தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்

View previous topic View next topic Go down

மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Empty மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்

Post by rammalar Thu Jul 13, 2017 5:01 pm


இத்தாலிய மாலுமியான கிறிஸ்டோபர் கொலம்பஸ்,
ஸ்பெயின் நாட்டு அரசின் உதவியினைப் பெற்று,
புதிய கடல் மார்க்கங்கள் கண்டுபிடிக்கும் பணியில்
ஈடுபட்டார்.

தனது நீண்ட நெடிய கடல் பயணத்தில் கொலம்பஸ்
கி.பி. 1492ஆம் ஆண்டில் வட
அமெரிக்காவின் அருகில் மேற்கிந்திய தீவுகள் என்று
பின்னாட்களில் அறிவிக்கப்பட்ட திவுகளில் ஒன்றாகிய
ஹைட்டி என்ற தீவில் கரையேறினார்.

அந்தத் தீவிற்கு இஸ்பேனியோலா என்று பெயர் சூட்டினார்.
கொலம்பஸ் தன்னோடு கொண்டுவந்த வெடிமருந்துகளையும்
துப்பாக்கிகளையும் பயன்படுத்தி, அங்கிருந்த பூர்விகக்
குடியினரை அச்சுறுத்தி அடிமைப்படுத்தி அவர்களைக்
கொண்டு பல வேலைகளைச் செய்து கொண்டார்.

இஸ்பேனியோலா தீவில் ஒரு சிறிய குடியிருப்பினை
உருவாக்கி, தன்னோடு வந்திருந்த ஸ்பெயின் நாட்டு
மாலுமிகளில் சுமார் நூறு நபர்களை குடியமர்த்திவிட்டு,
இவர் ஸ்பெயின்நாட்டிற்கு திரும்பினார்.

இரண்டு ஆண்டுகளுக்கப் பின்னர் 1495ம் ஆண்டில்
கொலம்பஸ் மீண்டும் இஸ்பேனியோலாவிற்கு ஒரு
கப்பலில் இன்னும் சில மாலுமிகளுடன் வந்து சேர்ந்தார்.
இங்கே இவர் அமைத்துக் கொடுத்திருந்த குடியிருப்புகள்
முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தன. குடியமர்த்தப்பட்ட
ஸ்பெயின் நாட்டினர் எவரும் தென்படவில்லை.

அந்தத் தீவில் சுற்றித் திரிந்து ஒரு சில ஸ்பெயின் நாட்டு
மாலுமிகளைக் கண்டார்.

அவர்கள் பூர்விகக் குடியினருக்குப் பயந்து காடுகளில்
ஒளிந்து வாழ்வதாகவும் அதற்கான காரணத்தையும்
கூறினார்கள்.

கொலம்பஸ் அவரகளை விட்டுச் சென்றதிலிருந்து ஓராண்டு
காலத்திற்குக் கைவசமிருந்த வெடிமருந்து, துப்பாக்கி
ஆகியவற்றைக் கொண்டு பூர்வீகக் குடியினரை அச்சுறுத்தி
அடிமைப்படுத்திக் கொடுமைகள் செய்து வந்துள்ளனர்.

இவர்களிடமிருந்த வெடிமருந்துகள் தீர்ந்து போனதைப்
பூர்விகக் குடியினர் தெரிந்து கொண்டு விட்டனர். எனவே
அவர்கள் ஸ்பெயின் நாட்டினரது கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்ட தோடல்லாமல் சண்டையிட்டு ஸ்பெயின் நாட்டின்
பலரை கொன்றனர். குடியிருப்புகளை அழித்துவிட்டனர்.

தப்பிப் பிழைத்த சில ஸ்பெயின் நாட்டு மாலுமிகள் காட்டில்
ஒளிந்து வாழ்வதாகவும் கொலம்பஸிடம் சொன்னார்கள்.
கொலம்பஸ் தன் கைவசமிருந்த வெடிமருந்து, துப்பாக்கிகளை
கையாண்டு, மீண்டும் பூர்வீகக் குடியினரைத் தனது
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இம்முறை அவர்களைத்
தந்திரமாகக் கையாளத் திட்டமிட்டார்.

கொலம்பஸ் சிறந்த கடலோடி மட்டுமல்ல; ஒரு தேர்ந்த
வானியல் நிபுணருமாவார். அன்றைய மறுநாள் முழு
சூரிய கிரகணம் நிகழவிருப்பதைத் துல்லியமாக
அறிந்திருந்தார்.

————————————-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Empty Re: மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்

Post by rammalar Thu Jul 13, 2017 5:01 pm

கொலம்பஸ் பூர்வீகக் குடியினரிடம், நாங்கள் கடவுளின்
தூதுவர்கள், எங்களை நீங்கள் எதிர்த்துப் பகைத்து
கொண்டால் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, உங்களுக்குப்
பல கெடுதல்களும் தீங்குகளும் ஏற்படுமாறு செய்து
விடுவோம். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

நாளை முதல் சூரியனின் ஒளி உங்களுக்குக் கிடைக்காமல்
மறைக்கப் போகிறேன் என்றார்.

மறுநாள் காலைப்பொழுதில் சூரியன் உதயமான சிறிது
நேரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பமானது. சூரியன் சிறிது
சிறிதாக மறைந்து முழுமையான இருள் ஏற்பட்டது.

பூர்வீகக் குடியினர் அஞ்சிநடுநடுங்கி, கொலம்பஸின்
கால்களில்விழுந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று
கதறினார்கள்.

நான் உங்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து
இப்போது ஏற்பட்டிருக்கின்ற இருளை நீக்கி, ஒளியினை
மீண்டும் கொண்டு வருகிறேன் என்று கூறிய கொலம்பஸ்
மண்டியிட்டு, பிரார்த்தனை செய்வது போல் பாவித்து
மறைவிடத்திலிருந்து மணற்கடிகையில் நேரத்தைக்
கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.

சூரிய கிரகணம் விடுகின்ற நேரம் வந்தது.
கடவுள் எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு விட்டார்.
இன்னும் சிறிதுநேரத்தில் மெல்ல மெல்ல இருள் அகன்று
ஒளி கிடைக்கும் என்றார்.

சூரிய கிரகணம் விலக ஆரம்பித்தது. கொஞ்சம்,
கொஞ்சமாக சூரிய ஒளி தெரிய ஆரம்பித்தது. பூர்வீகக்
குடியினருக்கு கொலம்பஸ் தெய்வமாகவே ஆகிவிட்டார்.
அவரிடம் அடிபணிந்து தங்களை அவருடைய
அடிமையாக்கிக் கொண்டார்கள்.

இவ்வாறு கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவின் பூர்வீகக்
குடியினரை அடிமைப் படுத்தி, அவர்களைச் சுரண்டியதுடன்
அங்கிருந்த ஏராளமான செல்வங்களை ஸ்பெயின்
நாட்டிற்கு கொண்டு வந்து குவித்தார் என்பது வரலாற்று
உண்மையாகும்.

மேற்கிந்தியர்களின் நாடோடிப் பாடல்களில் இன்றளவும்
கொலம்பஸ் ஒரு ஏமாற்றுக்காரர் என்றே வசை
பாடப்படுகிறது.

—————————————–
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Empty Re: மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்

Post by rammalar Thu Jul 13, 2017 6:06 pm

இதேபோன்ற சூரிய கிரகணத் தொடர்பாக ஏற்பட்ட
மற்றுமொரு வரலாற்றை நிகழ்வைப் பார்ப்போம்.

அரேபியா நாட்டில் தோன்றிய தீர்க்கதரிசி முகம்மது
நபியர்கள் இறைவன் ஒருவன்தான் என்று இஸ்லாமிய
கொள்கையினை அங்கே போதித்து வந்தார்கள்.

அரேபியாவில் அப்போது வசித்து வந்த பூர்வ குடிமக்கள்
அவரதுபோதனைகளை ஏற்க மறுத்ததோடல்லாமல்,
அவரை இழித்துரைத்தும் ஏளனப்படுத்தியும்
பலவிதமான இடையூறுகளைச் செய்தார்கள்.

அவ்வாறான காலகட்டத்தில் கி.பி. 632ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 27ம் தேதியன்று நபிகளின் மகன் இபுறாஹிம் என்ற
இரண்டு வயது பாலகன் இறந்து விட்டார்.

அன்றைய தினம் தற்செயலாக பூரண சூரிய கிரகணம்
ஏற்பட்டு, மதீனா நகரமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ணுற்ற பூரவ குடிமக்கள் முகம்மது நபி
உண்மையிலேயே இறைதூதராக தீர்க்கதரிசியாக இருப்பார்
போலும், அதனால்தான் அவரது மகனின் இறப்பிற்கு
சூரியனே இருள் சூழ்ந்து துக்கம் அனுஷ்டிக்கிறது என்று
பேசினார்கள், நம்பினார்கள்.

முகம்மது அவரகளே நீங்கள் உமையானவர்தான்.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். உங்களது
மகனின் இறப்பிற்கு சூரியனே துக்கம் அனுஷ்டிக்கிறது
அதனால்தான் நாங்கள் நம்புகிறோம் என்றார்கள்.

அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு,
நபியவர்கள், சூரியன் எனது மகனின் இழப்பிற்காகத்தான்
துக்கம் காக்கிறது என்று சொல்லியிருப்பாரேயாயின்,
அரபு மக்கள் அத்துணை பேர்களும் ஒரே பொழுதில்
இவரத கொள்கையினை அட்டியின்றி ஏற்றிருப்பார்கள்.

அன்றே மதீனா நகரத்து மக்கள் அனைவரும் அவரது
கட்டளைக்க கட்டுப்பட்டவர்களாகி இருப்பார்கள்.

ஆனால் முகம்மது நபியவர்கள் சூரியனும் சந்திரனும்,
பூமியும் அதனதன் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
இந்த சூரிய கிரகணம் என்பது ஒரு குறிப்பிட்ட கால
அளவில் ஏற்படக்கூடிய நிகழ்வு.

எனது மகனின் இறப்பிற்கு இதற்கும் எந்தவிதமான
தொடர்பும் கிடையாது என்று தெளிவுபட உரைத்தார்கள்.
இதனைக் கேட்டதும், அந்த பூர்வீகக் குடியினர் நபிகர்
மீது கொண்ட திடீர் நம்பிக்கையைக் கைவிட்டு,
அவரைவிட்டு விலகிச் சென்றார்கள்.

மீ்pடும், பழையபடி எதிர்ப்பையும் ஏளனத்தையும்
தொடர்ந்தார்கள். பிற்றைய நாளில் நபிகளாரின்
போதனை ஏற்கப்பட்டு அவர்களால் பின்பற்றப்பட்டது
என்பது அவர்கள் உண்மையானவர் என்பதால் ஏற்பட்ட
மாற்றமாகும்.

சத்யமேவ ஜெயதே!

—————————————–
– கவிஞர் மு. தாஜுதீன்
நன்றி – மஞ்சரி
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Empty Re: மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum