Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாஜ்மகாலை ஏன் கட்டினார்கள் தெரியுமா?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
தாஜ்மகாலை ஏன் கட்டினார்கள் தெரியுமா?
உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகாலைக் கட்டியவர் ஷாஜகான். தமது மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டினார் என்பது அனைவருக்கும் தெரியும். எத்தகு சூழ்நிலையில், எதற்காக, யாருடைய கற்பனையில் தாஜ்மகால் உருவாக்கப்பட்டது என்பது தெரியுமா?
ஈரான் நாட்டில் சிராசி என்ற சிற்பி வாழ்ந்து வந்தார். பிறரின் முகத்தினைப் பார்க்காமலேயே சிற்பங்களைச் செதுக்குவதில் வல்லவர். சிராசியின் திறமையைக் கேள்விப்பட்ட மன்னர் ஷாஜகான் அவரை டில்லிக்கு வரவழைத்தார். சிற்பியை நோக்கி, உமது திறமையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் அதனை நிரூபிக்குமாறு எனக்கு ஒரு சிற்பத்தை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார் மன்னர்.
இதனைக் கேட்ட சிற்பி, சிற்பம் வடித்துத் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. உங்கள் நாட்டில் உள்ள 25 அழகான பெண்களைத் திரையின் மறைவில் நிறுத்துங்கள். அவர்களின் கையை மட்டும் நான் பிடித்துப் பார்ப்பேன். யாருடைய கை எனக்குப் பிடிக்கிறதோ அப்பெண்ணின் உருவத்தை, அப்பெண்ணைப் பார்க்காமலேயே சிற்பமாகச் செதுக்கித் தருவேன். மேலும், நான் யாருடைய சிலையைச் செதுக்குகிறேனோ, அப்பெண்னை எனக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்றார் சிற்பி. மன்னரும் சிற்பியின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டார். முகத்தைப் பார்க்காமல் கையைப் பார்த்துமட்டும் எப்படி சிற்பம் வடிக்கமுடியும் என்ற பேச்சு டில்லி முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட மன்னரின் மகளும் போட்டியைக் காண வந்திருந்தாள். அழகிய பெண்கள் அனைவரும் திரைமறைவில் நிறுத்தப்பட்டு, சிற்பி கையினைப் பிடித்துப் பார்க்கும் நாளும் வந்தது. திரை மறைவில் நின்ற பெண்களின் வரிசையில், கடைசியாக மன்னரின் மகளும் சென்று விளையாட்டாக நின்றாள்.
திரைமறைவில் நின்ற பெண்கள் ஒவ்வொரு-வராகக் கையை நீட்ட, சிற்பி கையைப் பிடித்துப் பார்த்தார். கடைசியாக நின்ற பெண்ணின் கையைப் பிடித்துப் பார்த்த போது, இந்த உருவத்தைச் சிலையமைத்துத் தருகிறேன் என்றார். சிற்பி தேர்வு செய்த கை யாருடையது என்பதைப் பார்க்க ஆர்வத்துடன் உள்ளே சென்றார் மன்னர். அது அவருடைய மகளின் கை என்று தெரிந்ததும், தன் மகளிடம் முகம் பார்க்காமல் சிலை வடிக்க முடியாது என்று சமாதானம்கூறி அழைத்துச் சென்றார். மன்னரின் மகளோ, வேடிக்கையாகப் போய் நிற்க அது விபரீதமாக முடிந்துவிட்டதே என்று அஞ்சினாள்.
சிற்பி, மூன்று மாதத்தில் சிலையினை வடிவமைத்து முடித்தார். மன்னரையும், மந்திரி-களையும், சபையோரையும் அழைத்துவந்து காட்டினார். மன்னரின் மகளை நகல் எடுத்தது போல் இருந்த சிலையினைக் கண்டு அனைவரும் பிரமித்து நின்றனர். சிலையில் ஏதாவதொரு குறையினைச் சுட்டிக்காட்டி ஒதுக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தவர்கள் தோல்வியே கண்டனர்.
மன்னருக்கோ கொடுத்த வாக்கை எப்படி மீறுவதென்று தெரியவில்லை. மன்னரின் மனைவி மும்தாஜோ, ஓர் ஏழைச் சிற்பிக்குத் தன் மகளை மணமுடித்துக் கொடுப்பதா என்ற கவலையி-லேயே உடல்நலம் குன்றி இறந்தார். மனைவியின் இறப்பு, ஷாஜகானைத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டோமே என நினைத்து வருந்தினார் மன்னர்.
அரச குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்த சிற்பி மன்னரை அழைத்தார். மன்னா! தங்கள் மனைவியின் இறப்பிற்கு நான் காரணமாக அமைந்து விட்டேன். எனவே, தாங்கள் தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றார்.
ஆனால், மன்னர் இதற்கு உடன்படவில்லை. கொடுத்த வாக்கு கொடுத்ததுதான். அதே நேரத்தில் எனது மனைவிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அந்தச் சிற்பியை வைத்தே அழகிய கலைநயமிக்க தாஜ்மகாலைக் கட்டினார்.
நன்றி:http://periyarpinju.com/
ஈரான் நாட்டில் சிராசி என்ற சிற்பி வாழ்ந்து வந்தார். பிறரின் முகத்தினைப் பார்க்காமலேயே சிற்பங்களைச் செதுக்குவதில் வல்லவர். சிராசியின் திறமையைக் கேள்விப்பட்ட மன்னர் ஷாஜகான் அவரை டில்லிக்கு வரவழைத்தார். சிற்பியை நோக்கி, உமது திறமையைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் அதனை நிரூபிக்குமாறு எனக்கு ஒரு சிற்பத்தை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார் மன்னர்.
இதனைக் கேட்ட சிற்பி, சிற்பம் வடித்துத் தருகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. உங்கள் நாட்டில் உள்ள 25 அழகான பெண்களைத் திரையின் மறைவில் நிறுத்துங்கள். அவர்களின் கையை மட்டும் நான் பிடித்துப் பார்ப்பேன். யாருடைய கை எனக்குப் பிடிக்கிறதோ அப்பெண்ணின் உருவத்தை, அப்பெண்ணைப் பார்க்காமலேயே சிற்பமாகச் செதுக்கித் தருவேன். மேலும், நான் யாருடைய சிலையைச் செதுக்குகிறேனோ, அப்பெண்னை எனக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்றார் சிற்பி. மன்னரும் சிற்பியின் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டார். முகத்தைப் பார்க்காமல் கையைப் பார்த்துமட்டும் எப்படி சிற்பம் வடிக்கமுடியும் என்ற பேச்சு டில்லி முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைக் கேள்விப்பட்ட மன்னரின் மகளும் போட்டியைக் காண வந்திருந்தாள். அழகிய பெண்கள் அனைவரும் திரைமறைவில் நிறுத்தப்பட்டு, சிற்பி கையினைப் பிடித்துப் பார்க்கும் நாளும் வந்தது. திரை மறைவில் நின்ற பெண்களின் வரிசையில், கடைசியாக மன்னரின் மகளும் சென்று விளையாட்டாக நின்றாள்.
திரைமறைவில் நின்ற பெண்கள் ஒவ்வொரு-வராகக் கையை நீட்ட, சிற்பி கையைப் பிடித்துப் பார்த்தார். கடைசியாக நின்ற பெண்ணின் கையைப் பிடித்துப் பார்த்த போது, இந்த உருவத்தைச் சிலையமைத்துத் தருகிறேன் என்றார். சிற்பி தேர்வு செய்த கை யாருடையது என்பதைப் பார்க்க ஆர்வத்துடன் உள்ளே சென்றார் மன்னர். அது அவருடைய மகளின் கை என்று தெரிந்ததும், தன் மகளிடம் முகம் பார்க்காமல் சிலை வடிக்க முடியாது என்று சமாதானம்கூறி அழைத்துச் சென்றார். மன்னரின் மகளோ, வேடிக்கையாகப் போய் நிற்க அது விபரீதமாக முடிந்துவிட்டதே என்று அஞ்சினாள்.
சிற்பி, மூன்று மாதத்தில் சிலையினை வடிவமைத்து முடித்தார். மன்னரையும், மந்திரி-களையும், சபையோரையும் அழைத்துவந்து காட்டினார். மன்னரின் மகளை நகல் எடுத்தது போல் இருந்த சிலையினைக் கண்டு அனைவரும் பிரமித்து நின்றனர். சிலையில் ஏதாவதொரு குறையினைச் சுட்டிக்காட்டி ஒதுக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் முயற்சி செய்தவர்கள் தோல்வியே கண்டனர்.
மன்னருக்கோ கொடுத்த வாக்கை எப்படி மீறுவதென்று தெரியவில்லை. மன்னரின் மனைவி மும்தாஜோ, ஓர் ஏழைச் சிற்பிக்குத் தன் மகளை மணமுடித்துக் கொடுப்பதா என்ற கவலையி-லேயே உடல்நலம் குன்றி இறந்தார். மனைவியின் இறப்பு, ஷாஜகானைத் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. அவசரப்பட்டு வாக்குக் கொடுத்துவிட்டோமே என நினைத்து வருந்தினார் மன்னர்.
அரச குடும்பத்தின் சூழ்நிலையை அறிந்த சிற்பி மன்னரை அழைத்தார். மன்னா! தங்கள் மனைவியின் இறப்பிற்கு நான் காரணமாக அமைந்து விட்டேன். எனவே, தாங்கள் தங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றார்.
ஆனால், மன்னர் இதற்கு உடன்படவில்லை. கொடுத்த வாக்கு கொடுத்ததுதான். அதே நேரத்தில் எனது மனைவிக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். அந்தச் சிற்பியை வைத்தே அழகிய கலைநயமிக்க தாஜ்மகாலைக் கட்டினார்.
நன்றி:http://periyarpinju.com/
Similar topics
» உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
» கலைச்சு கலைச்சு எண்ணெய் தேய்ப்பாங்களே..! எதுக்காக..? தேய்ப்பவருக்கு தெரியுமா? இல்ல நமக்குதான் தெரியுமா..?
» தெரியுமா
» உங்களுக்கு தெரியுமா ???
» உங்களுக்கு தெரியுமா ??
» கலைச்சு கலைச்சு எண்ணெய் தேய்ப்பாங்களே..! எதுக்காக..? தேய்ப்பவருக்கு தெரியுமா? இல்ல நமக்குதான் தெரியுமா..?
» தெரியுமா
» உங்களுக்கு தெரியுமா ???
» உங்களுக்கு தெரியுமா ??
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|