Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஜீரணமான உணவுக்கு என்ன நேர்கிறது?
Page 1 of 1 • Share
ஜீரணமான உணவுக்கு என்ன நேர்கிறது?
மாவு உணவும் சர்க்கரையுமான கார்போஹைடிரேட் முதலில் வாயிலே கரைந்து, பிறகு சிறுகுடலிலே எளிய சர்க்கரையாக, முக்கியமாக குளுகோஸாக மாறுகிறது. சிறுகுடலின் உட்சுவரிருள்ள உறிஞ்சுகளின் வழியே குளுக்கோஸ் நேரே இரத்தத்தை அடைகிறது. இவ்வாறு அது உடலெங்கும் பயணமாகிறது. இதில் பெரும் பகுதியைத் தசைகள் தமது இயக்கத்துக்கு ஓர் எரிப்பொருளாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. குளுகோஸின் ஒரு சிறு பகுதிகளை கோஜெனாக மாற்றப்படுகிறது. இந்த வடிவத்தில் தான் குளுகோஸ் தசைகளிலும் (ஒன்றிலிரண்டு பகுதி) கல்லீரலும் (மூன்றிலொரு பகுதி) சேமிக்கப்படுகிறது. இரத்தத்தில் எப்போதும் சற்று குளுகோஸ் இருக்கும். இதன் அளவு ஒரே சீராக இருக்க வேண்டும். இந்த அளவு ஏறினால் எங்கேயோ ஏதோ தவறு இருக்கிறது என்று பொருள். சர்க்கரை நோய் போன்ற நோய்க்கு அடையாளமாகும் இது.
கொழுப்புச் சத்து ஜீரணமாவது எப்படித் தெரியுமா? கொழுப்புச் சத்து, கிளிசரால், கொழுப்பு அமிலம் என்னும் இரண்டு பொருள்களால் ஆனது. இந்தச் சத்து உடலிலே கரைவதற்காக ஜீரண உறுப்புகள் கொழுப்புச்சத்தை இந்த இரண்டு பொருள்களாகத் தனித்தனியே பிரிக்கின்றன. கொழுப்பு அமிலத்தின் ஒரு பகுதியும் கிளிசராலும் நேராக இரத்தத்திலே கலந்து கல்லீரலுக்குச் செல்கின்றன. இங்கே கொழுப்பு அமிலம் சக்தி தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் ஒரு பகுதி இரத்தத்தின் வழியாகவே உடலின் வேறு தேவையான உறுப்புகளுக்கு, எந்த வடிவத்தில் தேவையோ அந்த வடிவத்தில் மாற்றி அனுப்பப்படுகிறது. அந்த உறுப்புக்களில் இவை சக்தி தயாரிக்கவும் பயன்டும் அல்லது மீண்டும் கொழுப்புச்சத்தாக மாற்றப்பட்டு கொழுப்பான திசுக்களுக்கு வளம் ஊட்டப் பயன்படும் இரத்தத்தின் வழியே அல்லாமல் நிணநீர் நாளங்களினாலே சிறிது கொழுப்புச் சத்து நேரே உறிஞ்சப்படுகிறது என்றும் பார்த்தோம். அவையும் இறுதியில் இரத்தத்திலே வந்துதான் கலக்கின்றன. இந்தக் கொழுப்புப் பொருள்கள் உடலின் பல்வேறு திசுக்களில் உள்ள ஓர் என்ஸைமினால் கொழுப்பு அமிலங்களாகத் தகர்க்கப்படுகின்றன. தேவைக்கு மேல் மிகையாக நாம் உண்பதெல்லாம் பெரும்பாலும் உடலின் கொழுப்பாக மாற்றப்பட்டுச் சேகரமாகின்றன. நமக்குப் போதுமான உணவு கிடைக்காதபோதோ, பட்டினி கிடக்கும் போதோ, இந்தக் கொழுப்புச் சேமிப்பே உடலுக்கு உதவுகிறது.
கொழுப்புச் சத்து ஜீரணமாவது எப்படித் தெரியுமா? கொழுப்புச் சத்து, கிளிசரால், கொழுப்பு அமிலம் என்னும் இரண்டு பொருள்களால் ஆனது. இந்தச் சத்து உடலிலே கரைவதற்காக ஜீரண உறுப்புகள் கொழுப்புச்சத்தை இந்த இரண்டு பொருள்களாகத் தனித்தனியே பிரிக்கின்றன. கொழுப்பு அமிலத்தின் ஒரு பகுதியும் கிளிசராலும் நேராக இரத்தத்திலே கலந்து கல்லீரலுக்குச் செல்கின்றன. இங்கே கொழுப்பு அமிலம் சக்தி தயாரிக்கப் பயன்படுகிறது. இதன் ஒரு பகுதி இரத்தத்தின் வழியாகவே உடலின் வேறு தேவையான உறுப்புகளுக்கு, எந்த வடிவத்தில் தேவையோ அந்த வடிவத்தில் மாற்றி அனுப்பப்படுகிறது. அந்த உறுப்புக்களில் இவை சக்தி தயாரிக்கவும் பயன்டும் அல்லது மீண்டும் கொழுப்புச்சத்தாக மாற்றப்பட்டு கொழுப்பான திசுக்களுக்கு வளம் ஊட்டப் பயன்படும் இரத்தத்தின் வழியே அல்லாமல் நிணநீர் நாளங்களினாலே சிறிது கொழுப்புச் சத்து நேரே உறிஞ்சப்படுகிறது என்றும் பார்த்தோம். அவையும் இறுதியில் இரத்தத்திலே வந்துதான் கலக்கின்றன. இந்தக் கொழுப்புப் பொருள்கள் உடலின் பல்வேறு திசுக்களில் உள்ள ஓர் என்ஸைமினால் கொழுப்பு அமிலங்களாகத் தகர்க்கப்படுகின்றன. தேவைக்கு மேல் மிகையாக நாம் உண்பதெல்லாம் பெரும்பாலும் உடலின் கொழுப்பாக மாற்றப்பட்டுச் சேகரமாகின்றன. நமக்குப் போதுமான உணவு கிடைக்காதபோதோ, பட்டினி கிடக்கும் போதோ, இந்தக் கொழுப்புச் சேமிப்பே உடலுக்கு உதவுகிறது.
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஜீரணமான உணவுக்கு என்ன நேர்கிறது?
புரதச்சத்து இறுதியாக இரத்தத்தில் கலக்கும்போது அமினோ அமிலங்களாக மாறியே கலக்கிறது. இந்த அமிலங்களே இதன் ஆதாரப் பொருள். கட்டிடம் கட்ட எப்படி கல் ஆதாரமோ அப்படி உடல் வளர்ச்சிக்கு இவை ஆதாரம். உடல் என்னும் பரந்த நிலத்தில் வெவ்வேறு பகுதிகளில் ஏதாவது கட்டிட வேலை நடந்து கொண்டு தான் இருக்கிறது. அங்கெல்லாம் இந்த அமினோ அமிலங்கள் விரைந்து உதவும் திசுக்களுக்கான புரோட்டீன், என்ஸைம்கள், ஹார்மோன் என்றும் ஊட்டச் சத்துக்கள், மற்றும் பல இரசாயனக் கலவைகள் எல்லாம் இயற்கையான புரதங்கள். இது தவிர கல்லீரல் என்னும் இரசாயன சாலையில் உடலுக்கான புரதம் தயாராகிறது, சேமிக்கப்படுகிறது, சிறிய சிறிய அளவுகளில் இரத்தத்திற்கு வழங்கப் படுகிறது. தேவைக்கு மிகுதியான புரதத்தை கல்லீரல் வேறு எளிய பொருளாக மாற்றி; உடலின் வேறு தேவைகளுக்கு வழங்குகிறது.
பல கனிச்சத்துக்களும் வைட்டமின்களும் கூடக் கல்லீரலில் தான் சேமிக்கப்படுகின்றன. எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் இவை உடலின் வேறு வேறு இயக்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் உயிரியக்கம் ஆகிறது.
நன்றி: கீற்று
பல கனிச்சத்துக்களும் வைட்டமின்களும் கூடக் கல்லீரலில் தான் சேமிக்கப்படுகின்றன. எப்போதெல்லாம் தேவையோ, அப்போதெல்லாம் இவை உடலின் வேறு வேறு இயக்கங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஒன்றுக்கொன்று தொடர்புடைய இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான இயக்கங்கள் ஒன்று சேர்ந்தால் உயிரியக்கம் ஆகிறது.
நன்றி: கீற்று
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» உண்ணும் உணவுக்கு என்ன நேர்கிறது?
» காலை உணவுக்கு பின் பால் அருந்தினால் பல் துவாரங்களை தடுக்கும்
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
» காலை உணவுக்கு பின் பால் அருந்தினால் பல் துவாரங்களை தடுக்கும்
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» சந்திராஷ்டமம் என்றால் என்ன?
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|