Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செல்லாக்காசு: பாவலர் கருமலைத்தமிழாழன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
செல்லாக்காசு: பாவலர் கருமலைத்தமிழாழன்
-
பாயினிலே அமர்ந்துதொலைக் காட்சி கண்டோர்
பதறிடவே வந்ததிந்தச் செல்லாச் செய்தி
மாயிருள்தான் சூழவரும் இரவுப் போதில்
மக்களெல்லாம் ஒருநொடிக்கள் பிச்சை யானார்
வாயிருந்தும் பசியிருந்தும் உணவி ருந்தும்
வந்தநோயால் சுவைக்கதடை யான போல
ஆயிரமாய் ஐந்நூறாய் பணமி ருந்தும்
அதைகொடுத்துப் பொருள்வாங்க முடிய வில்லை !
அன்றாடக் காய்ச்சியர்தாம் ஓரி ரண்டாய்
அவர்கையில் இருந்ததாளை மாற்று தற்குத்
தன்கூலி பணிவிடுத்து வங்கி முன்னால்
தலைகொதிக்க நின்றார்கள் வரிசை தன்னில் !
தன்வீட்டுள் கணக்குதனைக் காட்டி டாமல்
தரைக்குள்ளே கோடியாகப் பதுக்கி வைத்தோர்
ஒன்றுமிங்கே நடவாத தன்மை யாக
ஒருவருமே வரவில்லை மாற்று தற்கே !
பண்டமாற்று முறையென்று புத்த கத்தில்
படித்ததினை நேரினிலே கண்டா ரின்று
பண்டங்கள் வாங்கியப்பின் சில்ல றைக்காய்
பணத்தாளாய் வெற்றுத்தாள் ஆன தின்று !
பெண்கள்தாம் கணவனுக்குத் தெரிந்தி டாமல்
பெட்டிக்குள் சேர்த்துவைத்த சிறுவா டெல்லாம்
கண்முன்னே வந்திடவே1 பணக்கா ரர்கள்
கண்மறைத்த பணம்மீண்டும் மறைந்த தெங்கோ !
செல்லாத காசாக ஆக்கி விட்டால்
செல்லவைக்க கறுப்புவரும் எனநி னைத்தார்
எல்லோர்க்கும் பெப்பெப்பே என்றாற் போல
எடுத்ததனைப் பொன்நிலமாய் மாற்றி வைத்தார் !
செல்லாது காசென்று செய்த போல
செய்யவேண்டும் தங்கத்தை நிலபே ரத்தை
பொல்லாத கறுப்புகள்ளப் பணமெல் லாமே
பொதுமக்கள் பணமாகி உயரும் நாடே !
-
கவிதைமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சதாவதானி செய்குத்தம்பி பாவலர்
» வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன்
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம் நீ நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» வேலி தாண்டிய காற்று: பாவலர் கருமலைத்தமிழாழன்
» நெஞ்சத்தூண்கள் ! நூல் ஆசிரியர் நெருப்பலைப் பாவலர் இராம..இளங்கோவன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» மனதிற்குப் பிடித்த மழைத் துளிகள் ! நூல் ஆசிரியர் பாவலர் .கருமலைப் பழம் நீ நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|