Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சூரிய மின் உற்பத்திக்கு வரவேற்பு இல்லை: யார் காரணம் ?
Page 1 of 1 • Share
சூரிய மின் உற்பத்திக்கு வரவேற்பு இல்லை: யார் காரணம் ?
சூரியசக்தி மின் உற்பத்திக்கு, 1,000 மெகாவாட் திறனுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டதில், 499 மெகாவாட்டுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வந்துள்ளன.இதில், இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும் போது, 200 முதல் 250 மெகாவாட்டுக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக, துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சூரியசக்தி மின் கொள்கையில், இந்த ஆண்டிற்கு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 1,000 மெகாவாட் உற்பத்தியை எட்ட வாய்ப்பில்லை என, தெரிகிறது.
விண்ணப்பங்கள்
கடந்தாண்டு, அக்டோபர் 20ம் தேதி, தமிழகத்திற்கான சூரியசக்தி மின் கொள்கை வெளிடப் பட்டது. அதில், சூரியசக்தி மூலம், அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு, 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.அதன்படி, 1,000 மெகாவாட் உற்பத்திக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள், கடந்த, 4ம் தேதி திறக்கப்பட்டன. இதில், மொத்தம், 499 மெகாவாட் உற்பத்திக்கு, 90 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்தது.தேசிய சூரியசக்தி மின் கொள்கையின் கீழ், முதலில், 150 மெகாவாட் உற்பத்திக்கு நிறுவனங்கள் வரவேற்கப்பட்ட போது, 5,000 மெகாவாட் அளவிற்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அதை ஒப்பிடும்போது, தற்போது வந்துள்ள விண்ணப்பங்கள் மிகக் குறைவே.இதற்கு, தமிழக சூரியசக்தி மின் கொள்கையில் உள்ள குறைபாடுகள் மற்றும் டான்ஜெட்கோவின் நிதி நிலையும் தான் காரணம் என, கூறப்படுகிறது.தற்போது பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் ஆய்விற்கு பின், இந்த மாதம், 19ம் தேதி, ஒப்பந்தத்திற்கு தகுதியான நிறுவனங்கள் குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. அதிகபட்சம், 250 மெகாவாட் உற்பத்திக்கான விண்ணப்பங்கள் மட்டுமே, ஒப்பந்த தகுதியை எட்டும் என, துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நம்பக தன்மை?
தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, மாநில தொகுப்பிற்கு வழங்கும் போது, டான்ஜெட்கோ தான் பணம் கொடுக்க வேண்டும்.ஆனால், தற்போது, பல காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, நீண்ட காலமாக பணம் கொடுக்கப்படவில்லை. மேலும், பல நேரங்களில், உற்பத்தியாகும் மின்சாரம், தொகுப்பில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.
இதனால், காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, கடும் நஷ்டம் ஏற்படுகிறது. தொடர் நஷ்டத்தால், இந்த துறையில் முதலீடு, கணிசமாக குறைந்து விட்டது. இது ஒரு, முன் உதாரணமாக இருப்பதால், சூரியசக்தி உற்பத்திக்கும், இதே கதி நேரிடுமோ என, முதலீட்டாளர்கள் அஞ்”கின்றனர்.இந்த நிலையை ஓரளவிற்கு சீர் செய்ய, "டீம்டு பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்' அதாவது, "வாங்கியதாக கருதப்படும்' என்ற, உத்தரவாதத்தை அரசுகொடுக்க வேண்டும். அதன்படி, உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தை, தொகுப்பிலிருந்து எடுத்தாலும் அல்லது எடுக்கா விட்டாலும், அதற்கான பணத்தை கொடுக்க, டான்ஜெட்கோ தயாராக வேண்டும்.அதே போல், டான்ஜெட்கோவின் நிதி நிலையை கருதி, ஒரு தனி கணக்கு மூலம், சூரியசக்தி மின் உற்பத்தியாளர்களுக்கு பணம் கிடைக்கும் என்பதற்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
குறைந்த விலை
தற்போது, யூனிட்டுக்கு, 8 ரூபாய் என்ற அடிப்படையில், ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. இதைவிட குறைவாக விண்ணப்பித்தவர்களுக்கே, முதலில் ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால், தமிழகத்தை பொறுத்த வரை இந்த விலை, மிகவும் குறைவானது என்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துப்படி -
* சொந்த முதலீடு, 35சதவீதம்; கடன், 65சதவீதம் என்ற அடிப்படையில், 11சதவீதத்திற்கும் குறைவான வட்டியில் மட்டுமே, இந்த விலைசாத்தியப்படும்.
* குஜராத்தில், ஒரு மெகாவாட் மின் சூரிய மின்சக்தி மின் நிலையம் அமைத்தால், அதிலிருந்து, ஆண்டுக்கு, 17.5 முதல் 18 லட்சம் யூனிட்கள் வரை கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தில், 16 முதல் 16.5 லட்சம் யூனிட் மட்டும் தான் கிடைக்கும். இதனால் தான் குஜராத்தில் யூனிட்டுக்கு, 8 ரூபாய்சாத்தியமாகிறது.
* தமிழகத்தில், முதலீட்டாளர்கள் நஷ்டப்படாமல் இருக்க வேண்டுமானால், யூனிட்டிற்கு, 9 முதல், 9.25 ரூபாய் கிடைக்க வேண்டும்.ஆனால், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்து உள்ள விலை, யூனிட்டிற்கு, 8 ரூபாய் தான். இதைவிட அதிகமாக தமிழக அரசால் கொடுக்க முடியாது. இதைசரி செய்ய, அரசிடம் இருந்து முதலீட்டு செலவை குறைக்கும் வகையில், முதலீட்டாளர்கள்,சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.மேலும், சூரியசக்தி திட்டங்களில் இருந்து லாபம் கிடைக்க, குறைந்தது, ஐந்து ஆண்டுகளாவது ஆகும் என்பதால், தற்போது நிலவும், 12-13சதவீத வட்டி விகிதத்தில், கடன் வாங்கி முதலீடு செய்வதுசாத்தியப்படாது என, முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.இதைசரி செய்ய, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மூலம், 5சதவீத வட்டியில், மொத்த திட்ட முதலீட்டில், 80சதவீதம் வரை கடன் பெற்றுத் தர அரசுமுயற்சிக்க வேண்டும்.
சலுகைகள்
குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேஷ், காஷ்மீர் உட்பட, சில மாநிலங்கள், பிரத்யேக சூரியசக்தி மின் கொள்கைகளை, கடந்த சில ஆண்டுகளாகவே, அறிவித்து வருகின்றன. மேலும் சில மாநிலங்கள், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி கொள்கைகள் மூலம், சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவித்து வருகின்றன.அந்த அடிப்படையில், தமிழகத்தின் சூரியசக்தி மின் கொள்கை, மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது என, கருதலாம். இது கடந்த ஆட்சி காலத்திலேயே, அறிவிக்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று.
பல முன்னணி நிறுவனங்கள், மற்ற மாநிலங்களில், ஏற்கனவே தங்கள் முதலீடுகளை முடித்துக் கொண்ட நிலையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க, சிலசலுகைகளை அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது.
* மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில், நிலத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. திட்ட செலவில், அது பெரும் பங்கை வகிக்கிறது. இதைசமாளிக்க, ஹரியானா,சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள், அரசுநிலங்களை நீண்ட கால குத்தøக்ககு கொடுக்கின்றன. இதுசாத்தியப்படாது என்றால், வழிகாட்டி மதிப்பிலாவது, நிலங்கள் கிடைக்க செய்யலாம்.
* தமிழகத்தில் தற்போது உள்ள அதிகாரிகளின் அணுகுமுறை, தொழில் சூழலுக்கு ஏதுவாக இல்லை என்பது, தொழில் துறையினரின் கருத்து. குறிப்பாக கீழ் நிலை அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற, குற்றச்சாட்டு உள்ளது. இதைசரி செய்தால், திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். இதன் மூலம் முதலீட்டு செலவு குறையும்.
* உற்பத்தியாகும் மின்சாரத்தை தொகுப்பிற்கு கடத்துவதற்கு, தரம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்க, ஒரு கி.மீ.,க்கு, 8 முதல், 10 லட்சம் ரூபாய் செலவாகிறது. இச்செலவை, தனியார் நிறுவனமே ஏற்க வேண்டி உள்ளது. 5 கி.மீ., வரைக்கான செலவை, அரசே ஏற்கலாம்.
* துணை மின் நிலையங்களின் பராமரிப்புக்கென, மாதத்தில் ஒரு நாள், விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த நாளில் மின்சாரம் எடுக்கப்படுவதில்லை. இதனால், உற்பத்தியாளருக்கு மாத உற்பத்தியில், 3சதவீதம் வரை வீணாகிறது. சூரியசக்தி மின் நிலையங்களில், இது, 40 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை, நஷ்டத்தை ஏற்படுத்தும். விடுமுறை நாட்களில், வேறு துணை மின் நிலையம் மூலம் மின்சாரத்தை கடத்த, ஏற்பாடு செய்து கொடுக்கலாம். இதற்கு, 3 லட்சம் ரூபாய் செலவிலான, "”விட்ச்' கருவி, துணை மின் நிலையத்தில் நிறுவப்பட வேண்டும்.இத்தகையசலுகைகளை கூடுதலாக அறிவித்தால், கூடுதல் முதலீடுகளை ஈர்க்க வாய்ப்பு உள்ளது.
கட்டாய கொள்முதலும் தோல்வி?
தமிழக சூரியசக்தி மின் கொள்கையில், உயரழுத்த மின் நுகர்வோர், தங்கள் நுகர்வில் கட்டாயமாக, 6சதவீதத்தை சூரியசக்தியில் இருந்து பெற வேண்டும் என்ற, கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டது. இதை, 2014ம் ஆண்டிற்குள், அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.ஆனால், இதுவரை இது கொள்கை அளவிலேயே உள்ளது. இதை செய்யாவிட்டால், என்ன தண்டனை என்பது குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு, குறிப்பிட்டு, அதைசட்டமாக்கினால் மட்டுமே, அதில் முதலீடு செய்ய, தனியார் நிறுவனங்கள் முன்வரும் நிலை உள்ளது.இதுசட்டமாக்கப் படாததால், எந்த ஒரு நிறுவனமும், இதில் முதலீடு செய்ய இதுவரை முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தேவை குறித்து, "தினமலர்' நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளிடப்பட்டது.
கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுமா?
சூரிய சக்தி மின் உற்பத்திக்கு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாத நிலையில், கொள்கை குறைபாடுகள் களையப்பட்டால் முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்கள் தயாராக உள்ளன.கொள்கை திருத்தங்கள், தேவையானசலுகைகள் குறித்து, ஏற்கனவே இந்த தொழிலில் உள்ள நிறுவனங்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்தினால், நடைமுறை சிக்கல்கள் அர”க்கு தெரியவரும். இதன் மூலம் கொள்கையை மேம்படுத்தலாம்.
- ஆர்.கிருஷ்ணமூர்த்தி -
நன்றி தினமலர்
விண்ணப்பங்கள்
கடந்தாண்டு, அக்டோபர் 20ம் தேதி, தமிழகத்திற்கான சூரியசக்தி மின் கொள்கை வெளிடப் பட்டது. அதில், சூரியசக்தி மூலம், அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு, 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.அதன்படி, 1,000 மெகாவாட் உற்பத்திக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள், கடந்த, 4ம் தேதி திறக்கப்பட்டன. இதில், மொத்தம், 499 மெகாவாட் உற்பத்திக்கு, 90 நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பித்து இருப்பது தெரிய வந்தது.தேசிய சூரியசக்தி மின் கொள்கையின் கீழ், முதலில், 150 மெகாவாட் உற்பத்திக்கு நிறுவனங்கள் வரவேற்கப்பட்ட போது, 5,000 மெகாவாட் அளவிற்கு விண்ணப்பங்கள் குவிந்தன. அதை ஒப்பிடும்போது, தற்போது வந்துள்ள விண்ணப்பங்கள் மிகக் குறைவே.இதற்கு, தமிழக சூரியசக்தி மின் கொள்கையில் உள்ள குறைபாடுகள் மற்றும் டான்ஜெட்கோவின் நிதி நிலையும் தான் காரணம் என, கூறப்படுகிறது.தற்போது பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களின் ஆய்விற்கு பின், இந்த மாதம், 19ம் தேதி, ஒப்பந்தத்திற்கு தகுதியான நிறுவனங்கள் குறித்த முடிவுகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. அதிகபட்சம், 250 மெகாவாட் உற்பத்திக்கான விண்ணப்பங்கள் மட்டுமே, ஒப்பந்த தகுதியை எட்டும் என, துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
நம்பக தன்மை?
தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, மாநில தொகுப்பிற்கு வழங்கும் போது, டான்ஜெட்கோ தான் பணம் கொடுக்க வேண்டும்.ஆனால், தற்போது, பல காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, நீண்ட காலமாக பணம் கொடுக்கப்படவில்லை. மேலும், பல நேரங்களில், உற்பத்தியாகும் மின்சாரம், தொகுப்பில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.
இதனால், காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு, கடும் நஷ்டம் ஏற்படுகிறது. தொடர் நஷ்டத்தால், இந்த துறையில் முதலீடு, கணிசமாக குறைந்து விட்டது. இது ஒரு, முன் உதாரணமாக இருப்பதால், சூரியசக்தி உற்பத்திக்கும், இதே கதி நேரிடுமோ என, முதலீட்டாளர்கள் அஞ்”கின்றனர்.இந்த நிலையை ஓரளவிற்கு சீர் செய்ய, "டீம்டு பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்' அதாவது, "வாங்கியதாக கருதப்படும்' என்ற, உத்தரவாதத்தை அரசுகொடுக்க வேண்டும். அதன்படி, உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தை, தொகுப்பிலிருந்து எடுத்தாலும் அல்லது எடுக்கா விட்டாலும், அதற்கான பணத்தை கொடுக்க, டான்ஜெட்கோ தயாராக வேண்டும்.அதே போல், டான்ஜெட்கோவின் நிதி நிலையை கருதி, ஒரு தனி கணக்கு மூலம், சூரியசக்தி மின் உற்பத்தியாளர்களுக்கு பணம் கிடைக்கும் என்பதற்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
குறைந்த விலை
தற்போது, யூனிட்டுக்கு, 8 ரூபாய் என்ற அடிப்படையில், ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. இதைவிட குறைவாக விண்ணப்பித்தவர்களுக்கே, முதலில் ஒப்பந்தம் கிடைக்கும். ஆனால், தமிழகத்தை பொறுத்த வரை இந்த விலை, மிகவும் குறைவானது என்று உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களின் கருத்துப்படி -
* சொந்த முதலீடு, 35சதவீதம்; கடன், 65சதவீதம் என்ற அடிப்படையில், 11சதவீதத்திற்கும் குறைவான வட்டியில் மட்டுமே, இந்த விலைசாத்தியப்படும்.
* குஜராத்தில், ஒரு மெகாவாட் மின் சூரிய மின்சக்தி மின் நிலையம் அமைத்தால், அதிலிருந்து, ஆண்டுக்கு, 17.5 முதல் 18 லட்சம் யூனிட்கள் வரை கிடைக்கிறது. ஆனால், தமிழகத்தில், 16 முதல் 16.5 லட்சம் யூனிட் மட்டும் தான் கிடைக்கும். இதனால் தான் குஜராத்தில் யூனிட்டுக்கு, 8 ரூபாய்சாத்தியமாகிறது.
* தமிழகத்தில், முதலீட்டாளர்கள் நஷ்டப்படாமல் இருக்க வேண்டுமானால், யூனிட்டிற்கு, 9 முதல், 9.25 ரூபாய் கிடைக்க வேண்டும்.ஆனால், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்து உள்ள விலை, யூனிட்டிற்கு, 8 ரூபாய் தான். இதைவிட அதிகமாக தமிழக அரசால் கொடுக்க முடியாது. இதைசரி செய்ய, அரசிடம் இருந்து முதலீட்டு செலவை குறைக்கும் வகையில், முதலீட்டாளர்கள்,சலுகைகளை எதிர்பார்க்கின்றனர்.மேலும், சூரியசக்தி திட்டங்களில் இருந்து லாபம் கிடைக்க, குறைந்தது, ஐந்து ஆண்டுகளாவது ஆகும் என்பதால், தற்போது நிலவும், 12-13சதவீத வட்டி விகிதத்தில், கடன் வாங்கி முதலீடு செய்வதுசாத்தியப்படாது என, முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.இதைசரி செய்ய, பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மூலம், 5சதவீத வட்டியில், மொத்த திட்ட முதலீட்டில், 80சதவீதம் வரை கடன் பெற்றுத் தர அரசுமுயற்சிக்க வேண்டும்.
சலுகைகள்
குஜராத், ஆந்திரா, மத்திய பிரதேஷ், காஷ்மீர் உட்பட, சில மாநிலங்கள், பிரத்யேக சூரியசக்தி மின் கொள்கைகளை, கடந்த சில ஆண்டுகளாகவே, அறிவித்து வருகின்றன. மேலும் சில மாநிலங்கள், புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி கொள்கைகள் மூலம், சூரியசக்தி மின்சாரத்தை ஊக்குவித்து வருகின்றன.அந்த அடிப்படையில், தமிழகத்தின் சூரியசக்தி மின் கொள்கை, மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது என, கருதலாம். இது கடந்த ஆட்சி காலத்திலேயே, அறிவிக்கப் பட்டிருக்க வேண்டிய ஒன்று.
பல முன்னணி நிறுவனங்கள், மற்ற மாநிலங்களில், ஏற்கனவே தங்கள் முதலீடுகளை முடித்துக் கொண்ட நிலையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க, சிலசலுகைகளை அறிவிக்க வேண்டிய நிலை உள்ளது.
* மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில், நிலத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. திட்ட செலவில், அது பெரும் பங்கை வகிக்கிறது. இதைசமாளிக்க, ஹரியானா,சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள், அரசுநிலங்களை நீண்ட கால குத்தøக்ககு கொடுக்கின்றன. இதுசாத்தியப்படாது என்றால், வழிகாட்டி மதிப்பிலாவது, நிலங்கள் கிடைக்க செய்யலாம்.
* தமிழகத்தில் தற்போது உள்ள அதிகாரிகளின் அணுகுமுறை, தொழில் சூழலுக்கு ஏதுவாக இல்லை என்பது, தொழில் துறையினரின் கருத்து. குறிப்பாக கீழ் நிலை அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்ற, குற்றச்சாட்டு உள்ளது. இதைசரி செய்தால், திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கான சூழல் ஏற்படும். இதன் மூலம் முதலீட்டு செலவு குறையும்.
* உற்பத்தியாகும் மின்சாரத்தை தொகுப்பிற்கு கடத்துவதற்கு, தரம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்க, ஒரு கி.மீ.,க்கு, 8 முதல், 10 லட்சம் ரூபாய் செலவாகிறது. இச்செலவை, தனியார் நிறுவனமே ஏற்க வேண்டி உள்ளது. 5 கி.மீ., வரைக்கான செலவை, அரசே ஏற்கலாம்.
* துணை மின் நிலையங்களின் பராமரிப்புக்கென, மாதத்தில் ஒரு நாள், விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த நாளில் மின்சாரம் எடுக்கப்படுவதில்லை. இதனால், உற்பத்தியாளருக்கு மாத உற்பத்தியில், 3சதவீதம் வரை வீணாகிறது. சூரியசக்தி மின் நிலையங்களில், இது, 40 முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை, நஷ்டத்தை ஏற்படுத்தும். விடுமுறை நாட்களில், வேறு துணை மின் நிலையம் மூலம் மின்சாரத்தை கடத்த, ஏற்பாடு செய்து கொடுக்கலாம். இதற்கு, 3 லட்சம் ரூபாய் செலவிலான, "”விட்ச்' கருவி, துணை மின் நிலையத்தில் நிறுவப்பட வேண்டும்.இத்தகையசலுகைகளை கூடுதலாக அறிவித்தால், கூடுதல் முதலீடுகளை ஈர்க்க வாய்ப்பு உள்ளது.
கட்டாய கொள்முதலும் தோல்வி?
தமிழக சூரியசக்தி மின் கொள்கையில், உயரழுத்த மின் நுகர்வோர், தங்கள் நுகர்வில் கட்டாயமாக, 6சதவீதத்தை சூரியசக்தியில் இருந்து பெற வேண்டும் என்ற, கொள்கை அறிமுகப்படுத்தப் பட்டது. இதை, 2014ம் ஆண்டிற்குள், அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.ஆனால், இதுவரை இது கொள்கை அளவிலேயே உள்ளது. இதை செய்யாவிட்டால், என்ன தண்டனை என்பது குறிப்பிடப்படவில்லை. அவ்வாறு, குறிப்பிட்டு, அதைசட்டமாக்கினால் மட்டுமே, அதில் முதலீடு செய்ய, தனியார் நிறுவனங்கள் முன்வரும் நிலை உள்ளது.இதுசட்டமாக்கப் படாததால், எந்த ஒரு நிறுவனமும், இதில் முதலீடு செய்ய இதுவரை முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தேவை குறித்து, "தினமலர்' நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளிடப்பட்டது.
கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படுமா?
சூரிய சக்தி மின் உற்பத்திக்கு தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டாத நிலையில், கொள்கை குறைபாடுகள் களையப்பட்டால் முதலீடு செய்வதற்கு பல நிறுவனங்கள் தயாராக உள்ளன.கொள்கை திருத்தங்கள், தேவையானசலுகைகள் குறித்து, ஏற்கனவே இந்த தொழிலில் உள்ள நிறுவனங்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்தினால், நடைமுறை சிக்கல்கள் அர”க்கு தெரியவரும். இதன் மூலம் கொள்கையை மேம்படுத்தலாம்.
- ஆர்.கிருஷ்ணமூர்த்தி -
நன்றி தினமலர்
Re: சூரிய மின் உற்பத்திக்கு வரவேற்பு இல்லை: யார் காரணம் ?
கலக்கல் பதிவு... நன்றி முரளி அண்ணே
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|