Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தோல் சம்மந்தமான பிரச்சனையா ?
Page 1 of 1 • Share
தோல் சம்மந்தமான பிரச்சனையா ?
நமது தோல்களுடைய இயல்பான நிறம், பளபளப்பு, மிருதுவானத் தன்மை ஆகியவற்றை பராமரிப்பதற்கு வேண்டிய எளிய தீர்வுகளை ஆயுர்வேதம் அளிக்கிறது.
அத்துடன், தோலின் அழகினை நிலைநிறுத்துவதற்கும், ஆரோக்கியத்தைக் காப்பதற்குமான வழி முறைகளும் ஆயுர்வேதத்தில் இருக்கின்றன.
அழகிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தோல் ஆரோக்கியத்துக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது.
ஆரோக்கியமான தோல் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு ஆயுர்வேதம் நல்கின்ற விளக்கம்... பளபளப்பானது, தெளிவானது, மிருதுவானது, ஒரே நிறம் கொண்டவை, சுருக்கங்கள் இல்லாதவை, தேவைக்கேற்ற எண்ணெய்ப் பசை கொண்டிருத்தல், சாதாரணமாக வியர்வை இருத்தல் போன்றவை ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமான தோலுக்கான அடிப்படை.
நமது உடலை சுற்றியுள்ள ஒரு பாதுகாப்பு மண்டலம் என்ற நிலையில், தோலுக்கு சிறிய கீறல் முதல் நோய்கள் வரை வருவதற்கான சாத்தியம் கூடுதலாகவே உள்ளது. குறிப்பாக, வானிலை மாற்றங்கள், தூசு, புகை, காற்றில் ஏற்படுகின்ற மாசு, கிருமிகள் போன்றவை தோலுக்கு கெடுதலான பல நிரந்தர பிரச்சனைகளாக இருக்கின்றது. அதனால் தோலைப் பாதுகாப்பதற்கு நாம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
உணவுமுறையில் கவனம்!
நாம் எடுத்துக்கொள்ளும் உணவு ஊட்டச்சத்து மிக்கதானால் மட்டுமே தோல் ஆரோக்கியமானதாக இருக்கும். தோலுக்கு அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் புரதம், கால்சியம் ஆகிய சத்துக்கள் மிகுதியாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். மீன், முட்டை, பால், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேநீர், காபி, மது, காரமும் மசாலாவும் மிகுதியாக இருக்கின்ற உணவு போன்றவற்றை தவிர்க்கவும். கண்ட நேரங்களில் சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிடவும். வறுத்த, பொறித்த உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது உடல் பருமனுக்கு மட்டுமின்றி, தோல் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று ஆயுர்வேதம் எச்சரிக்கிறது.
தூய்மையான காற்று, சூரிய வெளிச்சம், முறையான உடற்பயிற்சி போன்றவை தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயல்பான அம்சங்கள்.
குளிரும் வெப்பமும் கூடுதலாக இருப்பது தோலுக்கு நல்லதல்ல. வெப்பம் அதிகமாகும்போது, தோலினுடைய மடிப்புகளில் வியர்வை தேங்கி நிற்கும். அந்த இடங்களில் தோல் மிருதுவாகும். அதனால் அங்கே அலர்ஜி உண்டாகும்.
மேலும், தோல் நோய்கள் வராமல் தவிர்க்க, உடை அணியும் முறைகளிலும் தனி கவனம் தேவை.
கோடை காலங்களில்...
கோடை காலங்களில் காலை - மாலை இருவேளையும் குளிப்பது, தோல் பாதுகாப்புக்கும், உடல் புத்துணர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை தேகத்தில் தேய்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால், தோல் பாதுகாப்புக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் மிகுந்த நன்மை ஏற்படும்.
குளிர் காலங்களில்...
குளிர் காலங்களில் வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். உதட்டில் நெய்யோ அல்லது வெண்ணெயோ தேய்த்துக்கொள்வது நல்லது. உதடுகள் வெடிக்காமல் இருப்பதற்கு இது உகந்தது.
குளிர் காலத்தில் இளம் சூடான தண்ணீரில் குளிப்பதுதான் நல்லது. தலையில் வெந்நீர் ஊற்றக்கூடாது. குளித்து முடித்தவுடன் உடம்பில் இருக்கும் நீரை நன்றாக துடைக்க வேண்டும். குறிப்பாக, உடம்பில் உள்ள மடிப்புகளிலும், கால் பாதங்களில் ஈரப்பதம் இருக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
காலை வேளையில் குளிப்பதுதான் மிகவும் நல்லதாகும். உணவு அருந்தியதற்குப் பிறகும், நள்ளிரவிலும் குளிப்பதைத் தவிர்க்கவும். வெந்நீரிலும், குளிர்ந்த நீரிலும் மாற்றி மாற்றி குளிப்பதனால் இரத்த ஓட்டம் கூடுவதற்கு வழிவகுக்கப்படும்.
இத்தகைய எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், நம்மை தோல் சம்மந்தமான பிரச்சனைகள் எதுவும் அண்டாது..!
தினமணி
அத்துடன், தோலின் அழகினை நிலைநிறுத்துவதற்கும், ஆரோக்கியத்தைக் காப்பதற்குமான வழி முறைகளும் ஆயுர்வேதத்தில் இருக்கின்றன.
அழகிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் தோல் ஆரோக்கியத்துக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது.
ஆரோக்கியமான தோல் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்கு ஆயுர்வேதம் நல்கின்ற விளக்கம்... பளபளப்பானது, தெளிவானது, மிருதுவானது, ஒரே நிறம் கொண்டவை, சுருக்கங்கள் இல்லாதவை, தேவைக்கேற்ற எண்ணெய்ப் பசை கொண்டிருத்தல், சாதாரணமாக வியர்வை இருத்தல் போன்றவை ஆயுர்வேதத்தின்படி ஆரோக்கியமான தோலுக்கான அடிப்படை.
நமது உடலை சுற்றியுள்ள ஒரு பாதுகாப்பு மண்டலம் என்ற நிலையில், தோலுக்கு சிறிய கீறல் முதல் நோய்கள் வரை வருவதற்கான சாத்தியம் கூடுதலாகவே உள்ளது. குறிப்பாக, வானிலை மாற்றங்கள், தூசு, புகை, காற்றில் ஏற்படுகின்ற மாசு, கிருமிகள் போன்றவை தோலுக்கு கெடுதலான பல நிரந்தர பிரச்சனைகளாக இருக்கின்றது. அதனால் தோலைப் பாதுகாப்பதற்கு நாம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
உணவுமுறையில் கவனம்!
நாம் எடுத்துக்கொள்ளும் உணவு ஊட்டச்சத்து மிக்கதானால் மட்டுமே தோல் ஆரோக்கியமானதாக இருக்கும். தோலுக்கு அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் புரதம், கால்சியம் ஆகிய சத்துக்கள் மிகுதியாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். மீன், முட்டை, பால், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேநீர், காபி, மது, காரமும் மசாலாவும் மிகுதியாக இருக்கின்ற உணவு போன்றவற்றை தவிர்க்கவும். கண்ட நேரங்களில் சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிடவும். வறுத்த, பொறித்த உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது உடல் பருமனுக்கு மட்டுமின்றி, தோல் பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று ஆயுர்வேதம் எச்சரிக்கிறது.
தூய்மையான காற்று, சூரிய வெளிச்சம், முறையான உடற்பயிற்சி போன்றவை தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயல்பான அம்சங்கள்.
குளிரும் வெப்பமும் கூடுதலாக இருப்பது தோலுக்கு நல்லதல்ல. வெப்பம் அதிகமாகும்போது, தோலினுடைய மடிப்புகளில் வியர்வை தேங்கி நிற்கும். அந்த இடங்களில் தோல் மிருதுவாகும். அதனால் அங்கே அலர்ஜி உண்டாகும்.
மேலும், தோல் நோய்கள் வராமல் தவிர்க்க, உடை அணியும் முறைகளிலும் தனி கவனம் தேவை.
கோடை காலங்களில்...
கோடை காலங்களில் காலை - மாலை இருவேளையும் குளிப்பது, தோல் பாதுகாப்புக்கும், உடல் புத்துணர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை தேகத்தில் தேய்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால், தோல் பாதுகாப்புக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் மிகுந்த நன்மை ஏற்படும்.
குளிர் காலங்களில்...
குளிர் காலங்களில் வறண்ட சருமம் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். உதட்டில் நெய்யோ அல்லது வெண்ணெயோ தேய்த்துக்கொள்வது நல்லது. உதடுகள் வெடிக்காமல் இருப்பதற்கு இது உகந்தது.
குளிர் காலத்தில் இளம் சூடான தண்ணீரில் குளிப்பதுதான் நல்லது. தலையில் வெந்நீர் ஊற்றக்கூடாது. குளித்து முடித்தவுடன் உடம்பில் இருக்கும் நீரை நன்றாக துடைக்க வேண்டும். குறிப்பாக, உடம்பில் உள்ள மடிப்புகளிலும், கால் பாதங்களில் ஈரப்பதம் இருக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
காலை வேளையில் குளிப்பதுதான் மிகவும் நல்லதாகும். உணவு அருந்தியதற்குப் பிறகும், நள்ளிரவிலும் குளிப்பதைத் தவிர்க்கவும். வெந்நீரிலும், குளிர்ந்த நீரிலும் மாற்றி மாற்றி குளிப்பதனால் இரத்த ஓட்டம் கூடுவதற்கு வழிவகுக்கப்படும்.
இத்தகைய எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், நம்மை தோல் சம்மந்தமான பிரச்சனைகள் எதுவும் அண்டாது..!
தினமணி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பித்த பிரச்சனையா?
» மூக்கடைப்பு பிரச்சனையா?
» பைல்ஸ் பிரச்சனையா?
» ஞாபக மறதியினால் பிரச்சனையா..?
» குடல் புண் பிரச்சனையா…?
» மூக்கடைப்பு பிரச்சனையா?
» பைல்ஸ் பிரச்சனையா?
» ஞாபக மறதியினால் பிரச்சனையா..?
» குடல் புண் பிரச்சனையா…?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|