Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தடுமாற்றத்தைத் தவிர்க்கும் வழிகள்?
Page 1 of 1 • Share
தடுமாற்றத்தைத் தவிர்க்கும் வழிகள்?
முதுமை... மீண்டும் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் ஒரு நிலை. அறுபது கடந்த முதியவர்கள் தங்கள் சிறுசிறு தேவைகள் உள்பட, இயற்கை உபாதைகளுக்கு செல்வதற்குக்கூட, துணைநாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில், முதுமையில் ஏற்படும் தடுமாற்றம் வயதானவர்களை உள்காயம், எலும்புமுறிவு, பயம் எனப் பலவிதமான பிரச்னைகளுக்கு ஆளாக்குகிறது. இதிலிருந்து மீள்வது எப்படி? அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் போன்றவை குறித்து முதியோர் நலன் சிறப்பு மருத்துவர் என்.லஷ்மிபதி ரமேஷ் பேசுகிறார்...
அறுபது வயதைக் கடந்த முதியவர்கள் வீட்டில், வெளியிடங்களில் கீழே தடுமாறி விழுதல் என்பது அடிக்கடி நடக்கக்கூடிய விஷயம். அதில் அலட்சியம் கூடாது. வயதானவர்கள் எதிர்பாராத வேளைகளில் தடுமாறி கீழே விழுவதற்கு உடல் தொடர்பான பாதிப்புகள், சுற்றுச்சூழல் ஆகியவை முக்கிய காரணங்கள். நோய்கள் காரணமாகவும், மாத்திரைகள் காரணமாகவும், குறிப்பாக, தூக்கமாத்திரைகள் சாப்பிடுவதாலும் முதியவர்கள் தடுமாறி கீழே விழ நேரிடலாம்.
6 மாதங்களுக்குள் முதியவர்கள் யாராவதுஇரண்டு தடவை தவறி கீழே விழும் பட்சத்தில், முதியோர் நலன் சிறப்பு மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். அவரது பார்வைத்திறன், கால் உணர்ச்சி, கேட்கும் திறன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். அதோடு, வீட்டின் சூழலைக் கவனித்து தேவையான மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டும். ரப்பர் ஷீட்டால் ஆன மிதியடிகளுக்கு மேலே கண்டிப்பாக துணி போட்டு வைக்க வேண்டும்.
இதனால் பாதங்களுக்குத் தேவையான அழுத்தம் கிடைக்கும். சோஃபா, மேஜை, நாற்காலி போன்ற பொருட்களை முதியவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஓரங்களில் வைக்க வேண்டும். வயதானவர்கள் பிளாஸ்டிக் சேர்களில் உட்காரும்போதோ, எழுந்திருக்கும் போதோ நிலை தடுமாறி கீழே விழ நேரிடலாம் என்பதால், பிளாஸ்டிக் சேர்களை தவிர்ப்பது நல்லது. குளியலறை, கழிவறை போன்ற இடங்களில் வயதானவர்கள் பிடித்துக்கொண்டு எளிதாக உட்கார்ந்து எழுந்திருக்கபாதுகாப்புடன் கூடிய கைப்பிடிகளைக் கண்டிப்பாகப் பொருத்த வேண்டும்.
முதியவர்கள் மருத்துவர் ஆலோசனை இன்றி எதற்கெடுத்தாலும் மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை குடும்ப மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான அளவுள்ள காலணிகளை அணிய வேண்டும். நடப்பதற்கு உதவும் வாக்கர் போன்ற உபகரணங்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். பார்வைக் குறைபாடு இருந்தால் கண் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கண்ணாடி அணிய வேண்டும். வயதானவர்கள் தடுமாறி கீழே விழுவதால், அடிபடுதல், எலும்பு முறிவு, நடக்க பயப்படுதல் போன்ற பின்விளைவுகள் ஏற்படும்.
தலையில் அடிபட்டால், அதன் பாதிப்பு ஓரிரு நாட்கள் கழித்துதான் தெரியும். தலையில் அடிபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், அவரை உடனடியாக குடும்ப மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். தடுமாற்றத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து கால்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். முதலில் ‘உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை’ என்று பாதிக்கப்பட்டவருக்கு மனதளவில் தைரியம் கொடுக்க வேண்டும். கீழே விழுவதால் உடலில் வலி ஏற்பட்டு அவர்களால் நடக்க முடியாது.
அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கும். எலும்பில் அடிபட்டு இருந்தால் உடனே எக்ஸ்-ரே எடுக்க வேண்டும். பின்னர், அடியின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். முதியவர்களைக் கண்காணிப்பதில் வீட்டிலுள்ள உதவியாளர், உறவினர்கள் எந்த நேரமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதையும் மீறி வயதானவர்கள் தடுமாறி கீழே விழுந்துவிட்டால், தாமதிக்காமல் அவரை உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3663
அறுபது வயதைக் கடந்த முதியவர்கள் வீட்டில், வெளியிடங்களில் கீழே தடுமாறி விழுதல் என்பது அடிக்கடி நடக்கக்கூடிய விஷயம். அதில் அலட்சியம் கூடாது. வயதானவர்கள் எதிர்பாராத வேளைகளில் தடுமாறி கீழே விழுவதற்கு உடல் தொடர்பான பாதிப்புகள், சுற்றுச்சூழல் ஆகியவை முக்கிய காரணங்கள். நோய்கள் காரணமாகவும், மாத்திரைகள் காரணமாகவும், குறிப்பாக, தூக்கமாத்திரைகள் சாப்பிடுவதாலும் முதியவர்கள் தடுமாறி கீழே விழ நேரிடலாம்.
6 மாதங்களுக்குள் முதியவர்கள் யாராவதுஇரண்டு தடவை தவறி கீழே விழும் பட்சத்தில், முதியோர் நலன் சிறப்பு மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். அவரது பார்வைத்திறன், கால் உணர்ச்சி, கேட்கும் திறன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். அதோடு, வீட்டின் சூழலைக் கவனித்து தேவையான மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டும். ரப்பர் ஷீட்டால் ஆன மிதியடிகளுக்கு மேலே கண்டிப்பாக துணி போட்டு வைக்க வேண்டும்.
இதனால் பாதங்களுக்குத் தேவையான அழுத்தம் கிடைக்கும். சோஃபா, மேஜை, நாற்காலி போன்ற பொருட்களை முதியவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஓரங்களில் வைக்க வேண்டும். வயதானவர்கள் பிளாஸ்டிக் சேர்களில் உட்காரும்போதோ, எழுந்திருக்கும் போதோ நிலை தடுமாறி கீழே விழ நேரிடலாம் என்பதால், பிளாஸ்டிக் சேர்களை தவிர்ப்பது நல்லது. குளியலறை, கழிவறை போன்ற இடங்களில் வயதானவர்கள் பிடித்துக்கொண்டு எளிதாக உட்கார்ந்து எழுந்திருக்கபாதுகாப்புடன் கூடிய கைப்பிடிகளைக் கண்டிப்பாகப் பொருத்த வேண்டும்.
முதியவர்கள் மருத்துவர் ஆலோசனை இன்றி எதற்கெடுத்தாலும் மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை குடும்ப மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான அளவுள்ள காலணிகளை அணிய வேண்டும். நடப்பதற்கு உதவும் வாக்கர் போன்ற உபகரணங்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். பார்வைக் குறைபாடு இருந்தால் கண் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கண்ணாடி அணிய வேண்டும். வயதானவர்கள் தடுமாறி கீழே விழுவதால், அடிபடுதல், எலும்பு முறிவு, நடக்க பயப்படுதல் போன்ற பின்விளைவுகள் ஏற்படும்.
தலையில் அடிபட்டால், அதன் பாதிப்பு ஓரிரு நாட்கள் கழித்துதான் தெரியும். தலையில் அடிபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், அவரை உடனடியாக குடும்ப மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். தடுமாற்றத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து கால்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். முதலில் ‘உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை’ என்று பாதிக்கப்பட்டவருக்கு மனதளவில் தைரியம் கொடுக்க வேண்டும். கீழே விழுவதால் உடலில் வலி ஏற்பட்டு அவர்களால் நடக்க முடியாது.
அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கும். எலும்பில் அடிபட்டு இருந்தால் உடனே எக்ஸ்-ரே எடுக்க வேண்டும். பின்னர், அடியின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். முதியவர்களைக் கண்காணிப்பதில் வீட்டிலுள்ள உதவியாளர், உறவினர்கள் எந்த நேரமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதையும் மீறி வயதானவர்கள் தடுமாறி கீழே விழுந்துவிட்டால், தாமதிக்காமல் அவரை உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3663
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தடுமாற்றத்தைத் தவிர்க்கும் வழிகள்?
6 மாதங்களுக்குள் முதியவர்கள் யாராவதுஇரண்டு தடவை தவறி கீழே விழும் பட்சத்தில், முதியோர் நலன் சிறப்பு மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். அவரது பார்வைத்திறன், கால் உணர்ச்சி, கேட்கும் திறன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். அதோடு, வீட்டின் சூழலைக் கவனித்து தேவையான மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டும். ரப்பர் ஷீட்டால் ஆன மிதியடிகளுக்கு மேலே கண்டிப்பாக துணி போட்டு வைக்க வேண்டும்.
பாதுகாப்பு... பெற்றோர்களைக் காப்போம்... அரவணைத்து.
Similar topics
» விபத்து - தவிர்க்கும் வழிகள்
» விவாகரத்தை தவிர்க்கும் வழிகள்
» நயன்தாராவை தவிர்க்கும் நடிகர்கள்!
» நோய்களை தவிர்க்கும் வழிமுறை
» இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு
» விவாகரத்தை தவிர்க்கும் வழிகள்
» நயன்தாராவை தவிர்க்கும் நடிகர்கள்!
» நோய்களை தவிர்க்கும் வழிமுறை
» இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|