Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழ் மகள் மித்தாலி!
Page 1 of 1 • Share
தமிழ் மகள் மித்தாலி!
-
மகள் கொஞ்சம் சோம்பேறியாக இருக்கிறாளே என்று அம்மாவுக்கு
வருத்தம். காலையில் படுக்கையில் இருந்து அவளை எழுப்புவதே
சிரமமாக இருந்தது அம்மாவுக்கு.
சீக்கிரமே எழுந்து என்னம்மா செய்யப் போறேன்? என்று
கேட்டபடியே மீண்டும் போர்வையை இழுத்து மூடிக் கொள்ளும்
இவளை என்ன செய்யலாம்? அதிகாலையிலேயே படுக்கையில்
இருந்து எழுவதை எப்படிப் பழக்குவது?
அம்மாவும் அப்பாவும் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.
அதிகாலையில் எழுந்து கிரிக்கெட் பயிற்சிக்கு செல்லும் மகன்
மிதுனுடன் அவளையும் அனுப்ப முடிவானது.
பயிற்சிக்குப் போன இடத்தில் சிறுவர்களுக்குத்தான் பயிற்சி
அளிக்கப்பட்டது. ஆனால், அந்தச் சிறுமியின் தந்தை தரைராஜூக்கு
கோச் ஜோதி பிரசாத் நண்பர் என்பதால், அங்கிருந்த சிறுவர்களுடன்
அந்தச் சிறுமிக்கும் பயிற்சி தொடங்கியது.
சில மாதங்களிலேயே சிறுமியின் திறமையைக் கண்டுபிடித்து
விட்டார் கோச் ஜோதி பிரசாத். துரைராஜை அழைத்து அவர்,
பையனைப் பெரிய கிரிக்கெட்டர் ஆக்கம்கிறதை மறந்துடுங்க.
பேசாம, பொண்ணு மேல கான்சென்ட்ரேட் பண்ணுங்க என்று கூறி,
தேசிய விளையாட்டுக் கழகத்தின் (என்ஐஎஸ்) பயிற்சியாளர்
சம்பத்குமாரிடம் சிறுமியை அழைத்துச் செல்ல ஆலோசனை
சொன்னார்.
அதன்படி சம்பத்குமாரிடம் அழைத்துச் செல்லப்பட்டாள் சிறுமி.
சில மாதப் பயிற்சியலேயே அவளது திறமையைக் கண்டுபிடித்த
சம்பத் குமார், இவள் சாதிக்கப் பிறந்தவள் என்று சர்டிஃபிகேட்
கொடுத்தார்.
-
அவர் சொன்னது அப்படியே பலித்தது. மித்து என்று வீட்டில்
செல்லமாக அழைக்கப்பட்ட அந்தச் சிறுமியின் பெயர்
மித்தாலி ராஜ். ஆம்! ஆம்! இந்திய மகளிர் கிரிக்கெட்டில்
18 ஆண்டுகளாக கோலோச்சிக் கொண்டிருக்கும் அதே
மித்தாலி ராஜ்தான்!
–
மித்தாலி பிறந்தபோது (டிசம்பர் 3, 1982) அவரது குடும்பம்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்தது. அப்பா துரைராஜ்,
இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்தார்.
அம்மா லீலாராஜ். இப்போதும் வீட்டில் தமிழ் பேசும் சுத்தமான
தமிழ்க் குடும்பம்.
மித்தாலியின் சிறுவயதிலேயே அப்பா துரைராஜ் விமானப்படை
வேலையை விட்டு விட்டு, ஆந்திரா வங்கியில் பணியில் சேர
குடும்பம் ஹைதராபாத்தில் செட்டிலானது.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தமிழ் மகள் மித்தாலி!
சம்பத்குமாரிடம் பயிற்சிக்குச் சென்றபிறகு, மித்தாலியின்
வாழ்க்கையே அடியோடு மாறியது. ஆசை ஆசையாகக் கற்றுக்
கொண்ட பரதநாட்டியத்தைக் கிரிக்கெட்டுக்காக தியாகம் செய்ய
வேண்டியதானது. கடுமையான பயிற்சியின் பலன் மூன்றே
ஆண்டுகளில் தெரிந்தது.
1997ம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான
உத்தேச அணியில் சேர்க்கப்பட்டபோது, மித்தாலியின் வயது 14.
ஆனால் 14 வயது சிறுமிக்கு உலகக் கோப்பைப் போட்டியில்
பங்கேற்கும் அளவுக்கான பக்குவம் இருக்காது என்று கூறி,
இறுதிப் பட்டியலில் அவரது பெயரைத் தேர்வாளர்கள்
சேர்க்கவில்லை.
ஆனாலும், இந்திய அணியில் இடம் பிடிக்க மித்தாலிக்கு அதிகக்
காலம் பிடிக்கவில்லை. அடுத்த இரண்டே ஆண்டுகளில் இந்திய
அணியில் இடம்பிடித்தார். அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள்
போட்டியில் முதல் முறையாகக் களம் இறங்கிய மித்தாலி,
ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் குவித்து, அறிமுகப் போட்டியில்
சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
அதோடு, மிகக் குறைந்த வயதில் அறிமுகப் போட்டியில்
சதமடித்தவர் என்ற சாதனையும் அவரது பெயரில் இருக்கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்தார்
மித்தாலி. இங்கிலாந்துக்கு எதிராக தனது மூன்றாவது டெஸ்டை
விளையாடிய அவர், 214 ரன்கள் குவித்தார்
–
அதற்கு முன் மகளிர் கிரிக்கெட்டில் ஒரே ஒரு இரட்டை சதம்தான்
(209) அடிக்கப்பட்டிருந்தது.
2001ம் ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்
போட்டியில் டைபாய்டு காய்ச்சல் காரணமாகப் பங்கேற்க முடியாத
மித்தாலி, அடுத்த உலகக் கோப்பைத் தொடரி்ல் கேப்டன்
பொறுப்பையும் ஏற்றிருந்தார். இறுதிப் போட்டிக்க முன்னேறிய
இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
ஆனால், அடுத்த ஆண்டே, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர்,
ஒருநாள் தொடர்களை வென்றதுடன், அதே ஆண்டில் ஆசியக்
கோப்பையும் வென்றது இந்திய அணி.
இந்த முறை இங்கிலாந்தில் நடந்து முடிந்த தொடரிலும் இறுதிப்
போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, நூலிழையில் இங்கிலாந்திடம்
தோல்வியடைந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில்
இருமுறை விளையாடிய இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் மட்டுமே.
உலகக் கோப்பைப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும்,
லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது
இந்திய மகளிர் அணி. முறையான திட்டமிடலும், முக்கியத்துவமும்
அளிக்கப்பட்டால், மித்தாலி ராஜ்களைப் போன்று இந்தியாவும்
ஏராளமான சாதனைப் பெண்களை உருவாக்க முடியும்.
வாழ்க்கையே அடியோடு மாறியது. ஆசை ஆசையாகக் கற்றுக்
கொண்ட பரதநாட்டியத்தைக் கிரிக்கெட்டுக்காக தியாகம் செய்ய
வேண்டியதானது. கடுமையான பயிற்சியின் பலன் மூன்றே
ஆண்டுகளில் தெரிந்தது.
1997ம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான
உத்தேச அணியில் சேர்க்கப்பட்டபோது, மித்தாலியின் வயது 14.
ஆனால் 14 வயது சிறுமிக்கு உலகக் கோப்பைப் போட்டியில்
பங்கேற்கும் அளவுக்கான பக்குவம் இருக்காது என்று கூறி,
இறுதிப் பட்டியலில் அவரது பெயரைத் தேர்வாளர்கள்
சேர்க்கவில்லை.
ஆனாலும், இந்திய அணியில் இடம் பிடிக்க மித்தாலிக்கு அதிகக்
காலம் பிடிக்கவில்லை. அடுத்த இரண்டே ஆண்டுகளில் இந்திய
அணியில் இடம்பிடித்தார். அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள்
போட்டியில் முதல் முறையாகக் களம் இறங்கிய மித்தாலி,
ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் குவித்து, அறிமுகப் போட்டியில்
சதமடித்த இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
அதோடு, மிகக் குறைந்த வயதில் அறிமுகப் போட்டியில்
சதமடித்தவர் என்ற சாதனையும் அவரது பெயரில் இருக்கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்தார்
மித்தாலி. இங்கிலாந்துக்கு எதிராக தனது மூன்றாவது டெஸ்டை
விளையாடிய அவர், 214 ரன்கள் குவித்தார்
–
அதற்கு முன் மகளிர் கிரிக்கெட்டில் ஒரே ஒரு இரட்டை சதம்தான்
(209) அடிக்கப்பட்டிருந்தது.
2001ம் ஆண்டு நடந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்
போட்டியில் டைபாய்டு காய்ச்சல் காரணமாகப் பங்கேற்க முடியாத
மித்தாலி, அடுத்த உலகக் கோப்பைத் தொடரி்ல் கேப்டன்
பொறுப்பையும் ஏற்றிருந்தார். இறுதிப் போட்டிக்க முன்னேறிய
இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
ஆனால், அடுத்த ஆண்டே, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடர்,
ஒருநாள் தொடர்களை வென்றதுடன், அதே ஆண்டில் ஆசியக்
கோப்பையும் வென்றது இந்திய அணி.
இந்த முறை இங்கிலாந்தில் நடந்து முடிந்த தொடரிலும் இறுதிப்
போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, நூலிழையில் இங்கிலாந்திடம்
தோல்வியடைந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில்
இருமுறை விளையாடிய இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் மட்டுமே.
உலகக் கோப்பைப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும்,
லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது
இந்திய மகளிர் அணி. முறையான திட்டமிடலும், முக்கியத்துவமும்
அளிக்கப்பட்டால், மித்தாலி ராஜ்களைப் போன்று இந்தியாவும்
ஏராளமான சாதனைப் பெண்களை உருவாக்க முடியும்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தமிழ் மகள் மித்தாலி!
இதுவரை 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மித்தாலி,
6190 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஆறாயிரம்
ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஒரே வீராங்கனை மித்தாலி,
மிக அதிக அரைசதங்கள் (49) அடித்தவர். தொடர்ச்சியாக
7 போட்டிகளில் அரை சதம் அடித்த ஒரே வீராங்கனை என்று பல
சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் அடித்திருக்கிறார்.
18 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வந்தாலும், மித்தாலி பங்கேற்ற
டெஸ்ட் போட்டிகள் 10 மட்டுமே. மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்தியா
முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால், இந்தியா அதிக
டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில்லை. இனியாவது அந்த நிலை
மாறவேண்டும்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்திருக்கும் இருவருமே
(சச்சின் டெண்டுல்கர், மித்தாலி) இந்தியர்கள் என்பது நமக்கெல்லாம்
பெருமை.
உலகக் கோப்பைப் போட்டிகளின் முடிவில், உலகின் மிகச் சிறந்த
வீராங்கனைகளைக் கொண்ட கனவு அணியை சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் அறிவித்துள்ளது. மித்தாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர்,
தீப்தி சர்மா என மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ள அந்த
அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்.
ம், கனவு குணியின் கேப்டன் நம் தமிழ் பெண் மித்தாலி ராஜ்!
கொண்டாடுவோம்.
–
—————————————————-
– அனு ஆர். சுகுமார்
நன்றி- மங்கையர் மலர்
தினமலர் பிற இதழ்கள் பகுதி
6190 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் ஆறாயிரம்
ரன்களுக்கு மேல் குவித்துள்ள ஒரே வீராங்கனை மித்தாலி,
மிக அதிக அரைசதங்கள் (49) அடித்தவர். தொடர்ச்சியாக
7 போட்டிகளில் அரை சதம் அடித்த ஒரே வீராங்கனை என்று பல
சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
ஒருநாள் போட்டிகளில் 6 சதங்கள் அடித்திருக்கிறார்.
18 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வந்தாலும், மித்தாலி பங்கேற்ற
டெஸ்ட் போட்டிகள் 10 மட்டுமே. மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்தியா
முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால், இந்தியா அதிக
டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில்லை. இனியாவது அந்த நிலை
மாறவேண்டும்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்திருக்கும் இருவருமே
(சச்சின் டெண்டுல்கர், மித்தாலி) இந்தியர்கள் என்பது நமக்கெல்லாம்
பெருமை.
உலகக் கோப்பைப் போட்டிகளின் முடிவில், உலகின் மிகச் சிறந்த
வீராங்கனைகளைக் கொண்ட கனவு அணியை சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் அறிவித்துள்ளது. மித்தாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர்,
தீப்தி சர்மா என மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ள அந்த
அணியின் கேப்டன் மித்தாலி ராஜ்.
ம், கனவு குணியின் கேப்டன் நம் தமிழ் பெண் மித்தாலி ராஜ்!
கொண்டாடுவோம்.
–
—————————————————-
– அனு ஆர். சுகுமார்
நன்றி- மங்கையர் மலர்
தினமலர் பிற இதழ்கள் பகுதி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அழகிய தமிழ் மகள் --முஹம்மத் ஸர்பான்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு போன்களுக்காக சில தமிழ் அப்ளிகேசன்கள்..
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: ஆன்ட்ராய்டு போன்களுக்காக சில தமிழ் அப்ளிகேசன்கள்..
» தமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது?
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|