தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நான் டாக்டர் நீ ஆக்டர்

View previous topic View next topic Go down

நான் டாக்டர் நீ ஆக்டர் Empty நான் டாக்டர் நீ ஆக்டர்

Post by rammalar Wed Aug 17, 2016 6:21 pm

https://2img.net/h/oi68.tinypic.com/1z9qmc.jpg" alt="" />[/img]
-
கல்யாணம் முடிஞ்சு இரண்டு வாரிசுகளும் வநதாச்சு.
ஆனா வீட்டு வி.ஐ.பி.களை வெளியிலயே காட்டாம
பொத்திப் பொத்தி வைத்திருக்கிறார் நடிகர் விமல்.

ஒரு ஸ்பெஷல் ஃபேமிலி இண்டர்வியூக்கு எண்ட்ரி
கொடுக்கச் சொன்னோம். ‘மன்னர் வகையறா’வில்
இருந்தவர் முழு மனதோடு சம்மதித்தார்.

சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேருக்குமே நல்ல பழக்கம்.
அக்ஷயா எனக்கு சொந்த மாமா பொண்ணு. அவங்க திண்டுக்க.
நான் மணப்பாறை. பக்கம் பக்கம். அவங்க வீட்ல வசதி அதிகம்.
அவங்க அளவுக்கு இல்ல நம்ம வீடு.
அவங்க மேல ஆசை வந்த நாள்ல இருந்து உள்ளுக்குள்ளயே
வச்சிருந்தேன்.

நாம சினிமாவுல ஒரு ஆளா வளர்ந்து வந்த பிறகு ஒருநாள்
விஷயத்தை வெளியில சொல்லுவோம்னு நினைச்சிருந்தேன்.
அதுக்கு ஏத்த நேரம் அமைஞ்சது. அவங்க சென்னையில மெடிசன்
படிச்சிக்கிட்டிருந்தாங். நேரா போய், ‘பிடிச்சிருக்கு கல்யாணம்
பண்ணிக்கலாமா?’னு கேட்டேன். அவங்களும் உடனே
சம்மதிச்சுட்டாங்க.

சொந்தக்காரப் பொண்ணு என்பதால் வீட்லயும் பெரிய சந்தோஷம்
தன் காதல் மனைவி பற்றிய விஷயங்களை முதல்முறையாக வாய்
திறந்தார் விமல்.

அக்ஷயா எம்.பி.பி.எஸ்., படித்துவிட்டு இப்பொழுது மாஸ்டர்
டிகிரிக்கு போக இருக்கிறார். விமல் படிச்சது பத்தாம்
வகுப்புவரைதான். எப்பூடி?

எனக்கு எந்த தயக்கம் இல்ல. நான் பத்தாம் வகுப்புல வாங்கின
மொத்த மார்க்கே 132. எனக்கு படிப்பு பக்கம் மனசு போகவே இல்லை.
சின்ன வயசுலயே ஆக்டர் ஆகணும்னுதான் விருப்பம். அதனால
படிக்கும்போதே டான்ஸ் கிளாஸ் போனேன்.

19 வயசுலயே கூத்துப்பட்டறைக்கு நடிப்பு கத்துக்க போயிட்டேன்.
வீட்டுக்கு ஒரே பையன். எனக்கு ஒரு தங்கச்சி, அப்பா, நரசிம்மன்
மெட்ரோ வாட்டர் போர்டுல கான்ட்ராக்டர். அம்மா, ரமணி ஹவுஸ்
ஒய்ஃப், வசதிக்கு குறைச்சல் இல்ல.

படிப்புல அக்ஷயா அளவுக்கு நமக்கு ஆர்வம் இல்லை. அதனால என்ன?
நம்ம காதல் உண்மையானது. அவங்களும் என்னய மனப்பூர்வமா
நேசிச்சாங்க. அதனால இநதப் படிப்புப் பாகுபாடு எல்லாம் உருவாகல.
ஒருநாள் நானே கூட வெளிப்படையா கேட்டும் வச்சேன்.

பின்னால ஒரு குத்தம் குறை சொல்லிடக்கூடாது பாருங்க.
ஆனா அவங்க ரொம்ப தாராளம். ‘அதுக்கு என்ன? நான் டாக்டர்.
நீ ஆக்டர்’னு ரைமிங்கா பேசி டைமிங் பஞ்ச் கொடுத்தாங்க.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நான் டாக்டர் நீ ஆக்டர் Empty Re: நான் டாக்டர் நீ ஆக்டர்

Post by rammalar Wed Aug 17, 2016 6:21 pm

அந்தப் பக்கமே வருத்தம் இல்ல, அப்புறம் என்ன? தைரியமா காதல்ல
இறங்கிட்டேன் என தாடியைத் தடவுகிறார் விமல். ஆரிக், ஆகர் என
இரண்டு ஆண் வாரிசுகள். பெரியவன் அப்பா மாதிரி சாது. சின்னவன்
அம்மா மாதிரி சுட்டி. பெரியவன் யு.கே.ஜி. சின்னவன் பிரிகேஜி.

அதிகம் படிக்காததில் அப்பா விமலுக்கு ஏதேனும் வருத்தம் இப்ப
இருக்கா?

கட்டாயம் இருக்கு. சினிமா பேக் ரவுண்ட் இல்லாம நானே தட்டித்
தடவி முன்னேறி வந்திருக்கேன். கூட ஒருத்தங்க சப்போர்ட்
இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். எனக்க
கம்யூனிகேஷன் கம்மி. ஆங்கிலம் அறவே வராது. படிச்சு டிகிரி
வாங்கி இருந்தா நாலு வார்த்தை ஆங்கில புழங்கியிருக்கும்.

அத வச்சு இன்னும் நம்ம கம்யூனிகேஷனை பெருக்கி இருக்கலாம்.
அதுக்காகத்தான் இப்ப இங்கிலீஷ் கோச்சிங் கிளாஸ் போகப் போறேன்
என்கிறார்.

விஜய் சேதுபதிதான் உஙக வாழ்க்கைக்கு ஒரு ஓபனிங் கொடுத்தவர்…
இப்ப எப்படி இருக்கு நட்பு?

அதே அளவுதான் இருக்கு. அவர்தான் என்னய கூத்துப்பட்டறையில்
இருந்தப்ப பசங்க கதைக்காக பாண்டிராஜ் ஒரு வில்லேஜ் பையனை
தேடிக்கிட்டு இருக்கார். அவரைப் போய் பாருனு அறிமுகம் கொடுத்தவர்.

நான் கூத்துப்பட்டறையில ஆக்டிங் கிளாஸ் கத்துக்கிட்டிருந்தப்ப
அவர் அங்க அகௌண்டன்ட்டா இருந்தார். ரெண்டு பேருக்குமே
சினிமா விருப்பம். அவருக்கு ஆக்டிங் மேல விருப்பம் இருந்தாலும்
கணக்கு வழக்குகளை மட்டுமே கவனி்சிக்கிட்டிருந்தார்.

பாண்டிராஜை பார்க்கப் போகும்போது நான் அப்பதான் ஒரு நாடகத்துக்காக
பொம்பளை வேஷம் போட்டிருந்தேன். மழமழனு முகத்தை மழிச்சு
வச்சுக்கிட்டு புருவத்தில் இருந்த கருமையைக்கூட ஒழுங்கா கழுவாம
போயிருந்தேன். என் தோற்றம் அவங்க கதைக்கு ஈர்ப்பா இல்ல.

கையில் இருந்த மொபைல்ல நான் நடி்ச ரெண்டு விளம்பரப் படங்கள்
இருந்தது. அதப போட்டுக் காட்டினேன். ஒருவாரம் கழிச்சு தாடி
மீசையோட வரச் சொன்னார் பாண்டிராஜ். அடுத்த வாரமே ஷூட்டிங்
கன்ஃபார்ம்.

அதற்கு விஜய் சேதுபதிதான் காரணம். இப்ப கூட எனக்கு ஏத்த கதைகள்
இருந்தா உடனே சொல்லி அனுப்புவார். இன்றைக்கும் அதே நட்புதான்
தன் இரு உள்ளங்கைகளையும் சரசர என உரச ஆரம்பிக்கிறார் விமல்.

————————————————-

– கடற்கரய்
குமுதம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum