தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும்

View previous topic View next topic Go down

ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும் Empty ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும்

Post by முழுமுதலோன் Tue Aug 23, 2016 3:11 pm

அதிகப்படியாக வேலை பார்த்து உயிர் விட்டவர்கள் யாரும் கிடையாது. பார்க்கிற வேலையில் அதிகப்படியாக குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு அதனால் வந்த சிக்கல்களை சமாளிக்க முடியாமல் உயிர் விட்டவர்கள் வேண்டுமானால் இருக்கலாம். `ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும்’ என்கிறார், இங்கிலாந்து அறிஞர் ஆவ்பரி.

விஷயங்களை வரிசைப்படுத்தி முடிவெடுக்கும் திறமை தான் இங்கே முக்கியம். சிலர் தலைக்கு மேல்வேலை கிடக்கிறது என்று சலித்துக் கொள்வார்கள். இருக்கட்டும். அதில் எந்த வேலை உடனடியாக செய்யப்பட வேண்டியது என்பதை தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அதையே முனைப்பாக முடியுங்கள். அந்த வேலையை முடிக்கும்போதே அதையடுத்த முக்கியம் உங்கள் மனதிற்குள்வந்து விடும். ஒரே மூச்சாக அதையும் முடியுங்கள்.

இடையில் சில வேலைகள் எட்டிப் பார்க்கும். அது உங்களுக்கு மெயின் வேலையை முடக்க வந்த வேகத்தடையாகவும் தோன்றலாம். வேலை நேரத்தில் `லஞ்ச் அவர்’ குறுக்கிட்டால் கோபித்துக் கொள்ளவா செய்கிறீர்கள்? அவசரமாய் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்து வேலையை தொடருகிறீர்களா, இல்லையா? அதுமாதிரிதான் இடையில் குறுக்கிடும் வேலையை அதன் மீது சலிப்பு தோன்றாமல் முடித்துக் கொடுக்கவும் பழகிக் கொள்ளுங்கள்.

அலுவலகப் பணியாளர்கள் பலரும் தங்கள் டேபிளின் மேல் கண்டதையும் கொட்டி வைத்திருப்பார்கள். பார்க்கும்போதே `இத்தனை வேலைகளா’ என்ற மலைப்பு எட்டிப் பார்க்கும். அத்தனையையும் அடுக்கி அதில் அன்றைய முக்கியமாக தோன்றுவதை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். `மதியத்திற்குள்- மாலைக்குள்’ என்று பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த திட்டமிடல் உங்களுக்கு வேலையை சுலபமாக்குவதோடு, மனநெருக்கடியையும் வெகுவாக குறைத்து விடும்.

சிலர் அலுவலகத்தில் எல்லா வேலைகளையுமே பாதிப்பாதி முடித்து வைத்திருப்பார்கள். இந்தப்பாதி முடிந்த வேலைகள் அப்படியே கிடக்க, புதிய வேலை வந்து நெருக்கடி கொடுத்து விடும். அப்போது பெண்டிங் வேலை சம்பந்தமான பைலை உடனடியாக முடித்து தர மேலதிகாரிகள் நெருக்குவார்கள். அவசரம் கருதி அந்த வேலையை முடிக்கத் தலைப்பட்டால், இன்றைய அவசரவேலை தடைப்பட்டு விடும். மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பது போல் கடைசியில் குறித்த நேரத்தில் இதையும் முடிக்க முடியாமல் அதையும் முடிக்க முடியம் வீணாக கெட்டபெயர் தான் மிஞ்சும்.

காலையில் குளித்ததும் பிரஷ்சாக காபியை அருந்தத் தொடங்கும்போதே இன்றைய வேலைகள் உங்கள் மனதில் எட்டிப் பார்க்கத் தொடங்கி விட வேண்டும். அந்த பட்டியலில் எதை முதலில் செய்தால் சரியாக இருக்கும் என்ற திட்டமிடலும் நல்லது. காலையில் வங்கிக்குப்போய் பார்க்க வேண்டிய வேலையை மாலையில் பார்க்க முடியாதல்லவா! காலையில் பார்த்தே ஆக வேண்டிய வேலைகளை தெளிவான திட்டமிடலோடு செய்யத்தொடங்கி விட வேண்டும். இரவில் படுக்கைக்கு போனதும் இன்றைய வேலைகளை எல்லாம் ஒருகணம் மனதில் கொண்டு வர வேண்டும். அப்போது அதை குறையில்லாமல் செய்தீர்களா என்பது உங்கள் மனக்கண்ணில் பளிச்சிடும். அதில் ஏதாவது தவறு இருந்தால் அடுத்தகணம் மனதுக்குள் `அய்யோ’ என்று ஒரு பிளாஷ் அடிக்கும். அதை மட்டும் மறுநாள் முதல் வேலையாக நினைவூட்டி சரிசெய்ய பழகிக் கொள்ள வேண்டும்.

சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக அத்தனை வேலையையும் தாங்களாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். இப்படிச்செய்யும்போது அலுவலகம் நிச்சயம் உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடத்தான் செய்யும். புரமோஷன், சம்பள உயர்வு வந்து கிச்சுக்கிச்சு மூட்டும். இப்படி ஓய்வு, ஒழிச்சல் இன்றி நீங்கள் வேலைகளை எடுத்துக் கொள்ளும்போது மனஅமைதி, தூக்கம் இரண்டையும் அதற்கு தாரை வார்க்க வேண்டியிருக்கும்.

வேலையே செய்யாதவர்களுக்காக இந்த ஜோக்.

“நான் கார் வாங்கி பத்துவருஷம் ஆகிறது. இதுவரை என் காரில் சின்ன கீறல் கூட விழுந்ததில்லை” என்றார், ஒருவர்.

“அட என்ன ஆச்சரியம்…நான் உங்கள் காரை பார்க்கணுமே” என்றார் அடுத்தவர்.

“கார்ஷெட்டில் தான் விட்டு வைத்திருக்கிறேன் வாங்கிய நாள் முதலாக கார் அங்கே தான் இருக்கிறது” என்றார் முதலாமவர்.

இதெப்படி இருக்கு?

கடைசியாக ஒன்று: மேலதிகாரிகளை மதிப்பது உங்கள் வேலையின் கட்டாயம் .மேலதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்ப்படியாத எவரும் தங்கள் பணிக்காலத்தில் கட்டளையிடும் பதவிக்கான இடத்தை கடைசிவரை அடையவே முடியாது. இன்று நீங்கள் கொடுக்கும் மரியாதை நாளை உங்களை தேடிவர வேண்டுமானால் முதலில் நீங்கள் பணியுங்கள்.


முகநூல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும் Empty Re: ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும்

Post by ஸ்ரீராம் Fri Sep 09, 2016 11:14 am

உண்மை
சிறப்பான கட்டுரை தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும் Empty Re: ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும்

Post by செந்தில் Fri Sep 09, 2016 12:17 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும் Empty Re: ஒரு வார வேலையை விட ஒரு நாள் கவலை அதிக தளர்ச்சியை தரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum