தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி

View previous topic View next topic Go down

தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி Empty தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி

Post by முழுமுதலோன் Fri Aug 07, 2015 3:24 pm

தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி T_500_1490
மூலவர் : பூங்காளியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : தென்னூர்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி

தல சிறப்பு:

கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு, சாத்வீகமாகத் திகழ்வது தலத்தின் சிறப்பாகும்.

திறக்கும் நேரம்:

காலை 8.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில் தென்னூர் அண்ணாமலை புரம், திருச்சி.


பொது தகவல்:

கோபுர வாயிலைத் தாண்டியதும், மகா மண்டபம் உள்ளது. கருவறைக்கு இடதுபுறம் பாலகணபதி அருள்பாலிக்கின்றார். கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு, சாத்வீகமாகத் திகழ்கின்றாள். இவளை தரிசிக்கும்போதே நம்மனதில் உள்ள கவலைகள் யாவும் அகன்று விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


பிரார்த்தனை

நினைத்த காரியங்கள் நிறைவேறவும், திருமணத்தடைகள் நீங்கவும் இங்குள்ள அம்மனை பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு திருமாங்கல்யம் சாத்தி, தங்களது நேர்த்திக்கடனை காணிக்கையாக்குகின்றனர்.

தலபெருமை:

பவுர்ணமி நாளில் அம்பாளுக்கு ஹோமம் செய்து, சிறப்பான வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. சித்ரா பவுர்ணமி நாளில், பூச்சொரியல் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அமாவாசை நாளில் மாலையில் நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, தேன், திரவியப் பொடி, மாப்பொடி, நெய், பன்னீர், பால், தயிர், இளநீர், சந்தனம் என பதினொரு வகை திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாள் பதினாறு பேறுகளும் அருள்வதாகச் சொல்லி உருகுகின்றனர் பக்த கோடிகள். ஆனி மாதம், அம்பாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. முதல் வெள்ளியன்று பழ அலங்காரம் இரண்டாம் வெள்ளியன்று சந்தனக்காப்பு அலங்காரம், மூன்றாம் வெள்ளியன்று வளையல் அலங்காரம், நான்காம் வெள்ளியன்று ரூபாய் நோட்டுகளாலான அலங்காரம் என்று விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. தை மாதத்தின் மூன்றாம் வெள்ளியில் காய்கறி அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று பக்தர்களுக்கு காய்கறிகளையே பிரசாதமாக அளிக்கினறனர். அதனைப் பெறுவது, ஆண்டு முழுவதும் உணவுப் பஞ்சம் வராமல் காத்திடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இக்கோயிலில், தினமும் ஒரு கால பூஜை சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. காளி, சினம்மிக்க தெய்வமாகக் கூறப்பட்டாலும், பக்தர்களுக்கு சீர்மணக்க அருள்பவள். மங்களங்கள் யாவும் அளிப்பவள். இந்த அன்னை, தன்னை நாடுவோர், வேண்டிய வண்ணமே காரியசித்தி அடைய வைத்து மனம் குளிரவைத்து, உன்னத வாழ்வு அளிப்பதாய் பக்தர்கள் மனம் சிலிர்க்கக் கூறுகின்றனர். பகலவன், உதிக்கும் திசை நோக்கி அமைந்துள்ள கோயிலின் கோபுர தரிசனம், நம் மனத்திலுள்ள அகந்தையை நீக்கி, மன அமைதியையும் பொறுமையையும் அளிக்கிறது.


தல வரலாறு:

வெகு ஆண்டுகளுக்கு முன்னர், பூந்தோட்டமாகத் திகழ்ந்த இவ்விடத்தில், அம்மன் எழுந்தருளியதாலும் சாத்வீகமான பூப்போன்ற புன்னைகையுடன் திகழ்வதாலும் பூங்காளி என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். அன்னை காளி, அமைதியே உருவாகக் காட்சிதரும் கோயில் ஒன்று, மலைக்கோட்டை மாநகரில் தில்லைநகர், தென்னூர், புத்தூர், உறையூர் ஆகிய ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இருள் போக்கும் ஒளியாகத் திகழும் தேவி பூங்காளி அம்மனாக புன்னகை தவழும் முகத்துடன் இங்கே அருள்புரிகின்றாள்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு, சாத்வீகமாகத் திகழ்வது தலத்தின் சிறப்பாகும்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி Empty Re: தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி

Post by செந்தில் Fri Aug 07, 2015 4:08 pm

நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி Empty Re: தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி

Post by ஸ்ரீராம் Sat Aug 22, 2015 10:06 am

நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி Empty Re: தென்னூர் அருள்மிகு பூங்காளியம்மன் திருக்கோயில், திருச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» திருநாராயணபுரம் அருள்மிகு வேதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருச்சி
» வெள்ளூர் அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
» திருவானைக்காவல் அருள்மிகு பஞ்சமுகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
» கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், திருச்சி
» திருப்பாற்றுறை அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum