தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிருங்கேரி அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிக்மகளூர்

View previous topic View next topic Go down

சிருங்கேரி அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிக்மகளூர் Empty சிருங்கேரி அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிக்மகளூர்

Post by முழுமுதலோன் Fri Oct 23, 2015 10:42 am

சிருங்கேரி அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிக்மகளூர் T_500_98
மூலவர் : சாரதாம்பாள்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : துங்கபத்ரா
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சிருங்கேரி
மாவட்டம் : சிக்மகளூர்
மாநிலம் : கர்நாடகா

பாடியவர்கள்:

ஆதிசங்கரர்.

திருவிழா:

ஏப்ரல், மே மாதத்தில் வரும் வைகாச சுக்ல பஞ்சமியில் 5 நாள் சங்கர ஜெயந்தி, வியாசர் பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாபா விரதம், உமாமகேஸ்வர விரதம் ஆகிய விசேஷ நாட்களுடன், மகாசிவராத்திரி, நவராத்திரி முக்கிய திருவிழாக்களாக உள்ளன.

தல சிறப்பு:

சந்திரமவுலீஸ்வரர் பூஜை : துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 2 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிருங்கேரி - 577 139, சிக்மகளூர் மாவட்டம். கர்நாடகா மாநிலம்.

போன்:

+91 8265 - 250 123, 250 192

பொது தகவல்:

சங்கரர் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவருக்கு பின் 13 நூற்றாண்டு காலத்தில் சுரேசுவரர் முதல் 36 பேர் பீடாதிபதிகளாக அமர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதிசங்கரர் கூறியபடி அத்வைத வேதத்தை பரப்பி வருகின்றனர்.

தற்போது சிருங்கேரி மடத்தின் 36வது பீடாதிபதியாக "ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள்' உள்ளார். இவருக்கென கோயில் அருகேயே துங்கபத்திரை ஆற்றைக்கடந்து தனி மடம் உள்ளது. தர்பார் தரிசனம் ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் சிருங்கேரியில் தர்பார் தரிசனம் காண்பது சிறப்பு. இந்த தரிசனத்தின் போது பஞ்சாங்கம் வாசித்து, நான்கு வேதங்கள் ஓதி, மேளதாளங்கள் ஒலிக்க தேவிக்கு தீபாராதனை நடக்கும். சாரதாதேவியின் இடதுபக்கம் தங்கத்தால் ஆன சிம்மாசனத்தில் தரிசனத்தின் போது பொன்னாடை போர்த்தி, தலையில் கிரீடம் வைத்து, கழுத்தில் விலை உயர்ந்த நகைகள், கையில் ருத்ராட்ச மாலை, விரல்களில் பெரிய மோதிரங்களுடன் அம்மனின் பிரதிநிதியாக பீடாதிபதி அமர்ந்து தரிசனம் தருவார். இதுவே தர்பார் தரிசனம் ஆகும். மடத்தின் காவல் தெய்வங்கள் கிழக்கே - காலபைரவர் மேற்கே - அனுமன் வடக்கே - காளி தெற்கே - துர்க்கை கோயில் அமைப்பு சாரதாதேவி பெரிய ராஜகோபுரத்துடன் தனி கோயிலில் அருளுகிறாள். அருகே வித்யாசங்கரர் பிரமாண்டமான கருங்கல் கோயிலில் இருக்கிறார். ஆதிசங்கரர், ஜனார்த்தனர், அனுமன், கருடன், சக்தி கணபதி, வாகீஸ்வரி, ராமர், ஹரிஹரன், மலையாள பிரம்மா, சுப்ரமணியர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. 1907ல் இக்கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, 1916ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் 12 முதல் 3 மணிவரையிலும், இரவு 7 முதல் 9 மணிவரை அன்னதானம் நடக்கிறது.



பிரார்த்தனை

இவளை வேண்டினால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமுன் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன்:

அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யலாம். இங்கு தினமும் லலிதா சகஸ்ரநாமம் கூறப்படுகிறது.

தலபெருமை:

சிருங்கேரி என்றால்...
சிர்ங்க கிரி என்பதே சிர்ங்கேரி என வழங்கப்படுகிறது. தசரதர் குழந்தை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். இந்த யாகத்தை நடத்தி கொடுத்தவர் "ரிஷ்யசிருங்கர்' என்ற முனிவர். இவர் விபாந்த முனிவரின் புதல்வர். ரிஷ்யசிருங்கர் என்றால் "மான் கொம்பு உடையவர்' என்று பொருள். அவர் வாழ்ந்த இப்பகுதி "சிருங்கேரி' ஆனது.

துங்கபத்ரா நதி:
சிருங்கேரியில் ஓடும் புண்ணிய நதி துங்கபத்ரா. துங்கை, பத்ரா ஆகிய இரண்டு நதிகள் இணைந்து ஓடுவதால் இப்பெயர் பெற்றது. இவை இரண்டும் சகோதரி நதிகள். துங்கை கர்நாடகாவின் வடக்கே உள்ள வராஹ மலையில் உற்பத்தியாகி, 16 கி.மீ. தூரம் ஓடி, பத்ரா என்ற நதியுடன் இணைகிறது.

பீடத்தின் அமைப்பு:
ஆதிசங்கரர் அமைத்த நான்கு பீடங்களும் தனி சிறப்பு பெற்றவை. இந்தியாவின் பரப்பளவு 1960 சதுர மைல். இதை நான்கு சம வட்டங்களாக்கினால் ஒவ்வொன்றும் 490 சதுர மைல் அளவானது. இந்த முறையில் தான் நான்கு பீடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, வடக்கே பத்ரி, தெற்கே சிருங்கேரி ஆகிய இடங்களில் ஆதிசங்கரர் மடங்களை ஸ்தாபித்தார். சிருங்கேரியில் ஆச்சாரியார் சுரேசுவரா தலைமையில் யஜுர்வேத முறையில் சாரதா பீடம் அமைக்கப்பட்டது.

மழைக்கடவுள்:
சிருங்கேரியிலிருந்து 10கி.மீ. தூரத்தில் மலஹானிகரேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள தூணில் பிரசித்தி பெற்ற விநாயகர் உள்ளார். இவரது உருவம் வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. மழை வருவதற்காகவும், இயற்கையின் சீற்றத்தை தடுக்கவும் இவருக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. இங்கு சிர்ங்க முனிவர் வழிபட்ட மலஹானிகரேசுவரரும், அம்மன் பவானியும் அருளுகின்றனர்.


தல வரலாறு:

மாகிஷ்மதி நகரில் மண்டனமிசிரர் என்ற விசுவரூபரிடம் ஆதிசங்கரர் வேதம் குறித்து வாதம் செய்தார். வாதத்திற்கு விசுவரூபரின் துணைவி உபயபாரதி நடுவராக இருந்தார். இவர் சரஸ்வதி தேவியின் அவதாரம். வாதத்தில் சங்கரர் தோற்றால் துறவறம் விடுத்து இல்லறம் மேற்கொள்ள வேண்டும். விசுவரூபர் தோற்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் நிபந்தனை. வாதம் ஆரம்பிக்கும் முன் சங்கரருக்கும் விசுவரூபருக்கும் மாலைகளை அணிவித்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ அவரே தோற்றவர் என அறிவிக்கப்பட்டது.

17 நாள் போட்டியின் முடிவில் விசுவரூபரின் மாலை வாடியது. தோல்வியை ஒப்புக்கொண்ட விசுவரூபர் துறவறத்திற்கு தயாரானார். உடனே அவரது மனைவி,"" சங்கரரே! மாலை வாடியதால் மட்டும் தாங்கள் வெற்றி பெற்றதாக கருத முடியாது. என்னிடம் இல்லறம் பற்றி வாதம் செய்து வெற்றி பெற்றால் தான் அது முழு வெற்றியாகும்,''என்றார். சங்கரரோ பிரமச்சாரி. ஒரு மாதத்திற்கு பின் இல்லறம் பற்றிய வாதம் வைத்துக் கொள்ளலாம் என்றார் சங்கரர்.

இல்லறம் பற்றி யோசித்து கொண்டு செல்கையில், அமருகன் என்ற மன்னன் இறந்ததை அறிந்த சங்கரர், தன் யோக சக்தியால் மன்னனின் உடலில் புகுந்து இல்லறம் பற்றி அறிந்தார். சங்கரரின் உடலை அவரது சீடர் பத்மபாதர் பாதுகாத்து வந்தார். மீண்டும் சங்கரர் தன் உடலில் புகுந்து உபயபாரதியிடம் வாதம் செய்தார். உபயபாரதி தோற்றார். தன் கணவர் விசுவரூபர் துறவறம் ஏற்க அனுமதித்தார். சங்கரர் இவருக்கு "சுரேசுவரர்' என்ற நாமம் கொடுத்து தன் சீடராக ஏற்றுக்கொண்டார்.

சரஸ்வதி அம்சமான உபயபாரதியிடம் சங்கரர்,""தான் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வர வேண்டும்,''என்ற வரத்தை பெற்றார். அதற்கு சம்மதித்த உபயபாரதி,""சங்கரரே! உம்மை தொடர்ந்து வருகிறேன். ஆனால் நீர் திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும். திரும்பிபார்த்தால் நான் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன். அதன் பின் தொடர்ந்து வரமாட்டேன்,''என்ற நிபந்தனையுடன் புறப்பட்டார்.

சங்கரருக்கு விசுவரூபருடன் நான்கு சீடர்கள் அமைந்தனர். இவர்களுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். பின்னால் உபயதேவி "கலீர்',"கலீர்' என கால் சலங்கை ஒலிக்க வந்து கொண்டிருந்தாள். அனைவரும் சிர்ங்ககிரி வந்து சேர்ந்தார்கள். இந்த இடத்தில் நல்லபாம்பும் தவளையும் சேர்ந்திருந்தது. பசுவும் புலியும் இணைந்திருந்ததை கண்ட சங்கரர், யோகிகள் தங்குவதற்கு தகுந்த இடம் என தீர்மானித்தார்.
இந்த இடம் வரை கேட்டு வந்த தேவியின் சிலம்பொலி நின்று விட திரும்பிபார்த்தார் சங்கரர்.

நிபந்தனைப்படி அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள் உபயபாரதி. அங்கேயே பாறை மீது ஸ்ரீசக்ரம் வடித்து தேவியை "சாரதா' என்ற திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். இவருக்கு காட்சி கொடுத்த அன்னை,""சங்கரா! இன்று முதல் இந்த பீடம் சிர்ங்கேரி சாரதா பீடம் எனப்படும். இந்த பீடத்தில் அமர்பவர்களிடத்தில் நான் குடி கொண்டு ஆசி வழங்குவேன்,''என அருள்பாலித்தாள். சுரேசுவரரே சங்கர பீடத்தின் முதல் ஆச்சார்யர் ஆனார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: சந்திரமவுலீஸ்வரர் பூஜை : துங்கை ஆற்றின் அருகே சாராதாதேவியை பிரதிஷ்டை செய்த சங்கரர், சிவபெருமான் அருளிய ஸ்படிகலிங்கமாக விளங்கும் சந்திரமவுலீஸ்வரரையும், ரத்தின கர்ப்பகணபதியையும் முதல் பீடாதிபதி சுரேசுவரரிடம் கொடுத்து பூஜை செய்துவரக் கூறினார். இந்த ஸ்படிக லிங்கத்திற்கு தான், இன்று வரை உள்ள பீடாதிபதிகள் பூஜை செய்து வருகின்றனர். சரஸ்வதிதேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கிறாள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தில் சாரதாதேவியை பிரதிஷ்டை செய்திருப்பதால் இவளே பிரம்மா, விஷ்ணு, சிவன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியாகத் திகழ்கிறாள்.

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிருங்கேரி அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிக்மகளூர் Empty Re: சிருங்கேரி அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில், சிக்மகளூர்

Post by செந்தில் Fri Oct 23, 2015 11:24 am

நல்லதொரு ஆலயப் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum