Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
Page 1 of 1 • Share
முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
ரஜினி ரசிகனுக்கும், கமல் ரசிகனுக்கும் ஏற்படும் தோழமை,
மோதல், பிரச்சினைகளே 'எங்கிட்ட மோதாதே'.
ரஜினி ரசிகர் நட்டி நட்ராஜுக்கும், கமல் ரசிகர் ராஜாஜுக்கும்
கட்-அவுட் வரைவதுதான் தொழில். ஒரு கட்டத்தில் சொந்தமாக
தொழில் தொடங்கலாம் என்று பாலாசிங்கிடம் இருந்து பிரிந்து
வருகிறார்கள்.
நட்ராஜ் தன் சொந்த ஊரில் நண்பன் ராஜாஜ் உடன் கட்-அவுட்
வரையும் தொழில் தொடங்குகிறார். ஊரில் பிரபலமாகும்போது
ஒரு பிரச்சினை எட்டிப் பார்க்கிறது. அதனால் இருவரும்
பிரிகிறார்கள்.
என்ன பிரச்சினை, ஏன் பிரிகிறார்கள், இருவரும் என்ன ஆகிறார்கள்
என்பது மீதிக் கதை.
ரசிகர்களை மையமாக வைத்து ஒரு படம் எடுக்க முயற்சித்ததற்காக
இயக்குநர் ராமு செல்லப்பாவுக்கு வாழ்த்துகள்.
நட்டி நட்ராஜ் ரஜினி ரசிகனா தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ரஜினியின் மேனரிசங்களை பிரதிபலிப்பதும் ரசிக்கும்படி இருக்கிறது.
தெனாவட்டான பேச்சு, கச்சிதமான உடல் மொழியில் கவனம்
ஈர்க்கும் நட்டி படத்தை ஒட்டுமொத்தமாக தன் தோள்களில் தூக்கி
நிறுத்துகிறார்.
சண்டைக் காட்சிகளில் மட்டும் நட்டி கொஞ்சம் கவனம் செலுத்துவது
அவசியம்.
கமல் ரசிகராக நடித்திருக்கும் ராஜாஜ் நடிப்பில் பெரிதாய் எதையும்
செய்யவில்லை. அவருக்கான நடிப்புக் களம் இருந்தும் அதை
சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
கிராமத்துப் பெண்களாக சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் ஆகிய
இருவரும் நடித்திருக்கிறார்கள். நட்டியுடன் பேசும் தேர்தல்- பட
ரிலீஸ் சம்பந்தப்பட்ட அந்த ஒற்றைக் காட்சியில் அனுபவ நடிப்பை
வழங்கி அப்ளாஸ் அள்ளுகிறார் ராதாரவி.
வழக்கமும் பழக்கமுமான கதாபாத்திரம் என்றாலும் அதற்கான
நடிப்பை உண்மையாக கொடுத்திருக்கிறார் விஜய் முருகன். ஃபெரேரா,
முருகானந்தம் ஆகியோர் சரியான தேர்வு.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
நட்ராஜன் சங்கரன் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை.
பின்னணி இசை சில இடங்களில் மட்டும் பொருத்தமாக உள்ளது.
கணேஷ் சந்திராவின் கேமரா 87-88களின் காலத்தை கண்முன்
நிறுத்துகிறது.
''ரஜினி, கமலை விட அவங்க ரசிகனுக்குதான் பவர் ஜாஸ்தி'',
''நாங்க வரைஞ்சு வைச்ச கட்-அவுட்ல ஊத்துற பாலபிஷேகமும்,
வேட்டு சத்தமும்தான் எங்களுக்கு கொண்டாட்டம்'' போன்ற இயக்குநர்
ராமு செல்லப்பாவின் வசனங்கள், நெல்லை வட்டார மொழி,
கட்-அவுட் உயரம், போக்குவரத்துக் கழகம், பொறி உருண்டை,
கலர் சோடா என 80களின் சில நுட்பமான சங்கதிகள் படத்தில் மிகச்
சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
கலை இயக்குநர் ஆறுச்சாமியின் உழைப்பு ஆச்சர்யப்படுத்துகிறது.
ரசிகர்கள் இடையே நடக்கும் மோதலை பின்னணியாகக் கொண்டு
கதையை அமைக்காமல், அவர்களின் தொழில், குடும்பம், காதல்
சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே இயக்குநர் அதிகம் முன்னிறுத்துகிறார்.
ரசிகர்களுக்குள் எழும் வாக்குவாதம், பிரச்சினையே ரஜினியா? கமலா?
என்று வரும் போட்டிதான். அதனால்தான் உச்சகட்ட மோதல் வெடிக்கும்.
ஆனால், அதை லேசு பாசாக அணுகிவிட்டு கதையை வேறு பாதையில்
நகர்த்துகிறார் இயக்குநர் ராமு செல்லப்பா.
இரண்டாம் பாதியில் உள்ள முக்கியக் காட்சிகள் முதல் பாதியிலேயே
வந்திருக்க வேண்டும் என்று யோசிக்க வைக்கிறது. பகை என்ன என்பதை
யூகிக்க முடிவதும், அதுவே அடுத்தடுத்து தொடர்வதும், அந்தப் பகையை
முடிக்காமல் நீட்டி முழக்குவதும் அலுப்பை வரவழைக்கின்றன.
மொத்தத்தில் 'எங்கிட்ட மோதாதே' படம் ரசிகரின் ஆதிக்கத்தை பதிவு
செய்யாமல், விருப்பத்தை மட்டுமே பதிவு செய்கிறது.
-
---------------------------
உதிரன்
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» முதல் பார்வை: கடம்பன் - கைவிடவில்லை! -
» முதல் பார்வை: திருநாள் – யாருக்கு? ஓகஸ்ட் 6, 2016 இல் 6:42 முப (சினிமா) · தொகு
» முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்!
» முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன்
» முதல் பார்வை: வாகா – எல்லை தாண்டிய பலவீனம்
» முதல் பார்வை: திருநாள் – யாருக்கு? ஓகஸ்ட் 6, 2016 இல் 6:42 முப (சினிமா) · தொகு
» முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்!
» முதல் பார்வை: 'ரெமோ' - சிரிப்புக் காதலன்
» முதல் பார்வை: வாகா – எல்லை தாண்டிய பலவீனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|