Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
https://2img.net/h/oi66.tinypic.com/faqypw.jpg" alt="" />[/img]
-
-
வயல்வெளி தன்னில் ஏர்வுழவன் —- அன்று
வகையாய் உழுதுநற் பயிர்விளைக்க
அயரா துழைத்ததன் பலனன்றோ — நாம்
அமர்ந்தே உணவுண்டு மகிழ்வதெலாம் !
துயர்களைக் கண்டிட்டும் துவளாமல் — அவன்
துடிப்புடன் உழைத்திடும் விவேகமதை
நயமுடன் போற்றிட்டு வாழ்த்துவதே —. என்றும்
நம்மின் கடனென்றும் உணர்வோமே !
இயற்கை நமக்கென்றும் துணைநிற்கும் —- அது
என்றென்றும் நம்மைக் காக்குமென்றே
வியர்வையைச் சிந்திட்டு உழைக்கின்றான் —- அவன்
விவேகம் தவறென்றும் ஆகிடுமோ ?
உயர்வான செயலே அவனின்செயல் —– என்றும்
உலகோர் பசிதன்னைப் போக்கும்செயல் !
பயந்திட்டு அன்னவன் சுணக்கமுற —- நம்மின்
பசிக்கென எதைவுண்ணக் கண்டிடுவோம் ?
சேற்றிலே கைவைக்க உழவரெலாம் —- அன்று
சிறிதுமே மனமின்றி துவண்டிருந்தால்
சோற்றிலே நாமின்றுக் கைவைத்தே —- உண்டு
சுகமுற உறங்கிக் களிப்போமா ?
நாற்றினை நட்டிட்டு நெல்விளைக்கும் —- அவனின்
நற்செயல் போற்றிடத் தக்கதன்றோ ?
மாற்றென எதுதன்னை நாமுண்போம் —- எதுதான்
மணக்கின்றச் சோற்றுக்கு இணையாகும் ?
காடுவெட்டிப் போட்டதனை வயல்வெளிகள் ஆக்கி
காலைமுதல் மாலைவரை பயிர்கள்தனை விளைக்கப்
பாடுபடும் உழவர்களின் திறந்தன்னை போற்றிப்
பாராட்டத் தான்வேண்டும் நாமென்றும் என்றும் !
வீடுகளில் வளமையதும் பெருகிவரத் தானே
விளக்கமதை நாடெதுவும் பெற்றுய்யக் காணும் !
நாடுகாக்கும் வீரர்கட்கு இணையெனவேத் தகுமாம்
நல்லுழவுப் பணிசெய்யும் உழவர்களின் பெறுமை !
உழவர்தம் பணியதுவே உயர்ந்தநற் பணியென்பார் ,
வழக்குண்டோ பரந்தயிவ் வையகத்தில் ? —- சழக்கற்ற
உயிர்காக்கும் பணியதனை உன்னதநற் பணியெனலாம்;
பயிர்விளைப்போர் தனைபோற்றும் பார் !
துணிவுதனைத் துணையாக்கி துவளாமல் வயல்வெளியில்
பணிசெய்யும் உழவர்களைப் பாராட்டு ! —- மணிகள்தனை
பயிர்செய்யும் அன்னவரின் பாங்குதனைப் போற்றுவதே
உயரியநற் செயலென் றுணர் !
–
——————————
கவிதைமணி
படம்- இணையம்
-
-
வயல்வெளி தன்னில் ஏர்வுழவன் —- அன்று
வகையாய் உழுதுநற் பயிர்விளைக்க
அயரா துழைத்ததன் பலனன்றோ — நாம்
அமர்ந்தே உணவுண்டு மகிழ்வதெலாம் !
துயர்களைக் கண்டிட்டும் துவளாமல் — அவன்
துடிப்புடன் உழைத்திடும் விவேகமதை
நயமுடன் போற்றிட்டு வாழ்த்துவதே —. என்றும்
நம்மின் கடனென்றும் உணர்வோமே !
இயற்கை நமக்கென்றும் துணைநிற்கும் —- அது
என்றென்றும் நம்மைக் காக்குமென்றே
வியர்வையைச் சிந்திட்டு உழைக்கின்றான் —- அவன்
விவேகம் தவறென்றும் ஆகிடுமோ ?
உயர்வான செயலே அவனின்செயல் —– என்றும்
உலகோர் பசிதன்னைப் போக்கும்செயல் !
பயந்திட்டு அன்னவன் சுணக்கமுற —- நம்மின்
பசிக்கென எதைவுண்ணக் கண்டிடுவோம் ?
சேற்றிலே கைவைக்க உழவரெலாம் —- அன்று
சிறிதுமே மனமின்றி துவண்டிருந்தால்
சோற்றிலே நாமின்றுக் கைவைத்தே —- உண்டு
சுகமுற உறங்கிக் களிப்போமா ?
நாற்றினை நட்டிட்டு நெல்விளைக்கும் —- அவனின்
நற்செயல் போற்றிடத் தக்கதன்றோ ?
மாற்றென எதுதன்னை நாமுண்போம் —- எதுதான்
மணக்கின்றச் சோற்றுக்கு இணையாகும் ?
காடுவெட்டிப் போட்டதனை வயல்வெளிகள் ஆக்கி
காலைமுதல் மாலைவரை பயிர்கள்தனை விளைக்கப்
பாடுபடும் உழவர்களின் திறந்தன்னை போற்றிப்
பாராட்டத் தான்வேண்டும் நாமென்றும் என்றும் !
வீடுகளில் வளமையதும் பெருகிவரத் தானே
விளக்கமதை நாடெதுவும் பெற்றுய்யக் காணும் !
நாடுகாக்கும் வீரர்கட்கு இணையெனவேத் தகுமாம்
நல்லுழவுப் பணிசெய்யும் உழவர்களின் பெறுமை !
உழவர்தம் பணியதுவே உயர்ந்தநற் பணியென்பார் ,
வழக்குண்டோ பரந்தயிவ் வையகத்தில் ? —- சழக்கற்ற
உயிர்காக்கும் பணியதனை உன்னதநற் பணியெனலாம்;
பயிர்விளைப்போர் தனைபோற்றும் பார் !
துணிவுதனைத் துணையாக்கி துவளாமல் வயல்வெளியில்
பணிசெய்யும் உழவர்களைப் பாராட்டு ! —- மணிகள்தனை
பயிர்செய்யும் அன்னவரின் பாங்குதனைப் போற்றுவதே
உயரியநற் செயலென் றுணர் !
–
——————————
கவிதைமணி
படம்- இணையம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|