Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
”ரயில் பயணிகளின் கவனத்திற்கு:’
Page 1 of 1 • Share
”ரயில் பயணிகளின் கவனத்திற்கு:’
”ரயில் பயணிகளின் கவனத்திற்கு:’ இன்று முதல் ரயிலில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள்!”’
அனைத்து முன்பதிவு பயணிகளும் இன்று முதல் பயணத்தின்போது அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என புதிய முறை அமலுக்கு வருகிறது. அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தால் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
முன்னதாக இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் முதலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, ஏசி உட்காரும் வசதி ஆகிய உயர் வகுப்புகளுக்கும், தட்கல் மூலம் முன்பதிவு செய்யவும், பயணிக்கவும் அடையாள அட்டை கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
2-ம் வகுப்பு படுக்கை, இருக்கை வசதி பயணிகள் இதுவரை அடையாள அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் 2-ஆம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில் இடைத்தரகர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது ரெயில்வே துறைக்கு தெரிய வந்தது. பொதுவாக பெயர், வயதுகளை குறிப்பிட்டு டிக்கெட் பெற்று அவற்றை அதிக விலைக்கு விற்று வருவாய் ஈட்டுவதை சிலர் தொழிலாக செய்து வருகின்றனர்.
சில ஏஜென்சிகளும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாலும் பெரும் விபத்து ஏற்படும் போது பயணம் செய்பவர்களை அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதற்காகவும் அனைத்து முன்பதிவு பயணிகளும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
இதன்படி இனி 2ம் வகுப்பு தூங்கும் வசதி, 2ம் வகுப்பு உட்காரும் வசதி, முதல் வகுப்பு, 3 அடுக்கு நடுத்தர வகுப்பு ஆகிய பிரிவினரும் முன்பதிவு செய்யும்போது அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். ரயில்வே யால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக முன்பதிவு செய்து பயணிக்கும் போது, அவர்களில் ஒருவருக்கு மட்டும் அடையாள அட்டை போதுமானது.
அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றுகள்
1. வாக்காளர் அடையாள அட்டை
2. பாஸ்போர்ட்
3. வருமானவரி கணக்கு அட்டை
4. ஓட்டுனர் உரிமம்
5. புகைப்படத்துடன் கூடிய மத்திய,மாநில அரசுகள் வழங்கிய ஓய்வூதிய ஆணைப்புத்தகம்(பிபிஓ)
6. குடும்ப அட்டை
7. மூத்த குடிமகன் அடையாள அட்டை
8. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை(பிபிஎல்)
9. தொழிலாளர் ஈட்டுறுதி அடையாள அட்டை(ஈஎஸ்ஐ)
10. மத்திய அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கிய மருத்துவ அட்டை(சிஜிஎச்எஸ்)
11. அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரி வழங்கிய மாணவர் அடையாள அட்டை
12. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப்புத்தகம்
13. புகைப்படத்துடன் லேமினேட் செய்யப்பட்ட கடன் அட்டைகள்
14. தேசிய அடையாள அட்டை (ஆதார்),
15. ஊராட்சி, நகராட்சி, மாவட்ட நிர்வாகம், மாநில, மத்திய அரசுகள் வரிசை எண்ணுடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்.
டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை சரி பார்க்க வரும்போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை அவரிடம் காண்பிக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்காவிட்டால் அதனை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதி அபராதம் விதிக்கப்படும்.
பயணம் செய்யும் டிக்கெடின் கட்டணம் ரூ.250-க்கும் மேலாக இருந்தால் அதன் மீது இருமடங்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.300 டிக்கெட் கட்டணம் என்றால் அவற்றுடன் மேலும் ரூ.300 சேர்த்து ரூ.600 அபராதம் விதிக்கப்படும்.
ரூ.250-க்கும் குறைவான டிக்கெட் கட்டணமாக இருந்தால் டிக்கெட் கட்டணத்துடன் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.240 டிக்கெட் கட்டணமாக இருந்தால் அவற்றுடன் ரூ.250 சேர்த்து மொத்தம் ரூ.490 அபராதமாக வசூலிக்கப்படும் என்று டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார்.
நன்றி: பேஸ்புக்
அனைத்து முன்பதிவு பயணிகளும் இன்று முதல் பயணத்தின்போது அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என புதிய முறை அமலுக்கு வருகிறது. அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்தால் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
முன்னதாக இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் முதலில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு, ஏசி உட்காரும் வசதி ஆகிய உயர் வகுப்புகளுக்கும், தட்கல் மூலம் முன்பதிவு செய்யவும், பயணிக்கவும் அடையாள அட்டை கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
2-ம் வகுப்பு படுக்கை, இருக்கை வசதி பயணிகள் இதுவரை அடையாள அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் 2-ஆம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில் இடைத்தரகர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது ரெயில்வே துறைக்கு தெரிய வந்தது. பொதுவாக பெயர், வயதுகளை குறிப்பிட்டு டிக்கெட் பெற்று அவற்றை அதிக விலைக்கு விற்று வருவாய் ஈட்டுவதை சிலர் தொழிலாக செய்து வருகின்றனர்.
சில ஏஜென்சிகளும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாலும் பெரும் விபத்து ஏற்படும் போது பயணம் செய்பவர்களை அடையாளம் காண்பதில் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதற்காகவும் அனைத்து முன்பதிவு பயணிகளும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
இதன்படி இனி 2ம் வகுப்பு தூங்கும் வசதி, 2ம் வகுப்பு உட்காரும் வசதி, முதல் வகுப்பு, 3 அடுக்கு நடுத்தர வகுப்பு ஆகிய பிரிவினரும் முன்பதிவு செய்யும்போது அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். ரயில்வே யால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றுகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாக முன்பதிவு செய்து பயணிக்கும் போது, அவர்களில் ஒருவருக்கு மட்டும் அடையாள அட்டை போதுமானது.
அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றுகள்
1. வாக்காளர் அடையாள அட்டை
2. பாஸ்போர்ட்
3. வருமானவரி கணக்கு அட்டை
4. ஓட்டுனர் உரிமம்
5. புகைப்படத்துடன் கூடிய மத்திய,மாநில அரசுகள் வழங்கிய ஓய்வூதிய ஆணைப்புத்தகம்(பிபிஓ)
6. குடும்ப அட்டை
7. மூத்த குடிமகன் அடையாள அட்டை
8. வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை(பிபிஎல்)
9. தொழிலாளர் ஈட்டுறுதி அடையாள அட்டை(ஈஎஸ்ஐ)
10. மத்திய அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கிய மருத்துவ அட்டை(சிஜிஎச்எஸ்)
11. அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரி வழங்கிய மாணவர் அடையாள அட்டை
12. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப்புத்தகம்
13. புகைப்படத்துடன் லேமினேட் செய்யப்பட்ட கடன் அட்டைகள்
14. தேசிய அடையாள அட்டை (ஆதார்),
15. ஊராட்சி, நகராட்சி, மாவட்ட நிர்வாகம், மாநில, மத்திய அரசுகள் வரிசை எண்ணுடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்.
டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை சரி பார்க்க வரும்போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை அவரிடம் காண்பிக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்காவிட்டால் அதனை டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாக கருதி அபராதம் விதிக்கப்படும்.
பயணம் செய்யும் டிக்கெடின் கட்டணம் ரூ.250-க்கும் மேலாக இருந்தால் அதன் மீது இருமடங்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.300 டிக்கெட் கட்டணம் என்றால் அவற்றுடன் மேலும் ரூ.300 சேர்த்து ரூ.600 அபராதம் விதிக்கப்படும்.
ரூ.250-க்கும் குறைவான டிக்கெட் கட்டணமாக இருந்தால் டிக்கெட் கட்டணத்துடன் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.240 டிக்கெட் கட்டணமாக இருந்தால் அவற்றுடன் ரூ.250 சேர்த்து மொத்தம் ரூ.490 அபராதமாக வசூலிக்கப்படும் என்று டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார்.
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ”ரயில் பயணிகளின் கவனத்திற்கு:’
நன்றிகள் அனைவருக்கும்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|