தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நம்முடைய இரண்டாவது ஜாதகம்!

View previous topic View next topic Go down

நம்முடைய இரண்டாவது ஜாதகம்! Empty நம்முடைய இரண்டாவது ஜாதகம்!

Post by rammalar Tue Sep 13, 2016 5:15 pm

எனக்கா ஜாதகமா… சுத்தமாக நம்பிக்கை இல்லை..’
என்பவர்களும் இதை படிக்கலாம்.

முதல் ஜாதகம், சாதகமாக அமையாவிட்டாலும் பரவாயில்லை;
இரண்டாவது ஜாதகமாவது, சரியாக இருக்க வேண்டும்.
‘பிறந்த நேரம், துல்லியமாக குறிக்கப்படாவிடில், பிறப்பு பற்றிய
குறிப்புகள் சரியாக தரப்படாவிட்டால், இவையும், பிறவும்
துல்லியமாக இல்லை என்றால், பலன்களும் சரிவர அமையாது…’
என்கின்றனர் ஜோதிடர்கள்.

‘சொன்னது நடக்காவிடில், ஜாதகர்கள் கொடுத்த குறிப்புகளில்,
தவறு இருக்கிறது…’ என்று பொருள் என்பதும், இவர்களது வாதம்!

பிரசவ வார்டிலிருந்து, நர்ஸ் தாமதமாக வெளி வந்து, அவர் சொல்லும்
நேரத்தில், தவறு இருந்து விட்டால், பிரசவ வார்டில் கடிகாரம் தவறுதலாக
நேரம் காட்டினால், ஒருவரது ஜாதகமே பொய்த்து போகும் என்றும்
அடுக்குகின்றனர்.

சிரசு (தலை) வெளிவரும் நேரம் தான், பிறப்பு நேரம் என்றும்,
தொப்புள் கொடி துண்டிக்கப்படுகிற நேரமே, பிறப்பு நேரம் என்றும்
உள்பட்டிமன்றம் ஒன்றும் நடந்தபடி இருக்கிறது; நமக்கு இது முக்கியமில்லை.
எனவே, நாம் பேசாமல், இரண்டாவது ஜாதகத்திற்குள் சென்று விடுவோம்.

—————————————————

அதென்ன, இரண்டாவது ஜாதகம்…
நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரும், நம்மை பற்றிய, இரண்டாவது
ஜாதகம் ஒன்றை வைத்திருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

‘அந்தாளை பத்தி என் கிட்ட பேசாதீங்க…’ என்று ஒருவர் பெயர்
வாங்கினால், அதை, இரண்டாவது ஜாதகம் என்பேன்.

‘சுட்டு போட்டாலும், அந்தாளுக்கு புத்தி வராது; நாணயம்ன்னா வீசை
என்ன விலைன்னு கேட்பான்…’
‘சரியான கிரிமினல்; அவனிடமா வரவு, செலவு…’
‘சரியான கஞ்ச பயல்… எச்சக்கையால் காக்காய் ஓட்ட மாட்டான்;
அவனிடம் ஒண்ணுமே பெயராது…’
‘அவன் தோலிருக்க சுளை முழுங்கியாச்சே
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நம்முடைய இரண்டாவது ஜாதகம்! Empty Re: நம்முடைய இரண்டாவது ஜாதகம்!

Post by rammalar Tue Sep 13, 2016 5:15 pm

‘முழு பூசணிக்காயை, சோற்றில் மறைக்கிற ஆளாச்சே…’ – இதுபோன்ற
கேலிகளும், இரண்டாவது ஜாதகத்தில் சேர்க்கப்பட வேண்டிய ரகங்களே!

‘அந்தாள் வீட்டிலயா சம்பந்தம் செய்யப் போறீங்க… பார்த்து செய்யுங்க…’
என்கிற, இரண்டாவது ஜாதக குறிப்பு, ஒரு திருமணத்தையே நிறுத்திவிட
வல்லது; முதல் ஜாதகத்தை விட வலுவானது.

பல நேரங்களில், நம்மை பற்றி, மற்றவர்கள் கணிக்கும் கணிப்புகள்,
முதல் ஜாதகத்தை விட துல்லியமானவை.

நம்மை பற்றிய முதல் ஜாதகத்தை, தனி ஒரு ஜோதிடர் மட்டும் தான்
பார்ப்பார். தொழில் தர்மப்படி, பிறரிடம், நம் ஜாதக குறிப்புகளை,
பெரும்பாலும், வெளியே கூற மாட்டார்.

ஆனால், இரண்டாவது ஜாதகம் இருக்கிறதே, இது, தண்டோரா போடப்படாத
குறை தான்.
பார்வையற்ற நான்கு பேர் யானையை உணர்ந்த கதை உங்களுக்கு
தெரிந்திருக்கலாம்.
அப்படி, நம்முடைய உண்மையான ஜாதகம் எப்படியாயினும், பிறர் பார்க்கும்
பார்வையில், நாம் வேறானவர்களாக காட்சியளிக்கிறோம். சமுதாயம்,
பொறாமை கண்களோடும், அறியாமையிலும் நம்மை விமர்சித்தால்,
அவற்றை பொருட்படுத்த வேண்டாம்.

அதேநேரத்தில், நம்மைப் பற்றி, இரண்டாவது ஜாதகம் உருவாகாமலிருக்க,
நாம் என்ன செய்ய வேண்டும்?

மகாநதியாக, ஆறாக, ஓடையாக ஏன் சாக்கடைக் கால்வாயாகக் கூட
இருக்கட்டும்; இவற்றை வழி நடத்துபவை கரைகளே! இச்சமுதாயம், அது
சொல்லி தரும் நடைமுறைகள், அது ஊட்டிய கல்வி மற்றும் கற்பித்த பண்பு
ஆகியவற்றை விட்டு விலகாத நம் போக்கு தான், நம்மை நன்கு வழிநடத்த
வல்லவை.

‘இச்சமுதாயம், என்ன வேண்டுமானாலும், பேசி விட்டு போகட்டும்;
அதை பற்றி எனக்கு கவலையில்லை…’ என்று உதாசீனப்படுத்துவோர்,
பாதை தவறுகின்றனர்; தாங்கள் செய்யும் தவறுகளை, நியாயப்படுத்தவும்
பார்க்கின்றனர்.

நம்மை பற்றிய இரண்டாவது ஜாதகம் உருவாகாமல் இருக்க, மூன்று வழி
முறைகள் உள்ளன.

முதலாவது, நம்மை சுற்றியுள்ள சமூகத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப,
ஈடுகட்டும்படியாக நடந்து கொள்வது; நம் மனசாட்சிக்கு மதிப்புக் கொடுப்பது;
அடுத்தது, சொல்லுக்கும், செயலுக்கும் இடையே உள்ள இடைவெளியைக்
குறைப்பதோடு, இரண்டுக்கும் நடுவே முரண்பாடு இல்லாமல் பார்த்து
கொள்வது.

இந்த மூன்றையும் பின்பற்றினால், நம்மை பற்றி விமர்சிப்பவர்கள் வாயில்,
‘பிளாஸ்த்ரி’ தான் இருக்கும்!

—————————————-

லேனா தமிழ்வாணன்
நன்றி- வாரமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நம்முடைய இரண்டாவது ஜாதகம்! Empty Re: நம்முடைய இரண்டாவது ஜாதகம்!

Post by ஸ்ரீராம் Wed Sep 14, 2016 12:40 pm

பதிவுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நம்முடைய இரண்டாவது ஜாதகம்! Empty Re: நம்முடைய இரண்டாவது ஜாதகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum