தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்று மாவீரர் நாள்

View previous topic View next topic Go down

இன்று மாவீரர் நாள் Empty இன்று மாவீரர் நாள்

Post by மகா பிரபு Tue Nov 27, 2012 10:46 am

தமிழினத்தின் விடுதலை என்ற உயரிய இலட்ச்சியத்தை உயிர் மூச்சாய் கொண்டு
களமாடி வித்தாகி போன எங்கள் காவல் தெய்வங்களை நெஞ்சங்களில் நிறுத்தி
பூசிக்கும் நாள்

தமிழினத்திற்கு என்று அடையாளம் தந்து உறங்கி கொண்டிருக்கும் புனிதர்களின் நாள்

அடக்கு முறைக்கு எதிராக ஆயிரம் ஆயிராமாய் வெகுண்டெழுந்து ஆலமரமாய் எங்கள் நெஞ்சங்களில் இருக்கும் ஆத்மாக்களின் நாள்

காடு மலை மேடு பள்ளம் புயல் மழை என்று எல்லாவற்றையும் தாண்டி தமிழினத்திற்கு வெற்றி தேடி தந்த எங்கள் கண்மணிகளின் நாள்

தங்கள் ஆசைகள் கனவுகள் எல்லாம் சுதந்திர தமிழ் ஈழமே என்ற உன்னதமான கனவுகளுடன் உறங்கிப்போன தேசப்புதல்வர்களின் நாள்

நன்றி : யாழ்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இன்று மாவீரர் நாள் Empty Re: இன்று மாவீரர் நாள்

Post by மகா பிரபு Tue Nov 27, 2012 11:03 am

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆளுமை செலுத்திய காலத்தில் மிகவும்
உணர்வுப்பூர்வமாக நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்படும்.
இலங்கைக்கு எதிரான போரில் வீரமரணமடைந்த போராளிகளின் கல்லறைகளில்
உறவினர்கள் தீபமேற்றி வழிபாடு நடத்துவர். அதன் பின்னர் புலிகளின் தலைவர்
பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவார்.
இம்முறையோ தமிழர்கள்
வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றும் நாளிலேயே மாவீரர் நாளும் வந்துள்ளது.
இதனால் இலங்கை அரசும் ராணுவம் கடுமையான குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது.
ஆலயங்களிலும்
வீடுகளிலும் தமிழர்கள் தீபம் ஏற்றுவது என்பது இந்துமத வழிபாடு. இதை
மாவீரர் நாளுக்கான தீபமாகக் கருதி தடுத்தால் பெரும் சர்ச்சை
வெடித்துவிடும். இதனால் தடுக்க முடியாத நிலையில் இலங்கை ராணுவம்
இருக்கிறது. தாயக விடுதலைக்காக மரணித்துப் போன தமது உறவுகளை நினைவுகூர
காலம் கொடுத்த வாய்ப்பாக தமிழர்கள் கருதுகின்றனர்.
இந்து மகாசபை
தமிழர்
வாழும் வடக்கு, கிழக்கில் கார்த்திகைத் தீபத் திருநாளில் தீபங்கள்
ஏற்றுவது தொடர்பாகப் நெருக்கடியான ஒரு நிலைமை இருப்பதால் இந்து மகாசபை
சார்பில் கார்த்திகை தீபம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கார்த்திகைத் தீபத் திருநாள் இன்று நேற்று உருவான ஒன்றல்ல. இது
பண்டைக்காலம் தொடக்கம் இந்து மக்களால் பாரம்பரியமாக அனுஷ்டிக்கப்பட்டு
வருகின்றது. கார்த்திகைத் தீபத் திருநாள் இந்து சமய ஆரிய கலாசார
நிகழ்வாகும். இது ஒளி வடிவமான இறைவனை வீடுகளிலும் ஆலயங்களிலும் பொது
இடங்களிலும் தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வாக இந்துக்களால் அனுஷ்டிக்கப்பட்டு
வருகிறது. இதனை இந்துக்கள் அனைவரும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும்.
இந்துக்களின் இந்த வழிபாட்டுக்கு அனைத்துத் தரப்பினரும் பூரணமான
ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது,
இருப்பினும்
"தீபம்" ஏற்றுவதை ராணுவம் தடுத்துவிட்டால் என்ன மாதிரியான எதிர்விளைவுகள்
வரும் என்ற அச்சம் தமிழீழப் பகுதிகளில் நிலவுகிறது.
சுவரொட்டிகள்

இந்நிலையில்
யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட பல இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டிருக்கின்றன. யாழில் "தமிழீழ இளையோர் அமைப்பு" என்ற பெயரில்
இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பல
இடங்களில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில்,
"எத்தனை தடைகள் வரினும் எமது மாவீரரின் இலட்சியத்தை மீட்டெடுப்போம் என உறுதி எடுத்துக்கொள்வோம்!
விழ விழ எழுவோம் புலிகளின் வீரத்திற்கு எல்லை உண்டா?!
அண்ணனின் வழியில் நின்று தமிழீழத்தை நாம் மீட்போம்!
என்று எழுதப்பட்டிருக்கின்றன.
கிழக்கில்
திருகோணமலை, உப்புவெளி உள்ளிட்ட இடங்களில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு
ஆதரவான சுவரொட்டிகளை ராணுவத்தினர் அகற்றியுள்ளனர்.
மாவீரர் நாளுக்கு அழைப்பு
இந்நிலையில்
மக்கள் தமது வீடுகளில் அமைதியான முறையில் ஒரு நிமிட வணக்கத்துடனாவது
மாவீரர் நாளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவக
இளைஞர் அணி அமைப்பாளரும் யாழ். மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான
எஸ்.நிசாந்தன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், உயிரிழந்த படையினருக்கு தென்பகுதியில் நினைவுதினம் அனுஷ்டிக்க
முடியும் என்றால், ஏன் தமிழர்களது உரிமைக்காகவும் விடிவிற்காகவும்
உயிர்த்தியாகம் செய்த எமது உறவினரான மாவீரர்களுக்கு எங்கள் பிரதேசங்களில்
நினைவுதினம் அனுஷ்டிக்கக் கூடாது? டக்கு கிழக்கில் நவம்பர் 27-
மாவீரர்களுக்கு நிச்சயமாக சுடரேற்றுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் தீபமேற்றி
நினைவு கூருவார்கள். இலங்கை அரசு தமிழ்பேசும் மக்களை சகோதர மக்களாக
ஏற்றுக்கொண்டால் எமது நினைவு தின நிகழ்வுக்கு எதுவித இடையூறும் இருக்காது.
இறந்து போன எங்கள் உறவுகளுக்காய் பிரார்த்திக்கும் இந்த நாளில் முடிந்தால்
சிங்கள மக்களும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இத்தகைய
பதற்றமான சூழல் நிலவுவதால் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும்
கிழக்கு பகுதியில் ஒருவித அசாதாரண நிலைமை உருவாகியிருக்கிறது.


நன்றி ஒன் இந்தியா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum