Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எல்லோராலும் எல்லாமும் முடியும் மனம் திறக்கிறார்: சாட்னா டைட்ஸ்
Page 1 of 1 • Share
எல்லோராலும் எல்லாமும் முடியும் மனம் திறக்கிறார்: சாட்னா டைட்ஸ்
[img][/img]
-
மலையாளம், தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளும் கலந்து பேசுகிறார் சாட்டன் டைட்ஸ். “பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக ரசிக்க வைத்தவர். அடுத்தடுத்த படங்கள் வரிசைக் கட்டி நின்றாலும் கதை தேர்வில் நிதானம் கடைப்பிடிக்கிறார். “”ஏன் ஆரம்பத்திலேயே இவ்வளவு நிதானம்…” என்றால், “”எல்லாம் ஒரு சின்ன கணக்குதான்…” உள்ளங்கையில் முகம் புதைத்து சிரிக்கிறார், கோலிவுட்டில் “சம்திங் ஸ்பெஷல் ஹீரோயின்’….
உங்களைப் பற்றி…?
நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் எர்ணாகுளம். பக்கா மலையாளப் பொண்ணு. பள்ளியில் படிக்கும் போதே பாட்டு, டான்ஸ் என்று எல்லாவற்றிலும் ஆர்வம். பரதம், கர்நாடிக் மியூசிக் என்று எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். என் அழகை முன் வைத்து சிலர் “”நீ சினிமாவில் நடிக்கலாம்…” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதில் எனக்கு பெரிய இஷ்டம் இருந்ததில்லை. கொஞ்சம் படிப்பு, அதன் பின் கல்யாணம் என சராசரி பெண்ணாகத்தான் யோசித்தேன். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு விடுமுறையில் இருந்த போது, மாடலிங் வாய்ப்பு வந்தது. நமக்கும் “டைம் பாஸ்’ ஆகுமே என்று மாடலிங் செய்தேன். அது அப்படியே சினிமா நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து வந்து விட்டது. 2015-இல் மலையாளத்தில் ஒரு சின்ன அறிமுகம். இப்போது “பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் உங்களுக்கெல்லாம் தெரிந்த நடிகை. இதுதான் என் பயோகிராபி.
-
மலையாளம், தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளும் கலந்து பேசுகிறார் சாட்டன் டைட்ஸ். “பிச்சைக்காரன்’ படத்தில் கதாநாயகியாக ரசிக்க வைத்தவர். அடுத்தடுத்த படங்கள் வரிசைக் கட்டி நின்றாலும் கதை தேர்வில் நிதானம் கடைப்பிடிக்கிறார். “”ஏன் ஆரம்பத்திலேயே இவ்வளவு நிதானம்…” என்றால், “”எல்லாம் ஒரு சின்ன கணக்குதான்…” உள்ளங்கையில் முகம் புதைத்து சிரிக்கிறார், கோலிவுட்டில் “சம்திங் ஸ்பெஷல் ஹீரோயின்’….
உங்களைப் பற்றி…?
நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் எர்ணாகுளம். பக்கா மலையாளப் பொண்ணு. பள்ளியில் படிக்கும் போதே பாட்டு, டான்ஸ் என்று எல்லாவற்றிலும் ஆர்வம். பரதம், கர்நாடிக் மியூசிக் என்று எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். என் அழகை முன் வைத்து சிலர் “”நீ சினிமாவில் நடிக்கலாம்…” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதில் எனக்கு பெரிய இஷ்டம் இருந்ததில்லை. கொஞ்சம் படிப்பு, அதன் பின் கல்யாணம் என சராசரி பெண்ணாகத்தான் யோசித்தேன். பள்ளிப் படிப்பை முடித்து விட்டு விடுமுறையில் இருந்த போது, மாடலிங் வாய்ப்பு வந்தது. நமக்கும் “டைம் பாஸ்’ ஆகுமே என்று மாடலிங் செய்தேன். அது அப்படியே சினிமா நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக இழுத்து வந்து விட்டது. 2015-இல் மலையாளத்தில் ஒரு சின்ன அறிமுகம். இப்போது “பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் உங்களுக்கெல்லாம் தெரிந்த நடிகை. இதுதான் என் பயோகிராபி.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: எல்லோராலும் எல்லாமும் முடியும் மனம் திறக்கிறார்: சாட்னா டைட்ஸ்
மாடலிங் நாள்கள் எப்படி இருந்தன…?
-
நகைக் கடை விளம்பரம், ஜவுளிக் கடை விளம்பரம்
என நிறைய விளம்பர படங்களில் நடித்தேன். அதுதான்
முதல் கேமரா அனுபவம். ஒரு கட்டத்தில் நிறைய வாய்ப்புகள்
வந்தன.
“இப்படியே விளம்பரம் விளம்பரம் என்று சுற்றிக் கொண்டிருந்தால்
எப்படி… அடுத்தக் கட்டம் பற்றி யோசி…” என்றார்கள். அதுதான்
சினிமா நோக்கி அழைத்து வந்தது. அதுதான் என் சினிமா
வாழ்க்கைக்கான முதல் அடி. தமிழ் சினிமா ரொம்பவே பிடிக்கும்.
திறமையும், அழகும் இருந்தால் தமிழ் ரசிகர்கள் ஹீரோயினை
எந்தளவுக்கும் கொண்டாடுவார்கள் எனத் தெரிந்து கொண்டேன்.
அதனால்தான் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது.
ஒரு மேனேஜர் மூலம் என் புகைப்படங்களை சென்னைக்கு அனுப்பி
வைத்தேன். அதை பார்த்து விட்டு “நான்’ படத்துக்காக
அழைத்திருந்தார் விஜய் ஆண்டனி சார்.
ஆனால் அதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சில மாதங்கள் வரை
காத்திருந்தேன். நல்ல வாய்ப்பு எதுவும் அமையவில்லை. மீண்டும்
ஒரு முறை அழைத்த விஜய் ஆண்டனி சார் “பிச்சைக்காரன்’ பட
வாய்ப்பு தந்தார்.
-
“பிச்சைக்காரன்’ மூலம் நல்ல அறிமுகம் இருந்தும், இன்னும்
ஜவுளிக்கடை விளம்பரத்தில்தான் உங்களைப் பார்க்க முடிகிறது…
ஏன்…?
-
எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது இருக்கிற மாதிரிதான்
இதுவும். விளம்பரங்கள் மூலமாக எத்தனையோ பேர்
மேடையேற்றப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். விளம்பரம்
என்று சாதாரணமாக பேசி விட முடியாது. அது பெரிய வாய்ப்பு.
-
ஆனால், அதை வாய்ப்பாக மட்டும்தான் பார்க்க வேண்டும்.
அதுவே வாழ்க்கையில்லை. சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு வந்து
கொண்டே இருந்தால் விளம்பரத்தில் நடிக்க கூடாது என்று எதுவுமில்லை.
-
-------------
-
நகைக் கடை விளம்பரம், ஜவுளிக் கடை விளம்பரம்
என நிறைய விளம்பர படங்களில் நடித்தேன். அதுதான்
முதல் கேமரா அனுபவம். ஒரு கட்டத்தில் நிறைய வாய்ப்புகள்
வந்தன.
“இப்படியே விளம்பரம் விளம்பரம் என்று சுற்றிக் கொண்டிருந்தால்
எப்படி… அடுத்தக் கட்டம் பற்றி யோசி…” என்றார்கள். அதுதான்
சினிமா நோக்கி அழைத்து வந்தது. அதுதான் என் சினிமா
வாழ்க்கைக்கான முதல் அடி. தமிழ் சினிமா ரொம்பவே பிடிக்கும்.
திறமையும், அழகும் இருந்தால் தமிழ் ரசிகர்கள் ஹீரோயினை
எந்தளவுக்கும் கொண்டாடுவார்கள் எனத் தெரிந்து கொண்டேன்.
அதனால்தான் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது.
ஒரு மேனேஜர் மூலம் என் புகைப்படங்களை சென்னைக்கு அனுப்பி
வைத்தேன். அதை பார்த்து விட்டு “நான்’ படத்துக்காக
அழைத்திருந்தார் விஜய் ஆண்டனி சார்.
ஆனால் அதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. சில மாதங்கள் வரை
காத்திருந்தேன். நல்ல வாய்ப்பு எதுவும் அமையவில்லை. மீண்டும்
ஒரு முறை அழைத்த விஜய் ஆண்டனி சார் “பிச்சைக்காரன்’ பட
வாய்ப்பு தந்தார்.
-
“பிச்சைக்காரன்’ மூலம் நல்ல அறிமுகம் இருந்தும், இன்னும்
ஜவுளிக்கடை விளம்பரத்தில்தான் உங்களைப் பார்க்க முடிகிறது…
ஏன்…?
-
எல்லா விஷயங்களிலும் நல்லது, கெட்டது இருக்கிற மாதிரிதான்
இதுவும். விளம்பரங்கள் மூலமாக எத்தனையோ பேர்
மேடையேற்றப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். விளம்பரம்
என்று சாதாரணமாக பேசி விட முடியாது. அது பெரிய வாய்ப்பு.
-
ஆனால், அதை வாய்ப்பாக மட்டும்தான் பார்க்க வேண்டும்.
அதுவே வாழ்க்கையில்லை. சினிமாவில் ஹீரோயினாக வாய்ப்பு வந்து
கொண்டே இருந்தால் விளம்பரத்தில் நடிக்க கூடாது என்று எதுவுமில்லை.
-
-------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: எல்லோராலும் எல்லாமும் முடியும் மனம் திறக்கிறார்: சாட்னா டைட்ஸ்
ஹிந்தி, தமிழ், தெலுங்கு என தனக்கென ஒரு இடத்தை வைத்திருக்கும் காஜல் இன்றைக்கும் விளம்பரத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். என்னைப் பொருத்தவைர அங்கேயும் கேமரா, இயக்குநர் என எல்லோருமே இருக்கிறார்கள்.
-
அதுவும் ஒரு சினிமா மாதிரிதான். இது மட்டுமேதான் வாழ்க்கையையே தீர்மானிக்கப்போகிறது என்ற அழுத்தத்தை மனசுக்குள் ஏற்றிக் கொள்ளக் கூடாது. நான் இப்போது விளம்பரத்தில் நடித்திருப்பதும் அப்படித்தான். “பிச்சைக்காரன்’ படத்துக்குப் பின் சரியான வாய்ப்புகள் இல்லை. அதனால் விளம்பரங்களில் நடித்தேன். என் முகம் எல்லோருக்கும் தெரிய வேண்டும். அதற்கு விளம்பரமும் முக்கியம்.
-
சினிமா ஆசையில் வரும் பெண்களுக்கு…
ஏதாவது அனுபவ வார்த்தைகள்…
அந்தளவுக்கு நான் பெரிய நடிகை கிடையாது. இப்போதுதான் முதல் படம் முடித்து அடுத்த படத்துக்கு காத்திருக்கும் ஹீரோயின். கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும்,
இதுதான் அனுபவத்தில் உணர்ந்த விஷயம். எல்லோராலும் எல்லாமும் முடியும். இவருக்குத்தான் இது என்று எதுவும் இங்கே எழுதி வைக்கப்படவில்லை.
ரொம்பவே அழகாக இருக்கீங்க…
நிஜமாகவா… ( சிரிக்கிறார்) என்ன நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய் என்பதில் அத்தனை உண்மையிருக்கிறது. இது என் வாழ்க்கையில் நடந்த விஷயமும் கூட. எல்லோருக்கும் நல்லது நினைப்போம். நன்றாக வாழ்வோம் என்பது என் விதி. மனசை சந்தோஷமாக வைத்துக் கொண்டாலே முகத்தில் அத்தனை அழகு தெரியும். இது என் அழகு டிப்ஸ்.
அடுத்தப் படம்…?
“திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என்கிற படம்.
– ஜி. அசோக்
தினமணி
-
அதுவும் ஒரு சினிமா மாதிரிதான். இது மட்டுமேதான் வாழ்க்கையையே தீர்மானிக்கப்போகிறது என்ற அழுத்தத்தை மனசுக்குள் ஏற்றிக் கொள்ளக் கூடாது. நான் இப்போது விளம்பரத்தில் நடித்திருப்பதும் அப்படித்தான். “பிச்சைக்காரன்’ படத்துக்குப் பின் சரியான வாய்ப்புகள் இல்லை. அதனால் விளம்பரங்களில் நடித்தேன். என் முகம் எல்லோருக்கும் தெரிய வேண்டும். அதற்கு விளம்பரமும் முக்கியம்.
-
சினிமா ஆசையில் வரும் பெண்களுக்கு…
ஏதாவது அனுபவ வார்த்தைகள்…
அந்தளவுக்கு நான் பெரிய நடிகை கிடையாது. இப்போதுதான் முதல் படம் முடித்து அடுத்த படத்துக்கு காத்திருக்கும் ஹீரோயின். கிடைக்கிற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும்,
இதுதான் அனுபவத்தில் உணர்ந்த விஷயம். எல்லோராலும் எல்லாமும் முடியும். இவருக்குத்தான் இது என்று எதுவும் இங்கே எழுதி வைக்கப்படவில்லை.
ரொம்பவே அழகாக இருக்கீங்க…
நிஜமாகவா… ( சிரிக்கிறார்) என்ன நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய் என்பதில் அத்தனை உண்மையிருக்கிறது. இது என் வாழ்க்கையில் நடந்த விஷயமும் கூட. எல்லோருக்கும் நல்லது நினைப்போம். நன்றாக வாழ்வோம் என்பது என் விதி. மனசை சந்தோஷமாக வைத்துக் கொண்டாலே முகத்தில் அத்தனை அழகு தெரியும். இது என் அழகு டிப்ஸ்.
அடுத்தப் படம்…?
“திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என்கிற படம்.
– ஜி. அசோக்
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சிறந்த மனம் சேவை மனம்
» என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்? இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
» மனம்
» அமைதியான மனம் பெற...
» மனம் வெளுக்க
» என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்? இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
» மனம்
» அமைதியான மனம் பெற...
» மனம் வெளுக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|