Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று
Page 1 of 1 • Share
பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று
பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றுதான். என்ன, பிடித்தமான ஒன்றின் மீது பிடிவாதமாய் இருக்கவேண்டும். அவ்வளவேதான்!
மாரத்தான் மிராக்கல் என்று ஒரு குறும்படம். அதில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. 1, 157 என்ற எண்களுடன் இருவர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 157 ஆம் எண் சிறுவன். 1ஆம் எண் இளைஞன். ஏற்கனவே பல போட்டிகளில் கலந்து, வென்றவன். சுற்றியிருக்கும் கூட்டம் 1ஆம் எண்ணை உற்சாகப்படுத்துகிறது.
சிறுவனோ சற்றே பயம் கலந்த முகத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறான். உடன் தந்தை ஓடி வருகிறார். பார்வையாளர்களின் இடையில் புகுந்து ஓடிக்கொண்டே கத்துகிறார். ‘நீ ஓடு! வேகமாக ஓடு! உனக்குப் பிடித்ததை செய்கிறாய். பிடிவாதம் பிடி. உன் வெற்றியை நிச்சயமாக்கு!”
சிறுவன் தந்தையைப்பார்க்கிறான். வேகமாக ஓடுகிறான். சுற்றியிருப்பவர்களோ, தந்தையையும் மகனையும் வினோதமாகப் பார்க்கின்றனர். காமிரா ஓடுகளத்தை விட்டு ஒரு மருத்துவ மனைக்குத் திரும்புகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கின்ற ஒரு பெண்ணைக்காட்டுகிறது. அடுத்து காமிராவின் பார்வை ஒரு பள்ளியையும், அதில் உள்ள பிரார்த்தனைக்கூடத்தில் அழுது கொண்டிருக்கிற ஒரு சிறுமியையும் காட்டி விட்டு மீண்டும் ஓடுகளம் நோக்குகிறது. ஓடுகின்ற இருவரையும் காட்டுகிறது. வெற்றியின் எல்லைக்கோடு நெருங்குகிறது.
சுற்றியிருப்பவர்கள் ஒன்றாம் எண் இளைஞனை அதிகமாக உற்சாகப்படுத்துகின்றனர். அவர் எல்லைக்கோட்டை நெருங்குகிறார். சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஒரு சில அடி இடைவெளியே! திக்… திக்…. ஒன்றாம் எண் இளைஞன் வெற்றிக்கோட்டின் அருகில். பார்க்கிறான் சிறுவன்… பாய்கிறான். எல்லைக் கோட்டைத் தொடுகிறான். வெல்கிறான்.
காமிராவோ, சிறுவனின் சந்தோஷத்தை காட்டுவதற்கு முன்பு மருத்துவமனைக்குத் திரும்பி, தீவிர சிகிச்சைப்பிரிவில் படுத்திருந்த பெண்ணின் அமைதியான முகத்தில் வந்து மறைந்த சின்னஞ் சிறு புன்னகையை காட்டுகிறது. பின் அவன் சகோதரியான பள்ளிச்சிறுமியின் சந்தோஷத்தைக் காட்டுகிறது.
நம்மீதான நம்பிக்கை மலைகளைவிட உயர்ந்தது. ஏறுகின்ற போதெல்லாம் மலை நம் காலடியில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாம் நடக்கிறபடிதான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்போது நடப்பது? எடுத்து வைக்கின்ற முதல் அடியின் தீவிரத்தில்தான் எதுவும் நடக்கும்.
ஒருவன் ஒரு பெரியவரிடம் போய் சொன்னானாம், ‘எனக்கு வாழ்க்கையே கஷ்டமாக இருக்கு”. அந்தப் பெரியவர் கேட்டார், ”எதனுடன் ஒப்பிடுகையில்?” உண்மைதான். எதனுடன் ஒப்பிட்டு வாழ்க்கை கஷ்டம் என்று சொல்வது?
நம் எதிர்காலத்தை கண்களில் கனவுகளாக, வைத்திருப்பதில் அர்த்தமில்லை. அந்தக் கனவுகள் நம் உணர்வுகளில் கலந்து இருக்கவேண்டும். அப்பொழுதுதான், அது உயிர்பெறும். விஸ்வ ரூபமெடுக்கும். நம் குறிக்கோள்களை சென்றடையும்வரை நாம் செவிடர்களாக இருப்பது நல்லது. ஏன் தெரியுமா? 50கள்வரை மருத்துவர்கள் ஒரு கணிப்பு சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு மனிதனால் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடுவது என்பது இயலாத காரியம்.
ஏனெனில், மனிதனின் உடல் ஒத்துழைக்காது. அப்படியே ஓடினாலும் இரத்தம் சூடேறிவிடும். மரணத்தையும்கூட சந்திக்க நேரிடும் என்றார்கள். எல்லோருமே அதை ஆமோதித்தார்கள். கேட்டுக் கொண்டார்கள். ஒருவர் மட்டும் இது எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. 1954ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம்தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடம் 59.4 வினாடிகளில் கடந்தார். அவர் பெயர் ரோக் ரேனிஸ்டர்.
1957இல் மீண்டும் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார், 3.58 நிமிடங்களில். அதற்குப்பின் 4700 முறைஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே கடந்து பலரும் சாதித்தனர். சாதனையை துவக்கிவைத்து, கணிப்புக்களைப் பொய்யாக்கியவர், ரோக் ரேனிஸ்டர். சற்றேசிலிர்ப்புடன் அவர் சொன்ன வாசகம், ‘Dont listen to the voice of Doubts’. சந்தேகத்தின் குரல் நமக்கு பகைவன்தான்.
உடலும்கூட ஒத்துழைக்கும் நாம் உறுதியுடன் இருந்தால்! உலக சைக்கிள் சாம்பியன், இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். ஐந்து டூர் தி பிரான்ஸ் பட்டம் வென்றவர் லான்ஸ்! பதினாறு மணிநேரம் பயிற்சி! நான்கு மணி நேரம் மருத்துவ சிகிச்சை! நான்கு மணிநேரம் ஓய்வு! அவர் புற்று நோயிலிருந்து விடுபட்டவர். லட்சியத்தின் மீதான பிடிவாதத்தில் வென்றது அவர்! தோற்றது அவர் நோய்!
இலட்சியத்தின் மீது பிடிவாதமாக இருங்கள். வெற்றிகளை இறுகப் பற்றுங்கள்.
-மகேஸ்வரி சற்குரு
மாரத்தான் மிராக்கல் என்று ஒரு குறும்படம். அதில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. 1, 157 என்ற எண்களுடன் இருவர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். 157 ஆம் எண் சிறுவன். 1ஆம் எண் இளைஞன். ஏற்கனவே பல போட்டிகளில் கலந்து, வென்றவன். சுற்றியிருக்கும் கூட்டம் 1ஆம் எண்ணை உற்சாகப்படுத்துகிறது.
சிறுவனோ சற்றே பயம் கலந்த முகத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறான். உடன் தந்தை ஓடி வருகிறார். பார்வையாளர்களின் இடையில் புகுந்து ஓடிக்கொண்டே கத்துகிறார். ‘நீ ஓடு! வேகமாக ஓடு! உனக்குப் பிடித்ததை செய்கிறாய். பிடிவாதம் பிடி. உன் வெற்றியை நிச்சயமாக்கு!”
சிறுவன் தந்தையைப்பார்க்கிறான். வேகமாக ஓடுகிறான். சுற்றியிருப்பவர்களோ, தந்தையையும் மகனையும் வினோதமாகப் பார்க்கின்றனர். காமிரா ஓடுகளத்தை விட்டு ஒரு மருத்துவ மனைக்குத் திரும்புகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கின்ற ஒரு பெண்ணைக்காட்டுகிறது. அடுத்து காமிராவின் பார்வை ஒரு பள்ளியையும், அதில் உள்ள பிரார்த்தனைக்கூடத்தில் அழுது கொண்டிருக்கிற ஒரு சிறுமியையும் காட்டி விட்டு மீண்டும் ஓடுகளம் நோக்குகிறது. ஓடுகின்ற இருவரையும் காட்டுகிறது. வெற்றியின் எல்லைக்கோடு நெருங்குகிறது.
சுற்றியிருப்பவர்கள் ஒன்றாம் எண் இளைஞனை அதிகமாக உற்சாகப்படுத்துகின்றனர். அவர் எல்லைக்கோட்டை நெருங்குகிறார். சிறுவனுக்கும் இளைஞனுக்கும் இடையில் ஒரு சில அடி இடைவெளியே! திக்… திக்…. ஒன்றாம் எண் இளைஞன் வெற்றிக்கோட்டின் அருகில். பார்க்கிறான் சிறுவன்… பாய்கிறான். எல்லைக் கோட்டைத் தொடுகிறான். வெல்கிறான்.
காமிராவோ, சிறுவனின் சந்தோஷத்தை காட்டுவதற்கு முன்பு மருத்துவமனைக்குத் திரும்பி, தீவிர சிகிச்சைப்பிரிவில் படுத்திருந்த பெண்ணின் அமைதியான முகத்தில் வந்து மறைந்த சின்னஞ் சிறு புன்னகையை காட்டுகிறது. பின் அவன் சகோதரியான பள்ளிச்சிறுமியின் சந்தோஷத்தைக் காட்டுகிறது.
நம்மீதான நம்பிக்கை மலைகளைவிட உயர்ந்தது. ஏறுகின்ற போதெல்லாம் மலை நம் காலடியில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாம் நடக்கிறபடிதான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்போது நடப்பது? எடுத்து வைக்கின்ற முதல் அடியின் தீவிரத்தில்தான் எதுவும் நடக்கும்.
ஒருவன் ஒரு பெரியவரிடம் போய் சொன்னானாம், ‘எனக்கு வாழ்க்கையே கஷ்டமாக இருக்கு”. அந்தப் பெரியவர் கேட்டார், ”எதனுடன் ஒப்பிடுகையில்?” உண்மைதான். எதனுடன் ஒப்பிட்டு வாழ்க்கை கஷ்டம் என்று சொல்வது?
நம் எதிர்காலத்தை கண்களில் கனவுகளாக, வைத்திருப்பதில் அர்த்தமில்லை. அந்தக் கனவுகள் நம் உணர்வுகளில் கலந்து இருக்கவேண்டும். அப்பொழுதுதான், அது உயிர்பெறும். விஸ்வ ரூபமெடுக்கும். நம் குறிக்கோள்களை சென்றடையும்வரை நாம் செவிடர்களாக இருப்பது நல்லது. ஏன் தெரியுமா? 50கள்வரை மருத்துவர்கள் ஒரு கணிப்பு சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு மனிதனால் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடுவது என்பது இயலாத காரியம்.
ஏனெனில், மனிதனின் உடல் ஒத்துழைக்காது. அப்படியே ஓடினாலும் இரத்தம் சூடேறிவிடும். மரணத்தையும்கூட சந்திக்க நேரிடும் என்றார்கள். எல்லோருமே அதை ஆமோதித்தார்கள். கேட்டுக் கொண்டார்கள். ஒருவர் மட்டும் இது எதையுமே காதில் போட்டுக்கொள்ளவில்லை. 1954ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம்தேதி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் ஒரு மைல் தூரத்தை 3 நிமிடம் 59.4 வினாடிகளில் கடந்தார். அவர் பெயர் ரோக் ரேனிஸ்டர்.
1957இல் மீண்டும் ஒருவர் அந்த சாதனையை முறியடித்தார், 3.58 நிமிடங்களில். அதற்குப்பின் 4700 முறைஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே கடந்து பலரும் சாதித்தனர். சாதனையை துவக்கிவைத்து, கணிப்புக்களைப் பொய்யாக்கியவர், ரோக் ரேனிஸ்டர். சற்றேசிலிர்ப்புடன் அவர் சொன்ன வாசகம், ‘Dont listen to the voice of Doubts’. சந்தேகத்தின் குரல் நமக்கு பகைவன்தான்.
உடலும்கூட ஒத்துழைக்கும் நாம் உறுதியுடன் இருந்தால்! உலக சைக்கிள் சாம்பியன், இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர். ஐந்து டூர் தி பிரான்ஸ் பட்டம் வென்றவர் லான்ஸ்! பதினாறு மணிநேரம் பயிற்சி! நான்கு மணி நேரம் மருத்துவ சிகிச்சை! நான்கு மணிநேரம் ஓய்வு! அவர் புற்று நோயிலிருந்து விடுபட்டவர். லட்சியத்தின் மீதான பிடிவாதத்தில் வென்றது அவர்! தோற்றது அவர் நோய்!
இலட்சியத்தின் மீது பிடிவாதமாக இருங்கள். வெற்றிகளை இறுகப் பற்றுங்கள்.
-மகேஸ்வரி சற்குரு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பிடிவாதம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று
இலட்சியத்தின் மீது பிடிவாதமாக இருங்கள். வெற்றிகளை இறுகப் பற்றுங்கள்.
Similar topics
» உங்களுக்குப் பிடித்தமான பாடல் வரிகள் எது?
» வேண்டாம் என்றும் பிடிவாதம் - சிறுவர் பாடல்
» கதை ஒன்று படிப்போமா....
» முல்லாவின் கதை ஒன்று
» ஆசை என்ற ஒன்று இல்லை என்றால்
» வேண்டாம் என்றும் பிடிவாதம் - சிறுவர் பாடல்
» கதை ஒன்று படிப்போமா....
» முல்லாவின் கதை ஒன்று
» ஆசை என்ற ஒன்று இல்லை என்றால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|