தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பென்னிக்குக்

View previous topic View next topic Go down

பென்னிக்குக் Empty பென்னிக்குக்

Post by மகா பிரபு Sat Jan 19, 2013 7:46 am

தேனி மாவட்டத்தில் உள்ள பல விவசாய குடும்பங்களின் வீடுகளில், தவறாமல் ஒருவர் படம் இடம் பெற்றிருக்கும்.
இன்றைக்கும் அங்கு பிறக்கும் பல குழந்தைகளுக்கு, அவரது பெயர்தான் வைக்கப்படுகிறது.

ஆங்காங்கே உள்ள இவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்வதும், வழிபாடு செய்வதும் தொடர்கிறது.

விவசாயிகள்
இன்றைக்கும், தங்களது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கி நன்றியோடு
நினைக்கும் அந்த பெரியவர், யார் தெரியுமா? அவர்தான் பென்னிகுக்.

தென்
தமிழக மக்களின் வாழ்வாதாரமானதும், இன்றைய தேதிக்கு கேரள அரசால் பிரச்னை
செய்யப்படும் இடமுமான முல்லை பெரியாறு அணையை கட்டியவர்தான் இவர்.

இங்கிலாந்தில்,
ஜனவரி 15, 1841ல் பிறந்த ஜான் பென்னிகுக், பொறியியல் மேற்படிப்பு முடித்த
கையோடு, பொதுப் பணித்துறை பொறியாளராக பொறுப்பேற்று, ஆங்கில அரசால், சென்னை
மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்டவர். அப்போது கடும் வறட்சியில்
வாடிக்கொண்டு இருந்த தமிழக தென் மாவட்டங்களுக்கு, ஒரு நிரந்தரத் தீர்வு
காண்பதற்கான முயற்சியில் இறங்கினார். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும்
மழை நீர், பெரியாறாக உருவாகி, அந்த தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை
கண்டுபிடித்தார். அந்த தண்ணீரை அணைகட்டி தடுத்து, திருப்பி விடுவதற்காக
கட்டப்பட்டதுதான், முல்லை பெரியாறு அணை.

கிட்டத்தட்ட 75 லட்ச ரூபாய் செலவில், 1887ல், அணை கட்டும் முயற்சி துவங்கியது. அணையின்
பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பெய்த பேய்மழையாலும்,
பெருகிவந்த வெள்ளத்தாலும் அணை அடித்து செல்லப்பட்டது. இதற்குமேல் பணம்
ஒதுக்க முடியாது. ஆகவே, அணை கட்டும் முயற்சியை கை விட்டு, திரும்ப வருமாறு
பென்னிகுக்கிற்கு உத்தரவிட்டது ஆங்கிலேயே அரசு. "தமிழர்களின் கனவு திட்டமான
அணை, கனவா கவே போக வேண்டியது தானா? இதற்காக உயிரை கொடுத்தவர்களின் ஆன்மா
என்ன சொல்லும்...' என்று கவலைப்பட்ட பென்னிகுக், எப்பாடு பட்டாவது அணையை
கட்டியாக வேண்டும் என்ற முடிவுடன் களம் இறங்கியவர், சொந்த ஊருக்கு சென்று,
தன் சொத்துகளை எல்லாம் விற்று கொண்டுவந்த பணத்தை போட்டு, மீண்டும் அணை
கட்டும் முயற்சியில் இறங்கினார்.

எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகள் போராடி, அணை கட்டி முடிக்கப்பட்டது.
கடல்
மட்டத்தில் இருந்து, 2,890 அடி உயரத்தில் 176 அடி உயரம், 365 மீட்டர்
நீளத்தில் கம்பீரமாக கட்டி முடிக்கப்பட்ட அணையில், கடல் போல நீர் தேக்கி
வைக்கப்பட்டது. தென் தமிழக மக்களின் முகத்தில் ஆனந்த கண்ணீர் பெருகியது.
அன்றைய பிரிக்கப்படாத இந்தியாவில், சென்னை மாகாணத்தை ஆண்ட ஆங்கிலேயர்,
திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன், 999 வருடத்திற்கு ஒரு ஒப்பந்தம்
போடப்பட்டது. வீணாகப் போகும் மழைநீருக்கு ஒரு கப்பத்தொகையும் நிர்ணயம்
செய்யப்பட்டு அதுவும் வழங்கப்பட்டது.

999 வருடத்திற்கு இந்த அணையும்,
தண்ணீரும், தென் தமிழக மக்களுக்கு தான் சொந்தம் என்ற அந்த ஒப்பந்தம்
காரணமாக, அன்று தொடங்கி இன்று வரை கம்பம் பள்ளத்தாக்கு பசுமை சமவெளியாக
திகழ்கிறது. எப்போதும் முப்போகம்தான். உயிர்களுக்கும், பயிர்களுக்கும்
தேவைப்படும் தண்ணீர் கவலையின்றி கிடைக்க, பல லட்சம் மக்கள்
ஆனந்தப்பட்டனர்.

மொழிவாரியாக மாநிலம் பிரிக்கப்பட்டதில், இந்த முல்லை
பெரியாறு அணை, கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம் தேக்கடி பகுதிக்குள்
வந்தது. தனக்கு ஒரு துளி லாபம் இல்லை என்ற போதிலும், மனிதநேயத்துடன், தன்
சொந்த பணம் கொண்டு கட்டிய பென்னிகுக்கின் பெருங் கருணையினாலும், ஆயிரம்
ஆண்டுகள் ஆனாலும், அழியாத பெருஞ்செல்வமாக, கம்பீரமாக எழுந்து நிற்கும்
முல்லை பெரியாறு அணையை இப்போது, போற்றி பாதுகாக்கும் உணர்வு அனைவருக்கும்
ஏற் பட்டுள்ளது.

இவ்வளவு பெருமை மிகுந்த பென்னிகுக்கின் புகழை போற்றி
புகழும் வகையில், கூடலூர் லோயர் கேம்ப்பில் அரசால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த மணிமண்டபம், மக்களின் மனதில் என்றும்
தங்கும் மண்டபமாகும் என்பதில் சந்தேகமில்லை. ***

எல். சந்திரகாந்த் @ தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பென்னிக்குக் Empty Re: பென்னிக்குக்

Post by முரளிராஜா Tue Jan 22, 2013 2:59 pm

பென்னிக்குக் அவர்கள் முல்லை பெரியாறு அணையை கட்ட எவ்வளவு உதவியாக இருந்தார் என்பதை அறிய தந்தமைக்கு நன்றி

அவர் புகழ் என்றும் மறையாது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பென்னிக்குக் Empty Re: பென்னிக்குக்

Post by மகா பிரபு Wed Jan 30, 2013 3:41 pm

நன்றி அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பென்னிக்குக் Empty Re: பென்னிக்குக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum