Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவலையை மறந்திடு! கடவுளை நினைத்திடு!
Page 1 of 1 • Share
கவலையை மறந்திடு! கடவுளை நினைத்திடு!
வாழ நினைத்தால் வாழலாம்
போர்க்களத்தில் ஏறிப்போரிட்டுக் கொண்டிருந்த பழகாத குதிரை களத்தைவிட்டு ஓடிப்போய்விட்டால் அந்த வீரன் எவ்வளவு துன்பப்படுவான் தோல்வியைத் தழுவுவான்.அவமானப்படுவான். அப்படி வாழ்வில் தம்மை நம்பியிருப்பவர்களைக் காலைவாரிவிட்டாற் போன்று சிலர் துறவு மேற்கொண்டுவிடுவார்கள்.அல்லது சோர்ந்துபோய் குடிகாரராகி விடுவார்கள். இன்னும் சிலர் ஒன்றுக்கும் உதவாத தண்டச் சோறாகி விடுவார்கள். இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் சவால்கள் இவைகளைக் கண்டு அஞ்சித்தான்.,அவற்றை எதிர்கொள்ள முடியாது என்ற தன்னம்பிக்கைக் குறைவால்தான். இவர்களுடைய இத்தகைய செயலால் எத்தனைபேர் துன்பமுறுவார்கள்? மனைவி மக்கள் பெற்றோர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களுக்குத் தக்க நேரத்தில் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஊட்டியிருந்தால் அவர்கள் இப்படி நடந்திருக்க மாட்டார்கள்.
வாழ்க்கையில் நாம் விலங்குகள் பறவைகள் போன்றவற்றிட மிருந்து கற்றுக் கொள்னவேண்டியன நிறைய உண்டு. வண்டிகளும் மனிதர்களும் எந்நேரமும் போய்க்கொண்டிருக்கும் சாலையிலே நடக்கும் போது எத்தனை எறும்புக் கூட்டங்கள் சாரிசாரியாகப் போகின்றன.எத்தனை அட்டைகள் நத்தைகள் நசுங்கிச் சாவோம் என்று தெரிந்தோ தெரியாமலோ அணிவகுத்துச் செல்கின்றன.புலி வாழும் காட்டிலே மானும் அப்படித்தானே.தேனடையைச் சிதறிவிடுவார்கள் கூட்டைப் பிரித்து எறிந்து விடுவார்கள் என்று தெரிந்தும் தேனீயும் தூக்கணாங்குருவியும் கூடு கட்டவில்லையா?
இவைகள் எல்லாம் பயந்து சாகாமல் வாழ்வை எதிர் கொள்வதைப் பார்த்தாவது மனிதன் அச்சத்தைத் தவிர்த்துத் தன்னம்பிக்கையோடு வாழப் படித்துக் கொள்ளவேண்டும்.ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பதை நினைத்துக் கொள்ளவேண்டும்.
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளக் கூடாது.பருந்து பறக்கிற ஆகாயத்தில் ஈயும் பறக்கிறதே.நாம் பறக்கக் கூடாதா?பறக்கலாம்.மனம் வைத்தால் போதும்.
வாழ்க்கை என்பது போராட்டம்தான்.நாம் துய்க்கும் இன்பம் நிலையற்றதுதான். துன்பம் என்பது மனத்தில் தோன்றும் ஒரு கருத்துருவம்தான்.உண்மையில் அது இல்லை.என்று நினைத்தால் இல்லாமல் போய்விடும். எனவே மனதை உறுதிப்படுத்துக..துன்பம் கண்காணாமல் ஓடிவிடும்.
மனம் என்ற சர்வ சக்தி படைத்த கருவி நம் கையில் இருக்கும்போது நாம் எதற்கு அஞ்சவேண்டும்.துன்பத்தைப் பற்றிய அச்சம் நம் மனதில்தான் இருக்கிறது என்பது மட்டுமல்ல.செயலில் ஈடுபடும் ஆற்றலும் செயல் வன்மையும் நம் மனதிற்குள்தான் குடிகொண்டிருக்கின்றன.
வாழ்க்கை அஞ்சத்தக்கதல்ல.நாம் கடலாக இல்லை என்றாலும் ஏரியாக
இருக்கலாம்.பருந்தாக இல்லை எனினும் ஈயாக இருக்கலாம்.
வெட்கப்படவேண்டாம்.மனம் என்ற தோணி இருக்கப் பயம் ஏன்?
கவலையை மறந்து கடவுளை நினைத்திடு
துன்பத்தை தொலைத்திடு!
துணிச்சலோடு செயல்படு!
அன்பாக மற்றவர்களிடம் பழகிடு!
ஆரோக்கியமாக வாழ்ந்திடு!
கவலையை மறந்திடு!
கடவுளை நினைத்திடு!
தவளை போல் தாவிடு!
தன்னம்பிக்கையோடு வாழ முயற்சிடு!
http://bsakthivel.blogspot.in/
போர்க்களத்தில் ஏறிப்போரிட்டுக் கொண்டிருந்த பழகாத குதிரை களத்தைவிட்டு ஓடிப்போய்விட்டால் அந்த வீரன் எவ்வளவு துன்பப்படுவான் தோல்வியைத் தழுவுவான்.அவமானப்படுவான். அப்படி வாழ்வில் தம்மை நம்பியிருப்பவர்களைக் காலைவாரிவிட்டாற் போன்று சிலர் துறவு மேற்கொண்டுவிடுவார்கள்.அல்லது சோர்ந்துபோய் குடிகாரராகி விடுவார்கள். இன்னும் சிலர் ஒன்றுக்கும் உதவாத தண்டச் சோறாகி விடுவார்கள். இவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றால் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் சவால்கள் இவைகளைக் கண்டு அஞ்சித்தான்.,அவற்றை எதிர்கொள்ள முடியாது என்ற தன்னம்பிக்கைக் குறைவால்தான். இவர்களுடைய இத்தகைய செயலால் எத்தனைபேர் துன்பமுறுவார்கள்? மனைவி மக்கள் பெற்றோர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்களுக்குத் தக்க நேரத்தில் தன்னம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஊட்டியிருந்தால் அவர்கள் இப்படி நடந்திருக்க மாட்டார்கள்.
வாழ்க்கையில் நாம் விலங்குகள் பறவைகள் போன்றவற்றிட மிருந்து கற்றுக் கொள்னவேண்டியன நிறைய உண்டு. வண்டிகளும் மனிதர்களும் எந்நேரமும் போய்க்கொண்டிருக்கும் சாலையிலே நடக்கும் போது எத்தனை எறும்புக் கூட்டங்கள் சாரிசாரியாகப் போகின்றன.எத்தனை அட்டைகள் நத்தைகள் நசுங்கிச் சாவோம் என்று தெரிந்தோ தெரியாமலோ அணிவகுத்துச் செல்கின்றன.புலி வாழும் காட்டிலே மானும் அப்படித்தானே.தேனடையைச் சிதறிவிடுவார்கள் கூட்டைப் பிரித்து எறிந்து விடுவார்கள் என்று தெரிந்தும் தேனீயும் தூக்கணாங்குருவியும் கூடு கட்டவில்லையா?
இவைகள் எல்லாம் பயந்து சாகாமல் வாழ்வை எதிர் கொள்வதைப் பார்த்தாவது மனிதன் அச்சத்தைத் தவிர்த்துத் தன்னம்பிக்கையோடு வாழப் படித்துக் கொள்ளவேண்டும்.ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பதை நினைத்துக் கொள்ளவேண்டும்.
மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டு நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளக் கூடாது.பருந்து பறக்கிற ஆகாயத்தில் ஈயும் பறக்கிறதே.நாம் பறக்கக் கூடாதா?பறக்கலாம்.மனம் வைத்தால் போதும்.
வாழ்க்கை என்பது போராட்டம்தான்.நாம் துய்க்கும் இன்பம் நிலையற்றதுதான். துன்பம் என்பது மனத்தில் தோன்றும் ஒரு கருத்துருவம்தான்.உண்மையில் அது இல்லை.என்று நினைத்தால் இல்லாமல் போய்விடும். எனவே மனதை உறுதிப்படுத்துக..துன்பம் கண்காணாமல் ஓடிவிடும்.
மனம் என்ற சர்வ சக்தி படைத்த கருவி நம் கையில் இருக்கும்போது நாம் எதற்கு அஞ்சவேண்டும்.துன்பத்தைப் பற்றிய அச்சம் நம் மனதில்தான் இருக்கிறது என்பது மட்டுமல்ல.செயலில் ஈடுபடும் ஆற்றலும் செயல் வன்மையும் நம் மனதிற்குள்தான் குடிகொண்டிருக்கின்றன.
வாழ்க்கை அஞ்சத்தக்கதல்ல.நாம் கடலாக இல்லை என்றாலும் ஏரியாக
இருக்கலாம்.பருந்தாக இல்லை எனினும் ஈயாக இருக்கலாம்.
வெட்கப்படவேண்டாம்.மனம் என்ற தோணி இருக்கப் பயம் ஏன்?
கவலையை மறந்து கடவுளை நினைத்திடு
துன்பத்தை தொலைத்திடு!
துணிச்சலோடு செயல்படு!
அன்பாக மற்றவர்களிடம் பழகிடு!
ஆரோக்கியமாக வாழ்ந்திடு!
கவலையை மறந்திடு!
கடவுளை நினைத்திடு!
தவளை போல் தாவிடு!
தன்னம்பிக்கையோடு வாழ முயற்சிடு!
http://bsakthivel.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவலையை மறந்திடு! கடவுளை நினைத்திடு!
சிறப்பான கட்டுரை தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கடவுளை அடைய 3 வழிகள்
» கடவுளை எவ்வாறு காண்பது?
» கடவுளை காணவில்லை - சிரிப்பொலி
» கடவுளை காட்டுங்க! - சிறுகதை
» கடவுளிடம் கடவுளை கேள்
» கடவுளை எவ்வாறு காண்பது?
» கடவுளை காணவில்லை - சிரிப்பொலி
» கடவுளை காட்டுங்க! - சிறுகதை
» கடவுளிடம் கடவுளை கேள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|