Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அடையாறு அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், சென்னை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அடையாறு அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், சென்னை
மூலவர் : முத்துமாரியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : அரசு-வேம்பு
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : அடையாறு
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
ஆடிப்பூரம், சித்ரா பவுர்ணமி பாற்குட வைபவம். நவராத்திரிவிழா, மார்கழி மாத பூஜை, விநாயகர் சதுர்த்தி.
தல சிறப்பு:
இக்கோயிலில் பதி விளக்கு ஏற்றுவது சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அடையாறு, சென்னை.
பொது தகவல்:
துர்கைக்கும் சப்த கன்னிமார்களுக்கும் இங்கு தனிச் சன்னதி உள்ளது.
பிரார்த்தனை
திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், வாழ்வில் மகத்தான திருப்பங்கள் நிகழ இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை:
ஆடித் திருவிழா இங்கு அமர்க்களமாக நடந்தேறும், ஆடி மாதம் துவங்குவதற்கு முன்னதாக வரும் திங்கட்கிழமையில், அதிகாலை வேளையில் பந்தக்கால் நட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெறும் .பிறகு ஆடி முதல் வெள்ளியன்று கணபதி ஹோமம் வளர்த்து பூஜைகள் முடிந்ததும் காப்புக் கட்டி சுப தருணத்தில் பதி விளக்கு ஏற்றுகிறார்கள் இது, இந்தக் கோயிலின் சிறப்பம்சம். விளக்கு ஒன்றில் தீபம் ஏற்றி, அதைச் சிம்ம வாகனத்தில் வைத்து அம்மனிடம் உத்தரவு பெறுவார்கள். இந்தத் தலத்தில் உனக்குத் திருவிழா நடத்தப் போகிறோம் நடத்தலாமா? கூழு ஊத்துவதற்கு உன் அனுமதி வேண்டும்என, பிரகாசமாக எரியும் அந்த விளக்கு ஜோதியின் மூலம் அம்மனிடம் அனுமதி கேட்கிறார்கள்.
அம்மன் உத்தரவு கிடைத்ததும், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறும். அன்றைய தினமே ஊர் எல்லையில் உள்ள பெரிய பாளையத்து அம்மன் கோயிலில் இருந்து கும்டீம் வைத்து, சக்தி கிரகம் எடுத்து வருவார்கள். மறுநாள், சனிக்கிழமை அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்து, அம்மனின் வரலாற்றை கோயில் பூசாரிகள் கதையாகச் சொல்வார்கள். ஞாயிறன்று கூழ்வார்க்கும் வைபவம், அதைத் தொடர்ந்து அம்மனின் திருவீதியுலா நடைபெறுகிறது.
ஆடி வெள்ளிகளில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தரும் அம்மனைத் தரிசிக்கக் கண்ணிரண்டு போதாது! ஆடி மாதம் 4-வது வெள்ளியும், தை மாதம் 4-வது வெள்ளியும், கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. விழா துவக்கத்தில் பதி பூஜையில் எலுமிச்சைப் பழம் சமர்ப்பிப்பார்கள். பிறகு ஞாயிறன்று கும்பம் கலைக்கும் தருணத்தில், குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு அந்தப் பழங்கள் பிரசாதமாகத் தரப்படும். அதை வாங்கிச் செல்லும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோன்று, கல்யாணம் தடைப்படும் அன்பர்களுக்கு இங்கே மஞ்சள் கயிறுக கட்டுகிறார்கள். இதனால் வெகு சீக்கிரமே கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆடிப்பூரமும் இங்கே விசேஷம்! அன்று சுமங்கலிகளுக்கு திருமாங்கல்யக் கயிறு, வளையல், குங்குமம், சீப்பு, கண்ணாடி என ஐந்து வகை பிரசாதங்கள் தரப்படுகின்றன.
தல வரலாறு:
கி.பி 1967 ல் இந்தப் பகுதியில் வசித்த மூதாட்டிகள் சிலரின் முயற்சியால். சிறிய ஓலைக்கொட்டகையில் குடியேறினாளாம் அம்மன் பிற்காலத்தில் தான் கோயில் வளர்ச்சியடந்தது என்கிறார்கள்.
அம்மன் விக்கிரகம் இங்கு வருவதற்கு முன்பாக, இந்த இடத்தில் ஸ்ரீராஜகணபதி, எனும் பிள்ளையார் விக்கிரகம்தான் இருந்தது. இந்த ஊரின் ஆரம்பமே அவர்தான் என்கிறார்கள் பக்தர்கள். ஆடிமாதம் அம்மனை வழிபடுவதில் அதீத விருப்பம் கொண்டவர்கள் இந்தப் பகுதி மக்கள். எனினும் அப்போது சுற்று வட்டாரப் பகுதியில் அம்மன் கோயில்களே கிடையாது. அதன் விளைவாகவே அம்மன் விக்கிரகத்தை இங்கே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் பதி விளக்கு ஏற்றுவது சிறப்பாகும்.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அடையாறு அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில், சென்னை
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» திருவல்லிக்கேணி அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» எழுச்சூர் அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» கோயம்பேடு அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், சென்னை
» சென்னை-அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
» திருவல்லிக்கேணி அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» எழுச்சூர் அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» கோயம்பேடு அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், சென்னை
» சென்னை-அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|