Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மரணம் உறுதியானபின்பு ஏற்படும் பயத்தை எப்படி எதிர்கொள்வது?
Page 1 of 1 • Share
மரணம் உறுதியானபின்பு ஏற்படும் பயத்தை எப்படி எதிர்கொள்வது?
பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்று ஒன்று ஒவ்வொரு உயிருக்கும் உண்டு. மனித குலத்துக்கும் ஒரு நாள் இறப்பு உண்டு. அது எப்பொழுது வரும், எப்படி வரும் என்றுதான் நாம் அறிவதில்லை. முன்பெல்லாம் நோய் வாய்ப்பட்டோ, காலரா, அம்மை, மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளாலோ ஏற்படும். விஞ்ஞானம் வளர வளர, அறிவியல் கண்டுபிடிப்புகளால் வாகனப் பெருக்கம் மிகவும் வளர்ந்திருக்கிறது. எல்லோருக்கும் அவசரம். நகரங்களிலும், பெருஞ்சாலைகளிலும் வாகனங்களை விரைவாக ஓட்டுகின்றனர்.
ஒவ்வொருவர்க்கும், முன்னால் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் முந்திச் செல்ல வேண்டும் என்றே வேகமாக ஓட்டுகின்றனர். அந்தந்த பகுதிக்கேற்ற வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில்லை. விபத்துக்களும் நேர்கின்றன. உயிரையும் இழக்கின்றனர்.
இது ஒரு பக்கம். நோய் வாய்ப்பட்டு மரணம் சம்பவிப்பது மறுபக்கம். என் நண்பர் ஒருவர். அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு பிள்ளைகள். நிறைவான வாழ்க்கை. அமைதியாக இனிமையாக போய்க்கொண்டிருந்தது. நல்ல வேலையில் உள்ள மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. உள்ளூரிலும் வெளியூர்களிலும் உள்ள உறவினர்களுக்கு சென்று அழைப்பிதழ் கொடுத்து வந்தனர். ஒரு நாள் பயணத்தின்போது திடீரென்று வாந்தியும் தலை சுற்றலும் ஏற்பட்டது. அலைச்சலும், வெவ்வேறு இடங்களிலும் சாப்பிட்டதும் காரணமாயிருக்கலாம் என்று எண்ணி குடும்ப மருத்துவரிடம் சென்றனர்.
மருத்துவப் பரிசோதனையில் கணையத்தில் கட்டி ஏற்பட்டு பித்தப்பையை அடைத்திருக்கிறதென்று தெரிவித்தார். இதனால்தான் வாந்தியும், ஆரம்ப நிலையில் மஞ்சள் காமாலையும் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இல்லை என்றும், தற்காலிகமாக நோய்க் குறியீடுகளுக்குத் தகுந்த சிகிச்சை மட்டுமே தர முடியுமென்றும் தெரிவித்தார். இது புற்று நோய் சம்பந்தமானது, நோயாளிக்கு பக்குவமாக சொல்லும்படியும் சொன்னார். நண்பரின் மனைவி மிக துயரமடைந்தார். கணவர் முன்னால் கண் கலங்கினால் அவர் தெரிந்து மிகவும் பயப்படுவார், வருந்துவார் என்று மௌனமாகவே அழுதார்.
இப்படியே சுமார் ஒரு வருடம் ஓடிவிட்டது. நண்பரின் பிள்ளைகள் மதுரையிலும், கோவையிலும் வெவ்வேறு குடல் நோய் மருத்துவர்களிடமும் காண்பித்தும் அறுவை சிகிச்சை செய்து நோயைக் குணப்படுத்த முடியவில்லை. மருந்து, மாத்திரைகளாலும் குணமாகவில்லை. நண்பரைப் பார்த்து ஆறுதல் சொல்லவும், உடல் முடியாமைக்காக கவலைப்பட வேண்டாம் என்று தேற்றவும் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் தனியறையில் கட்டிலில் அசௌகர்யத்துடன் உட்கார்ந்திருந்தார். அவரிடம் என்ன விசாரிப்பது, எப்படி ஆறுதல் சொல்லுவது? அவருக்கு வந்திருப்பது கணையப் புற்று நோய் என்பது அவர் மனைவி, பிள்ளைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு மட்டும் நோயின் தன்மை பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் விரிவாகச் சொல்லவில்லை. ஒவ்வொருவர் முகத்தையும் ஆவலுடன் பார்க்கிறார். அன்று அவர் முகத்தில் எனக்கு 'மரண பயம்' தெரிந்தது. நான் மனதிற்குள் மிக அதிர்ச்சியடைந்து, 'ராமு, உடல் நலமாகும், தைரியமாக இருங்கள், மீண்டும் வந்து பார்க்கிறேன்' என்று சொல்லிக் கிளம்பினேன்.
அவர் இறுதியாக மிகவும் அவதிப்பட்டு நேற்று இரவில் இறந்துவிட்டார். ஒரே ஒரு நோய் வந்துவிட்டால் நோயாளியிடமே சொல்லிவிடலாம், நீ இறந்து விடுவாய் என்று. வெறி நாய்க் கடியால், தடுப்பு ஊசி போடாதவர்களுக்கு பாதிக்கும் 'ரேபிஸ்' (Rabies or Hydrophobia) க்கு முழுமையான மருத்துவம் கிடையாது. ஓரிரு சந்தர்ப்பங்களில் மட்டும் வெளி நாடுகளில் தீவிர சிகிச்சையில், மூச்சு திணறல் எற்படுவதை 'செயற்கை மூச்சுக் கருவி' (Ventilator) மூலமாகவும், மற்ற தகுந்த வெறி நோய் தடுப்பு மருந்துகள் மூலமாகவும் நோயாளிகளைக் காப்பாற்றியிருப்பதகவும் படித்திருக்கிறேன். கணையப் புற்று நோய்க்கும் முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை செய்தாலும் இதே விதிதான் போலும்! காப்பாற்ற முடியாது.
அவர் நினைத்திருக்கலாம், 'எனக்குத் தெரியாது என்றும், எனக்குத் தெரியக் கூடாது' என்றும் நீங்கள் நடந்து கொண்டிருப்பதிலிருந்து ஒன்று தெரிகிறது. எனக்கு தெரியாது என்பது தெரியாததாகவே இருக்கட்டும். எனக்குத் தெரியும் என்று நீங்கள் தெரிந்து வருந்த வேண்டாம் என்று. அன்று அவர் முகத்தில் பார்த்த 'மரண பயம்' என் கண் முன்னே தெரிகிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் 'நோய் இறுதியை நெருங்கும் நோயாளிகளுக்கான கவனிப்புப் பகுதி, (Terminal illness care ward) என்று இருக்க வேண்டும். அங்கு மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும். நோயையும், இறுதி முடிவையும் எதிர் கொள்ள தகுந்த பக்குவத்தையும், மன நிலையையும் பெற உறவினர்களுக்கு, தேவையானால் நோயாளிகளுக்கும் ஆலோசனை (Counselling) வழங்கலாம்.
நன்றி - வ.க.கன்னியப்பன் ( doctorvkk@yahoo.com)
ஒவ்வொருவர்க்கும், முன்னால் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் முந்திச் செல்ல வேண்டும் என்றே வேகமாக ஓட்டுகின்றனர். அந்தந்த பகுதிக்கேற்ற வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில்லை. விபத்துக்களும் நேர்கின்றன. உயிரையும் இழக்கின்றனர்.
இது ஒரு பக்கம். நோய் வாய்ப்பட்டு மரணம் சம்பவிப்பது மறுபக்கம். என் நண்பர் ஒருவர். அரசு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இரண்டு பிள்ளைகள். நிறைவான வாழ்க்கை. அமைதியாக இனிமையாக போய்க்கொண்டிருந்தது. நல்ல வேலையில் உள்ள மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. உள்ளூரிலும் வெளியூர்களிலும் உள்ள உறவினர்களுக்கு சென்று அழைப்பிதழ் கொடுத்து வந்தனர். ஒரு நாள் பயணத்தின்போது திடீரென்று வாந்தியும் தலை சுற்றலும் ஏற்பட்டது. அலைச்சலும், வெவ்வேறு இடங்களிலும் சாப்பிட்டதும் காரணமாயிருக்கலாம் என்று எண்ணி குடும்ப மருத்துவரிடம் சென்றனர்.
மருத்துவப் பரிசோதனையில் கணையத்தில் கட்டி ஏற்பட்டு பித்தப்பையை அடைத்திருக்கிறதென்று தெரிவித்தார். இதனால்தான் வாந்தியும், ஆரம்ப நிலையில் மஞ்சள் காமாலையும் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இல்லை என்றும், தற்காலிகமாக நோய்க் குறியீடுகளுக்குத் தகுந்த சிகிச்சை மட்டுமே தர முடியுமென்றும் தெரிவித்தார். இது புற்று நோய் சம்பந்தமானது, நோயாளிக்கு பக்குவமாக சொல்லும்படியும் சொன்னார். நண்பரின் மனைவி மிக துயரமடைந்தார். கணவர் முன்னால் கண் கலங்கினால் அவர் தெரிந்து மிகவும் பயப்படுவார், வருந்துவார் என்று மௌனமாகவே அழுதார்.
இப்படியே சுமார் ஒரு வருடம் ஓடிவிட்டது. நண்பரின் பிள்ளைகள் மதுரையிலும், கோவையிலும் வெவ்வேறு குடல் நோய் மருத்துவர்களிடமும் காண்பித்தும் அறுவை சிகிச்சை செய்து நோயைக் குணப்படுத்த முடியவில்லை. மருந்து, மாத்திரைகளாலும் குணமாகவில்லை. நண்பரைப் பார்த்து ஆறுதல் சொல்லவும், உடல் முடியாமைக்காக கவலைப்பட வேண்டாம் என்று தேற்றவும் அவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவர் தனியறையில் கட்டிலில் அசௌகர்யத்துடன் உட்கார்ந்திருந்தார். அவரிடம் என்ன விசாரிப்பது, எப்படி ஆறுதல் சொல்லுவது? அவருக்கு வந்திருப்பது கணையப் புற்று நோய் என்பது அவர் மனைவி, பிள்ளைகள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு மட்டும் நோயின் தன்மை பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் விரிவாகச் சொல்லவில்லை. ஒவ்வொருவர் முகத்தையும் ஆவலுடன் பார்க்கிறார். அன்று அவர் முகத்தில் எனக்கு 'மரண பயம்' தெரிந்தது. நான் மனதிற்குள் மிக அதிர்ச்சியடைந்து, 'ராமு, உடல் நலமாகும், தைரியமாக இருங்கள், மீண்டும் வந்து பார்க்கிறேன்' என்று சொல்லிக் கிளம்பினேன்.
அவர் இறுதியாக மிகவும் அவதிப்பட்டு நேற்று இரவில் இறந்துவிட்டார். ஒரே ஒரு நோய் வந்துவிட்டால் நோயாளியிடமே சொல்லிவிடலாம், நீ இறந்து விடுவாய் என்று. வெறி நாய்க் கடியால், தடுப்பு ஊசி போடாதவர்களுக்கு பாதிக்கும் 'ரேபிஸ்' (Rabies or Hydrophobia) க்கு முழுமையான மருத்துவம் கிடையாது. ஓரிரு சந்தர்ப்பங்களில் மட்டும் வெளி நாடுகளில் தீவிர சிகிச்சையில், மூச்சு திணறல் எற்படுவதை 'செயற்கை மூச்சுக் கருவி' (Ventilator) மூலமாகவும், மற்ற தகுந்த வெறி நோய் தடுப்பு மருந்துகள் மூலமாகவும் நோயாளிகளைக் காப்பாற்றியிருப்பதகவும் படித்திருக்கிறேன். கணையப் புற்று நோய்க்கும் முற்றிய நிலையில் அறுவை சிகிச்சை செய்தாலும் இதே விதிதான் போலும்! காப்பாற்ற முடியாது.
அவர் நினைத்திருக்கலாம், 'எனக்குத் தெரியாது என்றும், எனக்குத் தெரியக் கூடாது' என்றும் நீங்கள் நடந்து கொண்டிருப்பதிலிருந்து ஒன்று தெரிகிறது. எனக்கு தெரியாது என்பது தெரியாததாகவே இருக்கட்டும். எனக்குத் தெரியும் என்று நீங்கள் தெரிந்து வருந்த வேண்டாம் என்று. அன்று அவர் முகத்தில் பார்த்த 'மரண பயம்' என் கண் முன்னே தெரிகிறது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் 'நோய் இறுதியை நெருங்கும் நோயாளிகளுக்கான கவனிப்புப் பகுதி, (Terminal illness care ward) என்று இருக்க வேண்டும். அங்கு மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்பட வேண்டும். நோயையும், இறுதி முடிவையும் எதிர் கொள்ள தகுந்த பக்குவத்தையும், மன நிலையையும் பெற உறவினர்களுக்கு, தேவையானால் நோயாளிகளுக்கும் ஆலோசனை (Counselling) வழங்கலாம்.
நன்றி - வ.க.கன்னியப்பன் ( doctorvkk@yahoo.com)
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மரணம் உறுதியானபின்பு ஏற்படும் பயத்தை எப்படி எதிர்கொள்வது?
கண்டிப்பாக எந்த நோய் என்று அந்த நபரிடம் கூறுவது மிகச் சிறந்தது.
தகவலுக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மரணம் உறுதியானபின்பு ஏற்படும் பயத்தை எப்படி எதிர்கொள்வது?
நல்ல பதிவு தம்பி
எந்த நோயாக இருந்தாலும் மருத்துவர் நோயாளியிடம் தெளிவாக கூறவில்லை என்றாலும் உறவினர்களிடம் கூறிவிடுவர் ஏனென்றால் மேல் சிகிச்சைக்கு ஆயத்தமாக வேண்டுமல்லவா
எந்த நோயாக இருந்தாலும் மருத்துவர் நோயாளியிடம் தெளிவாக கூறவில்லை என்றாலும் உறவினர்களிடம் கூறிவிடுவர் ஏனென்றால் மேல் சிகிச்சைக்கு ஆயத்தமாக வேண்டுமல்லவா
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» பிரச்சனையை எதிர்கொள்வது எப்படி?
» இயற்கையை எதிர்கொள்வது எப்படி?
» விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது
» பயத்தை வெல்வது எப்படி?
» பயத்தை வெல்வது எப்படி?
» இயற்கையை எதிர்கொள்வது எப்படி?
» விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது
» பயத்தை வெல்வது எப்படி?
» பயத்தை வெல்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|