவிஞர் விருதுக்கான தலைப்பு: அம்மா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum