Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
Page 1 of 1 • Share
இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
இன்று சினிமாவில் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள், அம்மையாரின் குரலை, "ஞானப் பழத்தைப் பிழிந்து" என்றெல்லாம் கேலி பேசினாலும், ஆதவனை அற்பத்தனம் கேலி பேசி மாளுமா?
சுந்தராம்பாளின் குரலுக்கு விலை கொடுத்து, இவர்கள் கட்டுப்படி ஆவார்களா?
1935-இல், இளம் வயதில், இவர் பெற்ற ஊதியம் ஒரு லட்ச ரூபாய்.
அப்போ, தங்கம் - ஒரு சவரன் 13 ரூபாய். = கிட்டத்தட்ட 7700 சவரன்.
KBS வெறுமனே பக்திப் பாடகர் மட்டும் தானா? விடுதலைப் போராட்ட வீரர் அல்லவா.
தமிழிசை இயக்கத்துக்கு குரல் கொடுக்க, பலரும் தயங்கிய நேரத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், கே.பி. சுந்தராம்பாளும் அல்லவா முதன் முதலில் ஓடி வந்தார்கள்.
சுந்தராம்பாள் வாழ்வை இன்று லேசாக எட்டிப் பார்ப்போம் வாருங்கள், முருகனருள்-200 வழியாக.
அப்படியே கலைஞர் கருணாநிதியின் பேச்சுக்கு உடன்பட மறுத்த கதையும், பார்க்கலாம்...கடைசியாக
KB Sundarambal in 1935
Kodumudi. Balambal-இன் மகள் Sundarambal (KBS)
MS Subbulakshmi போலவே, இவருக்கும் அம்மாவின் இனிஷியல் மட்டுமே
சிறு வயதிலேயே நாடக மேடைக்கு வந்தாகி விட்டது. நாடகம் என்றாலும், அது இசையுடன் கலந்தது தானே. ஆங்கிலத்தில் Musical-ன்னா மட்டும் நமக்கு Classics-ன்னு மரியாதை வரும்.
ஆண் வேடம் (ராஜ பார்ட்), பெண் வேடம் (ஸ்தீரி பார்ட்) என்று கலவையாக நடித்துப் புகழ் பெறத் துவங்கி விட்டார் சுந்தராம்பாள். அரிச்சந்திரா, பவளக்கொடி, ஸ்ரீ வள்ளி என்று நாடகப் புகழ்...விதியோ இலங்கைக்கு வா வா என்றது.[You must be registered and logged in to see this image.]
பெற்றோர் வைத்த பெயர் இராமகிருஷ்ண ஐயர். ஆனால் செல்லமாக கிட்டன், கிட்டன் என்றே அழைக்க, அதுவே கிட்டப்பா ஆனது. கேரள-தமிழக எல்லை அல்லவா.
கிட்டப்பாவின் நாடகத்துக்கு, முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களே முன் வரிசையில் வந்து கேட்பார்கள். நாடகம் பார்க்க அல்ல. அவர் குரலைக் கேட்க. அப்படி ஒரு குரல் வளம். இவரையும் இலங்கைக்கு நாடகம் போட அழைத்தனர்.
"இலங்கை முழுக்க இப்போ சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது. அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்" என்று ஒரு சிலர் கிட்டப்பாவை எச்சரித்தனர்.
[You must be registered and logged in to see this image.]
"கிட்டப்பாவிற்கு எதிரே உன்னால் நிற்க முடியுமா?" என்று வேறு சிலரோ, சுந்தராம்பாளை பயமுறுத்தினர். இப்படி சுந்தராம்பாள்-கிட்டப்பா சந்திப்பே மோதலில் தான்.
ஒரே மேடையில் இருவருமே கலக்கினர். வள்ளித் திருமணம், இலங்கை முழுக்க ஒரே பேச்சு.
மோதல் நட்பாய் மலர, அதே நாடகத்தைத் தமிழ்நாடு வந்தும் பலமுறை அரங்கேற்றம். அவரவர் பாடலுக்கு, அவரவர் விசிறிகள். இசைத்தட்டு விற்பனை.
ஆனால்...ஆனால்...ஆனால்,
இதயத்தின் எங்கோ ஒரு மூலையில்...
காதல்...காதல்....காதல்.
கலையுலகில் மட்டுமின்றி....வாழ்க்கையிலும் இணைந்து வாழ முடியுமா?
ஆனால் கிட்டப்பாவோ ஏற்கனவே திருமணம் ஆனவர்.
திருநெல்வேலி விசுவநாத ஐயரின் மகள் கிட்டம்மாளை முன்பே மணந்து இருந்தார். ஆனால் இலங்கையில் விளையாடியது விதி.
முறையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்தக் காதல் மலரவில்லையே.
மோதல் நட்பாய் மாறி, அதுவே காதல் ஆகிப் போனது யார் குற்றமோ?
உள்ளத்தில் ஊறி விட்ட காதலை, இப்போ எதைக் கொண்டு அழிப்பது?
அதன் கதி, அதோ கதி. முருகா...அதோ கதி. = கதியாய் விதியாய் வருவாய் குகனே.
கிட்டப்பா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது சுந்தராம்பாளுக்குத் தெரியும்.
என்ன செய்ய? இன்றைய சினிமா போல் பணம் கொடுத்து, சொத்து கொடுத்து, குடும்பத்தைத் துரத்தி விடலாமா? சுந்தராம்பாளுக்கு இல்லாத பணமா? புகழா? அந்தஸ்தா?
சுந்தராம்பாள் ஒரு பேதை. அதிகம் உரிமை எடுத்துக் கொள்ளத் தெரியவில்லை.
இயல்பிலேயே முருக பக்தி. விட்டுக் கொடுக்கும் போக்கு. ஆனாலும் எதற்கும் தளராத மனக்கோட்டை மட்டும் மலைக்கோட்டையாக இருக்கு.
காதலே வென்றது. "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்று கிட்டப்பா வாக்கு அளித்தார்.
பின்னாளில், சுந்தராம்பாள் இது பற்றித் தானே வாய் திறந்து சொன்னது: "அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை. அது பதிவுத் திருமணமும் அல்ல. அது ஈசனருளால் நடந்த திருமணம். ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்."
KB Sundarambal portrays Murugan
முருகனாக சுந்தராம்பாள், (ராஜபார்ட்). நாடக மேடையில்
பிறகு, பல நாடகங்கள், பல நாடுகள் என்று இந்த வெற்றிக் கூட்டணி சென்று வந்தது. நாடக மேடைக்கு வெளியே தான் கணவனும் மனைவியும்.
மேடை ஏறிவிட்டால் கடுமையாக மோதிக் கொள்வார்கள். தொழில் ரீதியான கேலியும் கிண்டலும் தூள் பறக்கும். )
[You must be registered and logged in to see this image.]
விதி தன் பிடியை இன்னும் இறுக்கியதோ என்னவோ, வந்தது வினை, கண்ணன் வடிவில். = பாலாழி பாய்ந்த பாதகனோ?
கிருஷ்ண லீலா என்னும் நாடகம். என்னமோ தெரியலை, அதைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறினார்.
ஆனால் முருகனைப் போலவே கண்ணன் மேலும் அன்பு கொண்டிருந்த சுந்தராம்பாள், அந்த நாடகத்தைக் காணச் செல்ல....
அல்ப விஷயத்துக்காக கோபித்துக் கொண்டு, விட்டுவிட்டு பாதியிலேயே சென்று விட்டார் கிட்டப்பா. பத்திரிகைகள் கண்ணும் காதும் மூக்கும் ஒட்டி ஒட்டி எழுதின.
கருத்து வேற்றுமை. இடைவெளி அதிகமாயிற்று.
= "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்ற சத்தியம்???
பிறகு, சுந்தராம்பாள் அவருக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினார். ஒவ்வொன்றிலும்......காதலும், கோபமும், தாபமும், இயலாமையும், மாறா அன்பும், இன்னும் என்னென்னமோ...கடிதத்தின் முடிப்பு மட்டும்...தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள், சுந்தராம்பாள்.
கிட்டப்பா, தேசிய இயக்கத்தில் சேர்ந்து கதர் உடுத்த, அதையே சுந்தராம்பாளும் பற்றிக் கொண்டார். பல தேசபக்தி நாடகங்களில் நடித்தார் சுந்தராம்பாள்.
வெளியில் அதிகம் காட்டிக் கொள்ள வில்லையென்றாலும், சதா சர்வ காலமும், மனத்தால் அவரையே தாங்கி வாழ்ந்தாள் இந்த முருக பக்தை.
கிட்டப்பா வாழ்விலும் விதி விளையாடியது.
27 வயதிலேயே கடுமையான வயிற்றுவலி. குடல் வெந்து ஈரல் சுருங்கி.....1933-இல் அகால மரணம் எய்தினார்.
சேதி கேட்டுத் துடித்த அந்த முருக பக்தை, என்னென்ன எண்ணி இருப்பாளோ? எப்டியெல்லாம் கசிந்து இருப்பாளோ? முருகா - இது உனக்குத் தகுமா?
[You must be registered and logged in to see this image.]
அன்று பூண்டாள் துறவுக் கோலம்.
KB Sundarambal
25 வயது தான். காதல்-கணவருடன் அதிகம் வாழவில்லை தான். ஆனாலும் உடம்பில் வெள்ளாடை. நெற்றியில் வெண்ணீறு. கழுத்தில் துளசி மாலை.. - கண்ணா, பாவீ, தகுமா?
பால், இனிப்பு என்று எந்தப் போகப் பொருளும் உண்பதில்லை.
மேடையில் ஆண்களுடன் ஜோடியாய் நடிப்பதில்லை. மேடையிலும் தனிமை. வாழ்விலும் தனிமை.
சுந்தரம் சுந்தரம் என்றே அழைப்பார் போலும் அம்மையாரை. அந்தச் சுந்தர நினைவுகளே வாழ்வாகிப் போனது சுந்தராம்பாளுக்கு.
இப்படி ஒடிந்து கிடந்தவரை இழுக்க, நந்தனார் சரித்திரம் என்னும் சினிமா வந்தது.
அம்மையாரை நந்தனாராக நடிக்க வைக்க, தயாரிப்பாளர் ஆசான்தாஸ் தவமாய்த் தவம் இருந்தார். காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி வேறு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்...ஊகூம்.
KB Sundarambal in 'Nandanar Charitram'
நந்தனாராக கே.பி.சுந்தராம்பாள்.
அந்தணராக மகராஜபுரம்
அவரிடம் சாக்கு போக்கு சொல்லி, தன் ஊதியம் ரொம்ப அதிகம்...ரூபாய் ஒரு லட்சம் என்று பேச்சுக்குச் சொல்ல,
ஆகா...அதற்கும் கட்டுப்பட்டார் தயாரிப்பாளர். அம்மையாரின் மனமே இளகிப் போனது.
யாருக்கும் ஜோடியாய் நடிக்க மாட்டேன் என்ற பல நிபந்தனைகளோடு, நந்தனாராக ஆண் வேடம் கட்டி நடிக்க ஒப்புக் கொண்டார்.
பின்பு, வரிசையாகப் படங்கள்.
மணிமேகலை, ஒளவையார், பூம்புகார், திருவிளையாடல், கந்தன் கருணை, துணைவன், காரைக்கால் அம்மையார், கடைசியாக திருமலைத் தெய்வம்.
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?-ன்னு மனக் கவலையோடவே பாடிய அந்தப் பேதை உள்ளம்.....புற்று நோயால் 1980-இல் அணைந்து போனது.
முருக நீழலில்.....சுந்தராம்பாள்.....நீங்காது நிறைந்தேலோர் எம்பாவாய்.
நன்றி -http://www.ebookxp.org/
சுந்தராம்பாளின் குரலுக்கு விலை கொடுத்து, இவர்கள் கட்டுப்படி ஆவார்களா?
1935-இல், இளம் வயதில், இவர் பெற்ற ஊதியம் ஒரு லட்ச ரூபாய்.
அப்போ, தங்கம் - ஒரு சவரன் 13 ரூபாய். = கிட்டத்தட்ட 7700 சவரன்.
KBS வெறுமனே பக்திப் பாடகர் மட்டும் தானா? விடுதலைப் போராட்ட வீரர் அல்லவா.
தமிழிசை இயக்கத்துக்கு குரல் கொடுக்க, பலரும் தயங்கிய நேரத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியும், கே.பி. சுந்தராம்பாளும் அல்லவா முதன் முதலில் ஓடி வந்தார்கள்.
சுந்தராம்பாள் வாழ்வை இன்று லேசாக எட்டிப் பார்ப்போம் வாருங்கள், முருகனருள்-200 வழியாக.
அப்படியே கலைஞர் கருணாநிதியின் பேச்சுக்கு உடன்பட மறுத்த கதையும், பார்க்கலாம்...கடைசியாக
KB Sundarambal in 1935
Kodumudi. Balambal-இன் மகள் Sundarambal (KBS)
MS Subbulakshmi போலவே, இவருக்கும் அம்மாவின் இனிஷியல் மட்டுமே
சிறு வயதிலேயே நாடக மேடைக்கு வந்தாகி விட்டது. நாடகம் என்றாலும், அது இசையுடன் கலந்தது தானே. ஆங்கிலத்தில் Musical-ன்னா மட்டும் நமக்கு Classics-ன்னு மரியாதை வரும்.
ஆண் வேடம் (ராஜ பார்ட்), பெண் வேடம் (ஸ்தீரி பார்ட்) என்று கலவையாக நடித்துப் புகழ் பெறத் துவங்கி விட்டார் சுந்தராம்பாள். அரிச்சந்திரா, பவளக்கொடி, ஸ்ரீ வள்ளி என்று நாடகப் புகழ்...விதியோ இலங்கைக்கு வா வா என்றது.[You must be registered and logged in to see this image.]
பெற்றோர் வைத்த பெயர் இராமகிருஷ்ண ஐயர். ஆனால் செல்லமாக கிட்டன், கிட்டன் என்றே அழைக்க, அதுவே கிட்டப்பா ஆனது. கேரள-தமிழக எல்லை அல்லவா.
கிட்டப்பாவின் நாடகத்துக்கு, முன்னணி கர்நாடக இசைக் கலைஞர்களே முன் வரிசையில் வந்து கேட்பார்கள். நாடகம் பார்க்க அல்ல. அவர் குரலைக் கேட்க. அப்படி ஒரு குரல் வளம். இவரையும் இலங்கைக்கு நாடகம் போட அழைத்தனர்.
"இலங்கை முழுக்க இப்போ சுந்தராம்பாளின் கொடி பறக்கிறது. அங்கே போய் சிக்கிக் கொள்ள வேண்டாம்" என்று ஒரு சிலர் கிட்டப்பாவை எச்சரித்தனர்.
[You must be registered and logged in to see this image.]
"கிட்டப்பாவிற்கு எதிரே உன்னால் நிற்க முடியுமா?" என்று வேறு சிலரோ, சுந்தராம்பாளை பயமுறுத்தினர். இப்படி சுந்தராம்பாள்-கிட்டப்பா சந்திப்பே மோதலில் தான்.
ஒரே மேடையில் இருவருமே கலக்கினர். வள்ளித் திருமணம், இலங்கை முழுக்க ஒரே பேச்சு.
மோதல் நட்பாய் மலர, அதே நாடகத்தைத் தமிழ்நாடு வந்தும் பலமுறை அரங்கேற்றம். அவரவர் பாடலுக்கு, அவரவர் விசிறிகள். இசைத்தட்டு விற்பனை.
ஆனால்...ஆனால்...ஆனால்,
இதயத்தின் எங்கோ ஒரு மூலையில்...
காதல்...காதல்....காதல்.
கலையுலகில் மட்டுமின்றி....வாழ்க்கையிலும் இணைந்து வாழ முடியுமா?
ஆனால் கிட்டப்பாவோ ஏற்கனவே திருமணம் ஆனவர்.
திருநெல்வேலி விசுவநாத ஐயரின் மகள் கிட்டம்மாளை முன்பே மணந்து இருந்தார். ஆனால் இலங்கையில் விளையாடியது விதி.
முறையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்தக் காதல் மலரவில்லையே.
மோதல் நட்பாய் மாறி, அதுவே காதல் ஆகிப் போனது யார் குற்றமோ?
உள்ளத்தில் ஊறி விட்ட காதலை, இப்போ எதைக் கொண்டு அழிப்பது?
அதன் கதி, அதோ கதி. முருகா...அதோ கதி. = கதியாய் விதியாய் வருவாய் குகனே.
கிட்டப்பா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது சுந்தராம்பாளுக்குத் தெரியும்.
என்ன செய்ய? இன்றைய சினிமா போல் பணம் கொடுத்து, சொத்து கொடுத்து, குடும்பத்தைத் துரத்தி விடலாமா? சுந்தராம்பாளுக்கு இல்லாத பணமா? புகழா? அந்தஸ்தா?
சுந்தராம்பாள் ஒரு பேதை. அதிகம் உரிமை எடுத்துக் கொள்ளத் தெரியவில்லை.
இயல்பிலேயே முருக பக்தி. விட்டுக் கொடுக்கும் போக்கு. ஆனாலும் எதற்கும் தளராத மனக்கோட்டை மட்டும் மலைக்கோட்டையாக இருக்கு.
காதலே வென்றது. "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்று கிட்டப்பா வாக்கு அளித்தார்.
பின்னாளில், சுந்தராம்பாள் இது பற்றித் தானே வாய் திறந்து சொன்னது: "அம்மி மிதித்தோ அருந்ததி பார்த்தோ எங்கள் திருமணம் நடக்கவில்லை. அது பதிவுத் திருமணமும் அல்ல. அது ஈசனருளால் நடந்த திருமணம். ஜன்மாந்திரத் தொடர்பு என்பார்களே அவ்வாறு நடந்த திருமணம்."
KB Sundarambal portrays Murugan
முருகனாக சுந்தராம்பாள், (ராஜபார்ட்). நாடக மேடையில்
பிறகு, பல நாடகங்கள், பல நாடுகள் என்று இந்த வெற்றிக் கூட்டணி சென்று வந்தது. நாடக மேடைக்கு வெளியே தான் கணவனும் மனைவியும்.
மேடை ஏறிவிட்டால் கடுமையாக மோதிக் கொள்வார்கள். தொழில் ரீதியான கேலியும் கிண்டலும் தூள் பறக்கும். )
[You must be registered and logged in to see this image.]
விதி தன் பிடியை இன்னும் இறுக்கியதோ என்னவோ, வந்தது வினை, கண்ணன் வடிவில். = பாலாழி பாய்ந்த பாதகனோ?
கிருஷ்ண லீலா என்னும் நாடகம். என்னமோ தெரியலை, அதைப் பார்க்கப் போக வேண்டாம் என கிட்டப்பா கூறினார்.
ஆனால் முருகனைப் போலவே கண்ணன் மேலும் அன்பு கொண்டிருந்த சுந்தராம்பாள், அந்த நாடகத்தைக் காணச் செல்ல....
அல்ப விஷயத்துக்காக கோபித்துக் கொண்டு, விட்டுவிட்டு பாதியிலேயே சென்று விட்டார் கிட்டப்பா. பத்திரிகைகள் கண்ணும் காதும் மூக்கும் ஒட்டி ஒட்டி எழுதின.
கருத்து வேற்றுமை. இடைவெளி அதிகமாயிற்று.
= "உன்னை இறுதிவரை காப்பாற்றுவேன்" என்ற சத்தியம்???
பிறகு, சுந்தராம்பாள் அவருக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதினார். ஒவ்வொன்றிலும்......காதலும், கோபமும், தாபமும், இயலாமையும், மாறா அன்பும், இன்னும் என்னென்னமோ...கடிதத்தின் முடிப்பு மட்டும்...தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள், சுந்தராம்பாள்.
கிட்டப்பா, தேசிய இயக்கத்தில் சேர்ந்து கதர் உடுத்த, அதையே சுந்தராம்பாளும் பற்றிக் கொண்டார். பல தேசபக்தி நாடகங்களில் நடித்தார் சுந்தராம்பாள்.
வெளியில் அதிகம் காட்டிக் கொள்ள வில்லையென்றாலும், சதா சர்வ காலமும், மனத்தால் அவரையே தாங்கி வாழ்ந்தாள் இந்த முருக பக்தை.
கிட்டப்பா வாழ்விலும் விதி விளையாடியது.
27 வயதிலேயே கடுமையான வயிற்றுவலி. குடல் வெந்து ஈரல் சுருங்கி.....1933-இல் அகால மரணம் எய்தினார்.
சேதி கேட்டுத் துடித்த அந்த முருக பக்தை, என்னென்ன எண்ணி இருப்பாளோ? எப்டியெல்லாம் கசிந்து இருப்பாளோ? முருகா - இது உனக்குத் தகுமா?
[You must be registered and logged in to see this image.]
அன்று பூண்டாள் துறவுக் கோலம்.
KB Sundarambal
25 வயது தான். காதல்-கணவருடன் அதிகம் வாழவில்லை தான். ஆனாலும் உடம்பில் வெள்ளாடை. நெற்றியில் வெண்ணீறு. கழுத்தில் துளசி மாலை.. - கண்ணா, பாவீ, தகுமா?
பால், இனிப்பு என்று எந்தப் போகப் பொருளும் உண்பதில்லை.
மேடையில் ஆண்களுடன் ஜோடியாய் நடிப்பதில்லை. மேடையிலும் தனிமை. வாழ்விலும் தனிமை.
சுந்தரம் சுந்தரம் என்றே அழைப்பார் போலும் அம்மையாரை. அந்தச் சுந்தர நினைவுகளே வாழ்வாகிப் போனது சுந்தராம்பாளுக்கு.
இப்படி ஒடிந்து கிடந்தவரை இழுக்க, நந்தனார் சரித்திரம் என்னும் சினிமா வந்தது.
அம்மையாரை நந்தனாராக நடிக்க வைக்க, தயாரிப்பாளர் ஆசான்தாஸ் தவமாய்த் தவம் இருந்தார். காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி வேறு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்...ஊகூம்.
KB Sundarambal in 'Nandanar Charitram'
நந்தனாராக கே.பி.சுந்தராம்பாள்.
அந்தணராக மகராஜபுரம்
அவரிடம் சாக்கு போக்கு சொல்லி, தன் ஊதியம் ரொம்ப அதிகம்...ரூபாய் ஒரு லட்சம் என்று பேச்சுக்குச் சொல்ல,
ஆகா...அதற்கும் கட்டுப்பட்டார் தயாரிப்பாளர். அம்மையாரின் மனமே இளகிப் போனது.
யாருக்கும் ஜோடியாய் நடிக்க மாட்டேன் என்ற பல நிபந்தனைகளோடு, நந்தனாராக ஆண் வேடம் கட்டி நடிக்க ஒப்புக் கொண்டார்.
பின்பு, வரிசையாகப் படங்கள்.
மணிமேகலை, ஒளவையார், பூம்புகார், திருவிளையாடல், கந்தன் கருணை, துணைவன், காரைக்கால் அம்மையார், கடைசியாக திருமலைத் தெய்வம்.
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?-ன்னு மனக் கவலையோடவே பாடிய அந்தப் பேதை உள்ளம்.....புற்று நோயால் 1980-இல் அணைந்து போனது.
முருக நீழலில்.....சுந்தராம்பாள்.....நீங்காது நிறைந்தேலோர் எம்பாவாய்.
நன்றி -http://www.ebookxp.org/
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
சுந்தராம்பாள் அவர்களை பற்றிய பகிர்வுக்கு நன்றி செந்தில்
Re: இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
கேபிஎஸ் பற்றிய சிறப்பான பதிவு. ஆம் முதல் முதலாக ஒரு படத்திற்க்கு ஒரு லக்சம் சம்பளம் வாங்கிய முதல் நடி(கர்)கை இவர்தான்.
கேபிஎஸ் அம்மாவின் புகழ் உலகம் இருக்கும் வரை இருக்கும்.
கேபிஎஸ் அம்மாவின் புகழ் உலகம் இருக்கும் வரை இருக்கும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
ஸ்ரீராம் wrote:கேபிஎஸ் பற்றிய சிறப்பான பதிவு. ஆம் முதல் முதலாக ஒரு படத்திற்க்கு ஒரு லக்சம் சம்பளம் வாங்கிய முதல் நடி(கர்)கை இவர்தான்.
கேபிஎஸ் அம்மாவின் புகழ் உலகம் இருக்கும் வரை இருக்கும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இவள்??? பலரும் அறிந்த பெயர் கே.பி.சுந்தராம்பாள் என்னும் KBS
மங்கையரில் மாணிக்கம்! வாழ்க அவர் புகழ்!!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» இப்படித்தான் இவள் ..
» பூ அல்ல பூவை இவள்..
» பூ அல்ல பூவை இவள்..
» என் காதலி இவள் தான் ..!!!
» ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி அறிந்த விளக்கம்
» பூ அல்ல பூவை இவள்..
» பூ அல்ல பூவை இவள்..
» என் காதலி இவள் தான் ..!!!
» ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி அறிந்த விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|