Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்,புதுப்பாக்கம், சென்னை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்,புதுப்பாக்கம், சென்னை
மூலவர் : வீரஆஞ்சநேயர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : புதுப்பாக்கம்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
அனுமன் ஜெயந்தி, ராமநவமி
தல சிறப்பு:
கஜகிரி எனப்படும் குன்றின் உச்சியில் வீர ஆஞ்சநேயர் காட்சி தருவது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் புதுப்பாக்கம், சென்னை.
பொது தகவல்:
மலைமீது ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சீதா, லட்சுமணருடன் ராமபிரான் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயரின் தலங்களில் 108 படிகளைக் கொண்டது.
பிரார்த்தனை
பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள அனுமனை வேண்டிச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
அனுமனுக்கு வெண்ணெய் காப்பு, வெற்றிலை மாலை சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இங்கு ஆறடி உயரத்தில் ஓர் அழகுச் சிலையாய் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். மலை அடிவாரத்தில் ஆனைமுகன் கோயில் கொண்டுள்ளார். அவரை வணங்கி, அருகில் நவகிரக சன்னதியையும் தரிசித்து, பின் 108 படிகள் ஏறிச் சென்றால் கஜகிரி எனப்படும் குன்றின் உச்சியில் வீர ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். எதிரில் சீதா லஷ்மண சமேதராக ராமபிரான் அருள்பாலிக்கிறார்!
ஆஞ்சநேயர் திவ்ய உருவத்தில், முகம் வடக்கு நோக்கிப் பார்த்தபடி இருக்க(சஞ்சீவி மலை வடக்கில் இருப்பதால்) உடல் கிழக்கு நோக்கி இருக்க(நித்ய கர்மா நீர் நிலையை நோக்கிச் செய்யப்படுதல்), வலது பாதம் தரையில் ஊன்றி, இடது பாதம் பறப்பதற்குத் தயாராக உயர்த்தி தரையில் படாமலும், ஒரு கை பக்தருக்கு அபயம் காட்ட மறுகை இடையிலிருக்க, தலைக்கு மேல் தூக்கிய வாலின் மணியும், நாபிக் கமலத்தில் தாமரைப் பூவுமாக பொலிவுடன் காட்சி தருகிறார் வீர ஆஞ்சநேயர்! ராமர் இருக்குமிடமே சீதைக்கு அயோத்தி என்பர். அதே போல அனுமன் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் ராமர் எழுந்தருளி விடுவார். இங்கேயும் அனுமனுக்கு எதிரிலேயே சீதா ராம, லக்ஷ்மணரும்; ராமர் பாதம் பணியும் ஆஞ்சநேயரும் உள்ளனர். இங்கு நித்யர்மாவை முடித்து, பின் அனுமன் சஞ்சீவி பர்வதம் கொண்டு சென்றது, அதனால் விஷம் நீங்கி லக்ஷ்மணர் முதலானோர் எழுந்தது! ராமபிரான் மனமகிழ்ந்து அனுமனை வாழ்த்தியது எல்லாம் நாம் அறிந்ததே! ராமாயண காலத்தில் அனுமன் இங்கு வந்ததால், வியாஸ மகரிஷி அனுமனுக்கு இங்கு கோயில் எழுப்பினார், மொத்தம் 108 அனுமன் கோயில்களை அவர் ஏற்படுத்தியதாக ஐதிகம். அதில் இக்கோயில் 108 திருப்படிகளைக் கொண்டது அபூர்வம். 108 திவ்யத் தலங்களுள் ஒன்றான திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோயிலுக்கு இந்தப் புதுப்பாக்கம் பரிவேட்டைத் தலமாகவும் விளங்குகிறது.
தல வரலாறு:
இலங்கைக்கு மும்முறை சென்று வந்தவர் அனுமன் மட்டுமே, முதல் முறை ராமதூதனாக கணையாழியுடன் சென்று கண்டேன் சீதையை என்று அறிவித்தது. தீ வைத்து ராவணன் நகரை அழித்தது. மறுமுறை போருக்காக சேதுபந்தனம் அமைத்து, ராமபிரானுடன் சென்றது. மூன்றாவது முறை சஞ்சீவி மலைக்காக இமயம் சென்று வந்தது முதலும் கடைசியும் வான மார்க்கம்.
ராம-ராவண யுத்தம் அதி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. வானர சேனைகள் ராம மந்திரத்தை தாரகமாகக் கொண்டு வெற்றி மேல் வெற்றியைக் குவித்தபடி இருக்கிறார்கள். ஸ்ரீராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்! கோஷம் இலங்கையை மூழ்கடிக்கிறது. ராவண சேனைகள் நாளும் தேய்ந்தன. முக்கியத் தளபதிகள், ராவணனின் தம்பிகள் போன்றோர் வீரமரணம் எய்தினர். இதே நிலை நீடித்தால் தோற்பது உறுதி என்பதை உணர்ந்த ராவணன், கல்ஙகினான். அவனுக்கு ஆறுதல் சொன்னான். அவனது மகன் இந்திரஜித். மறுநாள் போருக்கு அவனே சென்றான். மாயங்கள் பல கற்ற அவன், லட்சுமணனுடன் போரிடும்போது நாகாஸ்திரம் ஏவி, ராமசேனையை முறியடிக்கத் திட்டம் தீட்டுகிறான். ஆதிசேஷனின் அவதாரமான லட்சுமணன் மீது அஸ்திரம் பாய்ந்தது. அவதார நியதிப்படி, சாதாரண மனிதன் போல் அதனை ஏற்று மூர்ச்சையடைத்தான் இளையாழ்வார். வானரசேனைகளும் நாகாஸ்திரத்தின் வீர்யத்தால் தாக்குண்டு மூர்ச்சையடைந்தனர். பாணத்தால் பாதிக்கப்படாதவர்கள் இருவர் மட்டுமே! ஒருவர் ராமபிரான். அடுத்தவர் ஸ்ரீராம நாம மயமாக இருக்கும் வீர ஆஞ்சநேயர்! இளையவனும் இதர வானரவீரர்களும் இறுதி மூச்சை விடப்போகிறவர்கள் போல் மூர்ச்சித்துக் கிடப்பதைக் கண்ட ராமர், ஜாம்பவான் மெதுவாக சுதாரித்து எழுந்து, சஞ்சீவி மலையில் உள்ள அமிர்த் சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்தால் அனைவரும் பிழைப்பர் என்று உபாயம் சொல்ல, உடனே அனுமன் ராமனைப் பணிந்து புறப்பட்டார். மூலிகையை அடையாளம் காண அவகாசம் இல்லாததால், சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்தெடுத்துத் தூக்கி வந்தார். அப்படி வருகையில், வங்காளக் கடலின் ஓரத்தில், மாலை மயங்கும் நேரத்தில் சந்தியா வந்தனம் எனப்படும் நித்ய கர்மாவைச் செய்வதற்காக அனுமன் இறங்கிய இடம்தான் புதுப்பாக்கம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: கஜகிரி எனப்படும் குன்றின் உச்சியில் வீர ஆஞ்சநேயர் காட்சி தருவது சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்,புதுப்பாக்கம், சென்னை
நல்லதொரு ஆலயப் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில்,புதுப்பாக்கம், சென்னை
நல்லதொரு ஆலயப் பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» அணைப்பட்டி அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், திண்டுக்கல்
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» பூந்தமல்லி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சென்னை
» அடையாறு அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், பெரியசேக்காடு,சென்னை
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» பூந்தமல்லி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சென்னை
» அடையாறு அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், பெரியசேக்காடு,சென்னை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|