Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விஷ்ணு வழிபட்ட சிவாலயங்கள்:
Page 1 of 1 • Share
விஷ்ணு வழிபட்ட சிவாலயங்கள்:
பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்:
பல்வேறு புராண சம்பவங்கள் ஹரியும், சிவனும் ஒன்றே என்று நமக்கு உணர்த்துகின்றன. திருமாலின் இருதய மத்தியில் என்றும் நீங்காமல் சிவன் இருக்கிறார் என்று தைத்திரிய ஆரண்யம் என்ற நூல் கூறுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் எப்போதும் ராமநாமாவை சொல்லிக் கொண்டே இருக்கிறார் என்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. திருமால் பத்து அவதாரங்கள் எடுத்தார். இந்த பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது.
01. மச்சாவதாரம்
சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
02. கூர்மாவதாரம்
திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.
03.வராக அவதாரம்
இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
04.நரசிம்மஅவதாரம்
தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.
05.வாமன அவதாரம்
மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.
06.பரசுராம அவதாரம்
ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.
07.ராமாவதாரம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார். சிவலிங்கம் சமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.
08. பலராம அவதாரம்
திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில் பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.
09.கிருஷ்ண அவதாரம்
கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குரு÷க்ஷத்ர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது.
ஆன்மிகம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விஷ்ணு வழிபட்ட சிவாலயங்கள்:
#spoct15-2
ஆக ஓம்பது அவதாரத்திலும் மகா விஷ்ணு சிவனை வழிபட்டு இருக்கார். கல்கி அவதாரம் எப்போது?
மேலும் ஒரு சந்தேகம் அண்ணா. சிவனை ஏன் அழிக்கும் கடவுள் என்று சொல்கிறார்கள்? @முழுமுதலோன்
படைக்கும் கடவுள் பிரம்மா சரியே.
காக்கும் கடவுள் மகா விஷ்ணு என்றும் சொல்கிறார்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விஷ்ணு வழிபட்ட சிவாலயங்கள்:
கல்கி அவதாரம் எப்போது?
கலியுக முடிவும் கல்கி அவதாரமும்
கிருஷ்னர், கல்கி எனும் விஷ்னுவின் 10வது அவதாரமாக பூமியில் அவதரிப்பார் என்பது ஐதீகம். அவர் எப்போது, எங்கே எப்படி தோன்றுவார் என்பன போன்ற கேள்விகளுக்கு புரானங்களும் இதிகாசங்களும் பிற மூலாதாரங்களும் குறிப்புகள் வழங்குகின்றன. அவை வாசகர்களின் பரிசீலனைக்கு இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக பகவத் கீதையில் காணக்கிடக்கும் விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றிய செய்யுட்களை காண்போம்:
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
இன்று உலக நிலைமையை கண்ணுறும் எவரும் உலக மக்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையில்லை, இருக்கும் வழிகாட்டிகளே போதும் என கூறிட முடியாது. வழிதவறிச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகை மனிதர்களால் மட்டும் வழிகாட்டிட முடியாது. மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு ஆற்றல் நிச்சயமாகவே தேவை.
அதாவது எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் ஓர் ஆன்மாவை, அதாவது அவதாரத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த அவதாரம் யுகங்களுக்கிடையில் பூமியில் தோன்றி நல்லவர்களைப் பாதுகாத்து, கொடியவர்களை அழித்து புதிய தர்மம் ஒன்றை நிலைப்படுத்திடச் செய்கின்றது.
இதை மேலும் விரிவாகக் காண்போம்:
கல்கி அவதாரம் என்பது கிருஷ்ன பரமாத்மாவின் மறுவருகையை குறிப்பதாகும். இந்த அவதாரம் தோன்றக்கூடிய காலம் இடம் போன்றவை புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன, மற்றும் தோன்றக்கூடிய இடம் பற்றிய வர்ணனையையும் கல்கி புராணத்தில் காணலாம்.
இடம் பெயர் பற்றிய கூற்றுகள்.
ஸம்பலக்ராம: முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன:
பவனே விஷ்னுயஸஸ: கல்கி ப்ராதுர் பவிஷ்யதி
அதாவது, சம்பலக்கிராமத்தில் முக்கியஸ்தராக விளங்கும் ஒருவருடைய இல்லத்தில் கல்கி அவதரிப்பார் என்பது இதன் பொருள். ரஷ்ய நாட்டைச் சார்ந்த ரோரிச் எனும் சம்ஸ்கிருத பண்டிதர் சம்பல் என்பது பௌதீகரீதியிலான ஓர் இடமல்ல ஆனால் ஆன்மீகமும் லெளகீகமும் ஒன்று சேரும் ஓரிடம் என “மஹாபோதி, ஏப்ரல் 1948”எனும் சஞ்சிகையில் கூறியுள்ளார். இது இறைவனின் அவதாரங்களின் இயல்புகளான ஆன்மீகத்தையும் லெளகீகத்தையும் ஒருங்கினைப்பதை குறிப்பதாகும். அதே வேளையில் கல்கி புரானத்தில் சம்பலக்கிராமத்தின் லெளகீக வர்ணனையும் காணக்கிடக்கின்றது. சற்று ஆச்சரியப்படும் வகையிலேயே அவ்வர்ணனை அமைந்துள்ளது. கல்கி புரானத்தின் 2வது அம்சம் 6வது அத்தியாயத்தில் இவ்வர்ணனையைக் காணலாம்.
மேற்கண்டவற்றிலிருந்தும் புரானங்களில் மேற்கொண்டு காணப்படுவனவற்றையும் கொண்டு பின்வரும் பட்டியலை உருவாக்கலாம்:
இறைவன் உலகில் தர்மத்தை நிலைப்படுத்த காலத்திற்குக் காலம் தமது அவதாரம் ஒன்றை பூமிக்கு அனுப்புகின்றார். இந்த அவதரிப்பு யுகங்களின் சந்திப்பின் போது நிகழுகின்றது. விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கல்கி பூமியில் தோன்றவிருக்கின்றார் இந்தத் தோற்றம் கலியுகத்தின் முடிவில் உண்டாகும் கல்கி, சம்பல் எனும் கிராமத்தில் விஷ்னுயாஷா என்பவருக்கு மகனாக பிறப்பார்.
இப்போது கலி எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும் என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண முயலுவோம்:
கலியுகம் எப்போது முடியும் எனும் கேள்விக்கு பலர் பலவிதமான பதிலைக் கூறுகின்றனர். சிலர் அது முடிவதற்கு 1200×360=4,32,000 வருடங்கள் இருக்கின்றன என கூறுகின்றனர். கலி யுகத்தின் முக்கியத்துவம் என்னவெனில் அதன் முடிவில் கிருஷ்னர் அவதரிப்பார் என்பதே ஆகும். 4.32,000 வருடங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்பட போகின்றவர்கள் வெகு குறைவாகவே இருப்பார்கள். இப்போது உலகை உலுக்கும் விஷயங்களே பெரிதாக இருக்கையில் 4,32,000 வருடங்களுக்குப் பிறகு கிருஷ்னர் தோன்றுவதால் இப்போது நமக்கு என்ன நன்மை? ஆனால், கலியுகம் முடிந்துவிட்டது என கூறும் பண்டிதர்களும் உண்டு. அதில் ஒருவர் டாக்டர் முஞ்சே என்பார். இவர் கலி முடிந்துவிட்டதற்கு பல ஆதாரங்களை வழங்கியுள்ளார். கலி முடிந்துவிட்டால் உலகம் ஏன் இன்னும் இவ்வாறு இருக்கின்றது என கேட்கப்பட்டதற்கு அவர் கலி புருஷன் இறந்துவிட்டான். அவனை இன்னமும் நடுவீட்டிற்குள் வைத்துக்கொண்டு அவன் இறக்கவில்லை என கூறிக்கொண்டிருந்தால் இறந்து போன பிணம் நாற்றம் எடுக்கவே செய்யும். இன்று உலகில் காணப்படும் பிரச்சினைகள் இந்த பிணநாற்றமே. பிணத்தை தூக்கியெரிந்துவிட்டு நடக்கவேண்டியதைப் பற்றி சிந்தித்தோமானால் மாற்றங்கள் நிகழும் என்றார்.
இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸூரதாஸர் எனும் ஞானி விக்கிரமாதித்த வருடம் 1900க்குப்பின் உலகில் ஒரு பெரும் நிகழ்வு உண்டாகும் என போதித்துள்ளார். விக்கிரமாதித்த வருடம் ஆங்கில வருடத்திற்கு 56 வருடங்கள் அதிகமாகும். ஆகவே 1900 – 56 = 1844ல் இம் மாபெரும் நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும். ஆக, கிபி 1844 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், உலக சமயங்களுக்கு பொதுவான அவதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வருடமும் ஆகும். வள்ளலார் இராமலிங்கர் கலி யுகம் 1900ஆம் வருடத்திற்கு முன்பே முடிவுறும் என கூறி பின் வரும் செய்யுளையும் பாடியுள்ளார்:
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே
பல கிருஸ்தவ சமயப்பிரிவுகளும் இயேசு நாதரின் மறுவருகை இந்த ஆண்டிலேயே நடக்கும் என போதித்துள்ளன. இஸ்லாமிய சமயத்தில் ஹிஜ்ரி 1260ல், அதாவது அதற்கு சமமான ஆங்கில வருடம் 1844ல் இதே போன்ற ஒரு தூதர் தோன்றுவார் எனும் நம்பிக்கையும் உள்ளது.
ஓர் அவதாரம் உலகில் தோன்றுவது ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள மக்களுக்காக என கூறுவது தவறாகும். எந்தவோர் அவதாரமும் ஒருதலை பட்சமாக அவதரிப்பதில்லை. எவ்வாறு இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவராக இருக்கின்றாரோ அவ்வாறே அவரது அவதாரங்களும் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள். அவர்களை அவ்வாறு கண்டறிந்து ஏற்றுக்கொள்வது மனிதர்களின் கடமையாகும்.. ஆகவே, ஓர் அவதாரம் இங்கு மட்டும்தான் தோன்றுவார் அல்லது அங்கு மட்டும்தான் தோன்றுவார் எனக் கூறுவது ஏற்புடையதாகாது. இறைவன் படைத்த உலகமிது. அவர் விரும்புகின்றபடி அவர் தமது அவதாரத்தை எங்கு வேண்டுமானாலும் தோன்ற செய்யலாம். அதே ரீதியில் கல்கி அவதாரம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் என நிச்சயமாக கூறிடவும் முடியாது. கிருஷ்னர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்றொரு நாடு கிடையாது. பாரதம் முழுவது 56 தேசங்கள் இருந்ததாக புரானங்கள் கூறுகின்றன.
பஹாய் சமயம் 1844ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி பாரசீக நாட்டில் தோற்றம் கண்டது. பாப் என்பார் முன்னோடியான அவதாரமாகவும், அவரையடுத்து பஹாவுல்லா என்பார் இறைவனின் முழு அவதாரமாகவும் தோன்றினர். பஹாய்கள் பஹாவுல்லா நிச்சயமாகவே கல்கி விஷ்ணு யாஷா, இயேசு நாதரின் மருவருகை, புத்தரின் மறுவருகையான மைத்ரேயி அமிதபா, யூதர்களின் மெஸ்ஸையா என நம்புகின்றனர். பஹாவுல்லா எனும் பெயரின் அர்த்தம், “இறைவனின் (ஜோதி/மகிமை/ஒளி)” என்பதாகும். சம்ஸ்கிருத மொழியில் “விஷ்ணுயாஷா”எனவும், ஆங்கிலத்தில் “Glory of God” எனவும் மொழி பெயர்க்கலாம். புத்த சமயத்தின் புத்தரின் ஐந்தாவது அவதாரத்தின் பெயரான “அமிதபா” என்பதன் அர்த்தமும் ஏறக்குறைய இதுவே ஆகும். அதாவது, “அமித” என்றால் அளவிடமுடியாதது அல்லது அதி உயர்ந்தது, “பா” என்றால் (ஜோதி/மகிமை/ஒளி) என்பதாகும்.
இறுதியாக,
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
பஹாவுல்லாவின் போதனைகளில் மிக அடிப்படையான போதனை ஒன்று தன்னிச்சையாக உண்மையை ஆராய வேண்டும் என்பதாகும். இங்கு பகிர்ந்தகொள்ளப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் வாசகர்களின் சிந்தனையை தூண்டிவிடுவதற்காகவே அளிக்கப்பட்டுள்ளன. ஆராய்ந்து உண்மையை கண்டறிவது அவரவர் கடமை
நன்றி https://ta.wikipedia.org/
சிவனை ஏன் அழிக்கும் கடவுள் என்று சொல்கிறார்கள்?
சிவன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும்.தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குறிய தெய்வமாக வழிபட்ட சேயோன்என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருளாகும். முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றனர். உலகத்தின் கடவுள் (எந்நாட்டவருக்கும் இறைவன்) எனவும், பரப்பிரம்மம், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும் இறைவன் என்று வழங்கப்பெறுகிறார். தேவநாகிரி சொல்லான சிவ என்பதற்கு களங்கமற்ற மற்றும் அழிப்பவர் என்று பொருளாகும். சிவபெருமானை அகங்காரத்தினை அழிப்பவர் என்று புராணங்கள் பிரம்மன் தலை கொய்தது முதல் தட்சன் அழிவு வரை மேற்கோள்களோடு கூறுகிறன. வேதங்களில் ருத்ரன் என்ற சிவ அம்சம் அழிக்கும் தொழில் செய்யும் மும்மூர்த்திகளுள் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறது.
@ஸ்ரீராம்
இன்னும் விளக்கம் தேவை என்றால் அடுத்த பதிவில்
கலியுக முடிவும் கல்கி அவதாரமும்
கிருஷ்னர், கல்கி எனும் விஷ்னுவின் 10வது அவதாரமாக பூமியில் அவதரிப்பார் என்பது ஐதீகம். அவர் எப்போது, எங்கே எப்படி தோன்றுவார் என்பன போன்ற கேள்விகளுக்கு புரானங்களும் இதிகாசங்களும் பிற மூலாதாரங்களும் குறிப்புகள் வழங்குகின்றன. அவை வாசகர்களின் பரிசீலனைக்கு இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக பகவத் கீதையில் காணக்கிடக்கும் விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றிய செய்யுட்களை காண்போம்:
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
இன்று உலக நிலைமையை கண்ணுறும் எவரும் உலக மக்களுக்கு ஒரு வழிகாட்டி தேவையில்லை, இருக்கும் வழிகாட்டிகளே போதும் என கூறிட முடியாது. வழிதவறிச் சென்று கொண்டிருக்கும் இந்த உலகை மனிதர்களால் மட்டும் வழிகாட்டிட முடியாது. மனித சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு ஆற்றல் நிச்சயமாகவே தேவை.
அதாவது எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் ஓர் ஆன்மாவை, அதாவது அவதாரத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த அவதாரம் யுகங்களுக்கிடையில் பூமியில் தோன்றி நல்லவர்களைப் பாதுகாத்து, கொடியவர்களை அழித்து புதிய தர்மம் ஒன்றை நிலைப்படுத்திடச் செய்கின்றது.
இதை மேலும் விரிவாகக் காண்போம்:
கல்கி அவதாரம் என்பது கிருஷ்ன பரமாத்மாவின் மறுவருகையை குறிப்பதாகும். இந்த அவதாரம் தோன்றக்கூடிய காலம் இடம் போன்றவை புராண இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன, மற்றும் தோன்றக்கூடிய இடம் பற்றிய வர்ணனையையும் கல்கி புராணத்தில் காணலாம்.
இடம் பெயர் பற்றிய கூற்றுகள்.
ஸம்பலக்ராம: முக்யஸ்ய ப்ராஹ்மனஸ்ய மகாத்மன:
பவனே விஷ்னுயஸஸ: கல்கி ப்ராதுர் பவிஷ்யதி
அதாவது, சம்பலக்கிராமத்தில் முக்கியஸ்தராக விளங்கும் ஒருவருடைய இல்லத்தில் கல்கி அவதரிப்பார் என்பது இதன் பொருள். ரஷ்ய நாட்டைச் சார்ந்த ரோரிச் எனும் சம்ஸ்கிருத பண்டிதர் சம்பல் என்பது பௌதீகரீதியிலான ஓர் இடமல்ல ஆனால் ஆன்மீகமும் லெளகீகமும் ஒன்று சேரும் ஓரிடம் என “மஹாபோதி, ஏப்ரல் 1948”எனும் சஞ்சிகையில் கூறியுள்ளார். இது இறைவனின் அவதாரங்களின் இயல்புகளான ஆன்மீகத்தையும் லெளகீகத்தையும் ஒருங்கினைப்பதை குறிப்பதாகும். அதே வேளையில் கல்கி புரானத்தில் சம்பலக்கிராமத்தின் லெளகீக வர்ணனையும் காணக்கிடக்கின்றது. சற்று ஆச்சரியப்படும் வகையிலேயே அவ்வர்ணனை அமைந்துள்ளது. கல்கி புரானத்தின் 2வது அம்சம் 6வது அத்தியாயத்தில் இவ்வர்ணனையைக் காணலாம்.
மேற்கண்டவற்றிலிருந்தும் புரானங்களில் மேற்கொண்டு காணப்படுவனவற்றையும் கொண்டு பின்வரும் பட்டியலை உருவாக்கலாம்:
இறைவன் உலகில் தர்மத்தை நிலைப்படுத்த காலத்திற்குக் காலம் தமது அவதாரம் ஒன்றை பூமிக்கு அனுப்புகின்றார். இந்த அவதரிப்பு யுகங்களின் சந்திப்பின் போது நிகழுகின்றது. விஷ்ணுவின் பத்தாவது அவதாரமாக கல்கி பூமியில் தோன்றவிருக்கின்றார் இந்தத் தோற்றம் கலியுகத்தின் முடிவில் உண்டாகும் கல்கி, சம்பல் எனும் கிராமத்தில் விஷ்னுயாஷா என்பவருக்கு மகனாக பிறப்பார்.
இப்போது கலி எப்போது முடிவுறும் கல்கி அவதாரம் எப்போது தோன்றும் என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகாண முயலுவோம்:
கலியுகம் எப்போது முடியும் எனும் கேள்விக்கு பலர் பலவிதமான பதிலைக் கூறுகின்றனர். சிலர் அது முடிவதற்கு 1200×360=4,32,000 வருடங்கள் இருக்கின்றன என கூறுகின்றனர். கலி யுகத்தின் முக்கியத்துவம் என்னவெனில் அதன் முடிவில் கிருஷ்னர் அவதரிப்பார் என்பதே ஆகும். 4.32,000 வருடங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் ஒரு விஷயத்தைப் பற்றி கவலைப்பட போகின்றவர்கள் வெகு குறைவாகவே இருப்பார்கள். இப்போது உலகை உலுக்கும் விஷயங்களே பெரிதாக இருக்கையில் 4,32,000 வருடங்களுக்குப் பிறகு கிருஷ்னர் தோன்றுவதால் இப்போது நமக்கு என்ன நன்மை? ஆனால், கலியுகம் முடிந்துவிட்டது என கூறும் பண்டிதர்களும் உண்டு. அதில் ஒருவர் டாக்டர் முஞ்சே என்பார். இவர் கலி முடிந்துவிட்டதற்கு பல ஆதாரங்களை வழங்கியுள்ளார். கலி முடிந்துவிட்டால் உலகம் ஏன் இன்னும் இவ்வாறு இருக்கின்றது என கேட்கப்பட்டதற்கு அவர் கலி புருஷன் இறந்துவிட்டான். அவனை இன்னமும் நடுவீட்டிற்குள் வைத்துக்கொண்டு அவன் இறக்கவில்லை என கூறிக்கொண்டிருந்தால் இறந்து போன பிணம் நாற்றம் எடுக்கவே செய்யும். இன்று உலகில் காணப்படும் பிரச்சினைகள் இந்த பிணநாற்றமே. பிணத்தை தூக்கியெரிந்துவிட்டு நடக்கவேண்டியதைப் பற்றி சிந்தித்தோமானால் மாற்றங்கள் நிகழும் என்றார்.
இந்தியாவில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஸூரதாஸர் எனும் ஞானி விக்கிரமாதித்த வருடம் 1900க்குப்பின் உலகில் ஒரு பெரும் நிகழ்வு உண்டாகும் என போதித்துள்ளார். விக்கிரமாதித்த வருடம் ஆங்கில வருடத்திற்கு 56 வருடங்கள் அதிகமாகும். ஆகவே 1900 – 56 = 1844ல் இம் மாபெரும் நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும். ஆக, கிபி 1844 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், உலக சமயங்களுக்கு பொதுவான அவதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வருடமும் ஆகும். வள்ளலார் இராமலிங்கர் கலி யுகம் 1900ஆம் வருடத்திற்கு முன்பே முடிவுறும் என கூறி பின் வரும் செய்யுளையும் பாடியுள்ளார்:
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடுந் தனித்தலைவ ரொருவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணமிது கூவுகின்றே னுமையே
பல கிருஸ்தவ சமயப்பிரிவுகளும் இயேசு நாதரின் மறுவருகை இந்த ஆண்டிலேயே நடக்கும் என போதித்துள்ளன. இஸ்லாமிய சமயத்தில் ஹிஜ்ரி 1260ல், அதாவது அதற்கு சமமான ஆங்கில வருடம் 1844ல் இதே போன்ற ஒரு தூதர் தோன்றுவார் எனும் நம்பிக்கையும் உள்ளது.
ஓர் அவதாரம் உலகில் தோன்றுவது ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள மக்களுக்காக என கூறுவது தவறாகும். எந்தவோர் அவதாரமும் ஒருதலை பட்சமாக அவதரிப்பதில்லை. எவ்வாறு இறைவன் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவராக இருக்கின்றாரோ அவ்வாறே அவரது அவதாரங்களும் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள். அவர்களை அவ்வாறு கண்டறிந்து ஏற்றுக்கொள்வது மனிதர்களின் கடமையாகும்.. ஆகவே, ஓர் அவதாரம் இங்கு மட்டும்தான் தோன்றுவார் அல்லது அங்கு மட்டும்தான் தோன்றுவார் எனக் கூறுவது ஏற்புடையதாகாது. இறைவன் படைத்த உலகமிது. அவர் விரும்புகின்றபடி அவர் தமது அவதாரத்தை எங்கு வேண்டுமானாலும் தோன்ற செய்யலாம். அதே ரீதியில் கல்கி அவதாரம் இந்தியாவில் மட்டுமே நடக்கும் என நிச்சயமாக கூறிடவும் முடியாது. கிருஷ்னர் வாழ்ந்த காலத்தில் இந்தியா என்றொரு நாடு கிடையாது. பாரதம் முழுவது 56 தேசங்கள் இருந்ததாக புரானங்கள் கூறுகின்றன.
பஹாய் சமயம் 1844ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி பாரசீக நாட்டில் தோற்றம் கண்டது. பாப் என்பார் முன்னோடியான அவதாரமாகவும், அவரையடுத்து பஹாவுல்லா என்பார் இறைவனின் முழு அவதாரமாகவும் தோன்றினர். பஹாய்கள் பஹாவுல்லா நிச்சயமாகவே கல்கி விஷ்ணு யாஷா, இயேசு நாதரின் மருவருகை, புத்தரின் மறுவருகையான மைத்ரேயி அமிதபா, யூதர்களின் மெஸ்ஸையா என நம்புகின்றனர். பஹாவுல்லா எனும் பெயரின் அர்த்தம், “இறைவனின் (ஜோதி/மகிமை/ஒளி)” என்பதாகும். சம்ஸ்கிருத மொழியில் “விஷ்ணுயாஷா”எனவும், ஆங்கிலத்தில் “Glory of God” எனவும் மொழி பெயர்க்கலாம். புத்த சமயத்தின் புத்தரின் ஐந்தாவது அவதாரத்தின் பெயரான “அமிதபா” என்பதன் அர்த்தமும் ஏறக்குறைய இதுவே ஆகும். அதாவது, “அமித” என்றால் அளவிடமுடியாதது அல்லது அதி உயர்ந்தது, “பா” என்றால் (ஜோதி/மகிமை/ஒளி) என்பதாகும்.
இறுதியாக,
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
பஹாவுல்லாவின் போதனைகளில் மிக அடிப்படையான போதனை ஒன்று தன்னிச்சையாக உண்மையை ஆராய வேண்டும் என்பதாகும். இங்கு பகிர்ந்தகொள்ளப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் வாசகர்களின் சிந்தனையை தூண்டிவிடுவதற்காகவே அளிக்கப்பட்டுள்ளன. ஆராய்ந்து உண்மையை கண்டறிவது அவரவர் கடமை
நன்றி https://ta.wikipedia.org/
சிவனை ஏன் அழிக்கும் கடவுள் என்று சொல்கிறார்கள்?
சிவன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும்.தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குறிய தெய்வமாக வழிபட்ட சேயோன்என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருளாகும். முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றனர். உலகத்தின் கடவுள் (எந்நாட்டவருக்கும் இறைவன்) எனவும், பரப்பிரம்மம், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும் இறைவன் என்று வழங்கப்பெறுகிறார். தேவநாகிரி சொல்லான சிவ என்பதற்கு களங்கமற்ற மற்றும் அழிப்பவர் என்று பொருளாகும். சிவபெருமானை அகங்காரத்தினை அழிப்பவர் என்று புராணங்கள் பிரம்மன் தலை கொய்தது முதல் தட்சன் அழிவு வரை மேற்கோள்களோடு கூறுகிறன. வேதங்களில் ருத்ரன் என்ற சிவ அம்சம் அழிக்கும் தொழில் செய்யும் மும்மூர்த்திகளுள் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறது.
@ஸ்ரீராம்
இன்னும் விளக்கம் தேவை என்றால் அடுத்த பதிவில்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விஷ்ணு வழிபட்ட சிவாலயங்கள்:
ஆன்மீக தகவல்களுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: விஷ்ணு வழிபட்ட சிவாலயங்கள்:
முழுவதையும் படித்தேன்.
சிறப்பான விளக்கம் அண்ணா.
கலியுகம் முடிந்து விட்டது எனக்கும் பலர் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு முறை மகாசிவராத்திரி அன்று நானும் என் நண்பர்களும் திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரரை முன்னிரைவில் தரிசித்து விட்டு வீடு நோக்கி நடக்க தொடங்கும் போது பிரம்ம குமாரிகள் குழுவினர் தங்கள் கண்காட்சியை பார்க்க அழைப்பு விடுத்தார்கள். நாங்களும் முதலில் தயங்கினாலும் பின்னர் அவர்களின் அழைப்பை ஏற்று அவர்களின் ஷாமியானா கொட்டகைக்குள் நுழைந்தோம்.
அங்கே பரமாத்த்மா பற்றியும், யுகங்கள் பற்றியும் பல விதமான பெரிய சைஸ் படங்கள் வைத்து இருந்தார்கள். அவர்கள் கடவுள் ஒருவரே. அவர்தான் பிரமாத்மா அவர்களிடம் இருந்துதான் மற்ற கடவுள்கள் பல விதங்களில் வருகிறார்கள் என்றார்கள். ஒரு யுகம் என்பது 1250 வருடம் என்றும் சொன்னார்கள். கலியுகம் முடிந்து விட்டதாக சொன்னார்கள். இப்போது மீண்டும் கிருத யுகம் தொடங்கி விட்டது என்றார்கள். எனக்கு ஒரே ஆச்சிரியம்.
நான் புள்ளி விவரங்களை அடுக்க தொடங்கினேன். கிமு 900ல மகாபாரதப் போர் வந்தது. அதன் பிறகு கலியுகம் தொடங்கி 900+2010=2910 ஆண்டுகள் ஆகிறது. எப்படி முடிந்ததாக சொல்கிறீர்கள் என்றேன். கல்கி அவதரித்து விட்டாரா என்றேன்.
ஆம் அவதரித்து விட்டார் என்றார்கள்.
எங்கே இருக்கார்? என்றேன்..
நீங்கள் எங்கள் பிரம்ம குமாரிகள் சங்கம் வாருங்கள். 3 மாத பயற்ச்சிக்கு பிறகு 10வது அவதாரமான கல்கியை பார்க்க முடியும் என்றார்கள்.
என் நண்பர்கள் வற்புறுத்தியதால் அத்தோடு விட்டு விட்டு வந்து விட்டேன்.
நான் ஒரு இடத்தில் படித்து தெரிந்தது இதுதான்:
ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை
21,600
21,600 x 200 43,20,000
ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை
கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும்.
கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள்
திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள்
துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள்
கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள்
ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள்
நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும்.
1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள்
71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம்
என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும்.
2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்)
2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.
தற்போதையபிரம்மாவின் வயது 51 .
@முழுமுதலோன்
சிறப்பான விளக்கம் அண்ணா.
கலியுகம் முடிந்து விட்டது எனக்கும் பலர் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு முறை மகாசிவராத்திரி அன்று நானும் என் நண்பர்களும் திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரரை முன்னிரைவில் தரிசித்து விட்டு வீடு நோக்கி நடக்க தொடங்கும் போது பிரம்ம குமாரிகள் குழுவினர் தங்கள் கண்காட்சியை பார்க்க அழைப்பு விடுத்தார்கள். நாங்களும் முதலில் தயங்கினாலும் பின்னர் அவர்களின் அழைப்பை ஏற்று அவர்களின் ஷாமியானா கொட்டகைக்குள் நுழைந்தோம்.
அங்கே பரமாத்த்மா பற்றியும், யுகங்கள் பற்றியும் பல விதமான பெரிய சைஸ் படங்கள் வைத்து இருந்தார்கள். அவர்கள் கடவுள் ஒருவரே. அவர்தான் பிரமாத்மா அவர்களிடம் இருந்துதான் மற்ற கடவுள்கள் பல விதங்களில் வருகிறார்கள் என்றார்கள். ஒரு யுகம் என்பது 1250 வருடம் என்றும் சொன்னார்கள். கலியுகம் முடிந்து விட்டதாக சொன்னார்கள். இப்போது மீண்டும் கிருத யுகம் தொடங்கி விட்டது என்றார்கள். எனக்கு ஒரே ஆச்சிரியம்.
நான் புள்ளி விவரங்களை அடுக்க தொடங்கினேன். கிமு 900ல மகாபாரதப் போர் வந்தது. அதன் பிறகு கலியுகம் தொடங்கி 900+2010=2910 ஆண்டுகள் ஆகிறது. எப்படி முடிந்ததாக சொல்கிறீர்கள் என்றேன். கல்கி அவதரித்து விட்டாரா என்றேன்.
ஆம் அவதரித்து விட்டார் என்றார்கள்.
எங்கே இருக்கார்? என்றேன்..
நீங்கள் எங்கள் பிரம்ம குமாரிகள் சங்கம் வாருங்கள். 3 மாத பயற்ச்சிக்கு பிறகு 10வது அவதாரமான கல்கியை பார்க்க முடியும் என்றார்கள்.
என் நண்பர்கள் வற்புறுத்தியதால் அத்தோடு விட்டு விட்டு வந்து விட்டேன்.
நான் ஒரு இடத்தில் படித்து தெரிந்தது இதுதான்:
ஒரு மனிதனின் ஒருநாள் சுவாச எண்ணிக்கை
21,600
21,600 x 200 43,20,000
ஒரு சதுர்யுகத்தின் இருநூறுவருடங்களை 80+60+40+20 எனப்பிரித்து நான்கு யுகங்களாக்கினர் நமது முன்னோர்கள்.அவை
கிருத யுகம், திரேத யுகம், துவாபர யுகம் ,கலியுகம் ஆகும்.
கிருத யுகம் 21,600 x 80 = 17,28,000 ஆண்டுகள்
திரேத யுகம் 21,600 x 60 =12,96,000 ஆண்டுகள்
துவாபரயுகம்21,600 x 40 = 8,64,000 ஆண்டுகள்
கலியுகம் 21,600 x 20 = 4,32,000 ஆண்டுகள்
ஆகமொத்தம் 43,20,000 ஆண்டுகள்
நான்கு யுகங்கள் சேர்ந்து ஒரு சதுர்(4)யுகம் ஆகும்.
1 சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகள்
71 சதுர்யுகம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
1 மன்வந்திரம் என்பது 30,67,20,000 ஆண்டுகள்
994 சதுர்யுகங்கள் அல்லது 14 மன்வந்திரம்
என்பது 429,40,80,000 ஆண்டுகளாகும்.
2கல்பம் என்பது 14 மன்வந்திரம்(429,40,80,000ஆண்டுகள்)
2கல்பம் என்பது பிரம்மாவுக்கு ஒரு நாள் ஆகும்.
தற்போதையபிரம்மாவின் வயது 51 .
@முழுமுதலோன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: விஷ்ணு வழிபட்ட சிவாலயங்கள்:
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: விஷ்ணு வழிபட்ட சிவாலயங்கள்:
முழுமுதலோன் wrote:அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பெருமாள் வழிபட்ட சிவாலயங்கள்
» நீங்கள் பகவான் விஷ்ணு பக்தரா?? இங்க வாங்க.. இலவச தரிசனம் பண்ணுங்க
» வெங்கடேஸ்வர சுவாமியை வழிபட்ட இஸ்லாமியர்கள்
» ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு...
» ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சதநாமாவளி
» நீங்கள் பகவான் விஷ்ணு பக்தரா?? இங்க வாங்க.. இலவச தரிசனம் பண்ணுங்க
» வெங்கடேஸ்வர சுவாமியை வழிபட்ட இஸ்லாமியர்கள்
» ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு...
» ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சதநாமாவளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|