Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்
Page 1 of 1 • Share
கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்
[You must be registered and logged in to see this image.]இந்தியாவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இவர்களில் சரிபாதிப் பேர்தான் புற்றுநோய்க்கான போரில் வெற்றி பெறுகின்றனர். 72 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கின்றனர். ஆனால், இது தவிர்க்கக்கூடிய நோய்தான். இதுபற்றி தொடர் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது, தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சரளா கோவிந்தராஜனிடம் கேட்டோம்.
'கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியானது, பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய் போன்ற அமைப்பில் 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின்போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே, இதை எதிர்த்து வெற்றிகொள்கிறது. சில பெண்களுக்கு இந்தக் கிருமி சில காலத்துக்கு உடலுக்குள்ளேயே அமைதியாகக் காத்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலத்தில் தாக்குதல் நடத்துகிறது. இந்த நிலையில், இயல்பான செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் அடைந்த இந்த செல்கள் அதிவேகத்தில் பெருக்கம் அடைகிறது. இவை இறப்பதும் இல்லை.
இந்த வைரஸ் கிருமி, பாலியல் உறவின் மூலமே பரவுகிறது. என்னதான் வைரஸ் கிருமி மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது என்றாலும், இளம் வயதிலேயே உடல் உறவு (15 வயது அல்லது அதற்கு கீழ்), பலருடன் உறவு, சிகரெட் பிடித்தல், சுகாதாரமற்ற நாப்கின் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில காரணிகள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடுகிறது. ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களால் ஹியூமன் பாப்பிலோமா வைரஸை எதிர்த்துப் போராட முடிவது இல்லை.
ஒருவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிய நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறோம்.
பிரச்னை முற்றும் நிலையில், தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது அதிக வலி அல்லது ரத்தப்போக்கு ஏற்படலாம், வழக்கத்துக்கு மாறாக வெள்ளைப்படுதல், மாதவிலக்கின்போது ரத்தம் கட்டியாக வெளிப்படுதல் அல்லது மிகக் குறைந்த அளவில் உதிரப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். மெனோபாசுக்குப் பிறகு உதிரப்போக்கு இருந்தால் நிச்சயம் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
புகைபிடித்தலையும் திருமணமாகும் வரை உடல் உறவையும் தவிர்க்க வேண்டும். 9 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தாம்பத்திய வாழ்வைத் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. முதல் ஊசிக்குப் பிறகு எட்டு வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸ் என எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் சிறுவர்களும், இளம் ஆண்களும்கூட இதைப் போட்டுக்கொள்ளலாம். இதனால் பெண்ணுக்கு இன்னும் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும்.
என்னதான் தடுப்பூசி போட்டாலும், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உயிரிழப்புக்களை முற்றிலுமாகத் தடுக்க முடியும்' என்றார்.
[You must be registered and logged in to see this link.]
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏன் ஏற்படுகிறது, தவிர்க்கும் வழிமுறைகள் பற்றி சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் சரளா கோவிந்தராஜனிடம் கேட்டோம்.
'கர்ப்பப்பையின் கீழ்ப் பகுதியானது, பிறப்பு உறுப்பில் இணையும் இடத்தில் வாய் போன்ற அமைப்பில் 'ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ என்ற கிருமியால் புற்றுநோய் ஏற்படுகிறது. பொதுவாக வைரஸ் கிருமி தாக்குதலின்போது பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியே, இதை எதிர்த்து வெற்றிகொள்கிறது. சில பெண்களுக்கு இந்தக் கிருமி சில காலத்துக்கு உடலுக்குள்ளேயே அமைதியாகக் காத்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காலத்தில் தாக்குதல் நடத்துகிறது. இந்த நிலையில், இயல்பான செல்களில் மாற்றம் ஏற்படுகிறது. மாற்றம் அடைந்த இந்த செல்கள் அதிவேகத்தில் பெருக்கம் அடைகிறது. இவை இறப்பதும் இல்லை.
இந்த வைரஸ் கிருமி, பாலியல் உறவின் மூலமே பரவுகிறது. என்னதான் வைரஸ் கிருமி மூலம் புற்றுநோய் ஏற்படுகிறது என்றாலும், இளம் வயதிலேயே உடல் உறவு (15 வயது அல்லது அதற்கு கீழ்), பலருடன் உறவு, சிகரெட் பிடித்தல், சுகாதாரமற்ற நாப்கின் பயன்படுத்துதல் உள்ளிட்ட சில காரணிகள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரித்துவிடுகிறது. ஹெச்.ஐ.வி. பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களால் ஹியூமன் பாப்பிலோமா வைரஸை எதிர்த்துப் போராட முடிவது இல்லை.
ஒருவருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் முற்றிய நிலையை அடைய 10 ஆண்டுகள் ஆகும். இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளியில் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறோம்.
பிரச்னை முற்றும் நிலையில், தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது அதிக வலி அல்லது ரத்தப்போக்கு ஏற்படலாம், வழக்கத்துக்கு மாறாக வெள்ளைப்படுதல், மாதவிலக்கின்போது ரத்தம் கட்டியாக வெளிப்படுதல் அல்லது மிகக் குறைந்த அளவில் உதிரப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள். மெனோபாசுக்குப் பிறகு உதிரப்போக்கு இருந்தால் நிச்சயம் டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
புகைபிடித்தலையும் திருமணமாகும் வரை உடல் உறவையும் தவிர்க்க வேண்டும். 9 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தாம்பத்திய வாழ்வைத் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது. முதல் ஊசிக்குப் பிறகு எட்டு வாரங்கள் கழித்து இரண்டாவது டோஸ், ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது டோஸ் என எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் சிறுவர்களும், இளம் ஆண்களும்கூட இதைப் போட்டுக்கொள்ளலாம். இதனால் பெண்ணுக்கு இன்னும் அதிகப் பாதுகாப்பு கிடைக்கும்.
என்னதான் தடுப்பூசி போட்டாலும், இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உயிரிழப்புக்களை முற்றிலுமாகத் தடுக்க முடியும்' என்றார்.
[You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்
சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி மொஹைதீன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்
விரிவான பயனுள்ள கட்டுரை! நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது!
» அதிக வெள்ளை போக்கால் கர்பப்பை புற்றுநோய்
» ஆரம்பத்தில் அறிந்தால் ஆபத்தை தவிர்க்கலாம்
» சிகரெட் பிடிப்பதை இப்படியும் தவிர்க்கலாம்!
» பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்கலாம்
» அதிக வெள்ளை போக்கால் கர்பப்பை புற்றுநோய்
» ஆரம்பத்தில் அறிந்தால் ஆபத்தை தவிர்க்கலாம்
» சிகரெட் பிடிப்பதை இப்படியும் தவிர்க்கலாம்!
» பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|