Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒவ்வாமை ஏற்படுத்தும் 10 வகை பொருட்கள்
Page 1 of 1 • Share
ஒவ்வாமை ஏற்படுத்தும் 10 வகை பொருட்கள்
உலக அலர்ஜி தினம் ஜூலை 8
உலக அலர்ஜி(ஒவ்வாமை) தினம் ஆண்டுதோறும் ஜூலை 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு ஆஸ்துமா அலர்ஜி ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் கமல் கூறியதாவது:ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அலர்ஜி இருக்கும். அது ஏற்பட காரணமாக இருக்கும் பொருட்களும் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். அதைச் சாதாரணமாக கருதி ஒதுக்கிவிட்டால் உயிருக்கு ஆபத்தாக கூட மாறலாம். அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.
அலர்ஜி உடலில் உள்ள நோய் தடுப்பாற்றல் அமைப்பின் அசாதாரண எதிர்செயல். நமது உடல் தற்காப்பு அமைப்பு ஆபத்தில்லா பொருட்களான மகரந்தம், விலங்குகளின் இறகு, தேகம், செதில்கள் மற்றும் சில உணவு வகைகளால் கூட எதிராக செயலாற்றும். எந்த பொருளாலும் உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும். அதன் தன்மை மிதமானதாக அல்லது சற்றுக் கடுமையாக அல்லது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு செல்லும். அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களின் வகைகள் ஏராளமாக உள்ளது.
அதில் முக்கியமானதாக மகரந்தம், மூட்டைப்பூச்சி, சிற்றுண்ணி, விலங்குகளின் இறகு, தேகம், செதில்கள், பூச்சிக் கொட்டுகள், ரப்பர்போல் மற்றும் சில உணவு வகைகளும் மருந்து வகைகளும் அடங்கும். அலர்ஜி ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் லேசான கண் எரிச்சலில் ஆரம்பித்து உடல் வீக்கம் மற்றும் மூச்சுதிணறல் போன்ற கடும் விளைவுகள் வரை செல்லும். அலர்ஜியை ஏற்படுத்தும்10 வகை பொருட்கள்மகரந்தம்: மரங்கள், புற்கள் மற்றும் கிளைகளில் இருந்து வரும் மகரந்தங்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
இதனால் தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சு விடுவதில் சிரமம், கண் எரிச்சல் மற்றும் கண்ணில் நீர் பொங்குதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.விலங்குகளின் இறகு, தேகம், செதில்கள்: விலங்குகளின் சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வெளிவரும் புரதங்களும், அதன் எச்சிலில் உள்ள புரதங்களும் படுவதால் சில பேருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தும். இந்த அலர்ஜி வளர இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலாகவும் எடுக்கலாம்.
சிற்றுண்ணி: சிற்றுண்ணி நம் கண்களுக்கு அகப்படாத நுண்ணுயிர் பூச்சிகள். இது வீட்டில் இருக்கும் தூசியில் இருக்கும். இவை அதிக ஈரப்பதத்துடன் அசுத்தமான இடத்தில் இருக்கும். மேலும் மனிதர்கள் அல்லது வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் சருமங்களில், மகரந்தங்களில், பாக்டீரியாக்களில், பூஞ்சைகளில் குடியிருக்கும்.
பூச்சிக்கடிகள்: பூச்சிக்கடிகள் வாங்கியவர்களுக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி உண்டான அலர்ஜி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏன் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும். கடிப்பட்ட இடம் வீங்குதல், அதிகப்படியான அாிப்பு, சருமம் சிவந்து போகுதல், குமட்டல், அயர்ச்சி மற்றும் சிறிய அளவு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
பெயின்ட்: பெயின்ட் சிலருக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். அவற்றை தொடுவதாலும், நுகர்ந்து பார்ப்பதாலும் அலர்ஜி ஏற்படும்.
உணவு: பால், மீன்கள், முட்டைகள் மற்றும் பருப்பு வகைகள் தான் அலர்ஜியை தூண்டும் முக்கிய உணவு வகைகள். இந்த வகைகளை சாப்பிட்ட சில நிமிடங்களில் அலர்ஜி போன்ற எதிர் விளைவை காட்ட தொடங்கி விடும்.
ரப்பர் பொருட்கள்: கையில் அணியும் ரப்பர் கையுறைகள், ஆணுறைகள் மற்றும் சில மருத்துவ கருவிகளை பயன்படுத்தும் போது அதிலுள்ள ரப்பர் தன்மையால் அலர்ஜி உண்டாகலாம். கண் எாிச்சல், மூக்கு ஒழுகுதல், தும்மல், மூச்சு திணறல் மற்றும் தோல் அல்லது மூக்கு அரிப்பு போன்றவை தான் இதன் அறிகுறி.
மருந்து உண்ணுதல்: பென்சிலின் அல்லது ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகளை பயன்படுத்தினால் ஏற்படும் அலர்ஜி மிதமான அளவு முதல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவு வரை செல்லும். கண் எரிச்சல், ரத்த ஓட்ட தேக்கம், திசு தளர்ச்சி, முகம், வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் வீக்கம் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகளாகும். நறுமணம்: வாசனை பொருட்கள், வாசனை மெழுகுவர்த்திகள், சலவைக்கு பயன்படுத்தும் பொடிகள் மற்றும் அழகு பொருட்களில் இருந்து வரும் நறுமணம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அது சிறிய அல்லது பெரிய அளவில் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். சிலருக்கு அந்த நறுமணம் மறைந்த பின் இந்த நோய் சாியாகி விடும். வேறு சிலருக்கோ இந்த அலர்ஜி அதிகப்படியாக சென்று பல நாட்கள் வரை நீடிக்கும்.
கரப்பான் பூச்சிகள்: கரப்பான் பூச்சிகள் அச்சம் உண்டாக்குகிறவை மட்டுமல்ல.. அதன் கழிவுகளில் இருக்கும் ஒரு வகை புரதம் அலர்ஜியை உண்டாக்கும். கரப்பான் பூச்சிகளை வீட்டில் இருந்து ஒழிப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. முக்கியமாக கோடைக்காலங்களில் இதன் தொல்லை அதிகளவில் இருக்கும். இவற்றில் கூறப்பட்டுள்ளது போன்ற அலர்ஜி அறிகுறிகள் தென்பட்டால் தாமதப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து அதற்கான முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3707#sthash.8tvGSKzt.dpuf
உலக அலர்ஜி(ஒவ்வாமை) தினம் ஆண்டுதோறும் ஜூலை 8ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு ஆஸ்துமா அலர்ஜி ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் கமல் கூறியதாவது:ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியால் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான அலர்ஜி இருக்கும். அது ஏற்பட காரணமாக இருக்கும் பொருட்களும் ஒருவருக்கொருவர் மாறுபடலாம். அதைச் சாதாரணமாக கருதி ஒதுக்கிவிட்டால் உயிருக்கு ஆபத்தாக கூட மாறலாம். அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும்.
அலர்ஜி உடலில் உள்ள நோய் தடுப்பாற்றல் அமைப்பின் அசாதாரண எதிர்செயல். நமது உடல் தற்காப்பு அமைப்பு ஆபத்தில்லா பொருட்களான மகரந்தம், விலங்குகளின் இறகு, தேகம், செதில்கள் மற்றும் சில உணவு வகைகளால் கூட எதிராக செயலாற்றும். எந்த பொருளாலும் உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்த முடியும். அதன் தன்மை மிதமானதாக அல்லது சற்றுக் கடுமையாக அல்லது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு செல்லும். அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களின் வகைகள் ஏராளமாக உள்ளது.
அதில் முக்கியமானதாக மகரந்தம், மூட்டைப்பூச்சி, சிற்றுண்ணி, விலங்குகளின் இறகு, தேகம், செதில்கள், பூச்சிக் கொட்டுகள், ரப்பர்போல் மற்றும் சில உணவு வகைகளும் மருந்து வகைகளும் அடங்கும். அலர்ஜி ஏற்பட்டால் அதன் அறிகுறிகள் லேசான கண் எரிச்சலில் ஆரம்பித்து உடல் வீக்கம் மற்றும் மூச்சுதிணறல் போன்ற கடும் விளைவுகள் வரை செல்லும். அலர்ஜியை ஏற்படுத்தும்10 வகை பொருட்கள்மகரந்தம்: மரங்கள், புற்கள் மற்றும் கிளைகளில் இருந்து வரும் மகரந்தங்கள் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.
இதனால் தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சு விடுவதில் சிரமம், கண் எரிச்சல் மற்றும் கண்ணில் நீர் பொங்குதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.விலங்குகளின் இறகு, தேகம், செதில்கள்: விலங்குகளின் சருமத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகளிலிருந்து வெளிவரும் புரதங்களும், அதன் எச்சிலில் உள்ள புரதங்களும் படுவதால் சில பேருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தும். இந்த அலர்ஜி வளர இரண்டு வருடங்கள் அல்லது அதற்கு மேலாகவும் எடுக்கலாம்.
சிற்றுண்ணி: சிற்றுண்ணி நம் கண்களுக்கு அகப்படாத நுண்ணுயிர் பூச்சிகள். இது வீட்டில் இருக்கும் தூசியில் இருக்கும். இவை அதிக ஈரப்பதத்துடன் அசுத்தமான இடத்தில் இருக்கும். மேலும் மனிதர்கள் அல்லது வீட்டில் வளர்க்கும் விலங்குகளின் சருமங்களில், மகரந்தங்களில், பாக்டீரியாக்களில், பூஞ்சைகளில் குடியிருக்கும்.
பூச்சிக்கடிகள்: பூச்சிக்கடிகள் வாங்கியவர்களுக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி உண்டான அலர்ஜி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏன் உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்கும். கடிப்பட்ட இடம் வீங்குதல், அதிகப்படியான அாிப்பு, சருமம் சிவந்து போகுதல், குமட்டல், அயர்ச்சி மற்றும் சிறிய அளவு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
பெயின்ட்: பெயின்ட் சிலருக்கு அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். அவற்றை தொடுவதாலும், நுகர்ந்து பார்ப்பதாலும் அலர்ஜி ஏற்படும்.
உணவு: பால், மீன்கள், முட்டைகள் மற்றும் பருப்பு வகைகள் தான் அலர்ஜியை தூண்டும் முக்கிய உணவு வகைகள். இந்த வகைகளை சாப்பிட்ட சில நிமிடங்களில் அலர்ஜி போன்ற எதிர் விளைவை காட்ட தொடங்கி விடும்.
ரப்பர் பொருட்கள்: கையில் அணியும் ரப்பர் கையுறைகள், ஆணுறைகள் மற்றும் சில மருத்துவ கருவிகளை பயன்படுத்தும் போது அதிலுள்ள ரப்பர் தன்மையால் அலர்ஜி உண்டாகலாம். கண் எாிச்சல், மூக்கு ஒழுகுதல், தும்மல், மூச்சு திணறல் மற்றும் தோல் அல்லது மூக்கு அரிப்பு போன்றவை தான் இதன் அறிகுறி.
மருந்து உண்ணுதல்: பென்சிலின் அல்லது ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகளை பயன்படுத்தினால் ஏற்படும் அலர்ஜி மிதமான அளவு முதல் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவு வரை செல்லும். கண் எரிச்சல், ரத்த ஓட்ட தேக்கம், திசு தளர்ச்சி, முகம், வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் வீக்கம் போன்றவைகள் தான் இதற்கான அறிகுறிகளாகும். நறுமணம்: வாசனை பொருட்கள், வாசனை மெழுகுவர்த்திகள், சலவைக்கு பயன்படுத்தும் பொடிகள் மற்றும் அழகு பொருட்களில் இருந்து வரும் நறுமணம் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அது சிறிய அல்லது பெரிய அளவில் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். சிலருக்கு அந்த நறுமணம் மறைந்த பின் இந்த நோய் சாியாகி விடும். வேறு சிலருக்கோ இந்த அலர்ஜி அதிகப்படியாக சென்று பல நாட்கள் வரை நீடிக்கும்.
கரப்பான் பூச்சிகள்: கரப்பான் பூச்சிகள் அச்சம் உண்டாக்குகிறவை மட்டுமல்ல.. அதன் கழிவுகளில் இருக்கும் ஒரு வகை புரதம் அலர்ஜியை உண்டாக்கும். கரப்பான் பூச்சிகளை வீட்டில் இருந்து ஒழிப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. முக்கியமாக கோடைக்காலங்களில் இதன் தொல்லை அதிகளவில் இருக்கும். இவற்றில் கூறப்பட்டுள்ளது போன்ற அலர்ஜி அறிகுறிகள் தென்பட்டால் தாமதப்படுத்தாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து அதற்கான முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3707#sthash.8tvGSKzt.dpuf
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஒவ்வாமை ஏற்படுத்தும் 10 வகை பொருட்கள்
பகிர்வுக்கு மிக்க நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: ஒவ்வாமை ஏற்படுத்தும் 10 வகை பொருட்கள்
சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி மொஹைதீன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள்!!!
» ஒவ்வாமை
» சூரிய ஒளி ஒவ்வாமை, ஏன்?
» தூக்கமின்மையை ஏற்படுத்தும் உணவுகள்!!!
» மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!!
» ஒவ்வாமை
» சூரிய ஒளி ஒவ்வாமை, ஏன்?
» தூக்கமின்மையை ஏற்படுத்தும் உணவுகள்!!!
» மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|