Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பழமொழியும் அதன் விளக்கமும்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
பழமொழியும் அதன் விளக்கமும்
கோத்திரம் அறிந்து பெண் கொடு . பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
அறிந்த விளக்கம் :
பொதுவாக இது நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மறுமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும் அடுத்து , தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருக்கிறது.
அறியாத விளக்கம் :
ஆனால் இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது.
கோ என்பது அரசன் எனப் பொருள் படும் ( கோ+யில் -அரசன் உறையும் இடம் ). திறம் என்பது திறன் அல்லது திறமை.
அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது.. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் ( பா+திறம் ) என
வரவேண்டும் (பா என்பது பாடல் ). புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும்.
அறிந்த விளக்கம் :
பொதுவாக இது நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மறுமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும் அடுத்து , தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருக்கிறது.
அறியாத விளக்கம் :
ஆனால் இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது.
கோ என்பது அரசன் எனப் பொருள் படும் ( கோ+யில் -அரசன் உறையும் இடம் ). திறம் என்பது திறன் அல்லது திறமை.
அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது.. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் ( பா+திறம் ) என
வரவேண்டும் (பா என்பது பாடல் ). புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும்.
Re: பழமொழியும் அதன் விளக்கமும்
வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்..
மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை (சீரியல்களில் கிராஃபிக்ஸ் உதவியுடன் சிற்சில சமயங்களில் சாத்தியம் ). மனைவிகள் எப்போதாவது (செல்லமாக) அடி கழுதையே என வர்ணிக்கப்படுவதுண்டு.. அதுவும் கோபமாக இருக்கும் போது கழுதை என்று சொன்னால் அந்த இடத்தில் இரண்டு கழுதைகள் எண்ணிக்கையில் சண்டையாய் மாற வாய்ப்பிருக்கிறது (சொன்னவரையும் சேர்த்து ) ..
அறியாத விளக்கம் :
மேற்சொன்ன பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும் . கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ
அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறி
அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில்
வேம்பாய் கசப்பதுபோல் என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது. (குறிப்பு : என் மாமியார் இண்டர்நெட்
பார்ப்பதில்லை.எனவே ஐயா விடு ஜுட் )
மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை (சீரியல்களில் கிராஃபிக்ஸ் உதவியுடன் சிற்சில சமயங்களில் சாத்தியம் ). மனைவிகள் எப்போதாவது (செல்லமாக) அடி கழுதையே என வர்ணிக்கப்படுவதுண்டு.. அதுவும் கோபமாக இருக்கும் போது கழுதை என்று சொன்னால் அந்த இடத்தில் இரண்டு கழுதைகள் எண்ணிக்கையில் சண்டையாய் மாற வாய்ப்பிருக்கிறது (சொன்னவரையும் சேர்த்து ) ..
அறியாத விளக்கம் :
மேற்சொன்ன பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும் . கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ
அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறி
அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில்
வேம்பாய் கசப்பதுபோல் என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது. (குறிப்பு : என் மாமியார் இண்டர்நெட்
பார்ப்பதில்லை.எனவே ஐயா விடு ஜுட் )
Re: பழமொழியும் அதன் விளக்கமும்
ஆறிலும் சாவு நூறிலும் சாவு .
அறிந்த விளக்கம் :
மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல..
அறியாத விளக்கம் :
இந்த பழமொழிக்கான சம்பவம் மஹாபாரதத்திலிருந்து உதாரணம் காட்டப்படுகிறது.. கர்ணணை குந்தி தேவி (
போர் நிகழும்போது ) தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன்
சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள். அதற்கு கர்ணன் 'தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன்
இருந்தாலும் சரி..அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று.. அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப் போகிறேன் என்கிறான் கர்ணன்.
அறிந்த விளக்கம் :
மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல..
அறியாத விளக்கம் :
இந்த பழமொழிக்கான சம்பவம் மஹாபாரதத்திலிருந்து உதாரணம் காட்டப்படுகிறது.. கர்ணணை குந்தி தேவி (
போர் நிகழும்போது ) தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன்
சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள். அதற்கு கர்ணன் 'தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன்
இருந்தாலும் சரி..அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று.. அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப் போகிறேன் என்கிறான் கர்ணன்.
Re: பழமொழியும் அதன் விளக்கமும்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.
அறிந்த விளக்கம் :
யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர். உண்மை அதுவல்ல,
அறியாத விளக்கம் :
ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்
1. ) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2. ) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3. ) ஒழுக்கமற்ற மனைவி,
4. ) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்,
5. ) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.
இவர்களை கொண்டிருப்பவன் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம் இங்கு பயன்படுகிறது.
அறிந்த விளக்கம் :
யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர். உண்மை அதுவல்ல,
அறியாத விளக்கம் :
ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்
1. ) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2. ) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3. ) ஒழுக்கமற்ற மனைவி,
4. ) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்,
5. ) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.
இவர்களை கொண்டிருப்பவன் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம் இங்கு பயன்படுகிறது.
Re: பழமொழியும் அதன் விளக்கமும்
அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது .
அறிந்த விளக்கம்
: மேற்கண்ட பழமொழி ஊருக்கு ஊர் இனத்துக்கு இனம் வெவ்வேறு வார்த்தைகளால் பிணைத்து பயன்படுத்தப் படுகிறது. எங்கள் ஊர் வழக்கில் ' அதிகம் படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது' என்பார்கள்( அடியேன் செய்யும் சில 'அதிகப்பிரசங்க செயல்களுக்கு ' என் அம்மா அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி இது ) . இன்னும் சில இடங்களில் 'எல்லாம் தெரிஞ்சவர்தான் கழனிப்பானைக்குள்ளே கைய விட்டாராம் ' என்பார்கள். ஆக இதெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றுதான் ஆர்வகோளாறில் தெரியாத ஒன்றை செய்யப் போக அது வேறுவிதமான முடிவைத் தரும் என்பதே..மேலும் இந்த விளக்கத்தை சொல்ல வரும் சரியான பழமொழி "சிறு பிள்ளை விதைத்த வெள்ளாமை வீடு வந்து சேராது ' என்பதே..
அறியாத விளக்கம் :
ஆனால் மேற்கண்ட பழமொழி இந்த விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
அதாவது "அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது" என்பதுதான் சரியான பழமொழி.வட்டார வழக்கில் மருவி அது
மேற்கண்டவாறு திரிந்தது. அதன் பொருள் ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் ஒரு சில பருக்கைககள் கஞ்சிக்குள்
விழவே செய்யும் . ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் விழுகின்றன. இதனை குறிக்கும் பழமொழி அறவடிச்ச
என்பது அறப்படிச்ச என்றாகி முன் சோறு- மூஞ்சூறு ஆகிவிட்டது .
அறிந்த விளக்கம்
: மேற்கண்ட பழமொழி ஊருக்கு ஊர் இனத்துக்கு இனம் வெவ்வேறு வார்த்தைகளால் பிணைத்து பயன்படுத்தப் படுகிறது. எங்கள் ஊர் வழக்கில் ' அதிகம் படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது' என்பார்கள்( அடியேன் செய்யும் சில 'அதிகப்பிரசங்க செயல்களுக்கு ' என் அம்மா அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி இது ) . இன்னும் சில இடங்களில் 'எல்லாம் தெரிஞ்சவர்தான் கழனிப்பானைக்குள்ளே கைய விட்டாராம் ' என்பார்கள். ஆக இதெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றுதான் ஆர்வகோளாறில் தெரியாத ஒன்றை செய்யப் போக அது வேறுவிதமான முடிவைத் தரும் என்பதே..மேலும் இந்த விளக்கத்தை சொல்ல வரும் சரியான பழமொழி "சிறு பிள்ளை விதைத்த வெள்ளாமை வீடு வந்து சேராது ' என்பதே..
அறியாத விளக்கம் :
ஆனால் மேற்கண்ட பழமொழி இந்த விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
அதாவது "அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது" என்பதுதான் சரியான பழமொழி.வட்டார வழக்கில் மருவி அது
மேற்கண்டவாறு திரிந்தது. அதன் பொருள் ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் ஒரு சில பருக்கைககள் கஞ்சிக்குள்
விழவே செய்யும் . ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் விழுகின்றன. இதனை குறிக்கும் பழமொழி அறவடிச்ச
என்பது அறப்படிச்ச என்றாகி முன் சோறு- மூஞ்சூறு ஆகிவிட்டது .
Re: பழமொழியும் அதன் விளக்கமும்
பகையாளி குடியை உறவாடி கெடு.
அறிந்த விளக்கம்
பழமொழிகள் எவ்வாறு வசதிக்கேற்ப வளைத்து தப்பான பொருளை தந்து பயன்படுத்தப் பட்டு கொண்டிருக்கின்றன என்பதை
உணர்த்தும் மற்றொரு உதாரணம் இது . இதை நேரடியாக பொருள் கொண்டால் நமது எதிரி குடும்பத்தை பழகிக் கொண்டே
அவர்களை நயவஞ்சகமாய் அழித்து விட வேண்டும் என்று அவ்விதமே உலக வழக்காடலிலும் இருந்து வருகிறது .ஆனால்
உண்மையான வடிவம் இது அல்ல.
அறியாத விளக்கம்
இந்த பழமொழியின் சரியான வடிவம் "பகையாளி பகையை உறவாடி கெடு " என்றிருக்க வேண்டும். அதாவது நம்மை பகைமை
பாராட்டுபவனிடம் அன்பாய் நடந்து கொண்டு நல்ல முறையில் அணுகி ,பழகி அவன் கொண்டுள்ள பகைமை உணர்ச்சியை மாற்றி / நீக்கி அந்த உறவை நட்புறவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது திரிந்து பகை குடியாகி பழமொழியின் வடிவம் இப்படி மாறி போய் விட்டது.
அறிந்த விளக்கம்
பழமொழிகள் எவ்வாறு வசதிக்கேற்ப வளைத்து தப்பான பொருளை தந்து பயன்படுத்தப் பட்டு கொண்டிருக்கின்றன என்பதை
உணர்த்தும் மற்றொரு உதாரணம் இது . இதை நேரடியாக பொருள் கொண்டால் நமது எதிரி குடும்பத்தை பழகிக் கொண்டே
அவர்களை நயவஞ்சகமாய் அழித்து விட வேண்டும் என்று அவ்விதமே உலக வழக்காடலிலும் இருந்து வருகிறது .ஆனால்
உண்மையான வடிவம் இது அல்ல.
அறியாத விளக்கம்
இந்த பழமொழியின் சரியான வடிவம் "பகையாளி பகையை உறவாடி கெடு " என்றிருக்க வேண்டும். அதாவது நம்மை பகைமை
பாராட்டுபவனிடம் அன்பாய் நடந்து கொண்டு நல்ல முறையில் அணுகி ,பழகி அவன் கொண்டுள்ள பகைமை உணர்ச்சியை மாற்றி / நீக்கி அந்த உறவை நட்புறவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது திரிந்து பகை குடியாகி பழமொழியின் வடிவம் இப்படி மாறி போய் விட்டது.
Re: பழமொழியும் அதன் விளக்கமும்
அவசுஇயம் அறிந்துகொள்ள வேண்டிய பதிவு ,நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பழமொழியும் அதன் விளக்கமும்
அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» திருக்குறளும் அதன் விளக்கமும்
» கார்த்திகையும் பழமொழியும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» திருக்குறள் விளக்கமும் ஒப்புமையும்
» கார்த்திகையும் பழமொழியும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» பழமொழியும் காதல் கவிதையும்
» திருக்குறள் விளக்கமும் ஒப்புமையும்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|