தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !!

View previous topic View next topic Go down

ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !! Empty ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !!

Post by முழுமுதலோன் Fri Aug 07, 2015 3:31 pm

பெண்கள் தயங்கி, தடுமாறி, மறைக்கும் நோய்களில் ஆஸ்துமா முக்கியமானது. திருமணமாகாத இளம்பெண்கள், ஆஸ்துமா இருப்பதை ஒத்துக்கொண்டால் தனக்கு திருமணமே ஆகாது என்று நினைக்கிறார்கள்.

ஏற்றுமதி தொழிலகம் ஒன்றில் வேலைபார்த்து வந்த 32 வயது பெண் ஒருவர், சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட நிலையில் என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். தனக்கு ஆஸ்துமா இருப்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.

சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். நோயின் தாக்கம் இல்லாமல் போனதால் அவர் உடலும் பொலிவு பெற்றது. திருமணத்திற்கும் சம்மதித்துவிட்டார்.

திடீரென்று ஒருநாள் குடும்பத்தோடு வந்து என்னை சந்தித்தார். திருமணம் நடக்க இருப்பதைக்கூறி, அழைப்பிதழை கொடுத்தார். கட்டாயம் வந்து, வாழ்த்தவேண்டும் என்றார். நானும் சரி என்றேன்.

மறுநாள் அதே பெண் செல்போனில் என்னிடம் தொடர்பு கொண்டார். `திருமணத்திற்கு நிச்சயம் நீங்கள் வருவீர்களா?’ என்றார். `நான் வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்தானே?’ என்றேன். `ஆமாம் டாக்டர்.. ஆனால் நீங்கள் பலருக்கும் தெரிந்தவர். ஒருவேளை உங்களை பார்த்துவிட்டு என் கணவர், `ஆஸ்துமாவிற்கு சிகிச்சை அளிக்கும் இவரை உனக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்டால், எனக்கு ஆஸ்துமா இருந்ததை நான் ஒத்துக்கொள்ள வேண்டியதாகிவிடும் அல்லவா..’ என்றார். நான் அந்தப் பெண்ணின் மனநிலையை புரிந்துகொண்டு போனிலே என் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டேன்.

இந்திய பெண்களில் பெரும்பாலானவர்கள் இப்படி ஆஸ்துமா நோய் இருப்பதையும், சிகிச்சை பெறுவதையும் அல்லது சிகிச்சை பெற்றதையும் மறைக்கும் மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள். அதற்கு யாரையும் குறை சொல்லமுடியாது. காரணம் நாம் வாழும் சமூக நிலை அப்படி!

நான் ஒரு புள்ளிவிபரத்தை சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்தியாவில் 30 சதவீதம் பேருக்குத்தான் ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் 40 சதவீதம் பேருக்கும், நியூசிலாந்தில் 75 சதவீதம் பேருக்கும் இந்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் அவர்கள் அதை ஒத்துக்கொண்டு, சிகிச்சை பெற்று, நீண்ட காலம் நிம்மதியாக வாழ்கிறார்கள். நாம்தான் மறைக்கிறோம். நம்மில் சிலர் ஆஸ்துமா என்பதை ஒத்துக்கொள்ளாமல் மற்றவர்களிடம் தனக்கு சிறுநீரக நோய், புற்றுநோய் என்றெல்லாம் கூறுகிறார்கள். அப்படி சொல்வதை தவிர்க்கவேண்டும்.

“எனக்கு மூச்சு இழுப்பு ஏற்படுகிறது. அது ஆஸ்துமாவா?” – என்று பலர் சந்தேகம் கேட்கிறார்கள். மூச்சு இழுப்பெல்லாம் ஆஸ்துமா இல்லை. மூச்சு இழுப்பு, மார்பை இறுக்கிப்பிடித்தல் போன்ற தன்மை, இருமல், மூக்கு சளி, தும்மல்.. இவைகள் தொடர்ந்தால் அது ஆஸ்துமா!

மூக்கு சளி, தும்மலோடு ஒருவர் தொடர்ந்து பத்து வருடங்களாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தால், அவரை பரிசோதித்தால், அவர் 50 சதவீதம் ஆஸ்துமா நோயாளியாக இருப்பதற்கு வாய்ப்

பிருக்கிறது.

ஒருவருக்கு ஆஸ்துமா உருவாகி, மூக்கு சளி- இருமல் மூலம் அது வெளிப்பட்டு, மூச்சு இளைப்பு தோன்றி, அப்போது இருமலோடு மூச்சுவிடும்போது பூனை சத்தம்போல் வெளிவந்தால் அதற்கு முழுமையான சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அது குணப்படுத்த முடியாத `சி.ஓ.பி.டி’ என்ற நிலையை எட்டிவிடும்.

நுரையீரலில் உருவாகும் இருமல், சளி போன்றவை தொடர்ந்தால், நாளடைவில் அது நுரையீரல் ரத்த குழாய்களை இறுக்கமாக்கிவிடும். அதனால் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு ரத்தம் செல்வது குறையும். அப்போது இதயம் தேவைக்கு அதிகமாக வேலை செய்யும். அதனால் களைப்பாகி, இதயம் தன் செயல்திறனை இழந்துவிடும்.

மேற்கண்ட பாதிப்பிற்கு உள்ளாகிறவர்களுக்கு கால்கள் வீங்கும். வயிற்றில் நீர்கோர்க்கும். முகமும் வீங்கி காணப்படும். குனிய முடியாமல், நிமிர முடியாமல் அவதிப்படுவார்கள். இவர் அசையவேண்டும் என்றால் துணைக்கு ஒருவர் வரவேண்டும். நெபுலைசர் போன்ற கருவியையும், மருந்துகளையும் எப்போதும் உடன் கொண்டு செல்லவேண்டியதிருக்கும். எப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும், எப்போது அவருக்கு இதய நெருக்கடி ஏற்படும் என்றும் சொல்ல முடியாது.

இந்த அளவுக்கு ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட என்ன காரணம்? தும்மல், சளி, இருமல், மூச்சு இளைப்பு போன்றவைகளை அவர் அலட்சியப்படுத்தியதுதான் காரணம்.

உணவில் சுகாதாரம் மிக அவசியம். தரையில் விழுந்த உணவை எடுத்து சாப்பிட்டால் `அஸ்கரியஸ்’ என்ற கிருமி, அந்த உணவு வழியாக உடலுக்குள் சென்றுவிடும். அது உடலுக்குள்ளே முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கும். அவை மூச்சுக்குழாய் சென்று, அங்குள்ள திசுக்களை சேதமாக்கும். நச்சு பொருட்களையும் அங்கே உருவாக்கி மூச்சு குழாயை, மூச்சுவிட முடியாத அளவிற்கு சுருக்கிவிடும். அப்போது ஏற்படும் ஆஸ்துமாவை `லாப்ளர் சிண்ட்ரோம்’ என்று கூறுகிறோம். இதை எளிதாக குணப்படுத்திவிடலாம்.

வேறு நோய்களுக்கு சாப்பிடும் ஒரு சில மாத்திரைகளின் ஒவ்வாமையாலும் மூச்சுகுழாய் திடீரென சுருங்கி, அதிக நீர் சுரந்து இருமல், மூச்சு இழுப்பை உருவாக்கும். இதனை, `டிரக் இன்டியூஸ் ஆஸ்துமா’ என்கிறோம்.

தீவிரமான மன அழுத்தமும் ஆஸ்துமாவை உருவாக்கும். அதனை `சைக்கோஜெனிக்’ ஆஸ்துமா என்கிறோம். கணவருடனான உறவு சீர்கேட்டால் மனைவிக்கு மன அழுத்தம் வரலாம். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு படிப்பின் குறைபாடுகளாலோ, ஆசிரியர், சக மாணவ மாணவிகள் கேலி, கிண்டல், அவமானம் போன்றவைகளாலோ இத்தகைய மன அழுத்தம் ஏற்படும். அதனால் மூச்சுவிட திணறுவார்கள். அதனை நினைத்து பயந்து, தேவையற்ற மருத்துவம் செய்துவிடாத அளவிற்கு பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். இதற்கு கவுன்சலிங் தேவைப்படும்.

சிலர் எல்லைமீறி அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வார்கள். அப்போது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் உடைந்து சிதறி, மெல்லிய நச்சு பொருள் உருவாகும். அது மூச்சு குழாய், நுரையீரலை பாதிக்கும். இதனை `உடற்பயிற்சியால் உருவாகும் ஆஸ்துமா’

என்கிறோம்.`ஆஸ்பர்சில்லோசிஸ்’ என்ற காளான் பூச்சிகளால் ரத்தத்தில் ஈஸ்னோபில் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் ஏற்படும் நச்சுப்பொருள் நுரையீரலை பாதித்து ஆஸ்துமாவை ஏற்படுத்தும். அடிக்கடி ஜூரம், மூச்சு இழுப்பு, இருமல், மார்புவலி, எடை குறைவு, நிமோனியா போன்றவை எல்லாம் தோன்றும். இதனை `அக்யூட் ஈஸ்னோபீலிக் சிண்ட்ரோம்’ என்கிறோம். இவர்களுக்கு சளியில் ரத்தம் இருக்கும். அதனால் காசநோய் என்று நினைத்துவிடக்கூடாது.

இந்த வகை ஆஸ்துமாவை ஸ்டீராய்ட் மருந்து கொடுத்து கட்டுப்படுத்தவேண்டும். நாளடைவில் நோய் கட்டுப்படும் போது ஸ்டீராய்ட் அளவை குறைக்கவேண்டும். `ஸ்டீராய்ட் பக்க விளைவை ஏற்படுத்துமே’ என்பார்கள். உண்மைதான். சிலருக்குதான் பக்கவிளைவு ஏற்படும். பக்கவிளைவைவிட உயிர் முக்கியம். அதனால் நோயின்தன்மைக்கு தக்கபடி ஸ்டீராய்ட் கொடுத்துதான் ஆகவேண்டும். ஸ்டீராய்டின் பக்கவிளைவுகளை குறைக்கவும் மருந்து கொடுத்து ஆஸ்துமாவை கட்டுப்படுத்த வேண்டும்.

மக்கள் ஆஸ்துமாவை பற்றி நன்றாக புரிந்துகொண்டு, விழிப்புடன் இருந்து நோய் தாக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை நோய் தாக்கிவிட்டால் உடனே அறிகுறிகளை உணர்ந்து, பரிசோதித்து சரியான சிகிச்சை கொடுத்தால் ஆஸ்துமாவை வந்த சுவடே தெரியாமல் போக்கிவிடலாம். விழிப்போடு இருப்போம்.. ஆஸ்துமாவை வெல்வோம்!

தகவல்: பேராசிரியர் எஸ்.கே.ராஜன் MD,FRCP(G),FR-CP(ED), D.Sc,.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !! Empty Re: ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !!

Post by செந்தில் Fri Aug 07, 2015 5:45 pm

விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !! Empty Re: ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !!

Post by mohaideen Sun Aug 09, 2015 5:04 pm

பயன்தரும் பதிவு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !! Empty Re: ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !!

Post by முரளிராஜா Tue Aug 11, 2015 10:05 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !! Empty Re: ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !!

Post by kanmani singh Tue Aug 11, 2015 11:17 am

பயனுள்ள பகிர்வு!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !! Empty Re: ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum